என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • காட்டு பெருமாள் கோயிலில் இருந்து ஜம்புத்து கிராமம் வரை குண்டும் குழியுமான சாலையில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும்.
    • ஜம்புத்து கிராமத்திற்கு தற்போதுள்ள ஜிட்டாண்டஹள்ளி மின் இணைப்பில் இருந்து மாற்றி ஆலப்பட்டி மின்ப கிர்மான வட்டத்தோடு இணைக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஒன்றியம் சோக்காடி அருகே உள்ள ஜம்புத்து கிராமத்தில், தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஆலோசகர் நஷீர்அகமத், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் அனுமத்ராஜ், மாவட்ட துணைச்செயலாளர் வரதராஜன், மாவட்ட பொருளாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பா ளராக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர் கலந்து கொண்டு சங்கத்தின் கொ டியினை ஏற்றிவைத்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள கோரிக்கை குறித்து விளக்கவுரை ஆற்றினார்.

    கூட்டத்தில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை கட்ட கடந்த 1953-ம் ஆண்டு நிலத்தைக் கொடுத்து விட்டு புலம்பெயர்ந்து குடியிருந்து வரும் 75 குடும்பங்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும். காட்டு பெருமாள் கோயிலில் இருந்து ஜம்புத்து கிராமம் வரை குண்டும் குழியுமான சாலையில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும். ஜம்புத்து கிராமத்திற்கு தற்போதுள்ள ஜிட்டாண்டஹள்ளி மின் இணைப்பில் இருந்து மாற்றி ஆலப்பட்டி மின்ப கிர்மான வட்டத்தோடு இணைக்க வேண்டும்.

    காட்டுப் பன்றி களை சுட்டுக் கொல்ல துப்பாக்கி வழங்க வேண்டும். வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விளைப் பொருட்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். யானை களால் உயிர்சேதம் ஏற்பட் டால் இழப்பீடு தொகை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • விழாவிற்கு திராவிடர் கழக தலைமை கழக அமைப் பாளர் ஊமை. ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அறி வரசன் வரவேற்றார்.
    • நிகழ்ச்சி யில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பெரியார் மய்யத்தை திறந்து வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணகிரியில் பெரியார் மய்யம் திறப்பு விழா, தந்தை பெரியார் சிலை திறப்பு விழா, அண்ணல் அம்பேத்கர் நூலகம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா கிருஷ்ண கிரி கார்னேசன் திடலில் நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு திராவிடர் கழக தலைமை கழக அமைப் பாளர் ஊமை. ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அறி வரசன் வரவேற்றார். நிகழ்ச்சி யில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பெரியார் மய்யத்தை திறந்து வைத்தார்.

    நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பெரியார் சிலையை திறந்து வைத்தார். உணவு துறை அமைச்சர் சக்கரபாணி அம்பேத்கர் நூலகத்தை திறந்து வைத்தார். கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, கி.வீரமணி படிப்பகத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் டி.மதியழகன் எம்.எல்.ஏ. (கிருஷ்ணகிரி கிழக்கு), ஒய்.பிரகாஷ் (கிருஷ்ணகிரி மேற்கு), திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலா ளர் அன்புராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் என்.எஸ்.பிரபாவதி, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மாணிக்கம், மாநில ஒருங்கி ணைப்பாளர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் எம்.பி. சுகவனம், நகராட்சி தலைவர் பரிதா நவாப், நகர செயலாளர் நவாப், தி.மு.க. பிரமுகர் தொழில் அதிபர் கே.வி.எஸ். சீனிவாசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினேஷ், துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட விவசாயி அணி துணை அமைப்பாளர் ஜி.கே.உதயகுமார், மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விடுதலை சிறுத் தைகள் கட்சியின் சார்பில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 50 ஆண்டுகள் ஆகியும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையிடம் பல முறை மனு அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை இல்லை எனக்கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை திரும்ப ஒப்படைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மாவட்ட நிர்வாகம் மற் றும் ஆதிதிராவிடர் நலத்துறையை கண்டித்து கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத் தைகள் கட்சியின் சார்பில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமை தாங்கினார். கட்சியின் தொகுதி செய லாளர் தியாகு, தொகுதி துணை செயலாளர் முனிசந்திரன், ஒன்றிய செயலாளர் ஆலபட்டி ரமேஷ், மாதையன், பாக்யராஜ், சசிகுமார், எடிப்பள்ளி கிருஷ்ணன், தியாகு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இதையொட்டி புதிய வீட்டு வசதி வாரிய குடியி ருப்பு பஸ் நிறுத்தத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலமாக நீதிமன்றத்தை நோக்கி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், உதவி கலெக்டர் ர் பாபு, தாசில் தார் சம்பத் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்ச னைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை யடுத்து 15 நாட்களுக்குள் கோரிக் கைகள் நிறை வேற்றவிட்டால் மீண் டும் நீதிமன்றத்தில் ஒப்ப டைக்கும் போராட்டம் நடைபெறும் எனக்கூறி போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • காலிபணியிடங்கள் 3,359. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • இந்த நேரடித்தேர்விற்கு கடந்த 18-ம் தேதி முதல் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (புதன்கிழமை) தொடங் குகிறது.இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடித்தேர்வு 2023 பதவிளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்த காலிபணியிடங்கள் 3,359. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இந்த நேரடித்தேர்விற்கு கடந்த 18-ம் தேதி முதல் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம். இந்த போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை முதல் நடைபெற உள்ளது. மேலும், விவரங்களுக்கு 04343 - 291983 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள், இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • ஒசூர் சிப்காட் லயன்ஸ் கிளப் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.
    • இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகாதேவன் தலைமை வகித்தார்.

    சூளகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒசூர் சிப்காட் லயன்ஸ் கிளப் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.

    இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகாதேவன் தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் தலைவர் பிரேம் ஆனந்த், தாளாளர் தேவராஜன், ஆலோசகர் நம்பி, முகாம் ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் மற்றும் பள்ளி பி.டி.ஏ. நிர்வாகிகள் சுதா கர், ஜெபஸ்டின் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் 70-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு கண்களை இலவசமாக பரிசோதனை செய்து கொண்டனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், சூளகிரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் கனிமங்கள் மற்றும் குவாரி அமைக்கும் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

    சூளகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றி யத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இதில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை, ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி வளாக கட்டிடம், ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் கனிமங்கள் மற்றும் குவாரி அமைக்கும் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கி. ஊ), விமல் ரவிக்குமார், பாபிபிராசினா (வ.ஊ) மற்றும், உதவி பொறி யாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் உடன் இருந்தார்கள்.  

    • சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 387 மனுக்களை வழங்கினார்கள்.
    • மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 387 மனுக்களை வழங்கினார்கள்.மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுந்தரராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேட்டை தடுப்பு காவலர்கள் தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 2 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி வனப்பகுதிகளில் காட்டுப்பன்றி, மான், மயில், யானைகள் அதிக அளவில் உள்ளன. இவை தண்ணீர், உணவு தேடி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக யானைகள் தக்காளி உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன் தலைமையில் வனவர் தேவநாதன், வனகாப்பாளர் மகா விஷ்ணு மற்றும் வனகாவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று முன்தினம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கம்பந்தூர் கிராமம் அருகே 2 பேர் காட்டு பன்றி கறியை பங்குபோட்டு கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்து றையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அதேபகுதியை சேர்ந்த கோவிந்தன் (வயது 60), சதீஷ் (22) என்பதும், காட்டுப்பன்றியை வேட்டையாடி கறியை பங்கு போட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஜவளகிரி வனச்சரக அலுவலர் முரளிதரன் தலைமையில் வனவர்கள் ரமேஷ், ஆனந்த், வனகாப்பா ளர்கள் கோவிந்தன், கதிர வன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது 2 பேர் மயிலை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜான்சன்லுகன் (வயது26), சதுகான்லுகன் (28) என்பதும், தனியார் விவசாய பண்ணையில் தங்கி கூலி தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர்கள் இறைச்சிக்காக மயில்களை வேட்டையாடியது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    • 4 கடைகளில் குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது.
    • கஞ்சா விற்பனைக்காக வைத்து இருந்ததாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டு விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.  அந்த வகையில் ஓசூர், பாகலூர், சூளகிரி, கந்தி குப்பம், ஊத்தங்கரை பகுதிகளில் கஞ்சா விற்பனைக்காக வைத்து இருந்ததாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ஊத்தங்கரை பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பாரூர், சிங்காரப்பேட்டை, மத்தூர் பகுதிகளில் போலீசார் மளிகை, பெட்டிக்கடைகளில் சோதனை செய்தனர். அப்போது 4 கடைகளில் குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரர்கள் 4 பேரை போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல வேப்பனப்பள்ளி, சிப்காட், பாகலூர், பர்கூர், நாகரசம்பட்டி, உத்தனப்பள்ளி, சிங்காரப்பேட்டை பகுதிகளில் பணம் வைத்து சூதாடிய 24 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மொத்தம் 1278 மாணவ, மாணவிகள் தட்டச்சுத் தேர்வை எழுதினர்.
    • தேர்வை பறக்கும்படைத் தலைவர் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    2023ம் ஆண்டிற்கான வணிகவியல் தட்டச்சுத் தேர்வு கடந்த இரண்டு நாட்களாக கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. நேற்று முன்தினம் இளநிலை மாணவ, மாணவிகள் 498 பேருக்கும், முதுநிலை மாணவ, மாணவிகள் 241 பேருக்கும் தேர்வுகள் நடந்தன.

    நேற்று இளநிலை தேர்வை 302 பேரும் முதுநிலை தேர்வை 224 பேரும், முன் இளநிலைத் தேர்வை 13 பேரும் என மொத்தம் 1278 மாணவ, மாணவிகள் தட்டச்சுத் தேர்வை எழுதினர்.

    தேர்வுக்கான ஏற்பாடுகளை முதன்மை கண்காணிப்பாளர் சுப்பையா மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் ரத்னா தேவி, கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர். தேர்வை பறக்கும்படைத் தலைவர் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    • இந்த ஆபத்தை உணரா–மலும், விபத்துகள் பற்றி தெரியாமலும் ஆபத்தன நிலையில் சாலையோரம் பகுதியில் கடை போட்டு உள்ளனர்.
    • சூளகிரி போலீசார் கண்காணித்து மாற்று ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சூளகிரி,

    காஷ்மீர் முதல் கன்னியா–குமரி வரையிலான போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா, சின்னார் முதல் மேலுமலை வரையிலான 5 கிலா மீட்டர் வரையில் அமைந்துள்ளது.

    வியாபாரம்

    இந்த தேசிய நெடுஞ்சாலை–யோரங்களில் இருபுறமும் வடமாநிலத்தைச் சேர்ந்த–வர்கள் தங்களது சொந்த ஊரில் இருந்து அவர்கள் 4 சக்கர வாகனங்களில் பொம்மைகள், கைவினை பொருட்கள் ஆகியவற்றை ஏற்றி கொண்டு தமிழகத்திற்கு வந்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் எந்தவித அனுமதி பெறாமலும், சாலை விதிமுறைகளுக்கு மாறாக சூளகிரியை அடுத்துள்ள சின்னார்-மேலுமலை வரையிலான தேசிய நெடுஞ்சாலையோ ரங்களில் வாகனங்களிலும், சாலையோரத்திலும் கடை போட்டு வியாபார பொருட்களான குடை, டேபிள், சேர் மற்றும் விளையாட்டு பொம்ைமகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

    மேலும் அவர்கள், அந்த வாகனங்களிலேயே சமையல் கியாஸ் வைத்து சமைப்பது சாப்பிடுவதும் குடும்பத்துடன் வாகனத்தி–லேயே இரவில் அங்கே உறங்குவதும், சில மாதங்–களாக செய்து வருகின்றனர்.

    ஆனால் இந்த தேசிய நெடுஞ்சாலையானது. அதிவேக சாலையாக உருவெடுத்து வருகிறது. இந்த சாலையில் மின்னல் வேகத்தில் வாகனங்கள் செல்கின்றனர். மேலும் இந்த சாலை ஏற்றதாழ்வு சாலை என்பதாலும் பொதுவாக வாரத்திற்கு 4 அல்லது 5 விபத்துக்கள் நடைபெறுவது வழக்கமாக வருகிறது.

    இந்த ஆபத்தை உணரா–மலும், விபத்துகள் பற்றி தெரியாமலும் ஆபத்தன நிலையில் சாலையோரம் பகுதியில் கடை போட்டு உள்ளனர்.

    அந்த கடைக–ளில் பொருட்களை வாங்கி செல்வதற்காக சாலை–யிலேயே பொதுமக்கள் வாகனங்–களை நிறுத்தி விட்டு செல்வதாலும் அதிகளவில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதை சூளகிரி போலீசார் கண்காணித்து மாற்று ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சரவ–ணன் வைத்திருந்த பையில் இருந்த ரூ.25 லட்ச ரொக்க பணத்தை பறித்து கொண்ட அந்த கும்பல் அவரை உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் என்ற கிராமத்தில் இறக்கி விட்டுதப்பி சென்றுள்ள–னர்.
    • போலீசார் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஓசூர்,

    திருப்பத்தூர் மாவட்டம், புலியனேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது47). இவர் ஆட்டு வியாபாரி.

    தொழிலில் நஷ்டம்

    மகாராஷ்டிரா உள்பட வடமாநிலங்களில் ஆடு–களை மொத்தமாக கொள்–முதல் செய்யும் இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வாரசந்தைகள் மற்றும் இறைச்சி கடைகளில் ஆடு–களை சில்லறை விலைக்கு விற்பனை செய்வதை தொழிலாக கொண்டு உள்ளார்.

    கடந்த 20 ஆண்டு–களாக ஆடு வியாபாரம் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி அடுத்துள்ள காவேரிப் பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆடுகளை விற்ற 13 நபர்களிடம் சுமார் 25 லட்ச ரூபாயை இவர் வசூல் செய்துள்ளார்.

    காரில் கடத்தல்

    அதன் பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் ஓசூர் பத்தலப்பள்ளி என்ற இடத்திற்கு வந்த அவர், பத்தலப்பள்ளியில் ஆடுகளை விற்றவர்களிடம் பணத்தை வசூலிப்பதற்காக நடந்து சென்றார்.

    அப்போது, அந்தப் பகுதியில் நம்பர் பிளேட் இல்லாத வெள்ளை நிற மாருதி காரில் வந்த 4 பேர் சரவணனை மடக்கி பிடித்து, தங்களை போலீ–சார் எனக்கூறி கஞ்சா விற்பனை செய்கிறாயா? உன்னிடம் விசாரிக்க வேண்டும்? என கூறி குண்டு கட்டாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.

    இதனையடுத்து சரவ–ணன் வைத்திருந்த பையில் இருந்த ரூ.25 லட்ச ரொக்க பணத்தை பறித்து கொண்ட அந்த கும்பல் அவரை உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் என்ற கிராமத்தில் இறக்கி விட்டு காரில் தப்பி சென்றுள்ள–னர். அப்போது தான் தன்னை போலீசார் அழைத்து செல்ல வில்லை, மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ள–னர் என சரவணனுக்கு தெரிய வந்துள்ளது.

    போலீசில் புகார்

    இதனையடுத்து அங்கிருந்து ஓசூர் வந்த சரவணன் இந்த கடத்தல் மற்றும் பணம் பறிப்பு சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ காவல் நிலை–யத்தில் புகார் அளித்தார்.

    இந்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி சரவணனை கடத்தி பணம் பறித்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஓசூர் பகுதியில் பட்டப் பகலில் ஆட்டு வியா பாரியை போலீசார் எனக்கூறி மர்ம நபர்கள் குண்டு கட்டாக காரில் கடத்தி 25 லட்ச ரூபாய் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரப–ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×