என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • சின்னமுட்டத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது
    • தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறை யில் 133 அடி உயர திருவள்ளு வர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்க ணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் விவேகா னந்தர் நினைவு மண்ட பத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த மாதம் சீரமைப்பு பணி நடத்தப் பட்டது.

    தொடர்ந்து கடந்த மாதமே கடலில் வெள் ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன் பாட்டுக்கு வந்து உள்ளது.

    இதற்கிடையில் சபரி மலை அய்யப்ப பக்தர்கள் சீசன் வருகிற 17-ந் தேதி தொடங்கு கிறது. இதைத் தொடர்ந்து விவேகா னந்தா என்ற மற்றொரு சுற்றுலா படகையும் சீர மைக்க பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக்கழகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து அந்தப் படகு சின்னமுட்டம் துறை முகத்தில் உள்ள படகு கட்டும் தளத் துக்கு கொண்டு செல்லப் பட்டது. அங்கு சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

    இன்னும் 3 நாட்களில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் அன்றைய தினம் வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை சமாளிப்பதற்காக இந்த படகு சீரமைக்கும் பணி அவசர அவசரமாக 3 நாட்களில் முடிக்கப்பட்டது. சீரமைப்பு பணி முடிவ டைந்ததை தொடர்ந்து புதுப்பொலிவுடன் விவேகானந்தா என்ற படகு இன்று காலை கடலில் இறக்கி சின்னமுட்டத்தில் இருந்து கன்னியாகுமரி வரை வெள்ளோட்டம் விடப்பட்டது.

    அதன்பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகா னந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்டது.

    • இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என 35 பேர் கலந்து கொண்டனர்.
    • அனைத்து வீரர்களுக்கும் ஆறுதல் பரிசுகள், சான்றிதழ்களையும் வழங்கினார்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கான சதுரங்க போட்டி நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. போட்டியில் கண் பார்வை யற்றோர், செவித்திறனற்றோர், உடல் ஊனமுற்றோர் என 3 பிரிவுகளாக ேபாட்டி கள் நடத்தப்பட்டது. வயது வரம்பின்றி நடந்த இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என 35 பேர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட சதுரங்க கழக செயலாளர் வின்ஸ்டன் நடுவராக செயல்பட்டார். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கார்மல் மேல்நிலைப்பள்ளி அருட்தந்தை வின்சென்ட் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் ஆறுதல் பரிசுகள், சான்றிதழ்களையும் வழங்கினார்.

    விழாவில் சதுரங்க கழக நிர்வாகிகள் நடராஜன், துணை தலைவர்கள் தட்சனா மூர்த்தி, எப்ரேம் ரெக்ஸ், துணை செயலா ளர்கள் அரவிந்த், வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை
    • மகளை மீட்டு தரகோரி நகோமி வடசேரி போலீசில் புகார் செய்தார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பள்ளிவிளை அம்மன்கோவில் வடக்குதெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி நகோமி(41), இவர்களது மகள் ஜாஸ்மின்(19).

    இவர் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் பள்ளிவிளை அம்மன்கோவில் வடக்கு தெருவை சேர்ந்த பவின்(21) என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு அவர்கள் இருவரும்வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

    இது குறித்து வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து ஜாஸ்மினை மீட்டு வந்தனர். பின்னர் தோட்டியோடு பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார்.

    பின்னர் மீண்டும் 20 நாட்கள் கடந்த நிலையில் ஜாஸ்மின் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 29.9.2023 அன்று ஜாஸ்மின் மீண்டும் மாயமானார். இந்த நிலையில் மகளை மீட்டு தரகோரி நகோமி வடசேரி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நகோமி மதுரை உயர் நீதிமன்றத்தில் மகளை மீட்டு தரகோரி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக விசாரணை நடத்த வடசேரி போலீசுக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் வடசேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • நல்ல வேளையாக அவ்வழியாக யாரும் அப்போது செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த காற்றுடன் சூறைக் காற்றும் வீசியது. இதையடுத்து குழித்துறை தீயணைப்பு நிலையத்திலிருந்து பொதுப் பணித்துறை சுற்றுலா மாளிகை சாலையின் அருகில் நின்ற புளிய மரத்தின் கிளை முறிந்து மின்சார டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இதனால் அந்த டிரான்ஸ்பார்மர் உடைந்து பயங்கர சத்தத்துடன் விழுந்தது. நல்ல வேளையாக அவ்வழியாக யாரும் அப்போது செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் 11 வீடுகள் இடிந்தது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவ தும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரண மாக மாவட் டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.

    நேற்று காலையில் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மாலையில் இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது.

    நாகர்கோவிலில் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. சுமார் ஒரு மணி நேரமாக இடைவிடாது கொட்டி தீர்த்த மழையின் காரணமாக ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    அவ்வை சண்முகம் சாலை, மீனாட்சிபுரம் சாலை, கோட்டார் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளா னார்கள். இடிச்சத்தம் காதை பிளக்கும் வகையில் இருந்தது. மின்னல்கள் கண்ணை பறிக்கும் வகையில் இருந்தன.

    நாகர்கோவிலில் இன்று காலையிலும் அவ்வப் போது மழை பெய்தது. மழையில் இருந்து தப்பிக்க பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

    களியல் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கி யது. அங்கு அதிகபட்சமாக 76 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி மற்றும் மலையோர பகுதி யான பாலமோர் பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றாறு அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவி யில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு இன்றும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

    பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறி விப்பு பலகை வைக்கப் பட்டு உள்ளது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட் டத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண் காணித்து வருகிறார்கள். மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களும் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    குளங்க ளுக்கு அதிகளவு தண்ணீர் வந்து கொண்டி ருப்பதால் குளங்களில் உடைப்பு ஏற்ப டாமல் இருக்கும் வகையில் முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. வள்ளியாறு, பரளியாறு, கோதையாறு மற்றும் பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆறுகளின் கரை யோர பகுதிகளுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள் ளது.

    சானல்களில் ஒரு சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

    தொடர் மழைக்கு ஏற்கனவே மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இந்தநிலை யில் நேற்று ஒரே நாளில் 11 வீடுகள் சேதமடைந்துள் ளன.

    பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.87 அடியாக உள்ளது. அணைக்கு 465 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.17 அடியாக உள்ளது. அணைக்கு 662 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்து மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிபாறை 15.4, பெருஞ்சாணி 18.4, சிற்றார் 1- 43.4, சிற்றார்2- 50.2, பூதப்பாண்டி 30.6, களியல் 76, கன்னிமார் 7.2, கொட்டாரம் 13.4, குழித்துறை 48.8, மயிலாடி 15.8, நாகர்கோவில் 38.6, சுருளோடு 33.2, தக்கலை 36.2, குளச்சல் 8.4, இரணியல் 10.2, பாலமோர் 35.2, மாம்பழத்துறையாறு 65.4, திற்பரப்பு 63.8, ஆரல்வாய் மொழி 1.2, கோழி போர்விளை 32.4, அடையா மடை 14.3, குருந்தன் கோடு 24, முக்கடல் 15.2

    • செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
    • குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    பொது இன்சூரன்சு ஓய்வு பெற்ற ஊழியர்கள் கூட்ட மைப்பின் அகில இந்திய செயற்குழு கூட்டம் கன்னியா குமரியில் 2 நாட்கள் நடந்தது. அகில இந்திய பொதுச் செயலாளர் பானர்ஜி தலைமை தாங்கினார். மண்டல மேலாளர் கோபி சங்கர், ஊழியர்கள் சங்க மதுரை மண்டல தலைவர் ஆறுமுக நயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி மேலாளர் பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். "மெடிக் கிளைம் பாலிசி"க்கான பிரிமியத்தை மாத சந்தாவாக பெற்று கொள்ள வேண்டும். அதற்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதிய புத்தகம் வழங்க வேண்டும். மெடிக்கிளைம் காப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வூதியர்களின் நலனுக்காக சிறப்பாக செயலாற்றியதற்காக மதுரை மண்டல செயல் தலைவர் சோமசுந்தரத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மதுரை மண்டல செயலாளர் ரெங்கா, அமைப்பு செயலாளர் ராம சுப்பிரமணியன் உள்பட நாடு முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • மின் வாரியத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை
    • வீடுகளுக்கான 100 யூனிட், கைத்தறி உள்ளிட்ட தொழில்களுக்கு இலவச மின்சாரம்

    மார்த்தாண்டம், நவ.9-

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிள்ளியூர் வட்டார செயலாளர் சாந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

    மின்துறையில் தனியாரை ஊக்குவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மின்சார திருத்த மசோதா 2023-ஐ மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு காரணமாக இம்மசோதா நிலைக்குழு வுக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றபட்டால் மின் உற்பத்தி மட்டுமின்றி வினி யோகத்திலும் தனியார்துறை ஈடுபடுத்தப்படும் சூழ்நிலை ஏற்படும்.

    ஏற்கனவே தமிழகத்தில் விவசாய இலவச மின்சாரம், வீடுகளுக்கான 100 யூனிட், கைத்தறி உள்ளிட்ட தொழில்களுக்கு இலவச மின்சாரம் நடைமுறையில் உள்ளது. ஒன்றிய மின்சார திருத்தசட்டம் 2023 அமுலாகும்போது மின்துறை தனியார்மயம் ஆகும் சூழலில் மேற்கண்ட சலுகைகள் அனைத்தையும் தமிழகம் இழக்கும் நிலை உருவாகும்.

    இந்த நிலையில் தமிழக அரசு புதிய ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர் கோரியுள்ளது. மீட்டர் மாற்றி பொருத்த 3000 கோடி ரூபாய் தேவை. ஏற்கனவே தமிழக மின் வாரியத்திற்கு பல கோடி ரூபாய் கடன் உள்ளது. மாநில அரசு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தாவிட்டால், மானியத்தை கொடுக்க முடியாது என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பக்கத்து மாநிலமான கேரளம், ஒன்றிய அரசின் நிர்பந்தத்தை நிராகரித்து அம்மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளது.

    எனவே தமிழக அரசு ஒன்றிய அரசின் நிர்பந்தத்தை நிராகரித்து தமிழக மின்துறையை பாதுகாக்கவும், இலவச மின்சாரத்தை தொடரவும் ஸ்மார்ட் மீட்டர் என்ற பிரிபெய்டு மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிள்ளியூர் கிழக்கு வட்டார கமிட்டி சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
    • பல்துறை பணிவிளக்க முகாமினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பார்வை யிட்டார்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில், திருவட்டார் வருவாய் கிராமத்திற்குட்பட்ட சுருள கோடு ஊராட்சிக்குட்பட்ட புனித அந்தோணியார் உயர்நி லைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலை வகித்தார்.

    முகாமில் 45 பயனாளி களுக்கு ரூ.9.92 லட்சம் மதிப் பிலான நலத்திட்ட உதவி களை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    இந்த முகாமின் நோக்கம், அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் அறிந்து பயன்பெறு வதே ஆகும். குறிப்பாக, குடிநீர் வசதி, பட்டா வழங்குதல், பட்டா பெயர் மாற்றம் செய்தல், விதவை சான்றிதழ், முதிர்கன்னி ஓய்வூதியத்தொகை, ஆதர வற்றோர் விதவை சான்றி தழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வது ஆகும்.

    மேலும் குடும்ப அட்டை யின் வகை மாற்றுவதற்கான மனுக்கள் அதிகமாக வரு கிறது. மேலும் வீட்டுமனை பட்டா மனுக்களும் அதிகள வில் வருகிறது. தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். வீடு தொடர்பான மனுக்க ளுக்கு மாநகராட்சி, நக ராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மூலம் தகுதி யான பயனாளிகளுக்கு மானியத்துடன் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

    மேலும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மகளிர் திட்டம், முன்னோடி வங்கி ஆகிய துறைகள் சார்பாக வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அம்முகாமில் 2200-கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டனர். அவர் களில் 250 நபர்களுக்கு உடனடி ஆணைகளும், 400-க்கும் மேற்பட்டவர் களுக்கு அடுத்த கட்டமாக தேர்வும் நடத்தப்படவுள்ளது. வருடத்திற்கு இரு முறை பெரிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்களும், மாதந்தோறும் சிறு அளவி லான முகாம்களும் நடத்தப்படுவதோடு அரசு பணிக்க ளுக்கான பயிற்சி வகுப்பு களும் நடத்தப்பட்டு வரு கிறது.

    புதுமைப்பெண் திட்டம் தொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி அரசு பள்ளிகளில் பயின்ற மாணவி களுக்கு வங்கி மூ லமாக ரூ.1000 வழங்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலை உணவு திட்டம் தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இத்திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுகிறது.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப் பித்து விடுப்பட்ட நபர்களுக்கு தகுதி அடிப்ப டையில் உதவித்தொகை வழங்குவ தற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. முதலில் விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டு, விண்ணப்பங்களை பெற முகாம்கள் நடத்தப்பட்டது. பின்னர் தகுதியான பய னாளிகளை வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டு கண்டறியப்பட்டது.

    வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் தாழ் வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப் பான இடங்களில் தங்க வேண்டும், இடி மின்னல் ஏற்படும்போது பொது மக்கள் தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும், பொது இடங்களில் செல்லும் போது இடி மின்னல் தாக்கினால் மரத்தின் கீழோ, கட்டங்களின் கீழோ நிற்க வேண்டாம். மழைக்கா லத்தில் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது மின்கம்பங்கள் அருகில் செல்லமாலும் அதன் அருகில் தேங்கியிருக்கும் தண்ணீர் அருகில் செல்ல மால் கவனமாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் வீடுகளில் உபயோகிக்கும் மின்சாரம் மற்றும் பழுது அடைந்த மின்சாதனங்களை தொடமால் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொது மக்கள் அனைவரும் அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும்.

    விவாசாயிகள் உங்கள் பகுதியில் உள்ள காலநிலை களை அறிந்து அதற்கேற்ற பருவகாலங்களில் பயிரிட வேண்டிய பயிர்களை பயி ரிட்டு அதிக மகசூல் பெற்று தங்கள் வாழ்வதாரத்தை உயர்த்தி கொள்ள வேண் டும். மேலும் ஊரக உள்ளாட்சி துறை சார்பில் முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பில் சுருள கோடு-உள்ளிமலை-மேதோப்பு-பூவஞ்சந்தி சாலைப்பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    முன்னதாக, சுருளகோடு புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி வளாகத் தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கபட்டிருந்த பல்துறை பணிவிளக்க முகாமினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பார்வை யிட்டார்.

    திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் ஜாண், சமூக பாது காப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் குழந்தைசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் விமலாராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுப்பையா, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் கனக ராஜ், மாவட்ட ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கீதா, துணை இயக்குநர்கள் வாணி (வேளாண்மை), ஷீலா ஜாண் (தோட்டக்கலை), திருவட்டார் வட்டாட்சியர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் விமலா (சுருளகோடு), லில்லிபாய் (பாலமோர்), ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், பிலோமினாள் மற்றும் துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண் டார்கள்

    • முதல் கட்டமாக 60 பஸ்கள் ஒதுக்கப்பட்டு இன்று முதல் இந்த பஸ்கள் இயத்கப்பட்டன.
    • கூட்ட நெரிசல் அதிகம் ஏற்பட்டால் கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை

    நாகர்கோவில், நவ.8-

    குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், வெளியூர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இதேபோல் வெளியூரைச் சேர்ந்த பலர் குமரி மாவட்ட த்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.

    இவர்களது வசதிக்காக போக்கவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து சென்னை, பெங்களூரூ, கோவை, திருச்சி, வேளாங்கண்ணி, மதுரை உள்ளிட்ட பல ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதற்காக முதல் கட்டமாக 60 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று முதல் இந்த பஸ்கள் இயத்கப்பட்டன. வரும் காலங்களில் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்பட்டால் கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • மாவட்ட தீயணைப்பு அலுவலர் வழங்கினார்
    • இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க கூடாது

    நாகர்கோவில், நவ.8-

    வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படும் தீபாவ ளியை விபத்தில்லாமல் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று தீயணை ப்புத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தீய ணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கோட்டார் ஏழகரம் அரசு தொடக்க மற்றும் உயர் நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பு சம்பந்தமான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்ய குமார் பேசியதாவது:-

    இந்த தீபாவளி விபத்தில்லா தீபாவளியாக அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பட்டாசு கடைகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

    பட்டாசு கடைகள் விதிமுறைகளை முறை யாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக உரிமம் வழங்கப் பட்ட இடத்தில் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும் .

    பட்டாசு அடுக்கி வைக்கும் ரேக் உராய்வி னால் தீப்பொறி ஏற்படக் கூடியதாக இருக்கக் கூடாது. தயாரிப்பா ளர்களின் லேபில்களுடன் கூடிய பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் .உரிமம் இல்லாமல் தயாரிக்கப்படும் பட்டாசு களை விற்பது சட்டப்படி குற்றமாகும். 125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. உரிமம் இல்லாத இடத்தில் பட்டாசு சேமித்து வைப்பது குற்றமாகும்.

    இதே போல பொதுமக்க ளும் விபத்தில்லா தீபாவளி யாக அமைய ஒத்துழைக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது இறுக்க மான ஆடைகளை அணிய வேண்டும். பெரியவர்கள் மேற்பார்வையில் சிறு வர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். வீட்டிற்கு வெளியில் திறந்த வெளி யில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால் உடனே காயத்தில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும்.

    வீட்டின் மாடியில் பட்டாசு வெடிக்க கூடாது. குடிசைகள் நிறைந்த பகுதி யில் பட்டாசு வெடிக்க வேண்டாம். மருத்துவ மனை, திரையரங்குகள், பொது மக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்காதீர்கள். வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க முயற்சி க்க கூடாது.

    பட்டாசுகளை சிறு வர்கள் கையில் எடுத்து விளை யாட அனுமதிக்க வேண்டாம் . உச்ச நீதிமன்ற உத்தரவின் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க கூடாது என்பன போன்ற விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 35-வது வார்டுக்குட்பட்ட வள்ளளார் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம்

    நாகர்கோவில், நவ. 8-

    நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் ரூ. 1.20 கோடி மதிப்பிட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டுதல், 35-வது வார்டுக்குட்பட்ட வள்ளளார் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி போன்றவை இன்று நடைபெற்றன.

    இதேபோல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கேன்டீன் அமைக்கும் பணி யும் இன்று நடைபெற்றது. இந்த பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகர நல அலுவலர் ராம் குமார், மண்டல தலை வர் அகஸ்டினா கோகில வாணி, ஜவகர், செல்வ குமார், மாமன்ற உறுப்பி னர்கள் ராணி, அனந்த லெட்சுமி கலாராணி, பகுதி செயலாளர் சேக் மீரான், துரை, அணிகளின் நிர்வாகிகள் ராஜன், வட்டச் செயலாளர்கள் ராம கிருஷ்ணன், முத்து கிருஷ்ணன், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிரதமர் மோடிக்கு கவுன்சிலர் அய்யப்பன் நன்றி
    • 80 கோடி ஏழை மக்கள் பயன்பெற்று மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள்.

    என். ஜி. ஓ. காலனி :

    குமரி மாவட்ட பா.ஜ.க பொருளாதார பிரிவு தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான அய்யப்பன் கூறுகையில்.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளின் பசியை போக்குவதற்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை கடந்த 2020 -ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    இந்த திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் நீட்டித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    இதன் மூலம் 80 கோடி ஏழை மக்கள் பயன்பெற்று மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள்.

    இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 50 வது வார்டு பொதுமக்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நாகர்கோவில் கவுன்சிலர் அய்யப்பன் பிரதமர் மோடி க்கு நன்றி தெரிவித்தும் இது போன்ற பல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    ×