என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
    • நிர்வகிகள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஜெகதளா பேரூர் நிர்வாகிகள் மற்றும் ஜெகதளா பேரூராட்சி மன்ற தி.மு.க உறுப்பினர்கள் கூட்டம், குன்னூர் நகர கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, ஜெகதளா பேரூர் செயலாளர் சஞ்சீவ்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், முன்னாள் பேரூர் செயலாளர் கிருஷ்ணகுமார், ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஜெகதளா பேரூர் அவைத்தலைவர் லியோன், பேரூர் பொருளாளர் பாபு, மாவட்ட பிரதிநிதிகள் வில்லியம் ஆல்பர்ட், தினகரன், ஒன்றிய பிரதிநிதிகள் கேசவமூர்த்தி, செபாஸ்டின் அமல்ராஜ், மூர்த்தி, சையது பாஷா, நேரு, ஜெகதளா பேரூராட்சி மன்ற தி.மு.க உறுப்பினர்கள் சாலினி, திலீப்குமார், ஆஷா, யசோதா, பிரமிளா, மோசஸ், சுகுணாம்பாள் உள்பட நிர்வகிகள் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக அழைப்பு விடுத்தார்.
    • 1819-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தை கண்டுபிடித்தார்.

    ஊட்டி,

    இங்கிலாந்தின் லண்ட னை சேர்ந்த சர் ஜான் சல்லிவன் 1815 முதல் 1830 வரை அன்றைய பிரிட்டன் அரசின் கோவை மாவட்ட கலெக்டராக இருந்தவர்.

    நீலகிரியின் தந்தை என அழைக்கப்படும் இவர் 1819-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தை கண்டுபிடித்தார்.

    இவரின் கல்லறை ஊட்டில் உள்ளது. இந்த நிலையில் நீலகிரி எம்.பி ஆ. ராசாஅவரின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் சர் ஜான் சல்லிவனுடைய கொள்ளு பேத்தி ஓரியல் சல்லிவனும் உடன் சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சர் ஜான் சல்லிவனுடைய 200-வது ஆண்டு நிறைவு விழாவிற்கு அவரது குடும்பத்தினரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக அழைப்பு விடுத்தார்.

    அப்போது அவரின் மகள் வக்கீல் மயூரி, இங்கிலாந்து தி.மு.க அமைப்பாளர் பைசல், நிர்வாகிகள் பிரேம், சத்யா, செந்தில் மற்றும் கோகுல், சியாம், ரவிசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நிலத்தில் மலைக் காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
    • வருவாய்த் துறையினா் அளவீடு செய்து வருகின்றனா்.

    ஊட்டி,

    தமிழகத்தில் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா், கூடலூா் ஆகிய 3 வருவாய் கோட்டங்களில் கால்வாய்கள், நீரோடைகள், அணைகள் ஆகிய பகுதிகளில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என வருவாய்த் துறையினா் அளவீடு செய்து வருகின்றனா்.

    இதில் ஊட்டி வட்டத்துக்கு உட்பட்ட நஞ்சநாடு மற்றும் குருத்துக்குளி பகுதிகளில் ஓடை புறம்போக்கு நிலம் 2 ஏக்கா் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தில் விவசாய பணிகள் ஏதும் மேற்கொள்ளக் கூடாது எனவும், அதில் இருந்து வெளியேறுமாறும் வருவாய்த் துறை சாா்பில் ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவா்கள் வெளியேறவில்லை.

    இதைத் தொடா்ந்து ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி தலைமையில் வருவாய் ஆய்வாளா் இளங்கோ குரு, கிராம நிா்வாக அலுவலா் பிரியதா்ஷினி மற்றும் வருவாய்த் துறையினா் அப்பகுதியில் உள்ள நிலத்தை அளவீடு செய்தனா்.

    அப்போது, ஆக்கிரமிப்பு இடத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள 2 ஏக்கா் நிலத்தில் கேரட் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த இடம் மீட்கப்பட்டு, நீா்நிலை புறம்போக்கு நிலம் என அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது.

    • பிராந்தி மற்றும் ரம் வகைகள் அதிகளவில் விற்பனையாகி உள்ளது.
    • நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களை கட்டியது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர். குறிப்பாக கடந்த 3 நாட்களில் விற்பனை அதிகமாக நடந்தது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் ரூ.1 கோடிக்கு மேல் மது விற்பனை ஆகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 22-ந் தேதி ரூ.2 கோடியே 30 லட்சம், 23-ந் தேதி ரூ.3 கோடியே 25 லட்சம், தீபாவளியன்று ரூ.2 கோடியே 70 லட்சம் என 3 நாட்களில் ரூ.8 கோடியே 15 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகமாக விற்பனையாகியுள்ளது. மேலும் பீர் வகைகளை விட பிராந்தி மற்றும் ரம் வகைகள் அதிகளவில் விற்பனையாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
    • புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    கோத்தகிரி,

    கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் 15-வது நிதிகுழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதன்படி பூங்காவில் சுற்றுச்சுவர் அமைத்தல், பூங்கா நுழைவுவாயிலில் டிக்கெட் கவுண்ட்டர், கடைகள் அமைத்தல், அழகிய நீரூற்று அமைத்தல் உள்ளிட்ட பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பின்னர் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தன. தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி, டிக்கெட் கவுண்ட்டர் கட்டும் பணி மற்றும் பழுதடைந்த நடைபாதைகளை புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பூங்காவில் மேம்பாட்டு பணிகள் விரைவில் முடிவடையும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.

    • தீபாவளி விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • கொடநாடு காட்சி முனையை காண அதிகளவில் குவிந்தனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இதமான கால நிலை நிலவி வருகிறது. இதனால் தீபாவளி விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் சுற்றுலா பயணிகள் கொடநாடு காட்சி முனையை காண அதிகளவில் குவிந்தனர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் ஒரு முக்கிய தலமாக கோத்தகிரி கொடநாடு காட்சி முனை இருந்து வருகிறது.

    இங்கு இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கர்நாடக மாநில மலைததொடர் மற்றும் பள்ளத்தாக்குகள், பவானிசாகர் அணை காட்சி, தெங்குமரஹாடா காட்சி போன்ற முனைகளும், இதமான காலநிலைக்கேற்ப நல்ல சீதோஷ்ண நிலையை அனுபவிக்கலாம்.

    இதனால் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளான கர்நாடக, கேரளா, பிற மாநில, மாவட்ட மக்கள் குவிந்து இயற்கை அழகினையும், சுற்றுலா தலங்களையும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    • 100 மீட்டர் அளவிற்கு கம்பிகள் இழுத்து கட்டினார்.
    • மக்கள் செல்வதற்கான நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.

    அரவேணு,

    கோத்தகிரி மக்கள் கூடும் பகுதியாகவும், பள்ளி வளாகமும், மார்க்கெட் பகுதியும் அமைந்துள்ளது. இங்கு அதிகப்படியான வாகன நெரிசலும், மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும். எனவே அங்கு மக்கள் செல்வதற்கான நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.அந்த பகுதியில் வாகனங்கள் எதுவும் நிறுத்தப்படாமல் இருப்பதற்காக கம்பிகள் கட்டப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவை அனைத்தும் அறுந்து கீழே தொங்கி கொண்டு இருந்தது. இதனை பார்த்த போக்குவரத்து போலீஸ்காரர் ராஜேந்திரன் என்பவர் தொங்கி கிடந்த அனைத்து கம்பிகளையும் ஒழுங்குபடுத்தி இழுத்து கட்டினார். சுமார் 100 மீட்டர் அளவிற்கு கம்பிகள் இழுத்து கட்டினார்.இதை அந்த வழியாக சாலையில் சென்ற மக்கள் அவரை பாராட்டினர்.

    • பஸ் நிலையங்களில் குவிந்தனர்.
    • சுற்றுலா பயணிகளும் அனைத்து இடங்களையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஊட்டி,

    தீபாவளி பண்டிகையை யொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர் விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    மேலும் நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசன் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலம், மாவட்டத்தில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். குறிப்பாக ஊட்டியில் அமைந்திருக்கும் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    இதனால் வியாபாரிகள், வாடகை வாகன ஓட்டிகள், கைடுகள் மகிழ்ச்சி அடைந்தனர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை போலீசார் ஒழுங்கு படுத்தினர். சுற்றுலா பயணிகளும் அனைத்து இடங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் தீபாவளி முடிந்து இன்று பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டது. இதையடுத்து ஊட்டிக்கு சுற்றுலா சென்ற மக்கள் அங்கு இருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர்.பஸ் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்ததால் பஸ் நிலையம் நிரம்பி வழிந்தது. அனைத்து பஸ்களும் கூட்டம் அலைமோதியதால் பஸ்சுக்காக மக்கள் அதிக நேரம் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர்.

    • கடந்த 22-ந் தேதி கொடநாடு எஸ்டேட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
    • சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஷகில் அக்தர் இன்று ஊட்டிக்கு நேரில் சென்று விசாரணை நடத்துகிறார்கள்.

    ஊட்டி:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்க வந்த காவலாளியும் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் பல மர்மங்கள் இருந்ததால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மறு விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

    தனிப்படை போலீசார் கோவை ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் விசாரணை நடத்தினர். ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்கள் என பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏற்கனவே கைப்பற்றப்பட்ட விசாரணை விவரங்கள், வாக்குமூல விவரங்களை தனிப்படையினர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதன் அறிக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    கடந்த 22-ந் தேதி கொடநாடு எஸ்டேட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். எஸ்டேட் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். கூடுதல் விசாரணைக்காக ஓரிரு நாட்களில் திரும்ப வருவோம், எனவே ஊழியர்கள் யாரும் வெளியூர் செல்ல வேண்டாம் என உத்தரவிட்டு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

    இந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஷகில் அக்தர் இன்று ஊட்டிக்கு நேரில் சென்று விசாரணை நடத்துகிறார்கள். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அவர் காரில் ஊட்டி செல்கிறார்.

    அங்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசாருடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து அவரே நேரடி விசாரணையில் இறங்க உள்ளார். அப்போது எஸ்டேட்டுக்கும் நேரில் சென்று அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்துவார் என தெரிகிறது.

    சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரி ஒருவர் நேரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளதால் கொடநாடு வழக்கு அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அகராதி தயாரிக்கப்பட்டது.
    • ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் மக்கள் பேசும் படுக மொழி சொற்களின் அர்த்தங்களை மும்மொழி அகராதி நெலிகொலு அறக்கட்டளை சார்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அகராதி தயாரிக்கப்பட்டது. இந்த அகராதியின் வெளியீட்டு விழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. நெலிகொலு அறக்கட்டளை தலைவர் ஆர்.தருமன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.சுந்தரதேவன் படுக மொழியை மேம்படுத்துவது குறித்து பேசினார். அகராதியை தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் அறிமுகப்படுத்தினார். அகராதியை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வெளியிட்டு பேசினார். விழாவில், மாநில தலைமை கணக்காளர் ஆர்.அம்பலவாணன், நான்குபெட்டா தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அடிப்படை கட்டமைப்புகளை சரிசெய்து உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
    • இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    ஊட்டி:

    ஊட்டியில் சமூக கடமை பங்களிப்பை உறுதி செய்யும் விதமாக சென்னையில் உள்ள காகினி சென்ட் மென்பொருள் நிறுவனம் சார்பில், கோவை காகினி சென்ட் அவுட் ரீச் அமைப்பின் தூரிகை அமைப்புடன் இணைந்து பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் மிளிதேன் அரசு உயர்நிலைப்பள்ளியில் தீபாவளி பண்டிகையையொட்டி கோத்தகிரி மிளிதேன் அரசு பள்ளியில் குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகள் சீருடை மற்றும் கற்றல், உபகரணங்கள் பொருள்களை வழங்கினர்.

    மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவில் பேசிய காகினி சென்ட் அவுட் ரிச் அமைப்பின் தலைவர் பாலா அவர்கள் பள்ளியை உயர்த்துவதற்கும் பள்ளியின் கட்டமைப்புக்கும் உதவி செய்வதாக கூறினார். மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் கணினி பயிற்சி அளிப்பதாகவும் கூறினார். பள்ளியின் மதில் சுவர் உட்பட அடிப்படை கட்டமைப்புகளை சரிசெய்து உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கோத்தகிரி மிளிதேன் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தூரிகை அமைப்பு ரஞ்சித், உறுப்பினர்கள், போஜன், ஊர் தலைவர் பில்லன் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியை தமிழக அரசின் விருது பெற்ற ஆசிரியர் ஷைனி மேத்யூஸ் ஒருங்கிணைத்தார்.

    • 1,145 பாக்கெட் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
    • ஆட்டோ, காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ,கூடலூா் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க டி.எஸ்.பி.மகேஷ்குமாா் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.

    இந்நிலையில், ராஜகோபாலபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    இது தொடா்பாக நடத்திய விசாரணையில், வேடன்வயல் பகுதியைச் சோ்ந்த தேவராஜ் (40) என்பவா் கா்நாடக மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்களை வாங்கிவந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தேவராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 1,145 பாக்கெட் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

    ×