என் மலர்
கிருஷ்ணகிரி
- சூறைக்காற்று காரணமாக பென்னாகரம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் தடை செய்யப்பட்டது.
- அரூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் நேற்று மதியம் பலத்த காற்று, இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
இதனால் வேப்பனஹள்ளி வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து மூன்று மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் அங்கிருந்த மின்கம்பங்கள் அறுந்து சாலையில் விழுந்தது.
இதனால் சிகரமா கனப்பள்ளி, உண்டி கைநத்தம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் தருமபுரி மாவட்டம், பென்னாகரம், தாசம்பட்டி, ஒகேனக்கல், ஏரியூர், பாலக்கோடு, சின்னம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
இதனால் பென்னாகரம் காவல் நிலையம், சந்தை தோப்பு இந்தியன் வங்கி, பென்னாகரம் புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் சூறைக்காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேருடன் சாய்ந்து விழுந்தது.
குறிப்பாக பென்னாகரம் காவல் நிலையம் முன்புறம் உள்ள புளியமரம் வேருடன் காவல் நிலையத்தின் மீது சாய்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சூறைக்காற்று காரணமாக பென்னாகரம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் தடை செய்யப்பட்டது.
அரூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் நேற்று மதியம் பலத்த காற்று, இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
வேப்பம்பட்டி, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, எல்லபுடையாம்பட்டி, கோட்டப்பட்டி, தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அத்துடன் பலத்த காற்று வீசியதால் அரூர் தீர்த்தமலை சாலையில் கீழானூரில் மரம் முறிந்து விழுந்தது. மழையால் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
- சூளகிரி அருகே தங்கையின் கணவரை கொலை செய்த வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொலை செய்யப்பட்ட சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே ஏனுசோனை அடுத்து பி.கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன். இவரது மகன் சந்தோஷ் (வயது23). இவர் சூளகிரி அருகேயுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மீனா என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு தியாகரசன் பள்ளி-பி.கொத்தப்பள்ளி சாலையில் சந்தோஷ் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் 3 பேர் வழி மறித்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்த அந்த பகுதியில் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கொலை செய்யப்பட்ட சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இந்த கொலை சம்மந்தமாக மீனாவின் அண்ணன் முருகேஸ் (25) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் தங்கையின் கணவர் சந்தோஷ் என்பவரை கொலை செய்தது ஒப்பு கொண்டார்.
இது பற்றி முருகேஸ் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். அதில் அவர் கூறியதாவது:-
எனது தங்கை மீனா, சூளகிரி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரை காதலித்துள்ளார். இதனால் நான் மீனாவை பலமுறை கண்டித்துள்ளேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இது தொடர்பாக நான் போலீசில் புகார் கொடுத்தேன். அப்போது அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். ஆனால் எனது தங்கை எங்களுடன் வரமாட்டேன் என்று கூறினார். இதனால் எனக்கு சந்தோஷ் மீது கோபம் இருந்தது.
இந்த நிலையில் சந்தோசை கொலை செய்ய நண்பர்கள் மூலம் திட்டம் போட்டேன். நேற்று இரவு சரியான நேரத்தில் சந்தோஷ் தனியாக சென்றான். அப்போது அவரை நான் எனது நண்பர்கள் தொரப்பள்ளியை சேர்ந்த குமார் (24) மற்றும் 18 வயது வாலிபர் ஆகிய 3 பேரும் சேர்ந்து சந்தோசை குத்தி கொலை செய்ேதாம் என்றார்.
இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை கொலை செய்த முருகேஸ், குமார், 18 வயது வாலிபர் ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.






