என் மலர்
வேலூர்
- போலீசார் வழக்கு பதிவு
- கொலையா? விசாரணை
அணைக்கட்டு:
ஒடுக்கத்தூர் அடுத்த மராட்டிய பாளையம் கிராமத்தில் ஏ. புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). இவர் வேலூரில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
திருமணம் ஆகாதவர் இந்த நிலையில் இன்று காலை ஊருக்கு அருகே உள்ள விவசாய கிணற்றில் பாலகிருஷ்ணன் உடல் மிதந்து கிடந்தது.
இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒடுக்கத்தூர் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து பாலகிருஷ்ணன் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
இது குறித்து ஒடுகத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணன் கொலை செய்து கிணற்றில் வீசினரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயின் கோசலாவில் மாடுகளை ஒப்படைக்கப்படும்
- மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் தெரிவித்தனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம், 14-வது வார்டுக்கு உட்பட்ட ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் மெயின் ரோடு மற்றும் தெருக்களில் மாடுகள் சுற்றி திரிகிறது.
செல்பவர்கள், வாகன ஓட்டிகளை மாடுகள் முட்டி விபத்து ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி உத்தரவின்படி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு சாலைகளில் சுற்றித்திரிந்த 5 மாடுகள் பிடிக்கப்பட்டது.
பிடிக்கப்பட்ட மாட்டின் அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மாநகராட்சிக்கு அபராதமாக கட்ட வேண்டும், பணம் கட்ட தவறினால் கோட்டை சுற்று சாலையில் உள்ள ஜெயின் கோசலாவில் மாடுகளை ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
- மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்
- சான்றிதழ் வழங்கப்பட்டது
வேலூர்:
சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் அடிமுறை பயிற்சி முகாம் இன்று நடந்தது.
முகாமிற்கு அருங்காட்சி யக காப்பாட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 83 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவிகளுக்கு போதி தர்மா கலைப் பள்ளி சார்பில் பயிற்சி சிபிராஜ் அடிமுறை பயிற்சியான சிலம்பம், கராத்தே உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தார். பிடிவர்மம் குறித்து சித்த வைத்தியர் கோபி பயிற்சி அளித்தார்.
இதையடுத்து ஓவிய பயிற்சியாளர் ஓவியம் வரைவது குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சியில் கலந்து கொண்ட 83 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- நடனம் ஆடும்போது ஒருவரை ஒருவர் முட்டியதால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர் அருகே உள்ள சின்ன தெள்ளூர் கிராமத்தில் நேற்று கெங்கை அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. நேற்று இரவு சாமி ஊர்வலம் சென்றது.
அப்போது அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 35) ஊர்வலத்தில் நடனம் ஆடினார்.
அப்போது 5 பேர் கொண்ட கும்பல் நடனம் ஆடினர். இதல் நடனம் ஆடும்போது ஒருவரை ஒருவர் முட்டி உள்ளனர். இதனால் அருண்குமாருக்கும் கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த 5 பேர் கொண்ட கும்பல் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து அருண்குமாரின் கழுத்தில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அருண்குமாரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை பீர் பாட்டிலால் குத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 600 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து போலீசார் அழித்தனர்
- மோட்டார் சைக்கிள், மது பாட்டில்கள் பறிமுதல்
குடியாத்தம்:
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், குணசேகரன், நெடுஞ்செழியன், பழனி உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் அதிரடி கள்ளச்சாராய சோதனை நடத்தினர்.
அப்போது கள்ளச்சாராயம் விற்றுக்கொண்டிருந்த தனகொண்டபல்லி கிராமத்தைச் சேர்ந்த மரியா (வயது 65), சேட்டு (75), அன்பு (65), பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (32), கோமதி (32), சேம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (40), மோர்தானா ஜங்காலப்பல்லி பகுதியை சேர்ந்த அமுதா (38), எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா (43), மோர்தானா கிராமத்தைச் சேர்ந்த திலகா (40), பொட்டியம்மாள் (67), வேலு (38) ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து 600 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து போலீசார் அழித்தனர்.
அதேபோல் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் அதிரடி சாராய சோதனை செய்தனர் அப்போது மோட்டார் சைக்கிளில் சுமார் 50 லிட்டர் கள்ளச்சாராயத்தை கடத்தி வந்த நெல்லூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் டவுன் போலீசார் மது பாட்டில்கள் விற்றதாக குடியாத்தம் அடுத்த லக்ஷ்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் (49) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- 18 பேர் பணியிட மாறுதல் பெற்றனர்
- பதவி உயர்வு அளிக்காமல் கலந்தாய்வு நடத்துவதால், காலிப்பணியிடங்கள் ஏற்படாது
வேலுார்:
தமிழகத்தில் அரசுப்பள்ளி களில் பணிபுரியும் ஆசிரியர்க ளுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. இதில், உயர்நிலை, மேல்நிலைப்பள் ளிகளில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் களுக்கு பதவி உயர்வுக்கான அறிவிப்பு இன்றி, கலந்தாய்வு நடக்கிறது.
அதேநேரம், பதவி உயர்வு அளிக்காமல் கலந்தாய்வு நடத் துவதால், காலிப்பணியிடங்கள் ஏற்படாது. அப்படி இருக்கும் போது, எப்படி பணியிடமாறுதல் கிடைக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதற்கு ஏற்றவாறு, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்க ளுக்கு, மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெறுவ தற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.
ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் போதுமான அளவுக்கு காலிப்பணியிடங்கள் இல்லாத நிலையில், பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் ஏமாற்றத்து டன் திரும்பிச்சென்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, வேலுார்-24, திருவண்ணா மலை - 41,திருப்பத்துார்-16, ராணிப்பேட்டை-31 என்று அரசு மேல்நிலைப்பள்ளி களில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
மொத்தமாக, தமிழகம் முழுவதும் 670 மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணி யிடங்களை நிரப்புவதற்கு, முதுகலை ஆசி ரியர்களுக்கு தலைமைஆசிரியர் களாக பதவி உயர்வு வழங்கியி ருந்தால், காலிப்பணி யிடங்கள் உருவாகி இருக்கும்.
ஆனால், இந்த நடவடிக்கையை மேற்கொ ள்ளாமல், முதுகலை ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர்.
பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தியதால், காலிப்பணியி டம் இன்றி மாறுதல் பெற முடி யாமலும், பதவி உயர்வு கிடைக் காமலும் முதுகலை ஆசிரியர் கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும், வேலுார் மாவட் டத்தில் கணக்குப்பதிவியல்-4, வணிகவியல்-1, இயற்பியல் -3, தமிழ்-3, ஆங்கிலம்-3, விலங்கியல்-2, கணிதம்-1, வரலாறு-2, உடற்கல்வி இயக் குனர்-2 என மொத்தம் 21 காலிப்பணியிடங்களுக்கு கலந் தாய்வு நேற்று நடந்தது.
18 பேர் மட்டுமே மாறுதல்
இதற்காக, 203 முதுகலை ஆசிரி யர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில், 18 பேர் மட்டுமே பணியிட மாறுதல் பெற்றனர். மீதமுள்ள வர்கள், தங்களுக்கான பாடங்களில் காலிப்ப ணியிடங்கள் இல்லாத நிலையில், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
- யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது
- 6 குழுக்கள் அமைக்கப்பட்டது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகம் சுமார் 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த வனச்சரகத்தில் உள்ள பரதராமி அடுத்த டி.பி.பாளையம், வீ.டி.பாளையம், கொத்தூர், கதிர்குளம், கல்லப்பாடி, சைனகுண்டா, மோர்தானா, தனகொண்டபல்லி, கொட்டமிட்டா, மோடிகுப்பம், சேங்குன்றம், கொட்டாரமடுகு, உள்ளிட்ட கிராமங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
வனச்சரகத்தில் உள்ள யானைகள் குறித்து கணக்கெடுக்குமாறு தமிழக வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வேலூர் மண்டல வன பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் கலாநிதி ஆகியோர் யானைகளை கணக்கெடுக்க உத்தரவிட்டார்.
அதன் பேரில் குடியாத்தம் வனச்சரகத்தில் உள்ள தனகொண்டபல்லி பீட், கொட்டமிட்டா பீட், சைனகுண்டா பீட், மோர்தானா பீட் ஆகிய பகுதிகளில் யானைகளை கணக்கெடுக்க 6 குழுக்கள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாட்கள் காலை முதல் மாலை வரை வனப்பகுதிகள் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் யானைகள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
- பல்லக்கு செல்லும் பகுதியில் மின் இணைப்பை துண்டிக்கப்பட்டது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியும், கடந்த 11-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், 14-ந் தேதி தேர்த்திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடந்தது. இந்த விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இவ்விழாவின் தொடர்ச்சியாக பூப்பல்லக்கு பவனி நிகழ்ச்சி நடைபெற்றது நேற்று இரவு குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் அருகே கோபாலபுரம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சிவலிங்கம் மற்றும் விநாயகர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய உலா வந்தது.
பல்லக்கில் அமைக்கப்பட்டிருந்த விதவிதமான அலங்காரங்களில் அம்மனை வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், கௌரவ தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணிக்குழு சேர்ந்த ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் மற்றும் இளைஞர் அணியினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல் குடியாத்தம் தரணம்பேட்டை புஷ்ப வியாபாரிகள் சங்கம் சார்பில் 67-ம் ஆண்டு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது குடியாத்தம் கண்ணகி தெரு காளியம்மன் கோவில் அருகே அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.
இந்தப் பல்லக்கில் சிறப்பம்சமாக முதலில் சிறிய பல்லக்கு செய்யப்பட்ட அதில் 14அடி உயரத்தில் சமயபுரத்து அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது தொடர்ந்து புற்று அம்மன் அலங்காரத்தில் பூப்பல்லக்கு உலா வந்தது.
இதற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் புஷ்ப வியாபாரிகள் சங்க தலைவர் ராமலிங்கம், துணைத் தலைவர் நாராயணசாமி பொருளாளர் பாலையா, செயலாளர் சந்திரசேகர், கவுரவ தலைவர் லோகநாதன் உள்பட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
குடியாத்தம் அகமுடைய முதலியார் சங்கம் சார்பில் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் இரண்டு யானைகள் பிளிரும் வகையில் அஷ்டலட்சுமிகள் சுவாமி உருவங்கள் வைக்கப்பட்டிருந்தது நகரின் முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய உலா வந்தது.
இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் எம்.ஏ.கே. சீனிவாசன், செயலாளர் ஜி.மணிவண்ணன், சங்க ஆலோசகர் வக்கீல் கே.எம்.பூபதி, பொருளாளர் ஆர்.பி.செந்தில் உள்பட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்
குடியாத்தம் நகரில் 3 புஷ்ப பல்லக்கில் உலா வந்ததை காண குடியாத்தம் நகர மற்றுமில்லாமல் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிர க்கணக்கான பொது மக்களும், திருவிழாவுக்காக உறவினர் வீடுகளுக்கு வந்தவர்களும் தரிசனம் செய்தனர். மின் பணியாளர்கள் பூ பல்லக்கு செல்லும் பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். பூப்பல்லக்கு சென்றபின் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை உடனடியாக இணைத்தனர்.
- 2 ஆயிரம் ஆண்டு பழமையானது
- 11 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள பாக்கம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான உமாமகேஸ்வரி உடனுறையான கைலாயநாதர் கோவில் உள்ளது.
இங்கு அனைத்து வகையான பிரதோஷங்கள், அமவாசை, பவுர்ணமி, போன்ற தினங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடைப்பெறுவது வழக்கம்.
இதனை தொடர்ந்து இந்த மாதத்தில் நேற்று பிரதோஷம் என்பதால் கைலாயநாதருக்கு பால், தேன், மஞ்சள், குங்குமம், உள்ளிட்ட 11 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனையடுத்து கைலாயநாதருக்கும் உமா மகேஷ்வரிக்கும் சிறப்பு ஆதியோகி அலங்காரம் செய்யப்பட்டது.
இதனை பாக்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா முடிவில் அணைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
- யானைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே யானை நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து காட்டு பகுதிக்கு சென்று இருக்கும்.
- ஊருக்குள் சுற்றி திரியும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
ஜோலார்பேட்டை:
கர்நாடக வனப்பகுதியில் இருந்து கடந்த 19 நாட்களுக்கு முன்பு வெளியேறிய 5 யானைகளில் 2 யானைகள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி, ஏலகிரி மலை பகுதியில் சுற்றி வருகிறது.
யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது அதில் இரண்டு குழுவினர் யானை எந்த பக்கம் செல்கிறது. என கண்காணித்து வருகின்றனர்.
மற்றொரு 3 குழுவினர் யானை முகாமிட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
யானைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே யானை நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து காட்டு பகுதிக்கு சென்று இருக்கும்.
பொதுமக்கள் யானையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து யானைக்கு தொந்தரவு செய்ததால் அது காட்டிற்குள் செல்ல முடியாமல் ஊருக்குள் நுழைந்த சுற்றி திரிந்து வருகிறது. இன்று காலை 2 யானைகளும், சவடிகுப்பம் பகுதியில் சுற்றி திரிந்தன.
ஊருக்குள் சுற்றி திரியும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக முதுமலை சரணாலயத்தில் இருந்து உதயன், வில்சன் என்ற 2 கும்கி யானைகளும் பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை லாரி மூலம் இன்று காலை கொண்டுவரப்பட்டன.
மேலும் யானை பாகன்கள் உடன் வந்துள்ளனர். கும்கி யானைகள் பயணம் செய்ததால் களைப்பாக உள்ளது. அந்த யானைகளை அதிகாலையிலேயே குளிக்க வைத்தனர்.
மேலும் தேவையான உணவு வழங்கப்பட்டது. இன்று மாலை அல்லது நாளை காலையில் காட்டு யானைகள் கும்கி யானை மூலம் விரட்டப்படும் என தெரிவித்தனர்.
- பூப்பல்லக்குகள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக விடிய விடிய உலா வந்தது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி நடந்தது. கடந்த 11-ந்தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், 14-ந்தேதி தேர்த்திருவிழாவும், 15-ந்தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடந்தது.
விழாவின் தொடர்ச்சியாக பூப்பல்லக்கு பவனி வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோபாலபுரம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சிவலிங்கம் மற்றும் விநாயகர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், கவுரவ தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணிக்குழுவை சேர்ந்த ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் மற்றும் இளைஞர் அணியினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல் தரணம்பேட்டை புஷ்ப வியாபாரிகள் சங்கம் சார்பில் பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கண்ணகி தெரு காளியம்மன் கோவில் அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கு வீதி உலா வந்தது.
சிறப்பம்சமாக முதலில் சிறிய பல்லக்கு செய்யப்பட்டு அதில் 14அடி உயரத்தில் சமயபுரத்து அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து புத்துஅம்மன் அலங்காரத்தில் பூப்பல்லக்கு உலா வந்தது.
அகமுடைய முதலியார் சங்கம் சார்பில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் இரண்டு யானைகள் பிளிரும் வகையில் அஷ்டலட்சுமிகள் உருவங்கள் வைக்கப்பட்டிருந்தது.
பூப்பல்லக்குகள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக விடிய விடிய உலா வந்தது.
ஏற்பாடுகளை சங்கத் தலைவர் எம்.ஏ.கே. சீனிவாசன், செயலாளர் ஜி.மணிவண்ணன், சங்க ஆலோசகர் வக்கீல் கே.எம்.பூபதி, பொருளாளர் ஆர்.பி.செந்தில் உள்பட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மின் பணியாளர்கள் பூ பல்லுக்கு செல்லும் பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைப்பதாலும், இரவிலும் அனல் காற்று வீசுவதாலும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பூப்பல்லக்கு செல்லும் பகுதிகளில் பல மணி நேரம் மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள்.
- சம்பளம் வழங்க கோரிக்கை
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 2 மண்டலத்தில் குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர்கள் 44 பேர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு மாநக ராட்சியில் மாதந்தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆபரேட்டர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்ைல. தெரிவித்தும் அவர்களுக்கு சம்பளம் வழங்க அதிகாரிகள் முன் வரவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் 44 பேரும் 3 மாத நிலுவை சம்பளத்தை வழங்க கோரி இன்று 2-வது மண்டல அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 2-வது மண்டல உதவி என்ஜினியர் ஆறுமுகம் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நிலுவைத் தொகையை விரைவில் வழங்குவதாகவும், இனிமேல் பணிக்கு வரும் ஊழியர்கள் தினமும் மண்டல அலுவலகத்தில் உள்ள வருகைப் பதிவு நோட்டில்கையெழுத்திட்டு செல்ல வேண்டும்.
அப்படி கையெழுத்திடாத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்தார்.






