என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • புனித நீர் சித்ரகுப்த சுவாமி கோவில் கோபுரம் மீது ஊற்றப்பட்டது.
    • காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள நெல்லுக்கார தெருவில் பிரசித்தி பெற்ற சித்ரகுப்தர் சுவாமி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கேது தோஷம், கலத்தர தோஷம், வித்யா தோஷம், புத்திர தோஷம், நிவர்த்தியாகும் திருத்தலமாக இது விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை விமரிசையாக நடை பெற்றது. புனித நீர் சித்ரகுப்த சுவாமி கோவில் கோபுரம் மீது ஊற்றப்பட்டது. இதில் காஞ்சீபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், வெளி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்ட னர். இதனால் காஞ்சீபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    சித்ரகுப்தர்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி காஞ்சீபுரத்தில் போக்கு வரத்து மாற்றம் செய்யப் பட்டு இருந்தது. காஞ்சீபுரம் நெல்லுக்காரத் தெருவில் வாகனங்கள் செல்வதை தடுக்க காஞ்சீபுரம் டவுன் பேங்க் சந்திப்பு மற்றும் இரட்டை மண்டபம் சந்திப்பு அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல் காஞ்சீபுரம் டவுன் பேங்க் வழியாக இரட்டை மண்டபம் நோக்கி வரும் வாகனங்கள் பூக்கடைச் சத்திரம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி சாலை வழியாக திருப்பி விடப் பட்டன. இரட்டை மண்டபம் வழியாக டவுன் பேங்க் நோக்கி செல்லும் வாக னங்கள் பஸ் நிலையம் வழியாக சென்றன.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலை மையில் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகர் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் புதிதாக தபால்நிலையம் கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் அந்த இடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டும் என்பதால் அந்த இடத்தை வேறு எந்தப்பணிக்கும் ஒதுக்கக்கூடாது என கூறினார். இது குறித்து கேள்வி கேட்ட பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம், யாரும் பேசக்கூடாது, ஊராட்சி மன்றத்தலைவர் மட்டும்தான் பேசவேண்டும் என அவர் கூறியதாகத்தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஊத்துக்காடு ஊராட்சிமன்றத்தலைவர் சாவித்திரி மணிகண்டன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீலியட் சீசர், இன்ஸ்பெக்டர் பிரேசில் பிரேம் ஆனந்த் ஆகியோர் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
    • போலீசார் அவர்களிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள சிவகாஞ்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சிவகாஞ்சி போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து ஏகாம்பரபுரம் தெருவைச்சேர்ந்த ஜெயபால் (வயது57), செங்கழுநீரோடை தெருவைச்சேர்ந்த முருகன் (51) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • கும்பாபிஷேகம் 4-ந்தேதி நடக்கிறது.
    • மே 5-ந்தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரத்தில் உள்ள கேது தலமாக விளங்கும் சித்ர குப்தர் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (4-ந்தேதி) நடைபெற உள்ளது.

    இதையொட்டி கோவிலில் விக்னேஷ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் நேற்று தொடங்கியது.

    இந்தியாவிலேயே சித்ரகுப்தருக்கு என்று தனியாக சந்நிதி உள்ள ஆலயம் காஞ்சீபுரத்தில் உள்ள கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோவில். இந்த கோவிலில் வருகிற வியாழக்கிழமை (4-ந்தேதி) காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முதல் நிகழ்ச்சியாக அனுக்கை விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோ மம், லட்சுமி ஹோமம், கோ பூஜை ஆகியவை காலையிலும் பிரவேச பலி, வாஸ்து சாந்தி ஆகியவை மாலையிலும் நடைபெற்றன.

    இன்று (செவ்வாய்க் கிழமை) காலை மூர்த்தி ஹோமும், யாக சாலை அலங்காரமும், மாலையில் யாக சாலை பூஜையும் முதல் கால தீபாராதனைகளும் நடைபெறுகிறது.

    இதன் தொடர்ச்சியாக 4-ந்தேதி (வியாழக்கிழமை) காலை மகா பூர்ணாஹுதி தீபாராதனைக்குப் பிறகு காலை 9.30 மணிக்கு ராஜ கோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதையடுத்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை கர்ணகி அம்பாளுக்கும், சிதரகுப்த சவாமிக்கும் திருக்கல்யாணமும், பின்னர் சுவாமியும், அம்மனும் காஞ்சீபுரம் ராஜ வீதிகளில் வீதியுலா வருகின்றனர்.

    மறுநாள் (மே 5-ந்தேதி) சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை காஞ்சீபுரம் சரக இணை ஆணையர் வான்மதி, கோவில் செயல் அலுவலர் அமுதா, அறங்காவலர் குழுவின் தலைவர் ரகுராமன், உறுப்பினர்கள் சந்தானம், ராஜாமணி மற்றும் கோவில் அர்ச்சர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பாட்டாளிகளுக்கும், உழைப்பாளிகளுக்கும், விவசாயிகளுக்காகவும் தொடங்கப்பட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.
    • திராவிட ஆட்சி என்று சொன்னால், 55 ஆண்டுகள் கடந்தும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறது.

    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூரில் பா.ம.க. 2.0 விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி. பேசியதாவது:-

    பாட்டாளிகளுக்கும், உழைப்பாளிகளுக்கும், விவசாயிகளுக்காகவும் தொடங்கப்பட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.

    ஆனால் தமிழ்நாட்டில், திராவிட ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. திராவிட ஆட்சி என்று சொன்னால், 55 ஆண்டுகள் கடந்தும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தமிழ் நாட்டை ஆட்சி செய்து வருகிறது. மக்கள் மாற்றம் வேண்டும் என நினைக்கின்றார்கள்.

    நான் நீண்ட காலமாகவே விவாதத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறேன். திராவிட மாடல்-பாட்டாளி மாடல் விவாதத்திற்கு நான் தயார். திராவிட மாடல் என்பது முதலாளித்துவம், பாட்டாளி மாடல் என்பது விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்குமானது.

    நடந்து முடிந்த சட்ட மன்ற கூட்டத் தொடரில் முதலாளித்துவத்திற்காக ஒரு சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளது. 100 ஏக்கருக்கு மேல் தொழிற் சாலை வைத்திருப்பவர்களுக்கு, நீர் நிலைகள் ஒரு பொருட்டல்ல என்ற சிறப்பு அதிகாரத்தை இந்த சட்டம் வழங்குகிறது.

    சாதாரண மக்கள் நீர் நிலையில் ஒரு வீடு கட்ட கூடாது. ஆனால் தொழிற் சாலை அந்த இடத்தில் கட்ட லாம். இந்த சட்டம் குறித்து யாருக்கும் தெரியவில்லை. உடனடியாக தி.மு.க. அரசு இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

    மக்களுக்கு இது குறித்து எல்லாம் தெரிவது கிடையாது. 'கிரிக்கெட்', 'கிரிக்கெட்' அதே தான் பார்க்கிறார்கள். அதை பார்ப்பது தப்பு கிடையாது. ஆனால் கிரிக்கெட் வாழ்க்கை கிடை யாது.

    நானும் சி.எஸ்.கே. ஆதரவாளன் தான். டோனிக்கு விசில் போடு. ஆனால் அந்த அணியில் ஒரு தமிழர்கள் கூட இல்லாமல் இருப்பது நிச்சயம் வருத்தம்தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்லும் அரசு பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 12 மூட்டைகளில் ரேசன் அரசி கடத்தப்படுவது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்லும் அரசு பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த பஸ்சை காஞ்சிபுரம் பேட்டையில் நிறுத்தி திடீர் சோதனை செய்தனர். அப்போது அதில் 12 மூட்டைகளில் ரேசன் அரசி கடத்தப்படுவது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

    இந்த ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக பஸ்சில் இருந்த ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த தீபா, கன்னியம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் அங்கு உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
    • குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பல்லலர் மேடு, சி.எஸ்.எம்.தோப்பு தெரு பிள்ளையார்பாளையம் போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சிவகாஞ்சீ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் அங்கு உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையொட்டி, கோவிந்தம்மாள் (வயது 62), விசாலாட்சி (57) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • வேலூரில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் சித்தேரிமேடு என்ற இடத்தில் 350 ஏக்கர் நிலம் இருந்தது.
    • முத்துலட்சுமி கொல்லா சிங்கண்ண செட்டி கட்டளையின் தக்காராக கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.

    காஞ்சிபுரம்:

    உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வடக்கு வாசல் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையில் இணை ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் கொல்லா சிங்கண்ண செட்டி கட்டளை எனும் அமைப்பு செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பை அதன் முன்னோர்கள் உருவாக்கி அதில் இருந்து வரும் வருவாயில் ஒரு பகுதியை கோவில் செலவுகளுக்கும், மீதத்தை கட்டளை செலவுகளுக்கும் வைத்து கொள்ள வேண்டும் எனவும், இந்த சொத்தானது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்றும் எழுதி வைத்துள்ளனர்.

    இதன் அடிப்படையில் இந்த சொத்தானது அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையர் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

    இந்த அமைப்பின் கீழ் சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் இருந்தது.

    குறிப்பாக வேலூரில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் சித்தேரிமேடு என்ற இடத்தில் 350 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த அமைப்பின் வாரிசுரிமை பரம்பரை அறங்காவலராக சி.வி.சந்திரசேகரன் என்பவரும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் கொல்லா சிங்கண்ண செட்டி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் திருமண மண்டபம் கட்டியது மற்றும் பயணிகள் தங்கும் விடுதி கட்டியது என சட்ட விரோத செயல்களையும் செய்து வந்ததாகவும், சொத்துகளை அறநிலையத்துறைக்கு தெரியாமல் விற்க முயற்சித்திருப்பதாகவும் பல்வேறு புகார்கள் அறநிலையத்துறைக்கு வந்தது. இதனை தொடர்ந்து சந்திரசேகரை அறநிலையத்துறை இணை ஆணையர் பதவி நீக்கம் செய்ததுடன் கட்டளையின் தக்காராக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமியை நியமித்தும் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் முத்துலட்சுமி கொல்லா சிங்கண்ண செட்டி கட்டளையின் தக்காராக கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டார். மேலும் அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் (பொறுப்பு) லட்சுமி காந்தன் பாரதி தலைமையில் செயல் அலுவலர்கள் வேலரசு, கார்த்திகேயன், ஆய்வாளர் பிரித்திகா, தனி தாசில்தார் வசந்தி, கிராம நிர்வாக அலுவலர் கோகுலகிருஷ்ணன், சிவகாஞ்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கட்டளை அலுவலகத்துக்கு சென்று அதை மீட்டு தக்காராக முத்துலட்சுமி நியமனம் பற்றிய தகவலை கதவில் ஒட்டினார்கள்.

    இதன் மூலம் கட்டளை இடத்துக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேலும் கட்டளை சொத்துகள் சம்பந்தமாக ஏதேனும் விவரங்கள் தேவைப்படுவோர் தக்காராக நியமிக்கப்பட்டுள்ள முத்துலட்சுமியை தொடர்பு கொள்ளுமாறும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

    • காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப் பதிவாளர் மற்றும் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
    • காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப் பதிவாளர் மற்றும் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலராக (முழு கூடுதல் பொறுப்பு) சு.உமாபதி பதவி ஏற்றார். மேலும் இவர் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப் பதிவாளர் மற்றும் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

    உமாபதி ஏற்கனவே காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளர் (பொது விநியோக திட்டம்), பணியாளர் அலுவலர், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் செயலாளர், பொது விநியோக திட்ட பொது மேலாளர், காஞ்சிபுரம் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் மண்டல மேலாளர் போன்ற துணைப்பதிவாளர் பணியிடங்களில் முழு கூடுதல் பொறுப்பில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிரிக்கெட் வீரர் டோனிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர்.
    • டோனியை போல் மேக்கப் செய்து அச்சு அசலாக டோனி போலவே மாறிய காட்சிகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளன.

    கிரிக்கெட் வீரர் டோனிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக அவர் விளையாடும் போது ரசிகைகள் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

    இந்நிலையில் டெல்லியை சேர்ந்த 'மேக்-அப்' கலைஞரான தீக்ஷிதா ஜிந்தா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் டோனியை போல் மேக்கப் செய்து அச்சு அசலாக டோனி போலவே மாறிய காட்சிகள் உள்ளன.


     இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி தெளிக்கிறார்கள்.

    • பஸ் நிலையம் அமைக்க தகுதியான இடத்தினை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை கலந்து ஆலோசித்து துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநக ராட்சிக்குட்பட்ட சித்தேரிமேடு மற்றும் காரைப்பேட்டை ஆகிய பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-

    காரைப்பேட்டை மற்றும் சித்தேரிமேடு ஆகிய பகுதிகளில் உத்தேச பஸ் நிலையம் அமைக்க தகுதியான இடத்தினை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இத்திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை கலந்து ஆலோசித்து துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய குழுத்தலைவர் மலர்கொடி குமார் உடன் இருந்தனர்.

    • கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.
    • மழை காலம் வருவதற்குள் அரசு பணிகளை முடிக்கும் வகையில் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.

    பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்தார். நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வேளாண்மை துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    மேலும் பிற துறைகளில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகள் காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப் போம் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா போன்ற திட்டப் பணிகளில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து டி.ஆர்.பாலு ஆய்வு செய்தார்.

    பின்னர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி, பொது சேவை மையங்களின் பயன்பாடு, நெடுஞ்சாலை நீர்வழிப்பாதை மற்றும் சுரங்க செயல்பாடுகள், மாவட்ட தொழில் மையம், செயல்படுத்தும் திட்டங்கள், மாற்று திறனாளிகளுக்கான திட்டங்கள், மாவட்ட முன்னோடி வங்கி மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் ஆகியவை பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் மழைநீர் வடிவதற்காக செயல்படுத்தும் பணிகளின் விவரங்களை கேட்டறிந்த டி.ஆர்.பாலு எம்.பி. மழை காலம் வருவதற்குள் அரசு பணிகளை முடிக்கும் வகையில் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

    ×