என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரியில் திட்ட பணிகள் குறித்து கூடுதல் கலெக்டர் ஆய்வு
- கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், சூளகிரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் கனிமங்கள் மற்றும் குவாரி அமைக்கும் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றி யத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இதில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை, ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி வளாக கட்டிடம், ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் கனிமங்கள் மற்றும் குவாரி அமைக்கும் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கி. ஊ), விமல் ரவிக்குமார், பாபிபிராசினா (வ.ஊ) மற்றும், உதவி பொறி யாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் உடன் இருந்தார்கள்.
Next Story