என் மலர்
கன்னியாகுமரி
- தக்கலை அருகே பொதுமக்கள் மடக்கினர்
- ஓட்டல் கழிவுகளை ஏற்றி வந்த டெம்ேபாவை பறிமுதல் செய்தனர்.
தக்கலை :
கேரளாவில் இருந்து இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகளை, தமிழகத்திற்கு கொண்டு வந்து இங்குள்ள நீர்நிலை கரைகள், சாலை யோரம் கொட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக குமரி மாவட்டம் களியக்காவிளை, தக்கலை உள்ளிட்ட பகுதி களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து கழிவு பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
ஆனால் கண்காணிப் பையும் மீறி சில வாகனங்கள் குமரி மாவட்ட எல்லைப் பகுதிக்குள் வந்து கழிவுகளை கொட்டிச் செல்வது நடந்து வருகிறது. ஒரு சில இடங் களில் அந்த வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போலீசில் ஓப்படைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தக்கலை அருகே கோழிப்போர்விளை வழியாக நேற்று இரவு ஒரு டெம்போ வந்தது. அந்த டெம்போவில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் டெம்போவை பள்ளியாடி செல்லும் சாலையில் மடக்கி சிறை பிடித்தனர்.
பின்னர் டெம்போவை சோதனையிட்ட போது அதில் கேரளாவில் இருந்து ஓட்டல் கழிவுகள் கொண்டு வந்தது தெரியவந்தது. இது குறித்து தக்கலை போலீசா ருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. அவர்கள் விரைந்து வந்து, ஓட்டல் கழிவுகளை ஏற்றி வந்த டெம்ேபாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வாகனத்தை ஓட்டி வந்தது கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 27) என்பதும், அவர் கோவ ளத்தில் இருந்து உணவு கழிவுகளை கோழிப்போர் விளை பகுதியில் உள்ள பன்றி பண்ணைக்கு கொண்டு வந்ததாகவும் தெரியவந்தது. இது சம்பந்தமாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டுத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்
- கறவை மாடு கடன் பால் உற்பத்தி நிலையங்களை தரமான பால் சங்கத்திற்கு கடன்கள் வழங்க அறிவுறுத்தினார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கே.பி.ரோட்டில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டு துறை இயக்குநர் வினித் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தினமும் பால் கொள் முதல், பால் பாக்கெட் விற்பனை சரிவர நடை பெறுகிறதா என்றும், பால் உப பொருட்கள், பால் கோவா, தயிர், மோர், குல்பி, சாக்லேட் போன்றவை உரிய முறையில் தயாரிக்கப் படுகிறதா என ஒவ்வொரு பிரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள். பால் கொள்முதல் அதிகரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
உடனடியாக பால் உற்பத்தி அதிகரிக்க கறவை மாடு கடன் பெற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இலக்கினை அடைய வேண்டும் என்று எடுத்து ரைத்தார். பால் பண்ணை யில் உள்கட்டமைப்புகளில் சில மாற்றங்கள் செய்திடவும் ஒவ்வொரு பிரிவிலும் பணிகள் ஒரே சீரான முறை யில் உரிய பால் பண்ணை யின் அமைப்பின்படி செயல் படுத்த அறிவுறுத்தினார்.
பால் உற்பத்தி அதிக ரிக்கவும், பால் கொள்முதல் செய்வதே உறுதிப்படுத்தி செயல்படுத்திடவும், பொது மக்களுக்கு பால் பாக்கெட் மற்றும் பால் உபப்பொ ருட்கள் தங்கு தடையின்றி அனைத்து பகுதியிலும் கிடைத்திட அறிவுறுத்தினார். பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு கடன் பால் உற்பத்தி நிலையங்களை தரமான பால் சங்கத்திற்கு கடன்கள் வழங்க அறிவுறுத்தினார்.
ஆவின் பொது மேலாளர் அருணகிரிநாதன், துணை பதிவாளர் சைமன் சார்லஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- அரசு மருத்துவமனைகளில் மேற்பரிசோதனைக்காக பரிந்துரை செய்யப்படும்.
நாகர்கோவில் :
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி காட்டுதலின்படி, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத்தினை சட்டசபையில் அறிவித்தார். அதனடிப்ப டையில் கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வருகிற 22-ந்தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட வுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அதிகப்படியாக கண்டறி யப்படும் 3 வகையான புற்றுநோய்களான வாய் புற்றுநோய், மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களுக்கான கண்டறியும் பரிசோ தனைகள் மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வாய் புற்றுநோயும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களும் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வனைத்து பரிசோ தனைகளும் வலியின்றி மிக விரைவில் மிக எளிதாக செய்துகொள்ளலாம்.
சுகாதாரத்துறை அலுவ லர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பயனா ளர்களை யும் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்வாழ்வு மையங்களாக செயல்பட்டு கொண்டி ருக்கும் அரசு துணை சுகா தார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதிக்க உரிய ஏற்பாடு களை செய்துள்ளனர்.
முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனுமதி பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகளிலும் இப்பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். மாவட்டத்தின் அனைத்து பயனாளர்களையும் 3 வருடத்திற்குள் பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடங்கிய பின் சுகாதாரத்துறை பணியாளர்கள் உங்கள் இல்லங்கள் தேடி வந்து இத்திட்டத்திற்கான அழைப்பிதழ்கள் வழங்கு வார்கள். இந்த அழைப்பி தழ்களில் அருகாமை யிலுள்ள பரிசோதனை முகாம்கள் பயனாளர்க ளுக்கு தெரியப்படுத்தப்ப டும். இத்திட்டத்திற்கான அழைப்பிதழ்கள் பெறப்பட்டவுடன் பரிசோ தனை முகாமிற்கு சென்று பரிசோதனைகள் செய்திட மாவட்ட நிர்வாகத்தின சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்பரிசோதனைகள் அரசு துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் உள்ளடங்கிய தனியார் மருத்துவமனை களிலும் உரிய பயிற்சிகள் பெறப்பட்டவர்களால் செய்யப்படும். பரிசோதனை யின் முடிவில் புற்றுநோய் அறிகுறிகள் இல்லை யெனில், 3 வருடத்திற்குப்பின் மறுபரிசோதனை செய்துக் கொள்ளலாம்.
பரிசோதனையில் புற்று நோய் அறிகுறிகள் தென் பட்டால், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மேற்பரிசோதனைகள் செய்யும் வசதியுள்ள அரசு மருத்துவமனைகளில் மேற்பரிசோதனைக்காக பரிந்துரை செய்யப்படும்.
வளர்ந்த நாடு என்ற பட்டத்திற்கு நாம் தயாராகும் நிலையில், தொற்றா நோய் களான சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. பிற தொற்றா நோய்களை போல் ஆரம்ப நிலையில் கண்டறிதலே புற்றுநோயினை குணப்ப டுத்த சிறந்த வழிமுறை. இதன்மூலம் புற்றுநோயி னால் வரும் உயிரிழப்புகளை வெகுவாக குறைக்கலாம்.
தமிழக அரசின் மக்க ளைத்தேடி மருத்துவம், உலக அளவில் தொற்றா நோய்களுக்கு ஒரு முன்மா திரியான திட்டமாக செயல்பட்டு கொண்டி ருக்கின்றது. இத்திட்டத்தின் வெற்றி மக்களாகிய உங்க ளின் ஈடுபாட்டை சார்ந் துள்ளது. சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக தமிழக அரசின் இத்திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்திடு மாறு கலெக்டர் ஸ்ரீதர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- நேரில் ஆய்வு செய்தபின் விஜய்வசந்த் எம்.பி. பேட்டி
- இந்த பணிகளுக்காக கூடுதலாக ரூ.1041 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி முதல் கேரள எல்லை வரையிலான நான்கு வழி சாலைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அது பாதியில் கைவிடப்பட்டது.
விஜய்வசந்த் எம்.பி. மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகி யோரை சந்தித்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இந்த பணிகளுக்கான மறு ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த பணிகளுக்காக கூடுதலாக ரூ.1041 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
கடுமையான முயற்சி களின் பலனாக நான்கு வழி சாலைக்கான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சாலை மொத்தம் 53.714 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. ஏற்கனவே 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட் டுள்ளது.
இன்னும் 23 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை பணிகள் மேற் கொள்ள வேண்டியதுள்ளது.தற்பொழுது ஒதுக்கப்பட் டுள்ள நிதியில் 25 பெரிய பாலங்களும், 16 சிறிய பாலங்களும் அமைக்கப்படு கிறது. இந்த பணிகளை விஜய்வசந்த் எம்.பி. நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார். இந்த பணிக்கான திட்ட இயக்கு னர் வேல்ராஜ், இந்த பணிக்கான ஒப்பந்தக்கா ரர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் இந்த பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
இந்த பணிகள் நடைபெறும் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட விஜய்வசந்த் எம்.பி. இந்த பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு இதனை திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மண் எடுப்ப தற்கு தடை இருந்ததால் பக்கத்து மாவட்டத்திலிருந்து மண் கொண்டு வருவதற்கு உள்ள நடைமுறை சிர மங்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்ப டும் என துறை அதிகாரி களுக்கு உறுதி அளித்தார்.
- நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கன்னியாகுமரியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் -1 படித்து வருகிறார்.
- அவர் கடந்த சில நாட்க ளாக வயிற்று வலியால் அவதிப்பட்டார்.
நாகர்கோவில் : நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கன்னியாகுமரியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் -1 படித்து வருகிறார்.
அவர் கடந்த சில நாட்க ளாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் பெற்றோர் அவரை பரிசோத னைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவி கரு வுற்று இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி மாணவியின் பெற்றோ ரிடம் தெரிவித்தனர். மகள் 8 மாதம் கர்ப்ப மாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதை கேட்டு அவர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
கர்ப்பத்திற்கு யார் காரணம்? என்று பெற்றோர் விசாரித்த போது, மாணவி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த பிளஸ் -2 மாணவர் ஒருவர் வீட்டிற்கு வரும்போது பழக்கம் ஏற்பட்டதாகவும் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் தனிமை யில் உல்லாசமாக இருந்த தாகவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து நாகர்கோவில் மகளிர் போலீ சில் புகார் செய்யப்பட்டது.புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.பின்னர் சம்பந்தப்பட்ட பிளஸ்-2 மாணவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து பிளஸ்-2 மாணவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர், மாணவியை காதலித்து வரு வதாக கூறினார்.
இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் தனிமையில் உல்லாசமாக இருந்த தகவலையும் தெரிவித்தார்.இதற்கிடையில் கர்ப்பிணி யாக உள்ள மாணவியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் அனுமதித்து உள்ளனர்.
- சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள்.
- பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனி யாருக்கு ஏலம் விடப்படும்.
நாகர்கோவில் : கன்னியாகுமரிக்கு நவம்ப ர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள். இந்த சீசனையொட்டி கன்னியா குமரியில் நடைபாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனி யாருக்கு ஏலம் விடப்படும்.
இந்த ஆண்டு மொத்தம் 122 சீசன் கடைகளை ஏலம் விடுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் 34 சீசன் கடைகள் மட்டும் ஏலம் போனது. மீதிஉள்ள 88 கடைகள் 22-ந்தேதி மறு ஏலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில் கன்னியா குமரி சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்தினர் மாளிகை முன்பு வரை உள்ள பகுதியிலும் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெரு, விவேகானந்தா ராக் ரோடு பகுதியிலும் சீசன் கடை ஏலம் எடுத்த வியா பாரிகள், ஐகோர்ட்டு அறிவுரையின்படி கடைகள் போன்று கட்டாமல் நடை பாதையில் திறந்த வெளி யில் சீசன் கடைகளை வைத்துவியாபாரம்செய்ய தொடங்கிஉள்ளனர். இந்த சீசன் கடைகளில் இரவு-பகலாக வியாபாரம் நடந்து வருகிறது.
- சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உலகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
- கொரோனா காலத்திற்கு முன் இயற்கையான மண் பரப்பாகவே இருந்தது.
நாகர்கோவில் : சபரிமலை சீசன் தொடங்கியதையடுத்து சுற்றுலா தலமான கன்னியாகுமரி சப்பாத்து பகுதியில் கடலில் நீராடும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து விஜய்வசந்த் எம்.பி., தேவஸ்தான அதிகாரி, சுற்றுலா துறை அதிகாரி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அதிகாரிகள் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் விஜய்வசந்த் எம்.பி. கூறியதாவது:-சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உலகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு 3 கடல்கள் சங்கமம் ஆகும் பகுதியான திருவேணி சங்கமம் பகுதி மக்கள் கடலில் புனித நீராடும் பகுதி, கொரோனா காலத்திற்கு முன் இயற்கையான மண் பரப்பாகவே இருந்தது. கடல் அலை கரையில் எவ்வளவு தூரம் அலை கூட்டங்கள் வந்தாலும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தது. மத்திய அரசின் கடற்கரை மேம்பாட்டு திட்டத்தில், மத்திய அதிகாரிகள் உருவாக்கிய திட்டத்தின்படி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மணல் பாங்கான பகுதியில் மக்கள் புனித நீராடிய பகுதியில் மண்பரப்பு பகுதியில் கருங்கல்லால் சப்பாத்து போன்ற பகுதியை உருவாக்கினார்கள். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற்றது.
கடல் மணல் பரப்பில் கல்லால் சப்பாத்து அமைக்கும் பணிக்கு, அன்றைய கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் பணம் ஒதுக்கப்பட்டது. மணல் பரப்பில் சப்பாத்து அமைத்தால், எப்போதும் அலை அடித்துக்கொண்டி ருக்கும் பகுதியில் பாசி படியும், இதனால் கடலில் நீராடுபவர்கள் "கால்" வழுக்கி கீழே விழும் நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கையை மத்திய அரசின் அதிகாரிகளிடம் தெரிவித்தபோது அதனை அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கொரோனா காலத்தில் இந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டது.முக்கடல் சங்கமம் கடல் பரப்பில் சப்பாத்து பகுதியில் நீராடிய பலரும் கால் வழுக்கி சப்பாத்து பகுதியிலே கீழே விழுந்ததில் பலருக்கும் தலையில் அடிபட்டு உள்ளது. காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்வதும். பின்னர் இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புவதும் ஒரு தொடர் கதையாக நடந்து வருகிறது.2 வட மாநிலத்தவர் சப்பாத்து பகுதியில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலமான காயம் ஏற்பட்டு பலியாகினர்.
இந்நிலையில் தற்போது சபரிமலை சீசன் தொடங்கியதையடுத்து கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்கள் அதிகமாக வரும் கால கட்டத்தில் அனைத்து அய்யப்ப பக்தர்களும் கடலில் புனித நீராடும் நிலையில் அய்யப்ப பக்தர்கள் மட்டும் அல்லாது, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.மேலும் படித்துறையில் பாசி படிந்துள்ள பகுதியை முழுவதுமாக அகற்றி விட்டு மண் பரப்பு பகுதியை மீண்டும் உருவாக்கிட நடவடிக்கை எடுக்க உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- வாடிக்கையாளர்கள் அவதி
- ஏ.டி.எம். கடந்த 4 மாதங்களாக செயல்படாத நிலையில் உள்ளது.
திருவட்டார்:
திருவட்டார் அருகே புத்தன்கடை பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இதன் அருகில் பள்ளிகூடம், பெட்ரோல் பங்க், தனியார் ஆஸ்பத்திரி ஆகியவை செயல்பட்டு வரு கின்றன. இதனால் எப்போதும் வாடிக்கை யாளர்கள் அதிக அளவில் இங்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த ஏ.டி.எம். கடந்த 4 மாதங்களாக செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சம்மந்தப்பட்ட வங்கிக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த வங்கி வாடிக்கையாளர்கள் வேறு வங்கி ஏ.டி.எம்.களை நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட வங்கி உடனே நடவடிக்கை எடுத்து செயல்படாமல் இருக்கும் ஏ.டி.எம்.யை செயல்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோர்ட்டு தீர்ப்பு
- குளச்சல் போலீசார் அஜ்மல்கான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
குளச்சல், நவ.18-
குளச்சல் அருகே உள்ள கோடிமுனையை சேர்ந்த வர் ஞானப்பிரகாசம் (வயது 80). இவர் கடந்த 2010 ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந்தேதி நடந்து குளச்சல் வந்து விட்டு இரவு வீட் டிற்கு திரும்பி சென்றார். சைமன் காலனி பாலம் அருகில் குறும்பனை சாலை யில் நடந்து செல்லும்போது, குறும்பனையிலிருந்து குளச்சல் நோக்கி வந்து கொண்டிருந்த கொம்பன் விளாகத்தை சேர்ந்த லாரி டிரைவர் அஜ்மல்கான் (33) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் ஞானப்பிரகாசம் மீது மோதி யது. படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். மறுநாள் சிகிச்சை பலனின்றி ஞானப்பிர காசம் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து குளச்சல் போலீசார் அஜ்மல்கான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு இரணியல் ஜே.எம்.கோர்ட்டில் கடந்த 13 வருடமாக நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி அமீர்தீன், அஜ்மல்கானுக்கு 2 வருடம் சிறைத்தண்டனை யும், ரூ.10 ஆயிரம் அபராத மும் விதித்து தீர்ப்பு அளித் தார்.
- பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை
- பவித்ர உற்சவம் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளா கத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் பவித்ர உற்சவம் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இந்த திருவிழா 25-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
இந்த பவித்ர உற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் ஆகம ஆலோச கர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவி லில் உள்ள 7 அர்ச்சகர்கள் நடத்துகிறார்கள். பவித்ர உற்சவம் நடப்பதற்கு முன்பு கோவிலில் ஆழ்வார் திரு மஞ்சனம் நிகழ்ச்சி நடை பெறுவது வழக்கம். அதன்படி நாளை மறுநாள் (20-ந்தேதி) ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடக்கிறது. இதை யொட்டி அன்றைய தினம் காலை 6 மணி முதல் 8 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுகிறது. இந்த 2 மணி நேரம் பக்தர்கள் கோவி லுக்குள் தரிச னத்துக்கு செல்ல அனும திக்கப்பட மாட்டார்கள். இந்த தகவலை கன்னியா குமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி தெரிவித்து உள்ளார்.
- குழந்தை திருமணம் செய்து மீட்கப்பட்டவர்
- நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் காதலித்து வந்தார்.
நாகர்கோவில்:
சுசீந்திரம் மேலகிருஷ்ணன் புதூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமியை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் காதலித்து வந்தார். பெற்றோர் விருப்பத்துடன் கடந்த ஜூலை மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சிறுமிக்கு 18 வயது நிரம்பாமல் திருமணம் நடைபெற்றதாக கூறி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி விசாரணை மேற்கொண்டார். அப்போது 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் செய்து கொடுத்த தால் திருமணம் செய்து கொண்ட வாலிபர் மற்றும் சிறுமியின் தாயார், வாலிபரின் தந்தை ஆகியோர் மீது கன்னியாகுமரி மகளிர் போலீசில் சமூகநலத்துறை அதிகாரி புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமி இருளப்ப புரத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வல்லன் குமாரன் விளையில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிறுமி மாலையில் காப்பகத்திற்கு திரும்பவில்லை. இதையடுத்து சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து காப்பக கண்காணிப்பாளர் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
- பயணிகள் வலியுறுத்தல்
- புதிய நிறுத்தங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
நாகர்கோவில், நவ.18-
நெல்லையில் இருந்து திருச்சிக்கு இன்டர்சிட்டி ரெயில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந்தேதி முதல் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலை குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது. கடும் போராட்டத்தின் பலனாக 5 ஆண்டு கள் கழித்து 2017-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி முதல் நாகர்கோவில் டவுண் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிப்பு செய்யும் போது நாகர்கோவில் டவுண் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களில் முதல் நிரந்தர நிறுத்தம் அனுமதிக்கப் பட்டது. இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் குறைந்த பட்சம் தற்காலிக நிறுத்தம் கூட கொடுக்கப்படவில்லை. இரணியல் ரெயில் நிலை யத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் நாகர்கோவில் ரெயில் நிலையமும், மறு மார்க்கம் 15 கி.மீ. தொலைவில் குழித்துறை ரெயில் நிலையமும் அமைந்துள்ளது.
இந்த காலகட்டங்களில் குமரி மாவட்டத்திலிருந்து மத்திய அமைச்சர் இருந்தும் இந்த நிறுத்தம் ரெயில்வே அதிகாரிகளால் அனு மதிக்கப்படவில்லை. திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில் அறிவித்து இயக்கும் போது இந்த ரெயில் இயங்கும் 456 கி.மீ. தூரத்தில் திருச்சி முதல் மதுரை வரை உள்ள 156 கி.மீ. மட்டுமே எந்த வித கிராசிங் இல்லாமல் இயங்கும் இருவழிப்பாதை யாக இருந்து வந்தது. மீதமுள்ள மதுரை முதல் திருவனந்தபுரம் வரை உள்ள 300 கி.மீ. தூரம் ஒரு வழிபாதையாக இருந்த காரணத்தால் கிரா சிங்குக்காக வேண்டி அதிக அளவில் இந்த ரெயில் பல்வேறு ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு வந்தது. இதனால் புதிய நிறுத்தங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இவ்வாறு நிறுத்தம் அனுமதி கொடுத்தால் இந்த ரெயில் சூப்பர் பாஸ்ட் என்ற அந்தஸ்தை இழந்து விடும் என்ற காரணத்துக்காக ரெயில்வே துறை மறுத்து வந்தது.
தற்போது நிலமை மாற்றம் பெற்று மதுரை முதல் நாகர்கோவில் வரை இருவழிபாதை பணிகள் 98 சதவீத பணிகள் முடிந்து விட்டது. மீதமுள்ள பகுதி கள் இந்த 2 மாதத்திற்குள் முடிவு பெற்றுவிடும். மீத முள்ள பணிகளும் முடிவு பெற்றுவிட்டால் திருச்சியில் இருந்து புறப்படும் இந்த ரெயில் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் வரும் வரை மறுமார்க்கமாக வரும் எந்த ஒரு ரெயிலுக்கும் கிராசிங் வேண்டி நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இந்த ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த ரெயிலுக்கு இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்க வேண்டும் என்று கல்குளம் தாலுகாவை சேர்ந்த பயணி கள் கோரிக்கை விடுக்கின்ற னர். கன்னியாகுமரி மாவட்டம் அதிக மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த மாவட்டம் ஆகையால் அடுத்த ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தொலைவை பார்க்க கூடாது. இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டிருந்தால் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில் 3 பிரிவாக பயணிகள் பயணம் செய்ய எளிதாக இருக்கும். ரெயில்வேத் துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று பயணி கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.






