என் மலர்
காஞ்சிபுரம்
- பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் சேர்ந்த கழிவு நீரால் சிலர் சளி, தலைவலி, காய்ச்சல், வாந்தி-பேதி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- ஒவ்வொரு பருவமழை காலத்திலும் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 23-வது வார்டு நேதாஜி தெருவில் கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இந்த பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் மாநகராட்சிக்கு சென்று கழிவுநீரை அகற்றுவது தொடர்பாக புகார் மனு அளித்தனர்.
சுமார் 4 மாதங்கள் கடந்த பின்பும் இந்த பகுதியில் வெளியேறும் கழிவு நீரை அகற்ற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் சேர்ந்த கழிவு நீரால் சிலர் சளி, தலைவலி, காய்ச்சல், வாந்தி-பேதி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 15-வது வார்டு பல்லவர் மேடு அருந்ததி பாளையம் என்ற பகுதியில் மழை நீர் தேங்கி வெளியேறாமல் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவமழை காலத்திலும் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் தேங்கும் மழை தண்ணீரை மாநகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- மரம் மின்சார வயர் மீது விழுந்ததால் மின் வயரும் மரத்தோடு சேர்ந்து சாலையின் குறுக்கே கீழே விழுந்துள்ளது.
- ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியில் ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக ராட்சத மரம் வேருடன் சாய்ந்து முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இந்த மரம் மின்சார வயர் மீது விழுந்ததால் மின் வயரும் மரத்தோடு சேர்ந்து சாலையின் குறுக்கே கீழே விழுந்துள்ளது. இதனால் ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்துக் கிடந்தன. மேலும் திருவள்ளூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாததால் அவதியுற்று வருகின்றனர். சாலையின் குறுக்கே விழுந்துள்ள மரத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
- காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- மின் மோட்டாரை மாநகராட்சி ஊழியர்கள் இயக்கியபோது மழை நீரை உறிஞ்சும் பகுதியிலிருந்து சரியாக மழை நீரை உறிஞ்ச முடியாததால் அதனுடன் மாநகராட்சி ஊழியர்கள் சில நிமிடங்கள் போராடினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதலே கன மழையானது பெய்ய தொடங்கி அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் எம்.ஆர்த்தி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியிலுள்ள லிங்கப்பன் பாளையம் தெருவில் காலையிலிருந்து பெய்த மழையினால் சாலையில் தேங்கி நிற்கும் மழை வெள்ள நீரை சிறிய மின் மோட்டார் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றும் பணியினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மின் மோட்டாரை மாநகராட்சி ஊழியர்கள் இயக்கியபோது மழை நீரை உறிஞ்சும் பகுதியிலிருந்து சரியாக மழை நீரை உறிஞ்ச முடியாததால் அதனுடன் மாநகராட்சி ஊழியர்கள் சில நிமிடங்கள் போராடினர்.
பின்னர் ஒரு வழியாக மோட்டாரின் ஒரு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த குழாய் மூலம் மழை வெள்ள நீரானது உறிஞ்சப்பட்டு மற்றொரு நீண்ட குழாய் மூலம் பக்கத்து தெருவிற்கு வெளியேறுவதற்கு முன்னதாகவே, குழாயில் இருந்த ஓட்டை வழியாக மழை வெள்ள நீரானது பீச்சி அடித்துக்கொண்டு வெளியேறி சாலையில் விழுந்தோடி மீண்டும் மழை நீர் தேங்கி நிற்கும் இடத்திற்கே வந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கலெக்டர், இவ்வாறு இருந்தால் மழை நீர் எவ்வாறு வெளியேறும், மின் மோட்டாரின் இயக்கத்தை நிறுத்தச் சொல்லுங்கள்.
பணியினை சரியாக மேற்கொள்ளுங்கள் என மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து உடனடியாக மின் மோட்டார் நிறுத்தப்பட்டது.
மாவட்ட கலெக்டரின் திடீர் ஆய்வின்போது மழை நீர் வெளியேற்றும் பணியினை மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாகவே கையாண்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
- மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் டைட்டல் மேத்தா.
- பயணிகள் விமானத்தில், அவருடைய சொந்த ஊரான புனே செல்ல விருந்தாா்.
ஆலந்தூர்:
மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் டைட்டல் மேத்தா (வயது 61). இவர் மங்களூரில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்தார்.
அதன் பின்பு அவா், இன்று அதிகாலை 3.15 மணிக்கு, சென்னையில் இருந்து புனே செல்லும் மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், அவருடைய சொந்த ஊரான புனே செல்ல விருந்தாா். அதிகாலை 2.45 மணிக்கு திடீரென அவர் மாரடைப்பால் மயங்கி கீழே விழுந்து இறந்தார்.
- காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
- 138 ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழ் நிறைந்துள்ளதாக பொதுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 89 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
98 ஏரிகள் 75 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை, 256 ஏரிகள் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை, 328 ஏரிகள் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை, 138 ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழ் நிறைந்துள்ளதாக பொதுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இடி, மின்னலின்போது வெட்டவெளியில் நிற்கக்கூடாது.
- மின்பெட்டி அருகில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது அதன் அருகில் செல்லக்கூடாது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மழைகாலத்தில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்லக்கூடாது. மழையாலும் பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்கம்பி அருகில் செல்லக்கூடாது. அறுந்து கிடக்கும் மின்கம்பியை தொடாதீர்கள். அவ்வாறு அறுந்து கிடந்தால் அதுபற்றி உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். மின்பெட்டி அருகில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது அதன் அருகில் செல்லக்கூடாது. அவ்வாறு தேங்கி இருந்தால் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இடி, மின்னலின்போது வெட்டவெளியில் நிற்கக்கூடாது. கான்கிரீட் கட்டிடம், வீடுகளிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடைய வேண்டும். இடி, மின்னலின்போது மரத்தின் அடியிலோ பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழோ நிற்க வேண்டாம்.
தஞ்சமடைய எதுவும் இல்லாத நிலையில் மின்கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதியை தேர்வு செய்ய வேண்டும். இடி, மின்னலின்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகல வேண்டும். டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது.
திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் நிற்கக்கூடாது. ஸ்டேகம்பி மற்றும் மின் கம்பங்களில் கொடி கயிறு கட்டக்கூடாது. ஆடு, மாடு போன்ற விலங்குகளையும் கட்டக்கூடாது. மின்தடை புகார்களுக்கு 9498794987 என்ற 24 மணி நேரமும் செயல்படும் செல்போன் சேவையை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக் கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னைக்கு வரும் அனைத்தும் விமானங்களும் சரியான நேரத்தில் வந்து தரை இறங்குகின்றது.
- பெருமளவு பயணிகள் தாமதமாக வருவதால் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
ஆலந்தூர்:
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், சென்னை விமான நிலையத்திற்கு விமான பயணிகள், விமானங்களை இயக்கும் விமானிகள், விமான ஊழியர்கள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதில் தாமதமாகி வருகின்றன.
சென்னையில் இருந்து பிராங்க்பர்ட் செல்லும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், பிரான்ஸ் செல்லும் ஏர் பிரான்ஸ் விமானம் மற்றும் துபாய் தோகா, சார்ஜா, கத்தார், இலங்கை, கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்பட 12 சர்வதேச விமானங்கள், மும்பை, டெல்லி, அந்தமான், கொல்கத்தா, விஜயவாடா, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு செல்லும் 16 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 28 விமானங்கள் 30 நிமிடங்களில் இருந்து, ஒரு மணி நேரம் வரை புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனால் சென்னைக்கு வரும் அனைத்தும் விமானங்களும் சரியான நேரத்தில் வந்து தரை இறங்குகின்றது.
சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் தாமதத்திற்கு காரணம் விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், விமான பணிப்பெண்கள் போன்ற ஊழியர்கள் அனைவரும் சென்னை நகரில் உள்ள ஹோட்டல்களில் இருந்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக அவர்கள் விமான நிலையத்துக்கு தாமதமாக வருகின்றனர். அதேபோல் விமான பயணிகள் வருகையிலும் தாமதம் ஏற்படுகின்றது. பெருமளவு பயணிகள் தாமதமாக வருவதால் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் பயணிகளின் உடைமைகளை விமானத்தில் கொண்டு போய் ஏற்றுவது, பயணிகளுக்கு தேவையான உணவுகளைக் கொண்டு சென்று விமானங்களில் ஏற்றுவது, விமானங்கள் பராமரிப்பு போன்ற பணிகளிலும் தாமதம் ஏற்படுகிறது.
- தமிழகத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கால்பந்து வீராங்கனை மாணவிக்கு சரியான மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர்:
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிங்கப்பூரில் நடந்த உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சிங்கப்பூரில் உலக சுகாதார அமைப்பின் மாநாடு நடந்தது. இதில் உலக அளவில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மருத்துவப் பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் உட்பட பல்வேறு நிபுணர்கள் கலந்து கொண்டு சுகாதார நடவடிக்கைகள் குறித்து பேசினார்கள்.
இந்த மாநாட்டில் கடந்த 8-ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை தொடங்கி வைத்து, கொரோனா பேரிடர் கால தடுப்பு நடவடிக்கைகள், தொற்று நோய்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும், பல்வேறு வைரஸ் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இத்தகைய மாநாட்டில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதோடு, தமிழகத்தின் கருத்துகளும் சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டது. பேரிடர், புதிய வைரஸ் போன்றவைகள் பரவும் சூழ்நிலையில் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொசு மருந்து அடித்தல், புகை அடித்தல் போன்றவைகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சி, மலேரியா ஒழிப்பு துறை ஆயிரக்கணக்கான ஊழியர்களை வைத்து அப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. மழை காரணமாக கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா பரவுகின்றன. அந்த நோய்கள் பரவுவதை தடுப்பதற்காக தான், மக்களுக்கு கொசு வலை வழங்கப்படுகிறது. இதை குறிப்பிட்ட சதவீதத்தினர் கேலி செய்கின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் வரவேற்கின்றனர்.
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கால்பந்து வீராங்கனை மாணவிக்கு சரியான மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக தான் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு, கல்லூரி மாணவியை அனுப்பி வைத்ததாக மருத்துவமனை அதிகாரிகள் என்னிடம் கூறினர். அரசு மருத்துவமனைகளில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், தவறான சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டதாக கருத்துக்களை பரப்புகின்றனர். இது சரியானது அல்ல.
மருத்துவர்கள் ஆத்மார்த்தமாகத்தான் பணியாற்றுவார்கள். யாரையும் பாதிக்கும் விதத்தில் பணியாற்ற மாட்டார்கள்.
இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகாரையும் ஒதுக்கி தள்ளாமல், அதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு
- பள்ளி, கல்லூரிகள் விடுமுறை தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சென்னை:
வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதால் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
- காஞ்சிபுரம் மாநகர பகுதிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பகுதியிலிருந்தும், ஓரிக்கை பாலாறு பகுதிகளில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் ஒரு வார காலமாக கலந்து வருவதால் இந்தப் பகுதியில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாண்டுகணீஸ்வரர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகன் சதிஷ் குமார். (21) மனநலம் பாதிக்கப்பட்டவர்.
சதீஷ் குமாருக்கு நேற்று அதிகாலையில் இருந்து வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டதால் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் அவர் இறந்ததாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த வள்ளி -தமிழரசன் தம்பதியின் 10 மாத குழந்தை இமித்திரா மற்றும் 4 வயது சிறுவன் விஷ்ணுவர்தன் ஆகியோர்களுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தினர். கலந்து கொண்ட 45 நபர்களில் ஓபி குளம் பள்ளத்தெருவை சேர்ந்த விஜி (வயது 35), மோனிஸ்ரீ (9), பிரியதர்ஷினி (14) ஆகிய 3 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கண்டறியப்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரியாராஜ் கூறியதாவது:- மாண்டுகணீஸ்வரர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமாருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உடல் பலவீனமடைந்து குறைந்த ரத்த அளவு உருவாகி அதிர்ச்சி ஏற்பட்டது. இது மிகவும் கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான நீரிழப்பு காரணமாக ஏற்படும் சிக்கல்களில் ஒன்றாகும். குறைந்த ரத்த அளவு ரத்த அழுத்தம் குறைவதற்கும் உடலில் ஆக்சிஜனின் அளவு குறைவதற்கும் வழிவகுக்கும். இதனால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இதுமட்டுமின்றி ரைஸ்மில்லில் பணிபுரியும் திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை சேர்ந்த இருளர் இன பெண் இரையரசி (வயது 20) உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற தகவல் பரவியது.
மேலும், அதே பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களையும் கண்காணித்து வருகிறோம். குடிநீர் பிரச்சினையால் இந்த வயிற்றுப் போக்கு ஏற்பட்டதுபோல் தெரியவில்லை. குடிநீர் பிரச்சினையால் வயிற்று போக்கு ஏற்பட்டிருந்தால் அந்தப் பகுதியில் வசிக்கும் பலருக்கும் பாதிப்பு இருக்கும். இவர்கள் சாப்பிட்ட உணவில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே நாங்கள் மருத்துவ முகாம் நடத்தினோம். தண்ணீரில் கூடுதலாக ஒரு சதவீதம் குளோரின் கலந்து விநியோகிக்கும்படி வலியுறுத்தியுள்ளோம். தண்ணீரையும் ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாநகர பகுதிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பகுதியிலிருந்தும், ஓரிக்கை பாலாறு பகுதிகளில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் ஒரு வார காலமாக கலந்து வருவதால் இந்தப் பகுதியில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
- உரிய பாதுகாப்பின்றி நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் பறிப்போகும் உயிர்.
- கிடப்பில் போடப்பட்ட மழை நீர் வடிகாRain Drainல் பணியால் விபரீதம்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக அப்பகுதி சேறும் சகதியுமாக, பள்ளத்தில் மழை நீர் தேங்கியும் இருந்துள்ளது. மேலும், இந்த பணி கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவ்வழியாக சென்ற தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி (42) என்பவர் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து பலியாகி உள்ளார்.
உரிய பாதுகாப்பின்றி நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் உயிர் பலி அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்களில் பாறை மணல் மற்றும் கற்கள் கொண்டு செல்லப்படுகிறது.
- காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் அதிகாலை முதல் திடீர் தணிக்கை மேற்கொண்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அதிக கல் குவாரிகள் இயங்கி வருவதால் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்களில் பாறை மணல் மற்றும் கற்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் விதிகளை மீறி கனரக வாகனங்கள் செயல்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் அதிகாலை முதல் திடீர் தணிக்கை மேற்கொண்டார்.
அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு ரூ.3 லட்சத்து 66 ஆயிரம், ஒரு தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை கொண்டு செல்லும் வாகனத்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியும் அனுமதிக்குப்புறம்பாக காஞ்சிபுரத்தில் இயக்கியதற்கும், இலகு ரக சரக்கு வாகனம் ஒன்று தகுதிச்சான்று இல்லாமல் சென்றதற்கும் சிறை பிடித்து வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தும் இதர குற்றங்களுக்காக ரூ.64 ஆயிரத்து 500 அபராதம் மற்றும் ரூ.30 ஆயிரம் சாலை வரி என மொத்தம் ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.






