search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்
    X

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

    • கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கப்படுகிறது.
    • தி.மு.க. கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரப்படுத்தி உள்ளன. கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என ஒவ்வொன்றுக்கும் குழு அமைத்து கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தை பொறுத்த வரை தி.மு.க. கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றாலும் அந்தக் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கப்படுகிறது.

    இதனால் காங்கிரசார் தேர்தல் வேலையை தொடங்கி விட்டனர். இதேபோல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ப தால் அதற்கான பணிகளிலும் காங்கிரசார் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., டெல்லி சென்று திரும்பியதும் தேர்தல் தொடர்பான பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி நேற்று அவர் குமரி மாவட்டம் வந்தார்.

    அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாகர்கோவிலில் பெண்களுக்கான நீதி-நாங்கள் தயார் என்ற தலைப்பில் நடந்த மகளிர் மாநாட்டிலும் பங்கேற்று பேசினார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மார்த்தாண்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது. இந்த கூட்டத்திற்கு விஜய்வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிக்காக எவ்வாறு செயல்படுவது, மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது போன்றவை குறித்து அவர் ஆலோசனை வழங்கினார்.

    மேலும் விளவங்கோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் போன்றவை குறித்தும் அவர் கருத்துக்களை தெரிவித்தார்.

    முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கன்னியாகுமரி கடற்கரை சாலைகள் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்துக்கு சென்றார். அங்குள்ள காந்தியின் அஸ்தி கட்டத்தில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் காமராஜர் மணிமண்டபத்துக்கு சென்றார். அங்குள்ள காமராஜரின் மார்பளவு வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி., குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×