என் மலர்
நீங்கள் தேடியது "To work in schools"
- 18 பேர் பணியிட மாறுதல் பெற்றனர்
- பதவி உயர்வு அளிக்காமல் கலந்தாய்வு நடத்துவதால், காலிப்பணியிடங்கள் ஏற்படாது
வேலுார்:
தமிழகத்தில் அரசுப்பள்ளி களில் பணிபுரியும் ஆசிரியர்க ளுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. இதில், உயர்நிலை, மேல்நிலைப்பள் ளிகளில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் களுக்கு பதவி உயர்வுக்கான அறிவிப்பு இன்றி, கலந்தாய்வு நடக்கிறது.
அதேநேரம், பதவி உயர்வு அளிக்காமல் கலந்தாய்வு நடத் துவதால், காலிப்பணியிடங்கள் ஏற்படாது. அப்படி இருக்கும் போது, எப்படி பணியிடமாறுதல் கிடைக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதற்கு ஏற்றவாறு, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்க ளுக்கு, மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெறுவ தற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.
ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் போதுமான அளவுக்கு காலிப்பணியிடங்கள் இல்லாத நிலையில், பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் ஏமாற்றத்து டன் திரும்பிச்சென்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, வேலுார்-24, திருவண்ணா மலை - 41,திருப்பத்துார்-16, ராணிப்பேட்டை-31 என்று அரசு மேல்நிலைப்பள்ளி களில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
மொத்தமாக, தமிழகம் முழுவதும் 670 மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணி யிடங்களை நிரப்புவதற்கு, முதுகலை ஆசி ரியர்களுக்கு தலைமைஆசிரியர் களாக பதவி உயர்வு வழங்கியி ருந்தால், காலிப்பணி யிடங்கள் உருவாகி இருக்கும்.
ஆனால், இந்த நடவடிக்கையை மேற்கொ ள்ளாமல், முதுகலை ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர்.
பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தியதால், காலிப்பணியி டம் இன்றி மாறுதல் பெற முடி யாமலும், பதவி உயர்வு கிடைக் காமலும் முதுகலை ஆசிரியர் கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும், வேலுார் மாவட் டத்தில் கணக்குப்பதிவியல்-4, வணிகவியல்-1, இயற்பியல் -3, தமிழ்-3, ஆங்கிலம்-3, விலங்கியல்-2, கணிதம்-1, வரலாறு-2, உடற்கல்வி இயக் குனர்-2 என மொத்தம் 21 காலிப்பணியிடங்களுக்கு கலந் தாய்வு நேற்று நடந்தது.
18 பேர் மட்டுமே மாறுதல்
இதற்காக, 203 முதுகலை ஆசிரி யர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில், 18 பேர் மட்டுமே பணியிட மாறுதல் பெற்றனர். மீதமுள்ள வர்கள், தங்களுக்கான பாடங்களில் காலிப்ப ணியிடங்கள் இல்லாத நிலையில், ஏமாற்றத்துடன் திரும்பினர்.






