search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெகதளா பேரூர் நிர்வாகிகள்-பேரூராட்சி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
    X

    ஜெகதளா பேரூர் நிர்வாகிகள்-பேரூராட்சி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

    • கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
    • நிர்வகிகள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஜெகதளா பேரூர் நிர்வாகிகள் மற்றும் ஜெகதளா பேரூராட்சி மன்ற தி.மு.க உறுப்பினர்கள் கூட்டம், குன்னூர் நகர கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, ஜெகதளா பேரூர் செயலாளர் சஞ்சீவ்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், முன்னாள் பேரூர் செயலாளர் கிருஷ்ணகுமார், ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஜெகதளா பேரூர் அவைத்தலைவர் லியோன், பேரூர் பொருளாளர் பாபு, மாவட்ட பிரதிநிதிகள் வில்லியம் ஆல்பர்ட், தினகரன், ஒன்றிய பிரதிநிதிகள் கேசவமூர்த்தி, செபாஸ்டின் அமல்ராஜ், மூர்த்தி, சையது பாஷா, நேரு, ஜெகதளா பேரூராட்சி மன்ற தி.மு.க உறுப்பினர்கள் சாலினி, திலீப்குமார், ஆஷா, யசோதா, பிரமிளா, மோசஸ், சுகுணாம்பாள் உள்பட நிர்வகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×