என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாத இறுதியில் பனிக்காலம் தொடங்கும். அதன்பிறகு நவம்பரில் உறைபனி சீசன் தொடங்கி, மார்ச் முதல் வாரம் வரை அதன் தாக்கம் நீடிக்கும். இந்த காலங்களில் வெப்பநிலை அளவு செல்சியசில் பூஜ்ஜியத்தை தொடும், சில நாட்களில் மைனஸ் டிகிரி செல்சியசிக்கும் கீழ் இறங்கும்.
உறைபனியின் தாக்கத்தால் புல்வெளிகள், தேயிலை, மலை காய்கறி பயிர்கள் கருகும். இந்த ஆண்டு நீடித்த வடகிழக்கு பருவ மழை மற்றும் பருவம் தவறி பெய்த மழையால் உறைபனி தாமதமானது. டிசம்பர் மாதம் மத்தியில் பனிப்பொழிவு தொடங்கிய நிலையில், அதன் தாக்கம் அதிகரித்து உறைபனி பொழிவு ஏற்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு மழை பெய்ததால், பனியின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று அதிகாலை கடும் உறைபனி பொழிவு ஏற்பட்டது. இன்று 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
ஊட்டி தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், படகு இல்லம், கூட்ஸ் ஷெட் உட்பட பல பகுதிகளில், வெள்ளை கம்பளம் விரித்ததுபோல புல்வெளிகள் காணப்பட்டது. அதிகாலை, இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுவதால், மக்கள் மிகுந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் கடும் பனிப்பொழிவின் காரணமாக ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் மீது உறைபனி சூழ்ந்து காணப்பட்டது. வாகனங்களில் டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக பனியின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளதால் அதிகாலை காய்கறி விவசாயத்தில் ஈடுபடும் மற்றும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள், வாகன டிரைவர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட 88 சதவீதம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4 சதவீதத்தினர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர். பாதிக்கப்பட்ட 1413 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 90 பேர் கொரோனா சிறப்பு மையங்களில் சிகிச்சை பெறுகின்றனர்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட தொற்றாளர்களுக்கு தினமும் தொலைபேசி மூலமாக ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு கொரோனா கிட் வழங்கப்பட்டு சுகாதாரத்துறை ஊழியர்கள் கண்காணிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 99 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 10 லட்சத்து 66 ஆயிரத்து 446 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 25 ஆயிரத்து 600 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு நீலகிரி முதன்மை மாவட்டமாக விளங்குகிறது. 9 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா பரவலால் குடியரசு தின நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள், மாணவர்களுக்கு அனுமதியில்லை. கட்டுப்பாடுகளுடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தப்படும்.
ஊட்டி கோழிப்பண்ணை பகுதியில் பாறைகள் உடைக்கப்பட்டது தொடர்பாக கோபால் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து உடைக்கப்பட்ட பாறைகளை அளவிட்டு அளிக்கும் பரிந்துரையின் பேரில் கோட்டாட்சியர் அபராதம் விதிப்பார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.






