என் மலர்tooltip icon

    நீலகிரி

    நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந்தேதி நடக்கிறது.
     ஊட்டி:

    நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 26-ந்தேதி மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிட்டது. அன்றைய தினம் முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. 

    தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வேட்பாளர்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், நீலகிரி மாவட்டம் முழுவதும் 45 பறக்கும் படைகள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் 15 குழுக்கள் வீதம் மாவட்டம் முழுவதும் இந்த 45 பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர்.  இந்த சோதனையில், நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.39,29,550 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் அரசு கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களை காண்பிப்பவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்பட்டு வருகிறது. 
    கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    கோவை:

    நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட கரியமலை கிராமத்தை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜ். இவர் தனது நிலம் தொடர்பான சிட்டாவில் பெயர் சேர்க்க கிராம நிர்வாக அலுவலர் லதா(வயது 35) என்பவரிடம் விண்ணப்பித்தார். 
    ரூ.4 ஆயிரம் லஞ்சம்
    இதற்கிடையில் லதா, சிட்டாவில் பெயர் சேர்க்க இடைத்தரகர் கண்ணன் மூலம் சுந்தர்ராஜிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அவர், ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) திவ்யா மேற்பார்வையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுந்தர்ராஜிடம் கொடுத்து, கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க கூறினர். அதன்படி அவர் இடைத்தரகர் கண்ணனுடன் குந்தா தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். 
    2 பேர் கைது
    அங்கு பணியில் இருந்த லதாவிடம் அந்த பணத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் லதா, இடைத்தரகர் கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    இதற்கிடையே லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. லதா மீது துறை ரீதியான விசாரணையும் நடந்து வருகிறது. 
    விசாரணை முடிந்ததும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    இதற்கிடையே கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் கோவை மத்திய சிறையிலும், புரோக்கர் கண்ணன் குன்னூர் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
    குன்னூர் அருகே பள்ளிக்குள் கரடி புகுந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி என பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இவை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவதையும், அங்குள்ள பொருட்களை தின்பதும், சேதப்படுத்துவததையும் வழக்கமாக வைத்துள்ளது.

    குன்னூர் பகுதியில் அண்மைக்காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. தேயிலை தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் கரடிகள் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், குன்னூர், சேலாஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்குள் கரடி ஒன்று புகுந்தது.

    கரடி அங்கிருந்த உணவுப் பண்டங்களை எடுத்து சாப்பிட்டும், வெளியில் வீசி விட்டு சிறிது நேரம் அங்கேயே சுற்றி திரிந்தது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டது. இதுகுறித்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    வனத்துறையினர் விரைந்து வந்து பள்ளியின் அருகே கரடி நடமாட்டம் இருக்கிறதா என ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.பள்ளிக்குள் கரடி புகுந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கொலக்கெம்பை பகுதியில் உள்ள உணவு கடையிலும் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியது.

    கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சியில் நடந்தது.
    மஞ்சூர்:-

    நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா மற்றும் பிக்கட்டி பேரூராட்சிகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19&ந் தேதி நடக்கிறது. இவ்விரு பேரூராட்சிகளி லும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. 
    தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்தவுடன் மேற்படி பேரூராட்சிகளில் இருந்து மின்னணு வாக்கு எந்திரங்கள் சீலிடப்பட்டு மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்படும். இதைதொடர்ந்து அங்குள்ள ஸ்ட்ராங்ரூமில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படுகிறது. 

    இதை முன்னிட்டு மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் ஸ்ட்ராங்ரூம் அமைக் கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப் பட்டுள்ள கிளாஸ்டோன் புஷ்பராஜ் மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வாக்குகள் எண்ணும் மையங்கள் மற்றும் ஸ்ட்ராங்ரூம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள், முகவர்கள் வந்து செல்லும் வழிகள், ஸ்டாரங் ரூம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தியபின்னர் தேர்தல் அமைதியான முறையில் நடத்துவது குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுரைகளை வழங்கினார். 

    முன்னதாக பிக்கட்டி பேரூராட்சி அலுவலகத் திற்கு சென்று வாக்கு பதிவு தினத்தன்று பயன்படுத்தப் படும் பொருட்கள் தயார் செய்யும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கீழ்குந்தா பேரூராட்சி தேர்தல் அலுவலர் ரவிக்குமார், குந்தா தாசில்தார் இந்திரா, கிராமநிர்வாக அலுவலர் லதா உள்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.
    கோத்தகிரி கொடநாடு எஸ்டேட் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் 2 புலிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது.

    சமீபகாலமாக பகல், இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகள், தேயிலைத் தோட்டங்கள், சாலைகள் போன்ற பகுதிகளில் கரடி, காட்டு மாடு, சிறுத்தை, யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உலவி வருவது வாடிக்கையாக உள்ளது.

    சில நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடும் வனவிலங்குகள், விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளன.

    இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் அருகே உள்ள காந்தி நகர் பகுதியில் 2 புலிகள் உலா வந்ததுள்ளது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

    ஒரே இடத்தில் 2 புலிகள் உலா வந்தது அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, உடனடியாக அப்பகுதியில் முகாமிட்டுள்ள புலிகளை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும். அல்லது மயக்க ஊசி செலுத்திப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    எந்திரங்கள் ஒதுக்கும் பணி தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் நடந்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 2-ம் கட்டமாக குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் பார்வையாளர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தலைவர்  ஏ.ஆர்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ்   தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.அப்போது மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ்  கூறியதாவது:

    நீலகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே கடந்த மாதம் 5-ந் தேதி நடைபெற்ற முதல் குலுக்கலில் 409 வாக்குப்பதிவு கருவி மற்றும் 409 கட்டுப்பாட்டு கருவி, கூடுதலாக 20 சதவீதம் என 495 வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்தது.  தற்போது, கேத்தி, பிக்கட்டி மற்றும் அதிகரட்டி பேரூராட்சிக்கான வார்டு உறுப்பினர் தேர்தலில் 3 நபர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்கள். 

    இதனை முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 491 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் (3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் 1 ரிசர்வேசன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்) குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்றது. 

    இதுதொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆட்சேப னைகள் ஏதும் தெரிவிக்காத நிலையில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு சென்று பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். 

    வருகிற 10-ந் தேதி  நடைபெற உள்ள 3-வது குலுக்கல் முறையில் நடைபெறும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவ லர்கள் தலைமை யிலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முன்னிலையில் நடைபெற்று, வாக்குச்சாவடிகள் வாரியாக  பிரித்து அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார தேர்தல் பார்வை யாளர்கள் ஆகி யோர்களுடன் தேர்தல் விதிமுறைகள் பின்பற்று வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் தில், தேர்தல் ஆணை யத்தால் வழங்கப்பட்ட அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றி தேர்தலை சிறப்பாக நடத்திட வேண்டும் என அறிவுரை வழங்கினார். 

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர் சினி, மாவட்ட வருவாய் அலுவலர் (ஜென்மம் நிலங்கள்)  குணசேகரன், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர்  சரவணக்கண்ணன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)  இப்ராகிம்ஷா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள்  தனப்பிரியா (பொது),  சீனிவாசன் (நகர்புற உள்ளாட்சி தேர்தல்), அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர்கலந்து கொண்டனர்.
    வனத்துறையினர் மீட்டு, சிகிச்சை அளித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் அனைத்து பொருட்களும் வாங்க மஞ்சூர் பஜார் பகுதிக்கு தான் வருவார்கள்.கடந்த சில மாதங்களாக காட்டுபன்றிகளின் நடமாட்டம் இந்த பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது. சுமார் 100 முதல் 200க்கும் அதிகமான காட்டுப்பன்றிகள் பகல் நேரங்களிலேயே பஜார் பகுதியில் சுற்றி வருகிறது. 

    இவை அங்கு கொட்டக் கூடிய கோழிக்கழிவுகள், குப்பை தொட்டிகளில் வீசக் கூடிய உணவு வகைகளை தின்று விட்டு வனத்திற்குள் செல்லாமல் சாலையோரங்களிலேயே ஒய்வெடுக்கின்றன.சாலைகளில் சுற்றி திரிந்தாலும் அவை மக்களும் எந்தவித தொந்தரவு கொடுப்பதில்லை. இதனால் மக்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பஜாரில் சுற்றி திரிந்த காட்டுபன்றி ஒன்று அங்குள்ள குப்பை தொட்டியில் இருந்த பொருட்களை தின்று கொண்டி ருந்தது. அப்போது எதிர் பாராத விதமாக குப்பை தொட்டி யில் இருந்த பிளாஸ்டிக் காட்டுப்பன்றியின் காலில் சிக்கி கொண்டது. இதனால் அந்த பன்றி நடக்க முடியாமல் மிகவும் சிரமம் அடைந்ததுடன், சாலையோரம் படுத்து கிடந்தது. 

    இதுபற்றிய தகவல் அறிந்த தும், வனவர் அர்ஜூனன் தலைமையில் வன பணியாளர் தர்மராஜ், ஆர்.ஆர் டீம்மை சேர்ந்த கோவிந்தன், யோகராஜ் ஆகி யோர் இணைந்து காட்டுப் பன்றியின் கால்களில் மாட்டியிருந்த வளையத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.காட்டுப்பன்றியை பிளாஸ்டிக் போர்வை போர்த்தி பிடித்து, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு காலில் மாட்டியிருந்த வளையத்தை அகற்றி, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்திலேயே காட்டுப்பன்றியை விட்டனர்.
    கூடலூர் வனக்கோட்டத்தில் 4 ஆண்டுக்கு பிறகு வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் ஓவேலி, நாடுகாணி, கூடலூர், தேவாலா, சேரம்பாடி, பிதிர்காடு உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளது. இங்கு காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் விலை உயர்ந்த மரங்கள் உள்ளன.

    கேரளா மற்றும் முதுமலை புலிகள் காப்பக எல்லையில் அமைந்து உள்ளதால் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    முதுமலையில் ஆண்டுக்கு 2 முறை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடக் கிறது. ஆனால் கூடலூர் வனக் கோட்டத்தில் 4 ஆண்டுக்கு ஒருமுறை வனவிலங்கு கள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடைபெற்றது.

    இந்த நிலையில் 2022-ம் ஆண்டுக்கான வனவிலங்கு கள்கணக்கெடுப்பு இன்று தொடங்கி வருகிற 14-&ந்தேதி வரை நடக்கிறது. இந்த பணியில் தினமும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வன ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.முன்னதாக வனவிலங்கு கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வன ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம், நாடுகாணி தாவரவியல் சூழல் மேம்பாட்டு பூங்கா அரங்கில் நடைபெற்றது. முகாமில் வனச்சரகர்கள் கணேசன், ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    அப்போது வனவிலங்கு கள் கணக்கெடுப்பு பணியில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், நேரில் பார்த்தல், கால் தடங்கள், எச்சங்களை கொண்டு கணக்கெடுத்தல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் உள்ளிட்ட வன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து வனச்சரகர் கணேசன் கூறும்போது, கூடலூர் வனக்கோட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வனவிலங்குகள் கணக்கெடுக் கப்பட்டு வருகிறது. ஒரு வாரம் நடைபெறும் கணக்கெடுப்பின் இறுதி நாளில் வன விலங்குகள் குறித்த தகவல்கள் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனரிடம் துறை ரீதியாக சமர்ப்பிக்கப்படும் என்றார்.
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 31 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக நேற்று வரை ரூ. 31 லட்சத்து 29ஆயிரத்து 750 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நடத்தி வரும் சோதனையில் சனிக்கிழமை காலை வரை ரூ. 20 லட்சத்து 88ஆயிரத்து 650 பறிமுதல் செய்யப்பட்டது, ஞாயிற்றுக்கிழமை மேலும் ரூ. 2 லட்சத்து 3 ஆயிரமும், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நேற்று காலை வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 8 லட்சத்து 38 ஆயிரத்து 100 என இதுவரை ரூ. 31 லட்சத்து 29ஆயிரத்து 750 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கூடலூர்& ஊட்டி சாலையில் நடுவட்டம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற சோதனையின் போது ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது.

    நடுவட்டம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலு வலர் ரமேஷ் தலைமையில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, சைபுதீன் என்பவர் உரிய ஆவணங் களின்றி ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்து 600 பணம் வைத்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து, பறக்கும் படையினர் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்து நடுவட்டம் பேரூராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலர்.பிரதீப்குமாரிடம் ஒப்படைத்தனர்.
    ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதாலும், சுற்றுலா தலங்கள் பார்வையிடுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியது.
    ஊட்டி:

    கொரோனா தொற்றின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

    மேலும் சுற்றுலா தலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்தது. இதனால் நீலகிரிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.

    தொற்று குறைந்ததை அடுத்து கடந்த 27-ந் தேதியில் இருந்து ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது.

    ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதாலும், சுற்றுலா தலங்கள் பார்வையிடுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியது.

    குறிப்பாக வார இறுதி நாளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த வாரமும் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகமாகவே இருந்தது. நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார், வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    அவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை 3,700 பேர் வந்திருந்த நிலையில் நேற்று 5,300 பேர் வந்திருந்தனர்.

    அதேபோல, ஊட்டி அரசினர் ரோஜா பூங்காவுக்கு சனிக்கிழமை சுமார் 1,000 பேரும், நேற்று 1,500 பேரும் வந்திருந்தனர்.

    குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு நேற்றுமுன்தினம் 900 பேரும், நேற்று 1,400 பேர் வந்திருந்தனர். தவிர தொட்டபெட்டா தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, காட்டேரி பூங்கா, கல்லார் பழப்பண்ணை உள்ளிட்ட தோட்டக்கலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா மையங்களிலும், ஊட்டி மற்றும் பைக்காரா படகு இல்லம், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டு கள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. 

    இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது.  ஊட்டி  உள்பட 4 நகராட்சிகளில் 601 பேர், 11 பேரூராட்சிகளில் 781 பேர் என மொத்தம் 1,382 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. ஊட்டி நகராட்சியில் 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தனித்தனியாக வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களை பரிசீலனை செய்தனர்.

    ஊட்டி நகராட்சி 2-&வது வார்டில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளர் உஷாராணி வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் போட்டியிடும் வார்டு இல்லாமல் வேறு வார்டில் உள்ள நபர் முன்மொழிந்ததால், அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    நாம்தமிழர்கட்சி வேட்பாளர்கள் 2 பேரின் வேட்புமனுக்கள் வைப்பு தொகை மாற்றி செலுத்தியதால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் கட்சியினர் சம்பந்தப் பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி நகராட்சியில் 9 வேட்பு மனுக்கள், குன்னூர் நகராட்சியில் 1, நெல்லியாளம் நகராட்சியில் 3 என 4 நகராட்சிகளில் 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    பிக்கட்டி பேரூராட்சியில் 1, உலிக்கல் பேரூராட்சியில் 1, ஜெகதளா பேரூராட்சியில் 2, கேத்தி பே ரூராட்சியில் 1, கோத்தகிரி பேரூராட்சியில் 1, ஓவேலி பேரூராட்சியில் 3 என 11 பேரூராட்சிகளில் 9 வேட்புமனுக்கள் தள்ளுபடியானது. மொத்தம் 22 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

    ஊட்டி நகராட்சியில் 203, குன்னூர் நகராட்சியில் 145, கூடலூர் நகராட்சியில் 121, நெல்லியாளம் நகராட்சியில் 119 என மொத்தம் 588 பேர், அதிகரட்டி பேரூரா ட்சியில் 76, பிக்கட்டி பேரூராட்சியில் 52, தேவர்சோலை பேரூ ராட்சியில் 78, 

    உலிக்கல் பேரூராட்சியில் 75,  ஜெகதளா பேரூராட்சியில் 69, கேத்தி பேரூராட்சியில் 75, கீழ்குந்தா பேரூராட்சியில் 59, கோத்தகிரி பேரூராட்சியில் 125, நடுவட்டம் பேரூராட்சியில் 46, ஓவேலி பேரூராட்சியில் 65, சோலூர் பேரூராட்சியில் 52 என 772 பேர் என மொத்தம் 1,360 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. நாளை (திங்கட்கிழமை) மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். அதைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது
    நீலகிரி மாவட்டத்தில் ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி வார்டுகளுக்கான தேர்தல் 19&ந் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் மாவட்டத்தில் அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு யாராவது பரிசு பொருட்கள், பணம் உள்ளிட்டவை வினியோகிக்கிறார்களா? காரில் பணம் மாவட்டத்திற்கு எடுத்து வரப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    பறக்கும் படைகுழுவினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் முகாமிட்டு, தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று ஊட்டி பகுதியில் பறக்கும்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  சென்னையில் இருந்து ஊட்டிக்கு ஒரு சுற்றுலா கார் வந்தது. அதிகாரிகள் காரை மறித்து சோதனை செய்தனர். 

    அப்போது காரில் வந்த ஜான்சன் என்பவரிடம் ரூ.79,500 பணம் இருந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து பறக்கும்படை அதிகாரி முத்துமாரி தலைமையிலான அதிகாரிகள் ரூ.79,500-யை பறிமுதல் செய்து குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    ×