என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 77 அடியில் வந்த பிறகு மட்டுமே மறுகாலை திறக்க நடவடிக்கை

    நாகர்கோவில், நவ.16-

    நாகர்கோவில் கலெக் டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், கூட்டுறவு சங்க இணை பொறியாளர் சிவகாமி, வேளாண் துறை அதிகாரி வாணி மற்றும் விவசாயிகள் வின்ஸ்ஆன்றோ, புலவர் செல்லப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் விவசாயி களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து விவசாயிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் திருப்பதிசாரம் விதைகள் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து விவசாயிகளுக்கு தரமான விதைகளை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அருமனை அரசு ஆஸ்பத்திரியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் வனத்துறையினர் குரங்குகளை அந்த பகுதியில் விட்டு செல்வதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் 48 அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 77 அடியில் வந்த பிறகு மட்டுமே மறுகாலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிபி சேனல் பகுதியில் கடந்த 10 நாட்களில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சானல்களை தூர்வாரி தூய்மைப்படுத்தி இருந்தால் உடைப்பு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகத்தான் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை பகுதியை சுற்றுலாதலமாக மாற்றக்கூடாது. பொது பணித்துறைக்கு சொந்தமான இடங்களை ஊராட்சிக்கு வழங்கக்கூடாது.மாம்பழத்துறையாறு அணைப்பகுதியை சுற்றி உள்ள இடங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தோவாளை மலர் ஆராய்ச்சி நிலையத்தின் ஒரு பகுதியை வேறு உபயோகத்திற்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.அதை வேறு உபயோகத்திற்கு வழங்கக்கூடாது. நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடந்து முடிந்து தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்குவது போன்ற அவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈசாந்திமங்கலம், வடக்கு மாங்குளம் பகுதியில் மறுகால் ஓடை முட்புதர்நிறைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மலைப்பாம்புகள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே அந்த முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லின் ஈரப்பதத்தை அதிகரித்து வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் தேங்காய் விவசாயிகள் அதிகமானோர் உள்ளனர். தேங்காய்க்கு கிலோ ரூ.35 நிர்ணயம் செய்ய வேண்டும். நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்தது போல் தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே தென்னை விவசாயத்தை பாதுகாக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறுகையில், திருப்பதிசாரம் விதை நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து விவசாயிகளுக்கு தரமான விதை வழங்கப்பட்டு வருகிறது. டி.பி.எஸ்.4 குறுகிய கால நெற்பயிர்கள் 95 நாட்களில் அறுவடை செய்யப்படும். குறுகிய கால பயிர்கள் குறைவான அளவில் மகசூல் கிடைக்கும். நீண்டகால பயிர்களுக்கு தான் மகசூல் அதிக அளவில் கிடைக்கும்.

    டி.பி.எஸ். 5 ரக நெற்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு பலமுறை அறிவுறுத்தி உள்ளோம். இந்த நெல் பயிரை சாகுபடி செய்யும் போது மகசூல் அதிகம் கிடைப்பதுடன் எந்த மழை பெய்தாலும் நெற்பயிர்கள் சாய்ந்து தரையில் விழாத நிலையில் இருக்கும். ஆனால் அம்பை 16 பயிர் செய்தால் மழை நேரங்களில் அந்த நெல் சாய்ந்து விடும். குரங்குகள் வனப்பகுதியில் மட்டுமே விடப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தில் பி.பி. சேனலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் உள்ள முட்புதர்களை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தோவாளை மலர் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள 11 ஏக்கர் நிலத்தை அவர்களே பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். தேங்காய் விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக திட்டம் எதுவும் தற்போது இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • நாளை தொடங்கி 17 நாட்கள் நடக்கிறது
    • விழாவுக்கான ஏற்பாடுகளை மாதவரம் ஊர் நிர்வாக குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தில் ஸ்ரீமன் நாராயணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திரு ஏடு வாசிப்பு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதி வரை 17 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு திருஏடு வாசித்து விளக்க உரை நடக்கிறது.

    3-ம் திருவிழாவான 19-ந்தேதி பகல் அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு மற்றும் சமபந்தி விருந்து நடக்கிறது. 15-ம் திருவிழாவான டிசம்பர் 1-ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதையொட்டி அன்று இரவு 9.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்திர வாகனத்தில் அய்யா எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து அன்னதா னம் நடக்கிறது. டிசம்பர் 3-ந்தேதி பட்டாபி ஷேக விழா நடக்கிறது.

    இதையொட்டி அன்று மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பும், இரவு 8 மணிக்கு அன்னதானமும், நள்ளிரவு 12 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை மற்றும் திருவிழாவும் நடக்கிறது. மறுநாள் 4-ந்தேதி அதி காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பால் வைத்து பணிவிடையும் காலை 8 மணிக்கு விழா நிறைவு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாதவரம் ஊர் நிர்வாக குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகிறார்கள்.

    • ஜவான் அய்யப்பன் தொடங்கி வைத்தார்
    • பா.ஜ.க. உறுப்பினர் அமர்நாத், கோவில் நிர்வாகி ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    சொத்தவிளை சிவசுடலைமாட சுவாமி கோவிலில் வருடாந்திர கொடை விழாவினை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை பா.ஜ.க பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான ஜவான் அய்யப்பன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் சுடலைமணி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய துணை தலைவர் ராஜன், பா.ஜ.க. உறுப்பினர் அமர்நாத், கோவில் நிர்வாகி ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வனத்துறையினர் நேற்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • யாருக்கு விற்பனை செய்ய அம்பர் கிரிசை கொண்டு வந்தார்கள்? என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சம் வாசனை திரவியங்கள் மற்றும் மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தை சிலர் கடத்தி கொண்டு சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நாகர்கோவில் பகுதியில் அம்பர் கிரிஸ் விற்பனை செய்யப்படுவதாகவும், சிலர் கடத்தி கொண்டு வருவதாகவும் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் நேற்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காரில் வந்த ஒரு கும்பலை வனத்துறையினர் பிடித்தனர். அந்த காரில் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் அவர்களது காரை வனத்துறையினர் சோதனை செய்தனர்.

    அப்போது அவர்களது காரில் அம்பர் கிரிஸ் கடத்தியது தெரியவந்தது. காரில் இருந்த 11 கிலோ அம்பர் கிரிசை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த நாராயணன்(வயது41), மேலப்பாளையத்தைச் சேர்ந்த அருணாச்சலம்(53), வேலாயுதம்(47), நாங்குநேரியைச் சேர்ந்த சுந்தர் (25) என்பது தெரியவந்தது.

    நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு அம்பர் கிரிசை விற்பனைக்காக கடத்தி கொண்டு வந்திருக்கின்றனர். அது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் யாருக்கு விற்பனை செய்ய அம்பர் கிரிசை கொண்டு வந்தார்கள்? என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    இதில் தொடர்புடைய நாகர்கோவில் சேர்ந்த நபரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட அம்பர் கிரிசின் மதிப்பு ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது. 

    • தேரடி மூடு பகுதியில் உள்ள புரோட்டா கடையின் மேல் கூரை ஒன்று ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது
    • வீடுகள் முன்பு போடப்பட்டிருந்த சீட்டுகளை அவர்களே தாமாக முன்வந்து அப்புறப்படுத்தினார்கள்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகிறது. வடிவீஸ்வரம் நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று நடந்தது.

    சுகாதார ஆய்வாளர் ஜான் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மேற்கொண்டனர். தேரடி மூடு பகுதியில் உள்ள புரோட்டா கடையின் மேல் கூரை ஒன்று ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது.

    அதை மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்றினார்கள். இதேபோல் வீடுகள் முன்பு போடப்பட்டிருந்த சீட்டுகளை அவர்களே தாமாக முன்வந்து அப்புறப்படுத்தினார்கள். ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து கோட்டார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • டிசம்பர் மாதம் 4-ந்தேதி 11-ம் நாள் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றாகவும், கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாகவும் விளங்குவது நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள புனித சவேரியார் பேரால யம் ஆகும். ஆண்டுதோறும் இந்த பேராலயத்தின் திருவிழா நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நிறைவுபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. இதுகுறித்து பேராலய பங்குத்தந்தை பஸ் காலிஸ், உதவி பங்குத்தந்தை ஜெனிஷ் கவின் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதா வது:-

    கேட்டவரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம், உலகில் புனித சவேரியாருக்கென்று முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் ஆகும்.

    போர்த்துக்கீசிய மன்னரின் ஆளுகைக்குட்பட்ட இந்தியாவின் சில பகுதிகளுக்கு மறைதூது அருட்பணியாளர்கள் தேவைப்பட்டனர். புனித சவேரியார் இந்தியாவில் மறைதூது பணி செய்ய அனுப்பப்பட்டார். குமரி மாவட்டத்தில் கோட்டாருக்கு வந்த சவேரியார் இந்த பகுதியில் சுற்றி வந்து, மக்களை சந்தித்து மக்களின் அன்றாட வாழ்வோடு இணைந்தார். இவர் சாதி, சமய பேதமின்றி அனைத்து மக்களுக்கும் நற்செய்தி பணியாற்றினார்.

    கோட்டார் பேரால யத்துக்கு இன்னும் ஒரு சிறப்பு உண்டு. மறை சாட்சி தேவசகாயம் பிள்ளையின் கல்லறை அமைந்துள்ளது. இங்குதான் புனித சவேரி யார் தங்கியிருந்து திருப்பலி நிறைவேற்றினார். அவர் தங்கியிருந்து, அருட்பணி யாற்றிய இந்த புண்ணிய பூமியில் வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பேராலய 11 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6.15 மணி திருப்பலியை ராஜாவூர் பங்கு இறை மக்களும், 8 மணி திருப்பலியை அருகுவிளை பங்கு இறை மக்களும் நிறைவேற்றுகிறார்கள். மாலை 6 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.

    கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜான் ரூபஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைக்கிறார். முதல் நாள் நிகழ்ச்சியை குமரி மாவட்ட போலீஸ் துறையினர் சிறப்பிக்கிறார்கள்.

    3-ம் நாள் திருவிழாவான 26-ந்தேதி காலை 8.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், 11 மணிக்கு இறை இரக்க தூதுவர் குழுவினரின் குணமளிக்கும் திருப்பலியும் நடைபெறுகிறது. 9-ம் நாள் திருவிழாவான டிசம்பர் மாதம் 2-ந்தேதியன்று மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். 10-வது நாளான 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். 11-ம் நாள் திருவிழாவான 4-ந்தேதி காலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கு தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் நடைபெறும்.

    டிசம்பர் மாதம் 4-ந்தேதி 11-ம் நாள் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது. அன்றைய தினத்தில் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கலெக்டரால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையாக அனுமதித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

    திருவிழா முடிந்த பிறகு 8-ந்தேதி மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்வும், புனித இஞ்ஞாசியார், புனித சவேரியார், புனித தேவசகாயம் ஆகியோரின் திருப்பண் பவனி, திருப்பண் டம் முத்தம் செய்தல் மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெ றும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பேட்டி யின் போது கோட்டார் பங்குப்பே ரவை துணை தலைவர் ஜேசு ராஜா, செயலாளர் ராஜன், துணை செயலாளர் ராஜன் ஆராச்சி, பொருளாளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 14,589 ரூபாயை கைப்பற்றி கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மருதன்கோடு பகுதியில் பள்ளியின் அருகாமையில் உள்ள கடைகளை மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மருதம்கோடு குந்நுவிளையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(வயது44) என்பவது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் அவரது கடையில் ரூ6,845 மதிப்பிலான புகையிலை பொருட்களை செய்த போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஏற்கனவே புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வைக்கப்பட்டிருந்த 14,589 ரூபாயை கைப்பற்றி கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

    • ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    • தற்கொலை செய்து கொண்ட முத்தம்மாளுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    ராஜாக்கமங்கலம் :

    மேலசங்கரன்குழியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி முத்தம் மாள் (வயது 76). சிவலிங்கம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இதனால் முத்தம்மாள் சோகத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கணவரின் கல்லறைக்கு சென்ற அவர், அப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இச்சம்பவம் குறித்து அவரது மகன் கலைக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட முத்தம்மாளுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    • பிளஸ்-1 பயிலும் ஆன்றோ மெர்பின் என்ற மாணவர் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட கோ-கோ போட்டியில் வெற்றி
    • மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட கபடி அணி வீரர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றார்.

    தக்கலை ;

    முளகுமூடு புனித ேஜாசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் விஜோலின் என்ற மாணவன் இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட கபடி அணி வீரர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அதுபோல் பிளஸ்-1 பயிலும் ஆன்றோ மெர்பின் என்ற மாணவர் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட கோ-கோ போட்டியில் வெற்றி பெற்று தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இந்திய அளவில் நடைபெறும் கபடி மற்றும் கோ-கோ போட்டிகளில் தமிழக அணிக்காக விளையாட உள்ளார்கள். அவர்களை பள்ளி தாளாளர் டோமினிக் கடாட்ச் தாஸ், பள்ளி முதல்வர் பின்சி செபாஸ்டின், உடற்கல்வி ஆசிரியர்கள், இதர ஆசிரியர்கள், தூய மரியன்னை பசிலிக்கா ஆலய நிர்வாகத்தினர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது
    • சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகி கொண்டிருக்கிறது.

    கன்னியாகுமரி ;

    இந்தியாவின் தென்கோடிமுனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும்.

    மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும்.

    இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்த 3 மாத காலமும் சபரிமலை சீசன் காலமாக கருதப்படுகிறது. கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்க கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

    சீசனையொட்டி கன்னியாகுமரியில் இரவு நேரத்திலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.

    ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் 100-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சீசன் கடைகளும் ஏலம் விடப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் சீசனையொட்டி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் சிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரை பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு காமிராக்கள் வசதி செய்யப்பட உள்ளது.

    பாதுகாப்பு பணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனி பார்க்கிங் வசதி ஏற்பாடும் செய்யப்பட உள்ளது. சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகி கொண்டிருக்கிறது.

    • 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கல்லறைத்தோட்ட காம்பவுண்டு சுவரை இடித்ததுடன் ‘கேட்’டையும் எடுத்து சென்றார்கள்.

    மணவாளக்குறிச்சி ;

    மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலம் கோட்டவிளையை சேர்ந்தவர் ஜோஸ். டிம்போ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்ப கல்லறை தோட்டம் செறுவன்தட்டுவிளையில் உள்ளது.

    இதன் பின் பக்கம் அப்பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரின் அம்மன்கோயில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு பாதை ஏற்படுத்த சசிகுமாரின் உறவினர் ராஜகுசேலன் மற்றும் கிருஷ்ணகுமார் என்ற காந்தி, மேலும் 2 பேர் கடப்பாறை, வெட்டுக்கத்தியுடன் சென்றனர். அப்போது அவர்கள் ஜோஸின் குடும்ப கல்லறைத்தோட்ட காம்பவுண்டு சுவரை இடித்ததுடன் 'கேட்'டையும் எடுத்து சென்றார்கள்.

    இதனை ஜோசின் உறவினர் ஒருவர் பார்த்து தட்டிக்கேட்டார். அப்போது அவர்கள் ஜோஸின் உறவினரை தகாத வார்த்தையால் திட்டி சென்றனர். இது குறித்து ஜோஸ் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜகுசேலன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.
    • தேவசகாயம் மவுண்ட் வட்டார முதல்வர் ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து தேர்பவனி நடக்கிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு கோட்டார் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருவிழாகொடியை ஏற்றி வைத்து மறையுரையாற்றிறுகிறார். விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 19-ந்தேதி காலை 7.30 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மறைமாவட்ட பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் எட்மண்ட் மறையுரையாற்றுகிறார்.

    விழாவின் 9-ம் நாளான 25-ந்தேதி காலை 7 மணிக்கு இளைஞர் பணிக்குழு இயக்குனர் அருட்பணியாளர் சைமன் தலைமை தாங்கி திருமுழுக்கு திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். 10 மணிக்கு நோயாளி களுக்கான திருப்பலியை அருட்பணியாளர் ஆன்டணி பெர்டிக் புரூனோ தலைமை தாங்கி நிறைவேற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஆராதனையை கோட்டார் மறைமாவட்ட செயலாளர் மரிய கிளாட்ஸ்டன் நடத்துகிறார். தேவசகாயம் மவுண்ட் வட்டார முதல்வர் ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் 10-ம் நாளான 26-ந்தேதி காலை 7.30 மணிக்கு கோட்டார் மறைவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி பெருவிழா திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலி, கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் டோனி ஜெரோம், இணை பங்கு அருட்பணியாளர் விஜின் பிரைட் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை, மக்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகிறார்கள்.

    ×