என் மலர்tooltip icon

    நீலகிரி

    நீலகிரி மாவட்டம் மசினக்குடி வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் அழுகிய நிலையில் பெண் யானை இறந்து கிடந்தது
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மசினகுடி வனச் சரகத்தின் ஈரோடு மாவட்ட எல்லையான கல்லம்பாளையம் வனச்சரகப்பகுதியில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக எல்லையோரத்தில் வனத் துறையினர்   ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது, பெண் யானை ஒன்று இறந்து அழுகிய நிலையில் கிடந்தது.  இதுதொடர்பாக வனத் துறை உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இறந்த யானையின் உடல் மீட்கப்பட்டு   பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

    அப்போது, அந்த யானையின் உடலுக்குள் இருந்த பல்வேறு உள்ளுறுப்புகள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யானை இயற்கையாகவே உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ஊட்டி தியாகராஜன் நகரில் வட்டார போக்குவரத்து அலுவலர் அரசு பஸ், மினி பஸ்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்
    ஊட்டி:

    கொரோனோ, ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பல்வேறு முன் னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கான நோய் தடுப்பு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன்  நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு பஸ்கள், மினி பஸ் களில் ஆய்வை மேற் கொண்ட அவர் டிரைவர், கண்டக்டர்களிடம் முக கவசம் அணிதல், பஸ்சில்  சமூக இடைவெளி  பின்பற்றப் படுகிறதா? என கேட்டறிந்து பார்வையிட்டார். முககவசம் அணியாத பயணிகளிடம் முககவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என கண்டக்டர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். 

     பின்னர் ஆட்டோ டிரைவர்கள்,  சுற்றுலா பயணிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு முக கவசம் வழங்கினார்.  நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என அறிவு றுத்தினார்.  வழி நெறிமுறை களை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரித்தார்.இந்த ஆய்வின்போது  ஆய்வாளர்  குலோத்துங்கன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 
    பாரதியார் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 12 பேர் சாதனை படைத்துள்ளனர்.
    ஊட்டி:

    ஊட்டி அரசு கலை கல்லுரி மாணவ, மாணவிகள், 12 பேர் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சாதனை படைத்துள்ளனர். 

    கோவை பாரதியார் பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ், ஊட்டி அரசு கலை கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த 2020-21ம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுகலைக்கான தேர்வில், இக்கல்லூரியில் பயின்ற, 19 மாணவ, மாணவிகள் பல்கலை தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

    அதில் வைசாலி ஜெயின் (சுற்றுலாவியல்- இளநிலை), திரிஷ்யா (வனவிலங்கு உயிரியல்-இளநிலை), சோனாலி (வரலாறு- முதுநிலை), அக்ஷயா  (ஆங்கிலம்- முதுநிலை), வினிதா (தாவரவியல்- முதுநிலை), கார்த்திகா (வனவிலங்கு உயிரியல் -முதுநிலை) உள்ளிட்ட 6 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.

    பூஜா (சுற்றுலாவியல் -இளநிலை), சந்திரலேகா(வரலாறு- முதுநிலை), இந்து பிரியா (ஆங்கிலம்- முதுநிலை), மனோஜ்குமார் (வனவிலங்கு உயிரியல்-இளநிலை), தீபன் (வனவிலங்கு உயிரியல்- முதுநிலை) உள்ளிட்ட 5 பேர் இரண்டாம் இடத்தையும், கிரிஹரன் (தாவரவியல்- முதுநிலை) இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

    சாதனை படைத்த கல்லூரி மாணவ, மாணவியருக்கு, கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில், பேராசிரியர் ராமகிருஷ்ணன் முன்னிலையில், துறை தலைவர்கள், பேராசிரியர்கள்,  உதவி பேராசிரியர்கள்,  விரிவுரையாளர்கள் உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர். 
    நீலகிரி மாவட்டத்தில் 23,179 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முன் னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை  அமைச்சர் ராமசந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 

    பின்னர் முதல் நபராக முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.  மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன்  பேசியதாவது:

    நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் 75 முகாம்களில் 300 பணியாளர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுவர். 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 39 வாரங்கள்அல்லது 273 நாள்கள் அல்லது 9 மாதங்கள் முடிவடைந்த பிறகு இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

     நீலகிரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் 4,457 பேருக்கும், முன்களப் பணியாளர்கள் 7,083 பேர்,  60 வயதுக்கு மேல் இணைநோய் உள்ளவர்கள் 11,639 பேர்  என மொத்தம் 23,179 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இந்த தடுப்பூசியானது முற்றிலும் பாதுகாப்பான தாகும். மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 32,469 பேருக்கு முதல் தவணையும், 5 லட்சத்து 7,834 பேருக்கு 2-ம் தவணையும் என மொத்தம் 10 லட்சத்து 40,303 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, மாவட்டத்தில் 1,130 படுக்கை வசதிகள் கொரோனா சிகிச்சை மையத்திலும், 600-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

    மாவட்டத்தில் உள்ள எல்லையோர சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது.  இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.  இவ்வாறு அவர் கூறினார். 

     முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர்  கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சித் தலைவர்  பொன்தோஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பொதுமுடக்கத்தையும் மீறி வெளியில் சுற்றியதாக நீலகிரியில் நேற்று ஒரேநாளில் 240 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

    இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டது. பல சாலைகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஊரடங்கை மீறி யாராவது வெளியில் சுற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு சிலர் வாகனங்களில் வெளியில் சுற்றி திரிந்தனர். அவர்களில் தேவையின்றி சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிந்து, அபராதம் விதித்தனர்.

    பொதுமுடக்கத்தையும் மீறி வெளியில் சுற்றியதாக நீலகிரியில் நேற்று ஒரேநாளில் 240 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, ஊட்டி நகரில் 50 வழக்குகள், ஊட்டி ஊரகத்தில் 25 வழக்குகள், குன்னூரில் 65 வழக்குகள், கூடலூரில் 44 வழக்குகள், தோவாலா பகுதியில் 65 வழக்குகள் என மொத்தம் மாவட்டத்தில் ஒரே நாளில் 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.49,800 அபராதம் வசூலிக்கப்பட்டது.
    ஊட்டியை அடுத்த சேரிங்கிராஸ் பகுதியில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை, தற்காலிகமாக நாளை முதல் ஊட்டி என்.சி.எம்.எஸ். மைதானத்தில் செயல்படும்.

    ஊட்டி:

    3-வது அலையால் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்தநிலையில் ஊட்டியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது. நாளை (11-ந் தேதி) முதல் உழவர் சந்தை அங்குள்ள என்.சி.எம்.எஸ். மைதானத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    என்.சி.எம்.எஸ். மைதானத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக ஊட்டியை அடுத்த சேரிங்கிராஸ் பகுதியில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை, தற்காலிகமாக நாளை முதல் ஊட்டி என்.சி.எம்.எஸ். மைதானத்தில் செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, வேளாண் விற்பனை துறை துணை இயக்குனர் ஷோபியா ஆகியோர் பங்கேற்றனர். அவர்களிடம் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டை ஆய்வு செய்த கலெக்டர், கூட்ட நெரிசலை தடுக்க மார்க்கெட்டில் உள்ள கடைகளை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றலாமா, சுழற்சி முறையில் கடைகளை இயக்கலாமா? என்பது குறித்தும் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசித்தார்.

    கூடலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    கொரோனா, ஒமைக்ரான் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 241 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 
     
    இந்த மையத்தை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளதா?  என்பதை கேட்டறிந்து, அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தயார்நிலையில் வைத்திருக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். 

    முன்னதாக கூடலூர் துப்புக்குட்டிபேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தெப்பக்காடு வரவேற்பு நிலையம், மசினகுடி பஸ்நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டார்.

    அப்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களிடம் முதல் தவணை, இரண்டாம் தவணை செலுத்தப்பட்டுள்ளதா?  என கேட்டறிந்தார்.  

    தற்போது கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால், வீட்டின் அருகில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் எவருக்கேனும் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்தால் அவர்களிடம், இதுபோன்று வீடுகளுக்கு அருகிலேயே நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். 

    நீலகிரி மாவட்டத்தின் எல்லையோர சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
    நீலகிரி மாவட்டத்தில் 50 ஏக்கரில் 300 விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வந்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் லில்லியம், கார்னேஷன், ஜொர்பரா, கிரிசாந்தம் உள்ளிட்ட கொய் மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 ஆயிரம்  தொழிலாளர்கள் உள்ளனர்.  

    இங்கிருந்து மொட்டுகளாக அறுவடை செய்யப்படும் கொய்மலர்கள் பெங்களூரு, கோவாவுக்கு கொண்டு செல்லப்பட்டு சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மலர் சாகுபடி முடங்கி விட்டதாக மலர் சாகுபடியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பசுமை குடில்கள் அமைத்து சாகுபடி செய்யப்பட்டு வந்த கொய் மலர்கள் அழுகியது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளத்தில் விழாக்கள், சுபகாரியங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மலர்களை வாங்க ஆளில்லாமல் அறுவடை செய்யப்பட்ட மலர்கள் மண்ணுக்கே உரமாகி வருகின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் 50 ஏக்கரில் 300 விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வந்தனர். இந்த ஆண்டு மீண்டும் கொரோனா தொற்று  காரணமாக பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நீலகிரியில் இருந்து மலர்களை கொள்முதல் செய்வதை வியாபாரிகள் நிறுத்தி விட்டனர். 

    நாள் ஒன்றுக்கு 50 பெட்டிகள் மலர்கள் அனுப்பப்படும். ஒரு பெட்டி ரூ.14 முதல் ரூ.15 ஆயிரம் மதிப்புடையது. இந்த ஒட்டுமொத்த வர்த்தகம் தற்போது தடைபட்டுவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
    அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளத்தில் விழாக்கள், சுபகாரியங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மலர்களை வாங்க ஆளில்லாமல் அறுவடை செய்யப்பட்ட மலர்கள் மண்ணுக்கே உரமாகி வருகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் லில்லியம், கார்னே‌ஷன், ஜொர்பரா, கிரிசாந்தம் உள்ளிட்ட கொய் மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நேரடியாகவும், மறை முகமாகவும் 3 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.

    இங்கிருந்து மொட்டுகளாக அறுவடை செய்யப்படும் கொய்மலர்கள் பெங்களூரு, கோவாவுக்கு கொண்டு செல்லப்பட்டு சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மலர் சாகுபடி முடங்கிவிட்டதாக மலர் சாகுபடியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பசுமை குடில்கள் அமைத்து சாகுபடி செய்யப்பட்டு வந்த கொய்மலர்கள் அழுகி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளத்தில் விழாக்கள், சுபகாரியங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மலர்களை வாங்க ஆளில்லாமல் அறுவடை செய்யப்பட்ட மலர்கள் மண்ணுக்கே உரமாகி வருகின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் 50 ஏக்கரில் 300 விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வந்தனர். இந்த ஆண்டு மீண்டும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நீலகிரியில் இருந்து மலர்களை கொள்முதல் செய்வதை வியாபாரிகள் நிறுத்தி விட்டனர்.

    நாள் ஒன்றுக்கு 50 பெட்டிகள் மலர்கள் அனுப்பப்படும் . ஒரு பெட்டி ரூ. 14 முதல் ரூ. 15 ஆயிரம் மதிப்புடையது. இந்த ஒட்டுமொத்த வர்த்தகம் தற்போது தடைபட்டுவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு வருவோர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் இயற்கை அழகினை கண்டு ரசிப்பதற்காக வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் எப்போதும் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

    தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு வருவோர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்களை பார்வையிடும் நேரமும் குறைக்கப்பட்டது.

    இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை திருப்பி அனுப்பினர்.

    மாலை 3 மணிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. உள்ளே இருந்த சுற்றுலா பயணிகளும் வெளியே அனுப்பப்பட்டு, சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. நேரம் குறைக்கப்பட்டது தெரியாமல் சில சுற்றுலா பயணிகள் 3 மணிக்கு பிறகு சுற்றுலா தலங்களுக்கு வந்தனர்.

    அவர்கள் சுற்றுலா தலங்கள் பூட்டியிருந்ததை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தொடர்ந்து இன்று முழு ஊரடங்கு காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், ஊட்டி படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம் உள்பட ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்படவில்லை.

    இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் இன்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. எங்குமே ஆட்களை பார்க்க முடியவில்லை.

    இதேபோல் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, கேத்ரின் நீர்வீழ்ச்சி, கொடநாடு காட்சி முனை, முதுமலை புலிகள் காப்பகம் உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி கிடந்தது.

    கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா, குரங்கு நீர்வீழ்ச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை, டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாம், கோவை குற்றாலம், பரளிக்காடு சுழல் சுற்றுலா என எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.

    இந்த சுற்றுலா தலங்களுக்கு கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வாகனங்களில் வருவார்கள். இன்று முழு ஊரடங்கு என்பதால் இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.
    சாலை விரிவாக்க பணியின் போது பல இடங்களில் ராட்சத பாறைகள் அந்தரத்தில் தொங்கி வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த 9 மாதங்களாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதில் கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடைக்கு ஜே.சி.பி மற்றும் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. 

    சாலை விரிவாக்க பணியின் போது பல இடங்களில் ராட்சத பாறைகள் அந்தரத்தில் தொங்கி வருகிறது. இதனால் மலைப்பாதையில் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். 

    இந்தநிலையில்  குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதை இடையே அந்தரத்தில் தொங்கும் பாறைகளை கம்ப்ரசர் மூலமாக உடைத்து பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    பெரிய ராட்சத பாறைகளை ஜே.சி.பி. மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இருந்தபோதிலும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    நகராட்சி, பேரூராட்சி வாரியாக ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    ஊட்டி:

    நீலகிரியில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தலுக்கான பணிகளும் விரைவாக நடந்து வருகிறது. 4 நகராட்சி, 11 பேரூராட்சிகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அதில்,’நான்கு நகராட்சிக்கு, 208 வாக்குச்சாவடிகள், 11 பேரூராட்சிகளுக்கு 201 வாக்குச்சாவடி என மொத்தம் 409 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

    தேர்தலையொட்டி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசியல், கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

    ஓட்டு எந்திரங்கள் ஒதுக்கீட்டின்படி, நகராட்சி, பேரூராட்சிகள் வாரியாக பிரித்து வைக்கப்பட்டது. அதில், பெட்டி எண், ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் எண்ணை சரிபார்த்தனர். இதில், 15 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள, 409 ஓட்டுச்சாவடிகளுக்கு, 20 சதவீதம் கூடுதலாக ஓட்டுபதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 495 ஓட்டுப்பதிவு எந்திரம், 495 கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பு அறையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
    ×