என் மலர்tooltip icon

    வேலூர்

    • புதிய கல்விக்கொள்கை என மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்க பார்க்கின்றனர்.
    • கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் சுமை அதிகரித்துள்ளது.

    தி.மு.க. பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா வேலூர் அடுத்த பள்ளிகொண்டா கந்தனேரியில் இன்று மாலை தொடங்கியது.

    இதற்காக சென்னையில் இருந்து ரெயில் மூலம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று இரவு காட்பாடி வந்தார்.

    அவருக்கு அமைச்சர் துரைமுருகன் மாவட்ட செயலாளர் ஏ. பி நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    பல்வேறு சிறப்புகளை கொண்ட, வீரம் விளைந்த வேலூரில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

    நானும், துரைமுருகனும் கருணாநிதியால் வார்க்கப்பட்டவர்கள். முக்கிய பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் என்னை வழிநடத்துபவர் துரைமுருகன். விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு பாராட்டுகள்.

    கொட்டும் மழையில் பிறந்ததால்தான் திமுக வேகமாக வளர்ந்து வருகிறது. திமுகவை வாழ வைத்துக் கொண்டிருப்பது தொண்டர்கள்தான். திமுகவின் வளர்ச்சிக்கு தொண்டர்கள்தான் காரணம். தொண்டர்களால் உருவாக்கப்பட்டவன் நான்.

    ஒரு குடும்பத்தின் தாய், தந்தையை போன்றவர்கள்தான் கட்சியின் முன்னோடிகள். 2 கோடி கொள்கை வாதிகள் நிறைந்ததுதான் திமுக.

    பெரியாரும், அண்ணாவும் தத்துவத்தின் அடித்தளம். தென்மாவட்டங்களை திமுகவின் கோட்டையாக மாற்றியவர் ஐ.பெரியசாமி. தமிழகத்தின் வளர்ச்சி மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது.

    மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தை தலைச்சிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம்.

    ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரம் வரி வருவாய்தான். நிதி ஆதாரங்கள் கிடைக்கவிடாமல் தடுக்கவே ஜிஎஸ்டி கொண்டு வந்தனர்.

    தமிழகத்தின் வளர்ச்சி மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது. புதிய கல்விக்கொள்கை என மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்க பார்க்கின்றனர்.

    மாணவர்களின் கனவை சிதைக்க கொண்டு வரப்பட்டதுதான் நீட் தேர்வு. மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்றவில்லை.

    மக்களை திசை திருப்ப பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி வருகிறார்கள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தற்போதுதான் டெண்டர் விட்டுள்ளனர்.

    தேர்தல் வரும் நேரத்தில் கண்துடைப்பிற்காக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் சுமை அதிகரித்துள்ளது.

    பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சிபிஐ அதிகாரிகள் மீது தான் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகம் உள்ளது என சிஏஜி அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் வெற்றி நிலைநாட்ட வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரோந்து பணியில் சிக்கியது
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ் பெக்டர் பாலசுப்பிரமணி யம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி உள்ளிட்ட போலீ சார் நேற்று குடியாத்தம் அடுத்த ஜிட்டப்பள்ளி மலை அடிவாரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டவுடன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து போலீசார் கடத்திவரப்பட்ட முரம்பு மண்ணுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதலுதவி சிகிச்சை அளித்தனர்
    • காப்புக்காட்டில் விடப்பட்டது

    வள்ளிமலை:

    காட்பாடி தாலுகா வள்ளி மலை அடுத்த எருக்கம்பட்டு ஊராட்சி சின்னபெருமாள்குப் பம் பகுதியில் நேற்று காலை அருகில் உள்ள காப்புக்காட் டில் இருந்து புள்ளிமான் ஒன்று நீர் தேடி கிராமத்துக்குள் வந்துள்ளது.

    அப்போது புள்ளி மானை நாய்கள் துரத்தியது. இதனால் ஓடிய புள்ளிமான் அந்த கிராமத்தில் வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் விழுந்து தண்ணீரில் தத்தளித்தது.

    இதனை கண்ட அப்பகுதியில் நிலத்தில் வேலை செய்திருந்த பெண்கள் இளைஞர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இளைஞர்களும், கிராம மக்களும் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி புள்ளி மானை உயிருடன் மீட்டனர். பின்னர் இதுகுறித்து ராணிப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறையை சேர்ந்த அரிகிருஷ் ணன், கருணா ஆகியோர் வந்து, புள்ளிமானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அருகில் உள்ள காப்புக்காட் டில் புள்ளிமானை விட்டனர்.

    • வேலூர் அண்ணாசாலையில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்.

    வேலூர்:

    தி.மு.க. பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா வேலூர் அடுத்த பள்ளிகொண்டா கந்தனேரியில் இன்று மாலை நடக்கிறது. இதற்காக சென்னையில் இருந்து ரெயில் மூலம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று இரவு காட்பாடி வந்தார்.

    அவருக்கு அமைச்சர் துரைமுருகன் மாவட்ட செயலாளர் ஏ. பி நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு வேலூரில் உள்ள தனியார் ஓட்டலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்கினார்.

    இன்று காலை வேலூர் அண்ணாசாலையில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து வேலூர் அடுத்த மேல்மொணவூர் அப்துல்லாபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்றார்.

    அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறும் திடலுக்கு சென்றார். அங்கு பிரமாண்ட கொடி கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் தனியார் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுத்தார். தி.மு.க முப்பெரும் விழா இன்று மாலை பிரமாண்டமாக நடக்கிறது.

    இதில் கலைஞர் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தில் உள்ள 4 மண்டலங்களில் ஒன்றியம் நகரம் பகுதி பேரூர் ஆகியவற்றில் கட்சி பணிகளில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கு நற்சான்று பண முடிப்பினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.

    விருது வழங்கும் விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார்.

    தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் விழாவிற்கு தலைமை தாங்குகிறார்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதை கி.சத்திய சீலனுக்கும் அண்ணா விருதை கா.சுந்தரத்திற்கும், கலைஞர் விருதை ஐ.பெரியசாமிக்கும் பாவேந்தர் பாரதிதாசன் விருதை திருமதி மலிகா கதிரவனுக்கும், பேராசிரியர் விருதை ந.இராமசாமிக்கும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர் பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நன்றி கூறுகிறார்.

    விழாவில் அமைச்சர்கள் தலைமைக்கழக நிர்வாகிகள் எம்.பி எம்.எல்.ஏ.க்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி வேலூரில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூர் புதிய பஸ்நிலையம் பின்புறம் அருகே உள்ள தனியார் ஓட்டல், பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை, மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மற்றும் முப்பெரும் விழா நடைபெறும் கந்தனேரி ஆகிய பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி டிரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேல்மொணவூா் முகாமில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 220 வீடுகளையும் பயனாளிகள் வசம் ஒப்படைத்தார்.
    • இலங்கை தமிழர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களை வழங்கினார்.

    வேலூர்:

    தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக தமிழக அரசு சாா்பில் வீடு கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பா் மாதம் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் தொடங்கி வைத்தாா்.

    இந்தத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ரூ.142.16 கோடியில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூரை அடுத்த மேல்மொணவூரிலுள்ள இலங்கைத் தமிழா் முகாமில் இன்று காலை நடந்தது.

    இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று காணொலிக்காட்சி மூலம் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழா் முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 புதிய வீடுகளை திறந்து வைத்தார்.

    மேலும், மேல்மொணவூா் முகாமில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 220 வீடுகளையும் பயனாளிகள் வசம் ஒப்படைத்தார்.

    பின்னர் இலங்கை தமிழர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களை வழங்கினார். அப்போது குடியிருப்பில் உள்ள இலங்கைத் தமிழர்களிடம் முகாம்களில் உள்ள வசதிகள் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பயனாளிகள் இதற்கு முன்பு சிரமத்துடன் வசித்து வந்தோம் குடியிருப்பு கட்டப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக உருக்கமாக தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், செஞ்சி மஸ்தான், ஐ.பெரியசாமி சாமி, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, காந்தி, கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • போக்சோவில் நடவடிக்கை
    • ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அங்கு வந்து அவரது உறவினரான புத்தூர் பகுதியை சேர்ந்த சிலை செய்யும் தொழிலாளி பிரபாகரன் (33) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • ஹீட்டர் போடுவதற்காக சுவிச்சை தொட்டபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி, விருத்தம்பட்டு அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி சத்யா (வயது 35). தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    கணபதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனை அடுத்து சத்யா தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சத்யா நேற்று தனது வீட்டின் குளியல் அறையில், ஹீட்டர் போடுவதற்காக சுவிச்சை தொட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக சத்யா உடலில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர் விரைந்து வந்து பரிசோதனை செய்தார். அப்போது, சத்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சத்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சோதனை
    • வீடுகளில் போலீசார் குறியீடு எழுதி வைத்தனர்

    வேலூர்:

    வேலூர் அடுத்த மேல் மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் ரூ 11 கோடி மதிப்பில் 220 வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை நாளை மறுநாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    முதல்-அமைச்சர் வருகையை ஒட்டி வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    அப்போது இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் நிரந்தரமாக எத்தனை பேர் வசிக்கின்றனர் புதிதாக யாராவது தங்கி உள்ளார்களா எவ்வளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரங்களை கேட்டு அறிந்தனர்.

    இதேபோல் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் குடியிருப்புகள் முழுவதும் போலீசார் சோதனை செய்தனர்.

    குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மீட்டர் முதல் அனைத்து இடங்களும் பலத்த சோதனை செய்யப்பட்டது. சோதனை செய்யப்பட்ட வீடுகளில் போலீசார் குறியீடு எழுதி வைத்தனர்.

    இதையடுத்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், டி. ஐ. ஜி. முத்துசாமி உள்ளிட்டோர் பொது க்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    • தி.மு.க. முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது
    • கொடி, தோரணங்களால் விழாக்கோலம்

    வேலூர்:

    வேலூரில் நாளை தி.மு.க பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    இதனால் ஆயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வேலூர் அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட கோட்டை வடிவிலான மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று ரெயில் மூலம் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடி வருகிறார். ரெயில் நிலையத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அவருக்கு கட்சியினர் மேள தாளங்கள் மற்றும் பேண்டு வாத்தியங்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    மேலும் முதல் - அமைச்சர் வரவேற்கும் விதமாக காட்பாடி முதல் வேலூர், பள்ளிகொண்டா வரை வழிநெடுகிலும் தி.மு.க. கொடி தோரணங்கள், கட்அவுட் மற்றும் பேனர்கள், மின் விளக்குகள் கண் கவரும் வகையில் பொருத்தப்பட்டுள்ளதால் வேலூரில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    முதல் - அமைச்சர் இன்று இரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை முதல் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    மாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதல் - அமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றுகிறார்.

    இதற்காக கோட்டை வடிவிலான விழா மேடை, சுமார் 20 ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் பந்தல், இருக்கைகள், குடிநீர், கழிவறை, வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    முதல் - அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் சீல் வைக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதோடு, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பறக்கும் டிரேன் கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பீடி, சிகரெட், புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது
    • தொடர்ந்து விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் அரசு பள்ளி அருகே மற்றும் பஜார் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்ப டுவதாக புகையிலை தடுப்பு அலுவலர் ஜெயஸ்ரீக்கு ரகசிய புகார் வந்தது.

    அதன்படி பள்ளி கொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் வெட்டுவாணம் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அப்போது பெட்டிக்கடை களில் தடை செய்யப்பட்ட பீடி, சிகரெட், புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் தொடர்ந்து விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையா ளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து புகையிலை தடுப்பு அலுவலர் கூறியதாவது:-

    பள்ளிக்கூடம் அருகில் மற்றும் பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் பீடி, சிகரெட் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள நபர்களுக்கு பீடி, சிகரெட், புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது.

    மேலும் கடைகள் முன்பு புகையிலை, சிகரெட் படங்கள் விளம்பரங்கள் பற்றிய துண்டுபிரசுரங்கள் ஒட்டி இருந்தால், அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    வெட்டுவாணத்தில் நடைபெற்ற சோதனையில் 19 கடைகளின் உரிமையா ளர்களுக்கு ரூ.2,900 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வியாபாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் தி.மு.க. முப்பெரும் விழா நாளை காலை தொடங்கி இரவு வரை நடைபெற உள்ளது.
    • முதல்வா் வருகையொட்டி வேலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    வேலூர்:

    தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக தமிழக அரசு சாா்பில் வீடு கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பா் மாதம் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் தொடங்கி வைத்தாா்.

    இந்தத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ரூ.142.16 கோடியில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

    தற்போது கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூரை அடுத்த மேல்மொணவூரிலுள்ள இலங்கைத் தமிழா் முகாமில் நாளை காலை நடக்கிறது.

    இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று காணொலிக் காட்சி மூலம் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழா் முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 புதிய வீடுகளை திறந்து வைக்கிறார்.

    மேலும், மேல்மொணவூா் முகாமில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 220 வீடுகளையும் பயனாளிகள் வசம் ஒப்படைக்க உள்ளாா்.

    தொடா்ந்து பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் தி.மு.க. முப்பெரும் விழா நாளை காலை தொடங்கி இரவு வரை நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முத்தமிழறிஞா் கலைஞா் அறக்கட்டளை சாா்பில் தமிழகத்தின் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூா்களில் கட்சி பணியைச் சிறப்பாக செய்த தலா ஒருவருக்கு நற்சான்றிதழ், பண முடிப்புகளை வழங்குகிறார்.

    மேலும், தி.மு.க. சாா்பில் பெரியாா் விருது கி.சத்தியசீலன், அண்ணா விருது க.சுந்தரம், கலைஞா் கருணாநிதி விருது ஐ.பெரியசாமி, பாவேந்தா் பாரதிதாசன் விருது மல்லிகா கதிரவன், பேராசிரியா் க.அன்பழகன் விருது ந.ராமசாமி ஆகியோருக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றுகிறார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலா் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலா்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூா் ப.செல்வராஜ், கனிமொழி, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல்வேறு அமைச்சா்கள் பங்கேற்க உள்ளனா்.

    விழாக்களில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெயில் மூலம் இன்று இரவு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வருகிறார்.

    அங்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தொடா்ந்து தனியாா் ஓட்டலில் தங்கும் அவா் நாளை நடைபெறும் விழாக்களில் பங்கேற்றுவிட்டு மீண்டும் இரவு ரெயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

    முதல்வா் வருகையொட்டி வேலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் மேற்பாா்வையில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 2 டிஐஜி-க்கள், 10 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

    • வீடு வீடாக சென்று விழிப்புணர்வு
    • ஆஸ்பத்திரியில் படுக்கை வசதிகள் தயார்

    வேலூர்:

    வேலூர் பலவன்சாத்து குப்பம் பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவிக்கும், வேலூர் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆண் குழந்தைக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, பலவன்சாத்து குப்பம் மற்றும் சலவன்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

    சுகாதாரத் துறை குழுவினர் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் குறித்து கணக்கெடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும், மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்ட லங்களிலும் தலா 75 பேர் வீதம் மொத்தம் 300 பேர் கொண்ட குழுவினர் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    வேலூருக்கு முதல்வர் வருகைதர உள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அதேபோல், வேலூர் சுகாதாரத் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு மருந்து தெளிக்கும் பணிகளும், கொசு மருந்து அடிக்கும் பணியுடன் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    பொதுமக்கள் தங்கள் வீடுகளில் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் தாமதம் செய்யாமல் அருகில் உள்ள டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    தொடர் காய்ச்சல் இருந்தால் ரத்த பரிசோதனை செய்து டெங்குவை உறுதி செய்ய வேண்டும். டெங்கு பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது என சுகாதா ரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×