என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • சென்னைக்கு வரும் அனைத்தும் விமானங்களும் சரியான நேரத்தில் வந்து தரை இறங்குகின்றது.
    • பெருமளவு பயணிகள் தாமதமாக வருவதால் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

    ஆலந்தூர்:

    சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், சென்னை விமான நிலையத்திற்கு விமான பயணிகள், விமானங்களை இயக்கும் விமானிகள், விமான ஊழியர்கள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதில் தாமதமாகி வருகின்றன.

    சென்னையில் இருந்து பிராங்க்பர்ட் செல்லும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், பிரான்ஸ் செல்லும் ஏர் பிரான்ஸ் விமானம் மற்றும் துபாய் தோகா, சார்ஜா, கத்தார், இலங்கை, கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்பட 12 சர்வதேச விமானங்கள், மும்பை, டெல்லி, அந்தமான், கொல்கத்தா, விஜயவாடா, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு செல்லும் 16 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 28 விமானங்கள் 30 நிமிடங்களில் இருந்து, ஒரு மணி நேரம் வரை புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

    ஆனால் சென்னைக்கு வரும் அனைத்தும் விமானங்களும் சரியான நேரத்தில் வந்து தரை இறங்குகின்றது.

    சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் தாமதத்திற்கு காரணம் விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், விமான பணிப்பெண்கள் போன்ற ஊழியர்கள் அனைவரும் சென்னை நகரில் உள்ள ஹோட்டல்களில் இருந்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக அவர்கள் விமான நிலையத்துக்கு தாமதமாக வருகின்றனர். அதேபோல் விமான பயணிகள் வருகையிலும் தாமதம் ஏற்படுகின்றது. பெருமளவு பயணிகள் தாமதமாக வருவதால் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் பயணிகளின் உடைமைகளை விமானத்தில் கொண்டு போய் ஏற்றுவது, பயணிகளுக்கு தேவையான உணவுகளைக் கொண்டு சென்று விமானங்களில் ஏற்றுவது, விமானங்கள் பராமரிப்பு போன்ற பணிகளிலும் தாமதம் ஏற்படுகிறது.

    • தமிழகத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    • பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கால்பந்து வீராங்கனை மாணவிக்கு சரியான மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிங்கப்பூரில் நடந்த உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார்.

    சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சிங்கப்பூரில் உலக சுகாதார அமைப்பின் மாநாடு நடந்தது. இதில் உலக அளவில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மருத்துவப் பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் உட்பட பல்வேறு நிபுணர்கள் கலந்து கொண்டு சுகாதார நடவடிக்கைகள் குறித்து பேசினார்கள்.

    இந்த மாநாட்டில் கடந்த 8-ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை தொடங்கி வைத்து, கொரோனா பேரிடர் கால தடுப்பு நடவடிக்கைகள், தொற்று நோய்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும், பல்வேறு வைரஸ் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

    இத்தகைய மாநாட்டில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதோடு, தமிழகத்தின் கருத்துகளும் சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டது. பேரிடர், புதிய வைரஸ் போன்றவைகள் பரவும் சூழ்நிலையில் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

    தமிழகத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொசு மருந்து அடித்தல், புகை அடித்தல் போன்றவைகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை மாநகராட்சி, மலேரியா ஒழிப்பு துறை ஆயிரக்கணக்கான ஊழியர்களை வைத்து அப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. மழை காரணமாக கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா பரவுகின்றன. அந்த நோய்கள் பரவுவதை தடுப்பதற்காக தான், மக்களுக்கு கொசு வலை வழங்கப்படுகிறது. இதை குறிப்பிட்ட சதவீதத்தினர் கேலி செய்கின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் வரவேற்கின்றனர்.

    பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கால்பந்து வீராங்கனை மாணவிக்கு சரியான மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக தான் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு, கல்லூரி மாணவியை அனுப்பி வைத்ததாக மருத்துவமனை அதிகாரிகள் என்னிடம் கூறினர். அரசு மருத்துவமனைகளில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், தவறான சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டதாக கருத்துக்களை பரப்புகின்றனர். இது சரியானது அல்ல.

    மருத்துவர்கள் ஆத்மார்த்தமாகத்தான் பணியாற்றுவார்கள். யாரையும் பாதிக்கும் விதத்தில் பணியாற்ற மாட்டார்கள்.

    இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகாரையும் ஒதுக்கி தள்ளாமல், அதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு
    • பள்ளி, கல்லூரிகள் விடுமுறை தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    சென்னை:

    வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதால் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    • காஞ்சிபுரம் மாநகர பகுதிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பகுதியிலிருந்தும், ஓரிக்கை பாலாறு பகுதிகளில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் ஒரு வார காலமாக கலந்து வருவதால் இந்தப் பகுதியில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாண்டுகணீஸ்வரர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகன் சதிஷ் குமார். (21) மனநலம் பாதிக்கப்பட்டவர்.

    சதீஷ் குமாருக்கு நேற்று அதிகாலையில் இருந்து வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டதால் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் அவர் இறந்ததாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த வள்ளி -தமிழரசன் தம்பதியின் 10 மாத குழந்தை இமித்திரா மற்றும் 4 வயது சிறுவன் விஷ்ணுவர்தன் ஆகியோர்களுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தினர். கலந்து கொண்ட 45 நபர்களில் ஓபி குளம் பள்ளத்தெருவை சேர்ந்த விஜி (வயது 35), மோனிஸ்ரீ (9), பிரியதர்ஷினி (14) ஆகிய 3 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கண்டறியப்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரியாராஜ் கூறியதாவது:- மாண்டுகணீஸ்வரர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமாருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உடல் பலவீனமடைந்து குறைந்த ரத்த அளவு உருவாகி அதிர்ச்சி ஏற்பட்டது. இது மிகவும் கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான நீரிழப்பு காரணமாக ஏற்படும் சிக்கல்களில் ஒன்றாகும். குறைந்த ரத்த அளவு ரத்த அழுத்தம் குறைவதற்கும் உடலில் ஆக்சிஜனின் அளவு குறைவதற்கும் வழிவகுக்கும். இதனால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இதுமட்டுமின்றி ரைஸ்மில்லில் பணிபுரியும் திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை சேர்ந்த இருளர் இன பெண் இரையரசி (வயது 20) உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற தகவல் பரவியது.

    மேலும், அதே பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களையும் கண்காணித்து வருகிறோம். குடிநீர் பிரச்சினையால் இந்த வயிற்றுப் போக்கு ஏற்பட்டதுபோல் தெரியவில்லை. குடிநீர் பிரச்சினையால் வயிற்று போக்கு ஏற்பட்டிருந்தால் அந்தப் பகுதியில் வசிக்கும் பலருக்கும் பாதிப்பு இருக்கும். இவர்கள் சாப்பிட்ட உணவில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

    அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே நாங்கள் மருத்துவ முகாம் நடத்தினோம். தண்ணீரில் கூடுதலாக ஒரு சதவீதம் குளோரின் கலந்து விநியோகிக்கும்படி வலியுறுத்தியுள்ளோம். தண்ணீரையும் ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சிபுரம் மாநகர பகுதிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பகுதியிலிருந்தும், ஓரிக்கை பாலாறு பகுதிகளில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் ஒரு வார காலமாக கலந்து வருவதால் இந்தப் பகுதியில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • உரிய பாதுகாப்பின்றி நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் பறிப்போகும் உயிர்.
    • கிடப்பில் போடப்பட்ட மழை நீர் வடிகாRain Drainல் பணியால் விபரீதம்.

    காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக அப்பகுதி சேறும் சகதியுமாக, பள்ளத்தில் மழை நீர் தேங்கியும் இருந்துள்ளது. மேலும், இந்த பணி கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், அவ்வழியாக சென்ற தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி (42) என்பவர் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து பலியாகி உள்ளார்.

    உரிய பாதுகாப்பின்றி நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் உயிர் பலி அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்களில் பாறை மணல் மற்றும் கற்கள் கொண்டு செல்லப்படுகிறது.
    • காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் அதிகாலை முதல் திடீர் தணிக்கை மேற்கொண்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அதிக கல் குவாரிகள் இயங்கி வருவதால் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்களில் பாறை மணல் மற்றும் கற்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் விதிகளை மீறி கனரக வாகனங்கள் செயல்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் அதிகாலை முதல் திடீர் தணிக்கை மேற்கொண்டார்.

    அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு ரூ.3 லட்சத்து 66 ஆயிரம், ஒரு தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை கொண்டு செல்லும் வாகனத்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியும் அனுமதிக்குப்புறம்பாக காஞ்சிபுரத்தில் இயக்கியதற்கும், இலகு ரக சரக்கு வாகனம் ஒன்று தகுதிச்சான்று இல்லாமல் சென்றதற்கும் சிறை பிடித்து வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தும் இதர குற்றங்களுக்காக ரூ.64 ஆயிரத்து 500 அபராதம் மற்றும் ரூ.30 ஆயிரம் சாலை வரி என மொத்தம் ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

    • நவம்பர் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா மிகக் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலர் டாக்டர்.எஸ். சதிஷ்குமார் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா மிகக் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளரும் விழாக்குழு தலைவருமான பா. ஜெயஸ்ரீ மற்றும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநரும் விழாக்குழு துணைத்தலைவருமான மு.முருகன் தலைமை தாங்கினார். இதில் காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளர் த. சுவாதி, விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் கே. சத்தியநாராயணன், கைத்தறித்துறையின் கைத்தறி அலுவலர் கோ. மோகன்ராம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலர் டாக்டர்.எஸ். சதிஷ்குமார் கலந்து கொண்டனர்.

    • 6 சிறுமிகள், சிறுவனை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சாலட்சுமி தலைமையிலான போலீசார் மீட்டனர்.
    • குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம் பஸ் நிலையம், இரட்டை மண்டபம், மூங்கில் மண்டபம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பிச்சை எடுத்து வந்த 6 சிறுமிகள், சிறுவனை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சாலட்சுமி தலைமையிலான போலீசார் மீட்டனர்.

    பின்னர் அவர்களை காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பெண் குழந்தைகள் காப்பகத்திலும், கிருகம்பாக்கத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • காரப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
    • தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர் காலிப்பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.

    காஞ்சிபுரம் அருகே உள்ள காரப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய செயலாளர்,பொருளாளர் தேர்வு நடத்தப்பட்டது. தேர்தல் அலுவலர்களாக சேலத்தை சேர்ந்த ஆ.மூர்த்தி,பெரம்பலூரை சேர்ந்த ஆர்.வாசுதேவன் ஆகியோர் செயல்பட்டனர்.

    கூட்டத்தில் சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவராக நாமக்கல்லை சேர்ந்த எஸ்.கே.வேல்,செயலாளராக காஞ்சிபுரத்தை சேர்ந்த பா.கார்த்திகேயன்,பொருளாளராக அம்பத்தூரை சேர்ந்த க.முரளிபாபு ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர் காலிப்பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் சங்க துணைத்தலைவர்கள் தா.வித்யாசங்கர்,கா.பு.சிவக்குமார், வழக்குரைஞர்கள் அ.முகுந்தன், ர.தினேஷ்குமார் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • எறையூர் ஊராட்சியில் உள்ள கெங்கையம்மன் கோவில் தெரு பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
    • புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒரகடம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எறையூர் ஊராட்சியில் உள்ள கெங்கையம்மன் கோவில் தெரு பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வரும் குடிநீரை இப்பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து கான்கிரட் தூண்களின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து எலும்பு கூடுபோல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்போது இடிந்து விழுந்து பேராபத்தை ஏற்படுத்துமோ என்று அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

    பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனவும், மேலும் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அபாயகரமான நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை ஊராட்சி நிர்வாகம், வட்டார அலுவலர்கள் உடனடியாக இடித்து அகற்றி புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிறப்பு முகாம் வருகின்ற 12, 13, 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகின்றது.
    • வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள், தொகுதி மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8-ம் பதிவு செய்து வாக்குச்சாவடிகளில் அளிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்று வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியன்று 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் இதுவரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    அதன்படி பெயர் சேர்க்க படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள், தொகுதி மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8-ம் பதிவு செய்தும் வாக்குச்சாவடிகளில் அளிக்கலாம்.

    இதற்கான முகாம் பகுதிகளில் அமைந்துள்ள கல்வி நிலையங்களில் வருகின்ற 12, 13,26 மற்றும் 27-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகின்றது. இதையொட்டி, முகாம்களுக்கு நேரில் வந்து மேற்கூரிய உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய சான்று ஆவணங்களுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும் இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை காஞ்சிபுரம் கலெக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • 4 நண்பர்களுடன் சேர்ந்து ரித்தீஷ் ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து புகை பிடிக்க சென்றார்.
    • தண்டவாளம் அருகே உள்ள கருங்கல் ஜல்லியில் ரித்தீஷ் விழுந்ததில் பின் தலையில் கருங்கற்கள் குத்தி ரித்தீஷ் துடிதுடித்து இறந்து போனார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த திருக்காளிமேடு பகுதியில் வசிப்பவர் காளிதாஸ். இவரது மகன் ரித்தீஷ் (வயது 14). 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு 4 நண்பர்களுடன் சேர்ந்து ரித்தீஷ் ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து புகை பிடிக்க சென்றார்.

    தண்டவாளத்தை தாண்டும் போது கால் தவறி கீழே விழுந்தார். தண்டவாளம் அருகே உள்ள கருங்கல் ஜல்லியில் ரித்தீஷ் விழுந்ததில் பின் தலையில் கருங்கற்கள் குத்தி சம்பவ இடத்திலேயே ரித்தீஷ் துடிதுடித்து இறந்து போனார்.

    ×