என் மலர்
வேலூர்
- வேலூரில் அமைச்சர் பொன்முடி பேச்சு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று காலை மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் தற்போது மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகமாக உள்ளனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் கல்வி, சுகாதாரம் ஆகியவை இரு கண்களாக நினைத்து செயல்படுகிறார். இந்த துறைகளை மேம்படுத்துவது தான் அவரது நோக்கம். கருணாநிதி ஆட்சியில் தான் தமிழகத்தில் அதிக அளவில் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
உயர் கல்வித் துறை பொற்காலமாக மாறும். அதற்கு சாதகமான சூழல் உள்ளது. இதற்கு மாணவ மாணவிகள் ஒத்துழைக்க வேண்டும். நான் முதல்வன் திட்டம் தொடங்க ப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் நீங்கள் முதல்அமைச்சர் ஆக வேண்டும் என்பது இல்லை. உங்கள் துறையில் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான்.
நாங்கள் படிக்கின்ற காலத்தில் பெண்கள் குறைந்த அளவிலேயே உயர் கல்வி படிக்க முடிந்தது.
ஆனால் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் முயற்சியால் தற்போது அதிக அளவில் பெண்கள் படித்து வருகின்றனர்.
தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள். அதனை நாங்கள் எதிர்க்கிறோம். தமிழ் தாய் மொழி ஆங்கிலம் உலக தொடர்பு மொழி இந்த இரண்டு மொழிகள் நமக்கு போதும்.விருப்பப்பட்டவர்கள் இந்தியை படிக்கலாம். ஆனால் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழகத்திற்கு என்று தனி கல்வி கொள்கையை உருவாக்க முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார். அதற்கான தனி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் சுற்று சுவர் மற்றும் மைதானம் வசதி உள்ளிட்ட வசதிகள் படிப்படியாக செய்து தரப்படும். திராவிட மாடல் ஆட்சிக்கு பெண்கள் பிரச்சாரமாக மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கல்லூரி கல்வி இணைஇயக்குனர் காவேரி அம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 5000 கிலோ போதைபொருள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது கொல்லமங்கலம் கிராமம் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
அதன் அருகே போலீசார் சென்றனர். அப்போது அங்கிருந்து 5 பேர் கும்பல் காரில் வேகமாக தப்பி சென்றனர். லாரியின் அருகே நின்று கொண்டிருந்த பெங்களூரை சேர்ந்த அரவிந்த் (வயது 26) ஓசூரைச் சேர்ந்த விவேகானந்தன் (36) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
கண்டெய்னர் லாரியில் தின்பண்டங்கள் அட்டை பெட்டிகளுக்கு பின்னால் மறைத்து குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது. தெரியவந்தது.மொத்தம் 5000 கிலோ எடை கொண்ட ரூ.60 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் போலீசார் நேற்று சித்தூர் கேட் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது பைக்கில் குட்கா கடத்தி வந்த நுஸரத் சாகித் (46) என்பவரை மடக்கிபிடித்தனர். அவர் அளித்த தகவலின் பெயரில் இப்ராஹிம் சாஹிப் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரூ.2.30 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்தனர். அங்கிருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக முனவர் பாஷா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளூர் குறிஞ்சிநகரை சேர்ந்த ஜமால் (29) நெல்லூர் பேட்டை சேர்ந்த நேரு (50) ஆகியோரும் குட்கா கடத்தியதாக கைது செய்யப்பட்டனர்.
- குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் காயத்ரி (வயது 32).வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்தார்.அதே ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் செல்வகுமார் என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வேலூர் தொரப்பாடி காந்தி நகரில் வசித்து வந்தனர்.
டாக்டர் தம்பதியான இவர்களுக்கு குழந்தை இல்லை. காயத்ரி வீட்டில் இருக்கும்போது செல்வகுமாரும், அவர் வீட்டில் இருக்கும் போது காயத்திரியும் பணிக்கு சென்று வந்தனர்.
இதனால் இருவரும் வீட்டில் ஒன்றாக இருக்க முடியவில்லை. இது குறித்து காயத்ரி அடிக்கடி செல்வகுமாரிடம் உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த நிலையில் செல்வகுமார் டெல்லி சென்றிருந்தார். அங்கிருந்து போனில் அவரது மனைவியிடம் பேசியுள்ளார். பின்னர் மாலையில் போன் செய்தபோது காயத்ரி போனை எடுக்கவில்லை. டெல்லியில் இருந்து நேற்று இரவு செல்வகுமார் வீடு திரும்பினார்.
அவர் வீட்டில் வந்து பார்த்தபோது அங்குள்ள அறையில் காயத்ரி தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதனைக் கண்டு அவர் கதறி அழுதார். இது குறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கணவருடன் சேர்ந்து இருக்க முடியவில்லை, குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் காயத்ரி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 35 பவுன் நகை, பணத்தை அள்ளி சென்றனர்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பாபு. இவர் ஒடுகத்தூரில் கரிகடை வைத்து நடத்தி வருகின்றார்.
இவருக்கு சொந்தமாக ஒரே பகுதியில் 2 வீடுகள் உள்ளது. நேற்று இவரின் பேத்திக்கு பிறந்தநாள் விழா கொண்டாடி விட்டு அருகே இருந்த மற்றொரு வீட்டில் தூங்கினார்.
இந்த நிலையில் அதிகாலை 3.30 மணியளவில் பாபு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருட்டு கும்பல் அங்கு இருந்த 30 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்க பணத்தை யும் கொள்ளையடித்து விட்டு அருகே இருந்த நவின் (வயது 27) என்பவரின் மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து அங்கு இருந்த 5 சவரன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.
மேலும் செல்லும் வழியில் குருவராஜா பாளையம் பகுதியில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து அங்கு இருந்த ரூ. 3 ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப், செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.
காலையில் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டின் பூட்டு உடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தடவியல் வல்லுனர்கள் கைரேகையை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் கொள்ளைச்சம்பவம், வழிப்பறி போன்றவைகள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுக்க புதிய யுக்தியை போலீசார் கையான வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி வேலூர் முதன்மை அமர்வு செசன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார்.
- வழக்கின் விசாரணை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வேலூர்:
விழுப்புரத்தை சேர்ந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கு வேலூர் மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி வேலூர் முதன்மை அமர்வு செசன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார். வழக்கின் விசாரணை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து அமைச்சர் பொன்முடி புறப்பட்டு சென்றார்.
- கணவருடன் சேர்ந்து இருக்க முடியவில்லை, குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் காயத்ரி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் காயத்ரி (வயது 32). வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்தார். அதே ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் செல்வகுமார் என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வேலூர் தொரப்பாடி காந்தி நகரில் வசித்து வந்தனர்.
டாக்டர் தம்பதியான இவர்களுக்கு குழந்தை இல்லை. காயத்ரி வீட்டில் இருக்கும்போது செல்வகுமாரும், அவர் வீட்டில் இருக்கும் போது காயத்திரியும் பணிக்கு சென்று வந்தனர்.
இதனால் இருவரும் வீட்டில் ஒன்றாக இருக்க முடியவில்லை. இது குறித்து காயத்ரி அடிக்கடி செல்வகுமாரிடம் உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த நிலையில் செல்வகுமார் டெல்லி சென்றிருந்தார். அங்கிருந்து போனில் அவரது மனைவியிடம் பேசியுள்ளார். பின்னர் மாலையில் போன் செய்தபோது காயத்ரி போனை எடுக்கவில்லை.
டெல்லியில் இருந்து நேற்று இரவு செல்வகுமார் வீடு திரும்பினார்.
அவர் வீட்டில் வந்து பார்த்தபோது அங்குள்ள அறையில் காயத்ரி தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
கணவருடன் சேர்ந்து இருக்க முடியவில்லை, குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் காயத்ரி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5 கிலோ சிக்கியது
- பெண் உட்பட 2 பேர் கைது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள பீஞ்சமந்தை மலை கிராமத்தில் வேப்பங்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
கஞ்சா செடிகள்
அப்போது விவசாய நிலத்தில் கஞ்சா வாசனை வந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்று பார்த்த போது மிளகாய் செடிகள் இருந்துள்ளன. சற்று உள்ளே சென்று பார்த்த போது கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதன்பின்னர் மிளகாய் தோட்டத்தில் பயிரிட்டு இருந்த 2.5 கிலோ எடை கொண்ட கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். அருகில் இருக்கும் மற்றொரு நிலத்தில் தேடிப்பார்த்த போது அங்கும் கஞ்சா செடிகள் இருப்பது தெரியவந்தது.
அங்கு இருந்த 2.5 கிலோ கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் 5 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் பயிரிடப்பட்ட நிலத்தின் உரிமையாளர் கமலா(வயது45), மற்றொரு நிலத்தின் உரிமையாளர் முத்துக்குமார் (21) என்ற 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- டிரைவர்கள் படுகாயம்
- சமூக விரோத கும்பல் கைது செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு
குடியாத்தம்:
குடியாத்தம் கந்தனேரி அடுத்த தாங்கல் கிராமத்தில் இருந்து இன்று காலை ெரயில்வே தண்டவாளம் ஜல்லி நிரப்பும் பணிக்காக டிப்பர் லாரியில் ஜல்லி ஏற்றிக்கொண்டு சென்றது.
குடியாத்தம் அடுத்த வேப்பூர் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த ஒரு லாரி டிப்பர் லாரி மீது மோதி திரும்பி நின்றது இதில் 2 லாரிகளின் டிரைவர்களும் பலத்த காயமடைந்தனர்.
அதிகாலையில் அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கும் ரோந்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் வருவதற்குள் மோதிய லாரியில் இருந்த டிரைவர் காயங்களுடன் தப்பி ஓடிட்டார் இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த லாரியை சோதனை போது அதில் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தன. ரேசன் அரிசியை வெளியூருக்கு கடத்திச் செல்லும்போது விபத்து ஏற்பட்டதுதெரியவந்தது. இதில் காயம் அடைந்த டிப்பர் லாரி டிரைவர் மரியதாஸ் உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ரேசன் அரிசி கடத்தல் லாரி விபத்து ஏற்படுத்திய சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் உதவி கலெக்டர் எம். வெங்கடராமன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினர். லாரியில் இருந்த அரிசி முட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, வேலூர் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த லாரியில் இருந்த சுமார் 4 டன் எடையுள்ள ரேசன் அரிசியை விபத்து ஏற்படுத்திய லாரியிலிருந்து மீட்டு குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்
விபத்து தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் ரேசன் அரிசி கடத்தல் சம்பவம் குறித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து கடத்தல்
குடியாத்தம் பகுதி தமிழக ஆந்திர எல்லையோரம் உள்ள பகுதியாகும் குடியாத்தம் வழியாக சமூக விரோத கும்பல் தொடர்ந்து பல ஆண்டுகளாக ரேசன் அரிசிகளை சேகரித்து மூட்டைகளாக மாற்றி வெளியூர்களுக்கு கடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் வருவாய்த்துறைவரும், காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் இருந்தும் ரேசன் அரிசி கடத்தல் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
அதனை தொடர்ந்து எல்லைபுற பகுதியான குடியாத்தம் அருகே உள்ள சோதனை சாவடிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கடந்த சில மாதங்களில் மட்டும் குடியாத்தம் பகுதியில் பல டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் இந்த ரேசன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சமூக விரோத கும்பல் கைது செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு உள்ளது.
- சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்
- புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்
வேலூர்:
டிஜிட்டல் கரன்சி குறித்து செல்போனுக்கு வரும் எஸ்எம்எஸ்சை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி முதல்முறையாக டிஜிட்டல் கரன்சியை கடந்த 1-ந்தேதி வெளியிட்டது. இதற்கு டிஜிட்டல் ரூபாய் (மொத்த விலை பிரிவு) என்று பெயரிடப்பட்டுள்ளது. அரசு பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இதில் கிடைக்கும் அனுபவங்களை பொறுத்து, இதர பரிமாற்றங்களுக்கும் இந்த கரன்சியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்நிலையில், மர்மநபர்கள் டிஜிட்டல் கரன்சி தொடர்பாக பொதுமக்களின் செல்போனுக்கு குறுந்தகவல் மற்றும் போன் செய்து பணத்தினை பறித்து வருகின்றனர். இதுகுறித்த புகார்கள் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார் கூறுகையில், 'டிஜிட்டல் கரன்சி நடைமுறை மூலம் பணம் பரிமாற்றம் செய்து தருவதாக போன் அழைப்புகள் அல்லது குறுந்தகவல்கள் மூலம் மர்மநபர்கள் தங்களை அணுகுவார்கள். அந்த செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள்.
புகார் தெரிவிக்காம்
தங்களின் பணத்தை அவர்கள் அபகரித்து விடுவார்கள். எனவே தேவையில்லாத அழைப்புகளோ, குறுந்தகவல்களையோ நம்பி மர்மநபர்களுக்கு பணம் அனுப்ப வேண்டாம். இது தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்' என்றனர்.
- வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் பேச்சு
- தமிழ்ச் சான்றோர்களுக்கு தமிழன்னை விருது
வேலூர்:
உலகத்தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில் வேலூர், லட்சுமி கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரங்கில் முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் தி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
வி.ஐ.டி. வேந்தர் டாக்டர்விசுவநாதன் அவர்கள் தமிழ்ச் சான்றோர்களுக்கு தமிழன்னை விருதுகள் வழங்கினார்.
திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ராஜா பஸ் சர்வீஸ், குழுமம் நா.சுப்பிரமணி, ஆனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் பெரியண்ணன், தமிழ்த் தன்னுரிமை இயக்கம் பாவலர் மு.இராமச்சந்திரன், ஊரீசு கல்லூரி முதல்வர் ஆ.நெல்சன் விமலநாதன், ஊரீசு கல்லூரி பேராசிரியர் பி.கு.திருஈன்பஏழிலன், கவிஞர் இரா.சீனிவாசன், கோவை தமிழ் இலக்கிய பாசறை கோவை கிருஷ்ணா ஆகியோருக்கு விருதுகள்வழங்கப்பட்டன.
மேலும் பள்ளியில் நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குச் சான்றிதழ், பரிசு களை வேந்தர் விசுவநாதன் வழங்கினார்.
பின்னர் அவர் பேசினார்.
வேந்தர் சிறப்புறையில்:-
மாணவர்கள் தாய்மொழியை தவறு இல்லாமல் பேசவும் படிக்கவும் கற்க வேண்டும். மொழிகள் பலவும் கற்பது தவறு இல்லை. தாய்மொழியை முதலில் கற்ற பிறகு வேற்று மொழியை கற்க வேண்டும். உலகில் 6 மொழிகளில் செம்மொழி தமிழ்தான் இன்றும் மாறாமல் உள்ளது. தமிழில் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
செம்மொழிகளில் தமிழ் மூத்த மொழியாகும். உலகில் மூத்த குடியும் தமிழர்கள் தான். நமது தாய்மொழியை நாம் போற்றி வளர்க்க வேண்டும். உலகின் அதிகமான நாடுகளில் தமிழர்கள் தான் வாழ்கிறார்கள். தமிழர்கள் பெயர்கள் தூய தமிழில் இருக்க வேண்டும். அதற்கு நாம் வழிவகை செய்யவேண்டும். தமிழை நாம் வளர்க்க வேண்டும் என்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக திரைச்செம்மல் விருது பெற்ற கலைப்புலி ஏஸ்.தாணு அவர்கள் சிறப்புரை யாற்றினார். லட்சுமி வரவேற்று பேசினார்.
உலகத் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் தலைவர் தமிழ் புகழேந்தி அறிமுக உரையாற்றினார். முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், உலகத்தமிழ் வளர்ச்சி மன்றம் துணைத்தலைவர் அப்புபால் வி.எம்.பாலாஜி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் மன்ற செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, ஆ.ஆண்ட்ரூஸ், முன்னாள் துணை மேயர் வி.டி.தருமலிங்கம், கட்டுமான தொழிலாளர் அமைப்பு தலைவர் ஆர்.டி.பழனி, சித்தார்த்தர் பள்ளி தாளாளர் முனைவர் ஜெ.விக்னேஷ்குமார், பொறியாளர் என்.பி.தனிகைவேலன், அன்னை மீரா கல்லூரி தாளாளர்கள் எஸ்.ராமதாஸ், ஜி.தாமோதரன், வங்கி மேலாளர் மா.கல்யாணசுந்தரம், கல்வி உலகம் பள்ளி தாளாளர் த.வ.சி.சிவபெருமான், தலைமை ஆசிரியர் (ஓய்வு) சந்திரசேகர், சித்தார்த்தர் பள்ளி தமிழாசிரியை வி.சாந்தி, நா.அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழாசிரியை வி.சாந்தி தொகுத்து வழங்கினார். இன்பஏழிலன் நன்றி கூறினார்.
- 2,547 பேர் எழுதினர்
- போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
வேலூர்:
வேலூரில் இன்று 9 மையங்களில் நில அளவையர் பணிக்கான தேர்வை 9 மையங்களில் நடந்தது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 798 கள ஆய்வாளர், 236 வரைவோர், 55 சர்வேயர் மற்றும் உதவி வரைவாளர் பதவிகள் என 1,098 காலி பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடந்தது.
வேலூர் உட்பட 15 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டன.
அதன்படி தேர்வு இன்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம் அரசு பள்ளி, தோட்டப்பாளையம் அரசு மகளிர் பள்ளி, சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி பள்ளி, ஊரீசு மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி சாந்திநிகேதன் பள்ளி, அலமேலுமங்காபுரம் சினேகதீபம் பள்ளி, ஓட்டேரி ெசவன்த்டே பள்ளி, விருபாட்சிபுரம் தேசியா மெட்ரிக்பள்ளி ஆகிய 9 இடங்களில் தேர்வு நடந்தது.
காலை, மாலை என இருவேளைகளும் முதல் தாள் மற்றும் 2ம் தாள் தேர்வு நடந்தது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2,547 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு மையங்களில் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு மையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- கோவிலுக்கு பாதிப்பில்லாத வகையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை
- எம்.எல்.ஏ. உறுதி
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அக்ராவரம் மற்றும் மீனூர் கிராமத்திற்கு இடையே கவுண்டன்யா மகாநதி ஆறு செல்கிறது.
கவுண்டன்யா மகாநதியின் ஆற்றின் கரையில் கெங்கையம்மன் கோவில் அக்ராவரம்அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் மீனூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு தயங்குகின்றனர் பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர்.
சுமார் 2 மாதத்திற்கு மேலாகவும் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ளம் செல்லும் போது மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் மேலும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அக்ராவரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிக்காக இப்பகுதிக்கு வர மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் அக்ராவரம்- மீனூர் இடையே கவுண்டன்யா மகாநதி ஆற்றில் மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
நபார்டு திட்டத்தின் கீழ் அக்ராவரம்-மீனூர் இடையே கவுண்டன்யா மகாநதி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைப்பதற்கு குறித்து கருத்துரை கேட்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன் ஒன்றிய பொறியாளர் புவியரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மேம்பாலம் அமைக்கும் போது கெங்கையம்மன் கோவில் மற்றும் அப்பகுதியில் உள்ள சில வீடுகள், பள்ளிக்குச் செல்லும் வழி அடைக்கப்படும் என கூறப்படுகிறது. மேம்பாலத்தை கட்டுவது தரைப்பாலமாக மாற்றி கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அப்போது மீனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மேம்பாலமாக கட்டி தர வேண்டும் என வலியுறுத்தினர்.
அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்கும், பள்ளிக்கும் பாதிப்பும் ஏற்படாத வகையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
இதனை தொடர்ந்து அமலுவிஜயன் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் உள்ளிட்டோர் முக்கிய பிரமுகர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளிக்கும் கோவிலுக்கும் பாதிப்பில்லாத வகையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை நடைபெறும் சமயத்தில் 2 பள்ளி சிறுவர்கள் அமுலு விஜயன் எம்எல்ஏைவ கட்டிப்பிடித்து மழைக் காலங்களில் பள்ளிக்கு வர முடியவில்லை விரைவாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
அவர்களிடம் மாணவர்கள் நலனே முக்கியம் மேம்பாலம் கண்டிப்பாக கட்டி தரப்படும் என எம்.எல்.ஏ. உறுதி கூறி அனுப்பி வைத்தார்.






