என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி பெண் சாவு
- ஹீட்டர் போடுவதற்காக சுவிச்சை தொட்டபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
காட்பாடி, விருத்தம்பட்டு அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி சத்யா (வயது 35). தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
கணபதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனை அடுத்து சத்யா தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சத்யா நேற்று தனது வீட்டின் குளியல் அறையில், ஹீட்டர் போடுவதற்காக சுவிச்சை தொட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக சத்யா உடலில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர் விரைந்து வந்து பரிசோதனை செய்தார். அப்போது, சத்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சத்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






