என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nilgiri news நீலகிரி செய்திகள் நீலகிரி நியூஸ்"

    கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்
    ஊட்டி, 
    கர்நாடகா மாநிலத்தில் இருந்து 5 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அவர்களது கார் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் பகுதியில் சென்று ெகாண்டிருந்தது. அப்போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் நடுரோட்டில் கார் கவிழ்ந்தது. காரில் இருந்த 5 பேரும் காருக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். 

    அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காரில் சிக்கிய 5 பேரையும் மீட்டனர். அவர்களில் 3 பேர் சிறுகாயங்களுடன் தப்பினர்.  ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

     குன்னூர்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குறுகலான  இடத்தில் விபத்து ஏற்பட்டதால்  அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் கவிழ்ந்த கார் மீட்கப்பட்டு வாகன போக்குவரத்து சீரானது. 
    6 குழந்தைகள் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்
    அரவேனு,
    நீலகிரி மாவட்டத்திற்கு சேலம் சங்ககிரியில் இருந்து  வேனில் 3  குடும்பங்கள் ஊட்டிக்கு  சுற்றுலா வந்தனர். அவர்கள் சுற்றுலாவை முடித்து விட்டு நேற்று மாலை ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக சங்ககிரிக்கு வீடு திரும்பினர்.

    கோத்தகிரி கட்டபெட்டு பஜார் பகுதியில் வந்த போது  திடீரென வேன்   டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்தது. அந்த பகுதியில் நின்று  இருந்த 3 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. 
    அப்போது  எதிரே வந்த மற்றோரு கார் மீது மோதி வேன், கார் மீது கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த 3 பேர்  காயங்களின்றி தப்பினர்.வேனில் வந்த  6 குழந்தைகள், 4 ஆண்கள்,  4 பெண்கள்  பலத்த காயம் அடைந்தனர்.
    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த  அங்கிருந்த பொதுமக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேன் கவிழ்ந்த பகுதியில் 40 அடி பள்ளம் உள்ளது. வேன், கார் மீது விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 
    இதுகுறித்த கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.
    சுகாதாரம் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    ஊட்டி, 
    ஊட்டியை அடுத்த  கேத்தி தேர்வுநிலை பேரூராட்சி யில்  என் குப்பை என் பொறுப்பு என தூய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 
    இதில் என் நகரத்தை தூய்மையாகவும் சுத்தமா கவும் வைத்திருப்பது எனது கடமை பொறுப்பாகும்.  பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பது நகர தூய்மைக்கான முதற்காரணம் என்பதை நான் நம்புகிறேன், 
    தூய்மை பணிகளுக்கு என்னை அர்ப்பணித்துக் கொள்ள என் நேரத்தை ஒதுக்குவேன். நான் பொது இடங்களில் குப்பை கொட்ட மாட்டேன் பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டேன். குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பேன் என   உறுதி மொழி ஏற்றனர்.  
    நிகழ்ச்சியில்  கேத்தி தேர்வுநிலை பேரூராட்சி  தலைவர்  ஹேமாமாலினி மற்றும்      பேரூராட்சி செயல் அலுவலர்  நட்ராஜ், சுகாதார ஆலுவலர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    அதிகரட்டி பேரூராட்சியில்   நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு திட்டத்தின் கீழ்  தூய்மை விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.   செயல் அலுவலர் ஜெகநாதன், பேருராட்சி தலைவர் பேபி,  பேருராட்சி செயலர் மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  பல்வேறு இடங்களில் மரகன்றுகள் நடப்பட்டன. 
     
    கூடலூர் நகராட்சியில் தூய்மை நகரத்துக்கான மக்கள் இயக்க பேரணி நடைபெற்றது. பேரணியை நகராட்சித் தலைவர் பரிமளா கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் சிவராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி ராஜகோபாலபுரம், பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு, ஐந்து முனை சந்திப்பு வழியாக புதிய பஸ் நிலையத்தை அடைந்தது. பேரணியில் தோட்ட தொழிலாளர் குழந்தைகளின் தொழிற்ப யிற்சி மைய மாணவ- மாணவிகள், வியாபாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் எனது குப்பை எனது பொறுப்பு, எனது நகரத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணிப்பாதுகாப்பேன் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

     ஓவேலி பேரூராட்சி சாா்பில் பெரிய சூண்டி பகுதியில் நடைபெற்ற விழிப்புணா்வு  பேரணிக்கு, பேரூராட்சி மன்றத் தலைவா் சித்ராதேவி, துணைத் தலைவா் க.சகாதேவன் ஆகியோா் தலைமை வகித்தனா். மன்ற உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.
    பேரணியை தொடா்ந்து ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற தலைப்பில் சுகாதாரம் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
     நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலா்  ஹரிதாஸ் மற்றும் பணியாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
    ×