search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் ஆவின் பால் பண்ணையில் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    நாகர்கோவில் ஆவின் பால் பண்ணையில் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டுத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்
    • கறவை மாடு கடன் பால் உற்பத்தி நிலையங்களை தரமான பால் சங்கத்திற்கு கடன்கள் வழங்க அறிவுறுத்தினார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கே.பி.ரோட்டில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டு துறை இயக்குநர் வினித் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    தினமும் பால் கொள் முதல், பால் பாக்கெட் விற்பனை சரிவர நடை பெறுகிறதா என்றும், பால் உப பொருட்கள், பால் கோவா, தயிர், மோர், குல்பி, சாக்லேட் போன்றவை உரிய முறையில் தயாரிக்கப் படுகிறதா என ஒவ்வொரு பிரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள். பால் கொள்முதல் அதிகரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    உடனடியாக பால் உற்பத்தி அதிகரிக்க கறவை மாடு கடன் பெற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இலக்கினை அடைய வேண்டும் என்று எடுத்து ரைத்தார். பால் பண்ணை யில் உள்கட்டமைப்புகளில் சில மாற்றங்கள் செய்திடவும் ஒவ்வொரு பிரிவிலும் பணிகள் ஒரே சீரான முறை யில் உரிய பால் பண்ணை யின் அமைப்பின்படி செயல் படுத்த அறிவுறுத்தினார்.

    பால் உற்பத்தி அதிக ரிக்கவும், பால் கொள்முதல் செய்வதே உறுதிப்படுத்தி செயல்படுத்திடவும், பொது மக்களுக்கு பால் பாக்கெட் மற்றும் பால் உபப்பொ ருட்கள் தங்கு தடையின்றி அனைத்து பகுதியிலும் கிடைத்திட அறிவுறுத்தினார். பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு கடன் பால் உற்பத்தி நிலையங்களை தரமான பால் சங்கத்திற்கு கடன்கள் வழங்க அறிவுறுத்தினார்.

    ஆவின் பொது மேலாளர் அருணகிரிநாதன், துணை பதிவாளர் சைமன் சார்லஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×