என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டது. பல சாலைகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஊரடங்கை மீறி யாராவது வெளியில் சுற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு சிலர் வாகனங்களில் வெளியில் சுற்றி திரிந்தனர். அவர்களில் தேவையின்றி சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிந்து, அபராதம் விதித்தனர்.
பொதுமுடக்கத்தையும் மீறி வெளியில் சுற்றியதாக நீலகிரியில் நேற்று ஒரேநாளில் 240 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஊட்டி நகரில் 50 வழக்குகள், ஊட்டி ஊரகத்தில் 25 வழக்குகள், குன்னூரில் 65 வழக்குகள், கூடலூரில் 44 வழக்குகள், தோவாலா பகுதியில் 65 வழக்குகள் என மொத்தம் மாவட்டத்தில் ஒரே நாளில் 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.49,800 அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஊட்டி:
3-வது அலையால் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் ஊட்டியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது. நாளை (11-ந் தேதி) முதல் உழவர் சந்தை அங்குள்ள என்.சி.எம்.எஸ். மைதானத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்.சி.எம்.எஸ். மைதானத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக ஊட்டியை அடுத்த சேரிங்கிராஸ் பகுதியில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை, தற்காலிகமாக நாளை முதல் ஊட்டி என்.சி.எம்.எஸ். மைதானத்தில் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, வேளாண் விற்பனை துறை துணை இயக்குனர் ஷோபியா ஆகியோர் பங்கேற்றனர். அவர்களிடம் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டை ஆய்வு செய்த கலெக்டர், கூட்ட நெரிசலை தடுக்க மார்க்கெட்டில் உள்ள கடைகளை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றலாமா, சுழற்சி முறையில் கடைகளை இயக்கலாமா? என்பது குறித்தும் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் லில்லியம், கார்னேஷன், ஜொர்பரா, கிரிசாந்தம் உள்ளிட்ட கொய் மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நேரடியாகவும், மறை முகமாகவும் 3 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.
இங்கிருந்து மொட்டுகளாக அறுவடை செய்யப்படும் கொய்மலர்கள் பெங்களூரு, கோவாவுக்கு கொண்டு செல்லப்பட்டு சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மலர் சாகுபடி முடங்கிவிட்டதாக மலர் சாகுபடியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பசுமை குடில்கள் அமைத்து சாகுபடி செய்யப்பட்டு வந்த கொய்மலர்கள் அழுகி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளத்தில் விழாக்கள், சுபகாரியங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மலர்களை வாங்க ஆளில்லாமல் அறுவடை செய்யப்பட்ட மலர்கள் மண்ணுக்கே உரமாகி வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் 50 ஏக்கரில் 300 விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வந்தனர். இந்த ஆண்டு மீண்டும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நீலகிரியில் இருந்து மலர்களை கொள்முதல் செய்வதை வியாபாரிகள் நிறுத்தி விட்டனர்.
நாள் ஒன்றுக்கு 50 பெட்டிகள் மலர்கள் அனுப்பப்படும் . ஒரு பெட்டி ரூ. 14 முதல் ரூ. 15 ஆயிரம் மதிப்புடையது. இந்த ஒட்டுமொத்த வர்த்தகம் தற்போது தடைபட்டுவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.






