என் மலர்
கிருஷ்ணகிரி
- ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள் உடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- 3 பேர் மீது புகார்
ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் கொண்ட குழு நேற்று உழவர் சந்தை, ராயக்கோட்டை ரோடு, காமராஜர் காலனி, பஸ் நிலையம், பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பரிசோதனை மேற்கொண்டனர்.
அப்போது, உழவர் சந்தை பகுதியில் 8.7 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.8,700 அபராதமும், ராயக்கோட்டை ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த 4 மாடுகளுக்கு தலா ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பூ மார்க்கெட் பகுதியில் சுமார் 13 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, பூ மார்க்கெட்டில் உள்ள கடைக்காரர்கள் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதன்பேரில் ஓசூர் ராம் நகரை சேர்ந்த வினோத்குமார் (23), சிவசக்தி நகரை சேர்ந்த ககன் (22) மற்றும் பாகலூர் தேர்பேட்டை பகுதியை சேர்ந்த முரளி (25) ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
- விஷம் இருப்பது தெரியவே மனைவி வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி அருகே உள்ள என்.தட்டக்கல் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகன் கடலரசு. இவருக்கு தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜனனி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி திவான் ராஜ் என்ற மகனும் நிவன்திக்கா என்ற மகளும் உள்ளனர். இதில் திவான் ராஜ் தட்டக்கல் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் ஜனனிக்கும்-கடலரசுக்கும் இடையே குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் கணவன் மனைவி இருவ–ருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு ஜனனி கனவனுடன் சண்டை யிட்டுக்கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதில் கணவன் மனைவி இருவர் குடும்ப த்தாரும் பேச்சு வார்த்தை நடத்தி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு என்.தட்டக்கல் கிராமத்தில் ஜனனி அவரது கணவருடன் வசித்து வந்தது நிலையில். நேற்று கடலரசு தனது குடும்பத்துடன் அதே பகுதியில் உள்ள பெரிய–மலை தீர்த்தம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
அங்கு கடலரசு தான் மறைத்து வைத்துத்த விஷத்தை தனது குழந்தை–களுக்கு கொடுத்து விட்டு மனைவிக்கு கொடுக்கும் போது விஷம் இருப்பது தெரியவே மனைவி வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.
தப்பி ஓடி வந்த மனைவி பெரியமலை அடிவாரத்தில் உள்ளவ ர்களிடம் கூறவே அவர்கள் ஓடி சென்று பார்த்தபோது குழந்தைகள் மயங்கி நிலையில் காணப் பட்டனர். உடனே அப்பகுதி பொதுமக்கள் கணவன்-மனைவி இருவருரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் கடலரசுவும், ஜனனிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நாகரசம் பட்டி போலீசார் நேரில் சென்று குழந்தைகள் உடலை கைப்பற்றி கிருஷ்ண–கிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்ற கடலரசு மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உறவி–னர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி–யுள்ளது.
- பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் சத்யா தொடங்கி வைத்தனர்
- முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அட்டைகள் வழங்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவில் மைதானத்தில் முதலமை ச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு பதிவு சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இதில், ஒய் பிரகாஷ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தனர்.
முகாமில், ஓசூர் தொகுதிக்குட்பட்ட பலர், குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை காண்பித்து பதிவு செய்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 பகுதிகளாக நடைபெற்று வரும் இந்த சிறப்பு சேர்க்கையில், ஓசூரில் மட்டும் 110 குடும்ப அட்டை பயனாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அட்டைகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள், கட்சியினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புகையிலைப் விற்பனை செய்யப்படு வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- இதுவரை 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த காட் டேரி பகுதியில் உள்ள சகுந்தலா என்பவருக்கு சொந்தமான பெட்டிக்க டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொ ருள் விற்பனை செய்யப்படு வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவின் பேரில், மாவட்ட கலெக்டர் சரயுவின் அறிவு றுத்தலின் படி கிருஷ்ணகிரி மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நாகேஸ்வரன் போலீஸ் பாது காப்புடன் கடைக்கு சீல் வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய் யப்பட்ட குட்கா புகை யிலைப் பொருள் விற்றால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 ன் படி நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என தெரிவித்தார்.
- 87 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
- திறந்த வெளியில் மாணவ, மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோட்டை உலிமங்கலம் கிராமம். இங்கு அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் 87 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள கழிப்ப றைகள் சுகாதாரமற்ற நிலை யில் உள்ளதால் அவற்றை பயன்படுத்த முடியாமல் கடந்த 2 ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் உள்ள பழைய கழிவறைகளை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என பெற் றோர்கள் பள்ளி தலைமை யாசிரியரிடம் பல மாதங்க ளாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் பள் ளிக்கு வெளியே திறந்த வெளியில் மாணவ, மாண விகள் இயற்கை உபாதை களை கழிக்க வேண்டி யுள்ளது. அப்படி சென்ற போது மாணவி ஒருவரது காலில் கண்ணாடி துண்டு குத்தியதில் காயமடைந்தார். இந்த அவல நிலையினை மாணவ-மாணவிகள் வீட்டிற்கு சென்று தங்கள் பெற்றேர்களிடம் கூறியுள்ள னர்.
இதனால் ஆத்திரம டைந்த பெற்றோர்கள் தங்க ளது பிள்ளைகளுடன் நேற்று காலை பள்ளி முன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வருவாய் ஆய்வாளர் சலீம் பாஷா, மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அடிப்படை வசதிகள் மேற் கொள்ள நடவடிக்கை எடுக் கப்படும். என உறுதியளித்த பின்னர் மாணவர்கள் பேராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து பள்ளிக்கு சென்றனர்.
- கூடைப்பந்து, மென் பந்து எறிதல் ஆகிய எட்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
- மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் , உதவி திட்ட அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல் அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில், 12 முதல் 14 வயது, 15 முதல் 17 வயது 18 மற்றும் 19 வயதுப் பிரிவுகளில், கை கால் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, அறிவுத்திறன், மனவளர்ச்சி குறைபாடு, கண்பார்வை யற்ற வர்களுக்கு, 50, 100 மீட்டர் ஓட்டப் போட்டியும், குண்டு எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், மினி கூடைப்பந்து, மென் பந்து எறிதல் ஆகிய எட்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளை மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் முருகேசன், உதவி திட்ட அலுவலர் வடிவேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் சர்தார், கணேசன், பள்ளி ஆய்வாளர் சுதாகர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால், உடற்கல்வி இயக்குனர் மாதையன் மற்றும் மாற்றுத்திறனாளிக ளுக்கான சிறப்பு பயிற்று னர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாற்றத்தி றனாளிகள் வரும் 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடக்கும் முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி களில் கலந்து கொள்ள உள்ளனர். இதில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்தி றனாளிகள் கலந்து கொண்டனர்.
- ஓசூரில் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
- போலீசார் நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நெசவாளர் தெருவை சேர்ந்தவர் விஜய குமார் (31).கூலி தொழிலாளி. இவர் கடந்த 29-ம் ேததி இரவு வீட்டை பூட்டிவிட்டு தங்கை வீட்டு கிரகபிரவேச நிகழ்ச்சிக்காக மைசூர் சென்றிருந்தார்.இதற்கு அடுத்த நாள் வந்து பார்த்த போது வீடு திறக்கபட்ட நிலையில் இருந்தது. அப்போது பீரோவில் இருந்த 2 கிராம் கம்மல், ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிகொண்டு மர்ம நபர்கள் சென்றுள்ளது தெரிய வந்தது. இது குறித்து விஜய குமார் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கர்நாடகா மாநிலம் தும்கூர் பகுதியை சேர்ந்த ஜகனாதன் (32), சிக்கபல்லத்தூர் பகுதியை சேர்ந்த உமாசங்கர் (35) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- கிருஷ்ணகிரியில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
- தலா ஒருவருக்கு ரூ.11,000 வீதம் பணம் வாங்கியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள வெங்கடேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(28).இவர் கன்னியாகுமாரியில் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி அமுது. இவர் தீபாவளி ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார் . அதில் பல வகையான பொருட்கள் மற்றும் நகை தருவதாக கூறி 48 பேரிடம், தலா ஒருவருக்கு ரூ.11,000 வீதம் பணம் வாங்கியுள்ளார்.
பணத்தை பெற்ற பிறகு நகை, மளிகைப்பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை திருப்பித்த ராமல் ஏமாற்றிவிட்டு தலை மறைவாகி விட்டார். இது குறித்து மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செ்ய்து அமுதுவை கைது செய்தனர்.
- கிருஷ்ணகிரி அருகே குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
- கிராம மக்கள் பலமுறை புகார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி ஊரா ட்சிக்குட்ப ட்ட பட்டக்கா னூர், அம்பேத்கர்நகர், புதுக்காடு ஆகிய கிராம த்திற்கு செல்லும் தார் சாலை, ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
பல ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து போக்கு வரத்துக்கு இடையூ றான நிலையில் உள்ளது.
இதில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் விவசாய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.மேலும் வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் மரு த்துவமனைக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்வது பெரும் சவாலாக உள்ளது.
சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடி க்கையும் இல்லை. எனவே சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
- 52 பைகளில் சுமார் 2.6 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பில்லனகுப்பம் அடுத்த ராகிமானப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த வேனை சோதனை செய்தனர்.
அதில், 50 கிலோ எடை அளவிலான 52 பைகளில் சுமார் 2.6 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வேனை அரிசியுடன் பறிமுதல் செய்த போலீசார், வேன் டிரைவரான கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த விக்ரம்குமார் என்பவரை கைது செய்த னர்.
விசாரணையில் அரிசியை காவேரிப்பட்டணம், பில்லனகுப்பம், ராகிமானப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக குறைந்த விலைக்கு வாங்கி, கர்நாடகாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது. மேலும், இந்த அரிசியை வீடு வீடாக சென்று வாங்கி வந்த சுண்டேகுப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்கிற டேம் ராஜா, அரிசி மற்றும் வேன் உரிமையாளரான ராகிமானப்பள்ளியை சேர்ந்த அண்ணாதுரை ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
- ஓசூரில் மடிக்கணினி திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- போலீசார் நடவடிக்கை.
அஞ்செட்டி அருகே உள்ள கோரிபாளையத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவர் ஓசூர் பேடரப்பள்ளி காமராஜர் நகர் பகுதியில் தங்கி ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். கடந்த 28-ந் தேதி நிறுவன வளாகத்தில் வைத்திருந்த இவரது மடிக்கணினி மற்றும் 2 செல்போன்களை மர்ம நபர் திருடிச் சென்றார்.
அது குறித்து விஜய் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசரணை நடத்தியில், அதை திருடியது ஓசூர் பேடரப்பள்ளி ராஜாஜி நகரை சேர்ந்த சந்தோஷ் (30) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மடிக்கணினி மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கிருஷ்ணகிரி அருகே ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 32 லட்சம் மோடி என புகார்.
- சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள கே.மோட்டூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 37). பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 5-ந் தேதி இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
அதில் இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலை என்றும், மேலும் பண முதலீட்டுக்கு அதிக லாபத்துடன் தருவதாகவும் கூறப்பட்டிருந்தது. இதை நம்பி கோவிந்தராஜ் அதில் குறிப்பிட்டிருந்த எண்ணிற்கு ரூ.12 லட்சத்து 45 ஆயிரத்து 641 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார்.
அனால் சொன்னபடி கோவிந்தராஜிற்கு எந்த தொகையும் லாபத்துடன் வரவில்லை. இதையடுத்து அதில் குறிப்பட்டிருந்த எண்ணிற்கு அவர் தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோவிந்தராஜ் அது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
மற்றொரு சம்பவம்
ஓசூர் அண்ணா நகரை சேர்ந்தவர் இளையராஜர் (32). இவரது செல்போன் வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 19-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் யூடியூப்பில் மதிப்புரை செய்யும் பகுதி நேர வேலை என்றும், மேலும் முதலீட்டிற்கு அதிக லாபத்துடன் தருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
அதை நம்பி இளையராஜா ரூ.19 லட்சத்து 58 ஆயிரத்து 669 தொகையை வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார். அந்த தொகையை பெற்ற பிறகு இளையராஜாவிற்கு எந்த பணமும் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த இளையராஜா அதில் குறிப்பட்டிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேச முயன்ற போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்தை உணர்ந்த இளையராஜா அது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த 2 புகார்கள் குறித்தும் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






