என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாநகராட்சி அதிகாரிகள் உடன் வியாபாரிகள் வாக்குவாதம்- பரபரப்பு
- ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள் உடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- 3 பேர் மீது புகார்
ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் கொண்ட குழு நேற்று உழவர் சந்தை, ராயக்கோட்டை ரோடு, காமராஜர் காலனி, பஸ் நிலையம், பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பரிசோதனை மேற்கொண்டனர்.
அப்போது, உழவர் சந்தை பகுதியில் 8.7 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.8,700 அபராதமும், ராயக்கோட்டை ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த 4 மாடுகளுக்கு தலா ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பூ மார்க்கெட் பகுதியில் சுமார் 13 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, பூ மார்க்கெட்டில் உள்ள கடைக்காரர்கள் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதன்பேரில் ஓசூர் ராம் நகரை சேர்ந்த வினோத்குமார் (23), சிவசக்தி நகரை சேர்ந்த ககன் (22) மற்றும் பாகலூர் தேர்பேட்டை பகுதியை சேர்ந்த முரளி (25) ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்