search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் நீலகிரி மாவட்டம் முதலிடம்

    15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி நீலகிரி மாவட்டம் முதன்மை மாவட்டமாக விளங்குவதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட 88 சதவீதம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    4 சதவீதத்தினர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர். பாதிக்கப்பட்ட 1413 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 90 பேர் கொரோனா சிறப்பு மையங்களில் சிகிச்சை பெறுகின்றனர்.

    வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட தொற்றாளர்களுக்கு தினமும் தொலைபேசி மூலமாக ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு கொரோனா கிட் வழங்கப்பட்டு சுகாதாரத்துறை ஊழியர்கள் கண்காணிக்கின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 99 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 10 லட்சத்து 66 ஆயிரத்து 446 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 25 ஆயிரத்து 600 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு நீலகிரி முதன்மை மாவட்டமாக விளங்குகிறது. 9 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது.

    கொரோனா பரவலால் குடியரசு தின நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள், மாணவர்களுக்கு அனுமதியில்லை. கட்டுப்பாடுகளுடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    ஊட்டி கோழிப்பண்ணை பகுதியில் பாறைகள் உடைக்கப்பட்டது தொடர்பாக கோபால் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து உடைக்கப்பட்ட பாறைகளை அளவிட்டு அளிக்கும் பரிந்துரையின் பேரில் கோட்டாட்சியர் அபராதம் விதிப்பார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×