search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முரம்பு மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்
    X

    முரம்பு மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

    • ரோந்து பணியில் சிக்கியது
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ் பெக்டர் பாலசுப்பிரமணி யம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி உள்ளிட்ட போலீ சார் நேற்று குடியாத்தம் அடுத்த ஜிட்டப்பள்ளி மலை அடிவாரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டவுடன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து போலீசார் கடத்திவரப்பட்ட முரம்பு மண்ணுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×