search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் டிரைவர் பிணம் மீட்பு
    X

    கிணற்றில் டிரைவர் பிணம் மீட்பு

    • போலீசார் வழக்கு பதிவு
    • கொலையா? விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுக்கத்தூர் அடுத்த மராட்டிய பாளையம் கிராமத்தில் ஏ. புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). இவர் வேலூரில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    திருமணம் ஆகாதவர் இந்த நிலையில் இன்று காலை ஊருக்கு அருகே உள்ள விவசாய கிணற்றில் பாலகிருஷ்ணன் உடல் மிதந்து கிடந்தது.

    இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒடுக்கத்தூர் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து பாலகிருஷ்ணன் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    இது குறித்து ஒடுகத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணன் கொலை செய்து கிணற்றில் வீசினரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×