என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நீலகிரியில் ரூ.79,500 பறிமுதல் - பறக்கும் படையினர் அதிரடி

    நீலகிரி மாவட்டத்தில் ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி வார்டுகளுக்கான தேர்தல் 19&ந் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் மாவட்டத்தில் அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு யாராவது பரிசு பொருட்கள், பணம் உள்ளிட்டவை வினியோகிக்கிறார்களா? காரில் பணம் மாவட்டத்திற்கு எடுத்து வரப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    பறக்கும் படைகுழுவினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் முகாமிட்டு, தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று ஊட்டி பகுதியில் பறக்கும்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  சென்னையில் இருந்து ஊட்டிக்கு ஒரு சுற்றுலா கார் வந்தது. அதிகாரிகள் காரை மறித்து சோதனை செய்தனர். 

    அப்போது காரில் வந்த ஜான்சன் என்பவரிடம் ரூ.79,500 பணம் இருந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து பறக்கும்படை அதிகாரி முத்துமாரி தலைமையிலான அதிகாரிகள் ரூ.79,500-யை பறிமுதல் செய்து குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×