அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குதல்

அடிப்படை கட்டமைப்புகளை சரிசெய்து உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
அரசு உயர்நிலைப்பள்ளியில்  மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குதல்
Published on

ஊட்டி:

ஊட்டியில் சமூக கடமை பங்களிப்பை உறுதி செய்யும் விதமாக சென்னையில் உள்ள காகினி சென்ட் மென்பொருள் நிறுவனம் சார்பில், கோவை காகினி சென்ட் அவுட் ரீச் அமைப்பின் தூரிகை அமைப்புடன் இணைந்து பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் மிளிதேன் அரசு உயர்நிலைப்பள்ளியில் தீபாவளி பண்டிகையையொட்டி கோத்தகிரி மிளிதேன் அரசு பள்ளியில் குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகள் சீருடை மற்றும் கற்றல், உபகரணங்கள் பொருள்களை வழங்கினர்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவில் பேசிய காகினி சென்ட் அவுட் ரிச் அமைப்பின் தலைவர் பாலா அவர்கள் பள்ளியை உயர்த்துவதற்கும் பள்ளியின் கட்டமைப்புக்கும் உதவி செய்வதாக கூறினார். மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் கணினி பயிற்சி அளிப்பதாகவும் கூறினார். பள்ளியின் மதில் சுவர் உட்பட அடிப்படை கட்டமைப்புகளை சரிசெய்து உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கோத்தகிரி மிளிதேன் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தூரிகை அமைப்பு ரஞ்சித், உறுப்பினர்கள், போஜன், ஊர் தலைவர் பில்லன் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியை தமிழக அரசின் விருது பெற்ற ஆசிரியர் ஷைனி மேத்யூஸ் ஒருங்கிணைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com