search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் 2-ம் நிலை காவலர் தேர்வுகளுக்கு  இலவச பயிற்சி வகுப்பு
    X

    கிருஷ்ணகிரியில் 2-ம் நிலை காவலர் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

    • காலிபணியிடங்கள் 3,359. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • இந்த நேரடித்தேர்விற்கு கடந்த 18-ம் தேதி முதல் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (புதன்கிழமை) தொடங் குகிறது.இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடித்தேர்வு 2023 பதவிளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்த காலிபணியிடங்கள் 3,359. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இந்த நேரடித்தேர்விற்கு கடந்த 18-ம் தேதி முதல் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம். இந்த போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை முதல் நடைபெற உள்ளது. மேலும், விவரங்களுக்கு 04343 - 291983 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள், இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×