என் மலர்tooltip icon

    சேலம்

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.

        சேலம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகள் மட்டும்) - எலைட், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (எம்ஐஎம்எஸ்), வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (சிடிஎஸ்) என 3 வகைகளில் செயல்படுத்தப்படுகிறது.

    மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று, பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

    இந்த திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் sdat@tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 20-ந்தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர, பிற விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

    தகுதியான வின்ணப்பங்கள், அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும். பின்னர், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, இறுதியாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். அதிகபட்சம் அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

    இந்த 3 திட்டங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 22-ந்தேதி வரை ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பெற்ற பன்னாட்டு, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை ஏற்கனவே உள்ள பதிவு ஐ.டி. மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்து உள்ளார்.

    • திலக் கடந்த 12-ந்தேதி ஓசூர் ரெயில் நிலைய சாலை பகுதியில் உள்ள பெரியார் நகரில் ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.
    • போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் டவுன் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    சங்ககிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அச்செட்டிப்பள்ளி அருகே உள்ள சொப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் திலக். பிரபல ரவுடி.

    இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீராம் சேனா என்கிற அமைப்பின் நகர செயலாளர் மோகன்பாபு என்பவர் கொலை வழக்கில் கைதாகி, சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த நிலையில் திலக் கடந்த 12-ந்தேதி ஓசூர் ரெயில் நிலைய சாலை பகுதியில் உள்ள பெரியார் நகரில் ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய ஓசூர் மத்திகிரி குதிரைபாளையத்தை சேர்ந்த முனிராஜ் மகன் சசிகுமார் (24) என்பவர் நேற்று சங்ககிரி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா முன்னிலையில் சரணடைந்தார். அவரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சசிகுமார், சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் டவுன் போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே இதற்கான ஆவணங்களை போலீசார் விரைவில் கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள் என தெரிகிறது.

    • பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளியிடப்பட்டது.
    • வருகிற ஜூன் மாதம் 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ள துணைத் தேர்வை எழுதலாம்.

    சேலம்:

    பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளி யிடப்பட்டது.

    இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வுக்கு செல்லாதவர்கள் வருகிற ஜூன் மாதம் 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ள துணைத் தேர்வை எழுதலாம். இந்த துணை தேர்வை எழுத மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களிலும் கடந்த 11-ந்தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர்.

    தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து வருகின்றனர்.

    இந்த துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

    நாளை விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் உரிய கூடுதல் கட்டணத்துடன் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் இணை யவழியில் விண்ணப்பிக்க லாம்.

    இந்த தகவலை பள்ளிக்க ல்வித்துைற அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

    • ராஜசேகரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் இன்று மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர்.
    • மோகனசுந்தர பாண்டியன் (வயது 28) என்பவர் மாலத்தீவில் பிளம்பர் உள்ளிட்ட பணிகளுக்கு வேலை இருப்பதாகவும், மாதம் ரூ.70 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் காட்டூர் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் இன்று மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ராஜசேகரன் கூறும்போது, சமூக வலைத்தளமான முகநூலில் மாலத்தீவில் எலக்ட்ரீசியன், பிளம்பர் உள்ளிட்ட பணிகளுக்கு வேலை இருப்பதாக விளம்பரம் ஒன்று செய்து இருந்தனர்.

    அதை பார்த்து தொடர்பு கொண்டபோது, ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த மோகனசுந்தர பாண்டியன் (வயது 28) என்பவர் மாலத்தீவில் பிளம்பர் உள்ளிட்ட பணிகளுக்கு வேலை இருப்பதாகவும், மாதம் ரூ.70 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.

    பணிகளுக்கு ஏராளமான நபர்கள் தேவை எனவும் கூறியிருந்தார்.

    இதையடுத்து எனது வட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்டோரை வேலைக்காக அறிமுகம் செய்தேன். அனைவரிடமும் ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என சுமார் 8 லட்ச ரூபாய் பெற்று கொண்டார்.

    ஆனால் அதன்பின்னர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்தார். அவரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த நிலையில் தலைமறைவாகி விட்டார். சுமார் ஒரு வருடமாக தேடி வந்த நிலை யில் மேட்டுப்பாளையம் பகுதியில் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம் சென்று நேற்று அவரை பிடித்து, இன்று காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்துள்ளோம் என தெரிவித்தார்.

    மேலும் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • 10-ந்தேதி மதியம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
    • இது பற்றி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் பாலகிருஷ்ணா லாட்ஜ் சங்கம் சைக்கிள் நிறுத்தம் நிலை யம் அருகில் கடந்த 10-ந்தேதி மதியம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இது பற்றி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த இந்த முதியவரின் பெயர் மற்றும் முகவரி தெரியாததால் உடலை ஒப்படைக்க முடி யாத சூழ்நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இறந்த முதியவருடைய இடது கால் முட்டி, இடது காலில் காய தழும்பு உள்ளது. எனவே இவரை பற்றி தகவல் கிடைத்தால் போலீஸ் நிலை யத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • உதயசங்கர் (வயது 30). பா.ஜ.க. இளை ஞரணி பகுதி செயலாளராக இருந்த இவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி ஐ.ஜே.கே. கட்சியில் சேர்ந்தார்.
    • 3 பேர் கும்பல் அங்கு வந்து தகராறு செய்து, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    சேலம்:

    சேலம் அரிசிப்பாளையம் வண்டிபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராம ஜெயம். இவரது மகன் உதயசங்கர் (வயது 30). பா.ஜ.க. இளை ஞரணி பகுதி செயலாளராக இருந்த இவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி ஐ.ஜே.கே. கட்சியில் சேர்ந்தார்.

    கொலை

    வெள்ளி தொழில் செய்து வந்த இவர் நேற்று மாலை தனது புல்லட் மோட்டார்சைக்கிளில் நண்பர் அலெக்ஸ்பாண்டி யன் என்பவருடன் பள்ளப்பட்டி கூட்டுறவு சொசைட்டிக்கு எதிரே உள்ள ஓட்டலுக்கு வந்தார். அங்கு மோட்டார் சைக் கிளை நிறுத்தி விட்டு, சாலையோரம் நின்றபோது 3 பேர் கும்பல் அங்கு வந்து தகராறு செய்து, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனால் வெட்டு காயத்துடன் அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.ஆனால் மர்ம நபர்கள் துரத்திச் சென்று ஓட, ஓட விரட்டி அவரை வெட்டி னர். இதில் உதய சங்கருக்கு தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. இதை தடுக்க வந்த அலெக்ஸ் பாண்டி யனையும் அந்த கும்பல் வெட்டியது. இதனால் உயிருக்கு பயந்து அவர் அங்கிருந்து ஓடினார்.

    நண்பருக்கு சிகிச்சை

    சாலையோரம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த உதயசங்கரை அங்கிருந்த வர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உதயசங்கர் பரிதாபமாக இறந்தார்.

    தொடர்ந்து உதயசங்கரின் நண்பர் அலெக்ஸ்பாண்டியனுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தி.மு.க. வார்டு செயலாளர்

    இந்த கொலை சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார், ெகாலை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் கொலையில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ள னர். அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் தி.மு.க. 26-வது வார்டு செயலாளர் முருகன் (வயது 38) உள்பட 3 பேரை பிடித்து விசா ரணை நடத்தி வருகின்றனர். ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார், அவர்களிடம் எதற்காக இந்த கொலை நடந்ததது? இந்த கொலைக்கும், உங்களுக்கும் தொடர்பு உள்ளதா? கொலையில் ஈடுபட்ட நபர்கள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள்? கொலைக்கு உதவி செய்த வர்கள் யார்?, கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்க ளுக்கு அடைக்கலாம் கொடுத்த நபர்கள் யார்? என பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் வெள்ளிப்பட்டறை உரிமையாளர் உதயசங்கரை எதற்காக கொலை செய்தார்கள் யார்? என்பது பற்றிய முழு விபரமும் தெரியவரும்.

    1½ ஆண்டுகளுக்கு முன்பு உதயசங்கர் வெள்ளிகட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர்

    பள்ளப்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட உதயசங்கர் மற்றும் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர்,, மற்றொரு நபரும் என 3 பேர் சேர்ந்து ஓமலூர் பகுதியில் வெள்ளி வியாபாரியை கடத்தி வெள்ளிக்கட்டி மற்றும் பணம் பறித்தது தொடர்பான வழக்கில் ஓமலூர் போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் உதயசங்கர் ஜாமீனில் வெளியே வந்த பின், வண்டிப்பேட்டையில் பெற்றோருடன் வசித்து வந்தார். அவ்வபோது வெள்ளிக்கட்டி கொண்டு வரும் வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்று தருவதாக கூறி தனி வியாபாரத்தையும் நடத்தி வந்திருக்கிறார். வெள்ளிகட்டி வியாபா ரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது.

    இந்த பணம் கொடுக்கல், வாங்கல் சம்பவத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தான் மர்ம கும்பல் அவரை நேற்று சரமாரியாக வெட்டி கொலை செய்து உள்ளது, என விசாரணையில் தெரியவந்துள்ளது.


    • கலெக்டர் அலுவலகத்தில் வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி( புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
    • கலெக்டர் கார்மேகம் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்கு நரக அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை இயக்குநர் முன்னிலையிலும் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் பணி புரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறை கள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி( புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

    இக்கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்கு நரக அரசு கூடுதல் செயலா ளர், நிதித்துறை இயக்குநர் முன்னிலையிலும் நடக்கிறது.

    எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபு ரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்களது ஓய்வூதிய பலன்கள் குறித்து ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களது முறை யீட்டு மனுக்களை 2 பிரதிக ளுடன் வருகிற 30-ந்தேதி (செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்குகள்) நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மே கம் தெரிவித்துள்ளார்.

    • நல்லப்பன் (வயது 50). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.
    • நல்லப்பன் தட்டி கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில், சகாதேவன், அவரது மகன் ஷங்கர் ஆகியோர் நல்லப்பனை கத்தியால் குத்தினர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நல்லப்பன் (வயது 50). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில், நல்லப்பனுக்கு சொந்தமான நிலத்தில், அதே பகுதியை சேர்ந்த சகாதேவன் (65), அவரது மகன் ஷங்கர் (39) ஆகியோர் கற்களை போட்டதாக கூறப்படுகிறது.

    இதனை நல்லப்பன் தட்டி கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில், சகாதே வன், அவரது மகன் ஷங்கர் ஆகியோர் நல்லப்பனை கத்தியால் குத்தினர். பலத்த காயமடைந்த நல்லப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சகாதேவன் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏற்காட்டுக்கு வீடு கட்ட ஹாலோபிரிக்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு குப்பனூர் மலை பாதை வழியே கனரக லாரி ஒன்று சென்றது.
    • லாரி கீரைகாடு என்ற இடத்தில் வந்தபோது லாரியை நிறுத்த டிரைவர் பிரேக் பிடித்தார். ஆனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு வீடு கட்ட ஹாலோபிரிக்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு குப்பனூர் மலை பாதை வழியே கனரக லாரி ஒன்று சென்றது. லாரியை ஏற்காடு பட்டிபாடி வேலூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் ஓட்டி வந்தார்.

    லாரி கீரைகாடு என்ற இடத்தில் வந்தபோது லாரியை நிறுத்த டிரைவர் பிரேக் பிடித்தார். ஆனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    இதனால் டிரைவர் ஏழுமலை லாரியை நிறுத்த முடியாமல் திணறினார். உடனே அந்த லாரியில் இருந்த மோகன் என்பவர் கீழே குதித்து கல் எடுத்து டயர் அடியில் வைத்து லாரியை நிறுத்த முயற்சித்தார். ஆனால், முடியவில்லை.

    இதனால் லாரி பக்கத்தில் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஏழுமலை படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் மற்றும் போலீசார் சேர்ந்து அவரை மீட்டு ஏற்காடு அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.
    • மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தின் ஏற்காடு, தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    ஏற்காடு:

    சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கி.மீ. ஆகும்.

    மலைகளின் இளவரசி

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தின் ஏற்காடு, தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. வளைந்து நெளிந்த மலைப்பாதைகள், விண்ணை முட்டும் மரங்கள், ஆங்காங்கே கொட்டும் அருவிகள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்களை கடந்து சென்றால், பரந்து விரிந்த ஏரியும், படகு சவாரியும் கவனம் ஈர்க்கிறது.

    இது மட்டுமின்றி அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, தாவரவியல் பூங்கா, லேடீஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில், தலைச்சோலை என்று ஒவ்வொரு இடமும் இயற்கை அழகால் இதயம் வருடுகிறது.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 21-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை என 8 நாட்கள் நடைபெறவுள்ளது.

    இதற்கான முன் ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஏற்காடு ஊராட்சி அலுவலகம் கூட்ட அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஊராட்சிகள் தமிழரசி, தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குனர் கோவிந்தராஜ், ஏற்காடு ஊராட்சி ஒன்றி ஆணையாளர் அன்புராஜ், தாசில்தார் தாமோதரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ் மோகன், வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் மற்றும் சுற்றுலா துறை, ேதாட்டக்கலை துறை, தீயணைப்புதுறை உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    ஒரு வழிபாதையாக மாற்றம்

    கூட்டத்தில், கோடை விழாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதுமான அளவு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பது, சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வாகன நிறுத்த இடம் ஒதுக்குவது, போக்குவரத்தை சீர்படுத்த கூடுதலான போலீசாரை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் சுறறுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்வது, மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மலை பாதையை ஒருவழி பாதையாக மாற்றுவது பற்றி யும், ஆலோசிக்கப்பட்டது.

    ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் கோடைவிழா மலர் கண்காட்சியை கண்டுகளிக்க அனைத்து வசதிகளையும் செய்து தருவது பற்றி விவா திக்கப்பட்டது. கேடைவிழா நடைபெறும் 8 நாட்களுக்கும் சாலையோர கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வும் முடிவு செய்யப்பட்டது.

    • மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகம் அடைந்தார். இதனால் தினந்தோறும் மணிமேகலையை அடித்து உதைத்தும் வந்துள்ளார்.
    • இரவு முழுவதும் கணவரின் உடலுடன் வீட்டிலிருந்த மணிமேகலை, இன்று காலை சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    சேலம்:

    சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் ரமேசுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. தினமும் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் ரமேஷ் சண்டை போட்டதாக தெரிகிறது. மேலும் மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகம் அடைந்தார். இதனால் தினந்தோறும் மணிமேகலையை அடித்து உதைத்தும் வந்துள்ளார்.

    நேற்று இரவு வழக்கம் போல ரமேஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மணிமேகலையுடன் அவர் தகராறு செய்தார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது ரமேஷ், மணிமேகலையை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிமேகலை, வீட்டில் இருந்த குளவி கல்லை எடுத்து ரமேசின் தலையில் போட்டார்.

    இதில் கை, தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரவு முழுவதும் கணவரின் உடலுடன் வீட்டிலிருந்த மணிமேகலை, இன்று காலை சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற சூரமங்கலம் போலீசார், ரமேஷின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ள சாராயம் மற்றும் போலி மது குடித்து 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • போலி மது விற்பவர்களையும் ் பிடிக்க தமிழக டி.ஜி.பி சைலேரேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    சேலம்:

    விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ள சாராயம் மற்றும் போலி மது குடித்து 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதையடுத்து தமிழக முழுவதும் சாராயம் விற்பவர்களையும், போலி மது விற்பவர்களையும் ் பிடிக்க தமிழக டி.ஜி.பி சைலேரேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள் .

    இந்த நிலையில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் சேலம் புறநகர் பகுதியில் சாராயம் மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து மற்ற வகையில் 100 பேரும், மாநகரில் மது பாட்டில்களை வாங்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற 50 பேரும் என 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    தொடர்ந்து சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சோதனை இனி வரும் நாட்களிலும் தொடரும் என போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×