search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்
    X

    குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்

    • புகையிலைப் விற்பனை செய்யப்படு வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதுவரை 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த காட் டேரி பகுதியில் உள்ள சகுந்தலா என்பவருக்கு சொந்தமான பெட்டிக்க டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொ ருள் விற்பனை செய்யப்படு வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவின் பேரில், மாவட்ட கலெக்டர் சரயுவின் அறிவு றுத்தலின் படி கிருஷ்ணகிரி மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நாகேஸ்வரன் போலீஸ் பாது காப்புடன் கடைக்கு சீல் வைத்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய் யப்பட்ட குட்கா புகை யிலைப் பொருள் விற்றால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 ன் படி நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×