என் மலர்
ஈரோடு
ஆற்றில் சாயக்கழிவு கலப்பது 99 சதவீதம் தடுக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் சிறு வணிகர்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் கிருஷ்ணராஜ், மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன், சரக துணைப்பதிவாளர் கந்தராஜா, முதன்மை வருவாய் அதிகாரி அழகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு 42 சிறு வணிகர்களுக்கு கடன் உதவியை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டுறவு வங்கி மூலமாக வணிகக்கடன், நகைக்கடன் போன்றன வழங்கப்பட்டு வருகிறது. நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள மக்களே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகிறது.
ஆறுகளில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் இரவு, பகலாக ரோந்து சென்று வருகிறார்கள். அப்போது சாயக்கழிவு கலப்பது தெரியவந்தால் உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அதனால் ஆறுகளில் சாயக்கழிவு கலப்பது 99 சதவீதம் தடுக்கப்பட்டு உள்ளது சாயக்கழிவு கலப்பது தெரியவந்தால் 4 மணிநேரத்துக்குள் சம்பந்தப்பட்ட ஆலை மூடப்படும். ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் காவிரி ஆற்றில் சாயக்கழிவு கலப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளதால், மாவட்ட கலெக்டர்கள் உரிய ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
பொதுமக்கள் பயன்படுத்தி தூக்கி வீசப்படும் முககவசங்களை துப்புரவு பணியாளர்கள் அகற்றி எரித்து விடுகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜான், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் சரவணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வரதராஜ், கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் சிறு வணிகர்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் கிருஷ்ணராஜ், மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன், சரக துணைப்பதிவாளர் கந்தராஜா, முதன்மை வருவாய் அதிகாரி அழகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு 42 சிறு வணிகர்களுக்கு கடன் உதவியை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டுறவு வங்கி மூலமாக வணிகக்கடன், நகைக்கடன் போன்றன வழங்கப்பட்டு வருகிறது. நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள மக்களே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகிறது.
ஆறுகளில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் இரவு, பகலாக ரோந்து சென்று வருகிறார்கள். அப்போது சாயக்கழிவு கலப்பது தெரியவந்தால் உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அதனால் ஆறுகளில் சாயக்கழிவு கலப்பது 99 சதவீதம் தடுக்கப்பட்டு உள்ளது சாயக்கழிவு கலப்பது தெரியவந்தால் 4 மணிநேரத்துக்குள் சம்பந்தப்பட்ட ஆலை மூடப்படும். ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் காவிரி ஆற்றில் சாயக்கழிவு கலப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளதால், மாவட்ட கலெக்டர்கள் உரிய ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
பொதுமக்கள் பயன்படுத்தி தூக்கி வீசப்படும் முககவசங்களை துப்புரவு பணியாளர்கள் அகற்றி எரித்து விடுகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜான், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் சரவணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வரதராஜ், கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஈரோடு தலைமை தபால் நிலைய அலுவலக பணியாளர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் சென்று வந்த இடங்கள் கண்டறியப்பட்டு அங்குள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அந்த நபர் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் தபால் அனுப்புவதற்காக சென்று வந்ததும் தெரிய வந்தது.
அதனால் தபால் நிலையத்தில் கவுண்டர் பிரிவில் பணியாற்றும் 7 ஊழியர்களுக்கு கடந்த மாதம் 27-ந்தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் தபால் அலுவலக கவுண்டரில் பணியாற்றிய 32 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தபால் அலுவலகம் நேற்று முன்தினம் மாலை மூடப்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் பணியாற்றும் 150 பேருக்கு, மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. மேலும் தபால் நிலையத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அங்கு யார் யாரெல்லாம் வந்து சென்றுள்ளனர் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் சென்று வந்த இடங்கள் கண்டறியப்பட்டு அங்குள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அந்த நபர் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் தபால் அனுப்புவதற்காக சென்று வந்ததும் தெரிய வந்தது.
அதனால் தபால் நிலையத்தில் கவுண்டர் பிரிவில் பணியாற்றும் 7 ஊழியர்களுக்கு கடந்த மாதம் 27-ந்தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் தபால் அலுவலக கவுண்டரில் பணியாற்றிய 32 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தபால் அலுவலகம் நேற்று முன்தினம் மாலை மூடப்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் பணியாற்றும் 150 பேருக்கு, மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. மேலும் தபால் நிலையத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அங்கு யார் யாரெல்லாம் வந்து சென்றுள்ளனர் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கு நேதாஜி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது.
ஈரோடு:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி முதல் தற்காலிகமாக ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து செயல்பட தொடங்கியது. இங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மொத்த வியாபாரமும், காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை சில்லறை வியாபாரமும் நடந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதைத்தொடர்ந்து மாற்று இடமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் ரூ.1 கோடி செலவில் 709 காய்கறி கடைகளும், 99 பழக்கடைகளும் என மொத்தம் 808 கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று இரவு முதல் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி காய்கறி மொத்த வியாபாரம் மார்க்கெட் செயல்பட தொடங்கியது.
முன்னதாக ஈரோடு பஸ் நிலையத்தில் மாநகராட்சி அலுவலர்கள், ஒலிபெருக்கி மூலம் நாளை (அதாவது இன்று) முதல் நேதாஜி காய்கறி மார்க்கெட் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்பட தொடங்கும், எனவே வியாபாரிகள் அனைவரும் தங்களது பொருட்களை பத்திரமாக எடுத்துச் செல்லுங்கள்’ என்றனர்.
அதனால் வியாபாரிகள் கடைகளை காலிசெய்துவிட்டு, தங்களது பொருட்களை வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கு எடுத்து சென்றனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில் மஞ்சள் நீர் தெளித்து, சிறப்பு பூஜை செய்து தங்களது வியாபாரத்தை தொடங்கினர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கொண்டு வந்திருந்த தங்களது காய்கறிகளை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இறக்கி வைத்தனர். பின்னர் வழக்கம்போல் காய்கறி வியாபாரம் நடந்தது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி முதல் தற்காலிகமாக ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து செயல்பட தொடங்கியது. இங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மொத்த வியாபாரமும், காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை சில்லறை வியாபாரமும் நடந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதைத்தொடர்ந்து மாற்று இடமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் ரூ.1 கோடி செலவில் 709 காய்கறி கடைகளும், 99 பழக்கடைகளும் என மொத்தம் 808 கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று இரவு முதல் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி காய்கறி மொத்த வியாபாரம் மார்க்கெட் செயல்பட தொடங்கியது.
முன்னதாக ஈரோடு பஸ் நிலையத்தில் மாநகராட்சி அலுவலர்கள், ஒலிபெருக்கி மூலம் நாளை (அதாவது இன்று) முதல் நேதாஜி காய்கறி மார்க்கெட் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்பட தொடங்கும், எனவே வியாபாரிகள் அனைவரும் தங்களது பொருட்களை பத்திரமாக எடுத்துச் செல்லுங்கள்’ என்றனர்.
அதனால் வியாபாரிகள் கடைகளை காலிசெய்துவிட்டு, தங்களது பொருட்களை வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கு எடுத்து சென்றனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில் மஞ்சள் நீர் தெளித்து, சிறப்பு பூஜை செய்து தங்களது வியாபாரத்தை தொடங்கினர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கொண்டு வந்திருந்த தங்களது காய்கறிகளை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இறக்கி வைத்தனர். பின்னர் வழக்கம்போல் காய்கறி வியாபாரம் நடந்தது.
தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள ராமாபுரம் சோதனை சாவடியில் இரும்பு கேட் அமைத்து பூட்டு போட்டு சாலையை அதிகாரிகள் அடைத்தனார்.
தாளவாடி:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து வரும் நபர்கள் இ- பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து வரும் நபர்கள் இ- பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதி தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் சாம்ராஜ் நகர் அருகே தமிழக எல்லையில் உள்ள தாளவாடி பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தாளவாடி பகுதிக்கு ஏராளமானோர் வந்து செல்வதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாரதிபுரம் சோதனை சாவடியில் குழி தோண்டப்பட்டு ரோடு துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள ராமாபுரம் சோதனை சாவடியில் இரும்பு கேட் அமைத்து பூட்டு போட்டு சாலையை அதிகாரிகள் அடைத்தனார். எனினும் இந்த சாலை வழியாக 108 ஆம்புலன்ஸ் செல்ல மட்டுமே அனுமதி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெருந்துறையில் கடந்த 3 நாட்களில் முககவசம் அணியாத 72 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறை பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார், குன்னத்தூர் ரோட்டில் செல்லாண்டியம்மன் கோவில் எதிரே, நேற்று மாலை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அப்போது அந்த வழியாக நடந்து மற்றும் வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் காரில் ஒரு பெண் முககவசம் அணியாமல் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மாவதி, முககவசம் அணியாமல் வந்ததற்கு ரூ.50 அபராதம் கட்டுங்கள் என்று கூறினார். அதற்கு அந்த பெண், தனியாக கார் ஓட்டி வருபவர்கள் முககவசம் அணிய தேவையில்லை என்று போலீசாரிடம் கூறினார். இதனால் அவருக்கும், போலீஸ்காரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண் அங்கிருந்து வேகமாக சென்றுவிடார். அந்த பெண் வந்த கார் பதிவு எண்ணை குறித்துக்கொண்ட போலீசார் அவரை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தனர்.
பெருந்துறையில் நேற்று மற்றும் கடந்த 2 நாட்களில் நடந்த வாகன சோதனையில் முககவசம் அணியாமல் வந்த 72 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராத தொகையாக மொத்தம் ரூ.3 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெருந்துறை பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார், குன்னத்தூர் ரோட்டில் செல்லாண்டியம்மன் கோவில் எதிரே, நேற்று மாலை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அப்போது அந்த வழியாக நடந்து மற்றும் வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் காரில் ஒரு பெண் முககவசம் அணியாமல் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மாவதி, முககவசம் அணியாமல் வந்ததற்கு ரூ.50 அபராதம் கட்டுங்கள் என்று கூறினார். அதற்கு அந்த பெண், தனியாக கார் ஓட்டி வருபவர்கள் முககவசம் அணிய தேவையில்லை என்று போலீசாரிடம் கூறினார். இதனால் அவருக்கும், போலீஸ்காரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண் அங்கிருந்து வேகமாக சென்றுவிடார். அந்த பெண் வந்த கார் பதிவு எண்ணை குறித்துக்கொண்ட போலீசார் அவரை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தனர்.
பெருந்துறையில் நேற்று மற்றும் கடந்த 2 நாட்களில் நடந்த வாகன சோதனையில் முககவசம் அணியாமல் வந்த 72 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராத தொகையாக மொத்தம் ரூ.3 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க காய்ச்சல் கண்டறியும் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் கருவியை கல்லூரி பேராசிரியர்கள் கண்டுபிடித்தனர்
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலத்தில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர் ராஜசேகர், பொறியாளர்கள் கார்த்திக், கோகுல்ராஜ், ராமசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் உடல் வெப்பநிலையை அளவிடும் தெர்மல் ஸ்கேனர் கருவி ஒன்றை புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-.
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இன்று அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் உடல் வெப்பநிலையை அளவிட தெர்மஸ் ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதனை நுழைவுவாயிலில் வைத்துக்கொண்டு ஒருவர் நின்றுகொண்டு, உள்ளே வருபவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்வார். வெப்ப நிலை அதிகமாக இருந்தால் அவர்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள்.
தற்போது நாங்கள் ஆட்கள் இல்லாமல் தானாக இயங்கும் தெர்மல் ஸ்கேனர் கருவியை புதிதாக கண்டுபிடித்துள்ளோம். இதனை அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் நுழைவு வாயில் கதவு முன்பு வைக்க வேண்டும். யாராவது உள்ளே வந்தால் அவர்களது உடல்வெப்பநிலையை கருவி பரிசோதிக்கும். அப்போது குறிப்பிட்ட அளவு உடல் வெப்பநிலை இருந்தால் மட்டுமே கதவு திறக்கும். வெப்பம் அதிகமாக திறந்தால் கதவு திறக்காது. அவர்கள் உடனடியாக டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்தியமங்கலத்தில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர் ராஜசேகர், பொறியாளர்கள் கார்த்திக், கோகுல்ராஜ், ராமசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் உடல் வெப்பநிலையை அளவிடும் தெர்மல் ஸ்கேனர் கருவி ஒன்றை புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-.
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இன்று அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் உடல் வெப்பநிலையை அளவிட தெர்மஸ் ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதனை நுழைவுவாயிலில் வைத்துக்கொண்டு ஒருவர் நின்றுகொண்டு, உள்ளே வருபவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்வார். வெப்ப நிலை அதிகமாக இருந்தால் அவர்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள்.
தற்போது நாங்கள் ஆட்கள் இல்லாமல் தானாக இயங்கும் தெர்மல் ஸ்கேனர் கருவியை புதிதாக கண்டுபிடித்துள்ளோம். இதனை அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் நுழைவு வாயில் கதவு முன்பு வைக்க வேண்டும். யாராவது உள்ளே வந்தால் அவர்களது உடல்வெப்பநிலையை கருவி பரிசோதிக்கும். அப்போது குறிப்பிட்ட அளவு உடல் வெப்பநிலை இருந்தால் மட்டுமே கதவு திறக்கும். வெப்பம் அதிகமாக திறந்தால் கதவு திறக்காது. அவர்கள் உடனடியாக டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உரிய நேரத்தில் உணவு வழங்கப்படாததாக வந்த புகாரை தொடர்ந்து கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா தொற்று வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் செல்போனில் வீடியோ எடுத்து பதிவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் நோயாளிகள் கூறி இருந்ததாவது:-
ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் இருக்கும் எங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு சாப்பாடு வழங்குவதில்லை கைக்குழந்தை வைத்து இருப்பவர்களுக்கும் பால் வழங்கப்படவில்லை. குடிநீரும் முறையாக வழங்கவில்லை. எங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இருந்தாலும், வீட்டுக்கு விடாமல் தனிமைப்படுத்தி உள்ளனர். எங்களுக்கு உதவ அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று காலை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள நோயாளிகளிடம் அவர் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும், நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
இதேபோல் மேட்டுநாசுவம்பாளையம், லட்சுமிநகர் சோதனை சாவடி ஆகிய இடங்களில் கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார். அப்போது அவர் சோதனை சாவடியில் உள்ள போலீசாரிடம், இ-பாஸ் இல்லாமல் ஈரோட்டுக்குள் வரும் வாகனங்களை அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தினார்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா தொற்று வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் செல்போனில் வீடியோ எடுத்து பதிவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் நோயாளிகள் கூறி இருந்ததாவது:-
ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் இருக்கும் எங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு சாப்பாடு வழங்குவதில்லை கைக்குழந்தை வைத்து இருப்பவர்களுக்கும் பால் வழங்கப்படவில்லை. குடிநீரும் முறையாக வழங்கவில்லை. எங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இருந்தாலும், வீட்டுக்கு விடாமல் தனிமைப்படுத்தி உள்ளனர். எங்களுக்கு உதவ அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று காலை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள நோயாளிகளிடம் அவர் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும், நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
இதேபோல் மேட்டுநாசுவம்பாளையம், லட்சுமிநகர் சோதனை சாவடி ஆகிய இடங்களில் கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார். அப்போது அவர் சோதனை சாவடியில் உள்ள போலீசாரிடம், இ-பாஸ் இல்லாமல் ஈரோட்டுக்குள் வரும் வாகனங்களை அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தினார்.
பவானியில் சூதாட்ட விடுதி நடத்தி வந்தவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி சீனிவாசபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் மெட்ராஸ் மணி என்கிற மணிகண்டன் (வயது 50). இவர் பவானியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூதாட்ட விடுதி நடத்தி வந்தார். இந்த நிலையில் அந்த விடுதியை மூடிவிட்டார். அதன்பின்னர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணம் வைத்து சூதாடுவதே தொழிலாக செய்து வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம்போல் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து சூதாட வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். இந்தநிலையில் மணிகண்டன் இரவு 10.30 மணி அளவில் சீனிவாசபுரம் தலைமை தபால் நிலையம் பின்புறம் உடல் முழுவதும் பலத்த ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவர் முகத்தில் மிளகாய் பொடியும் தூவப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் மணிகண்டனை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுபற்றி பவானி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார்கள்.
மணிகண்டன் மொபட்டில் சென்றபோது யாரோ மர்மநபர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பின்னர் அவரது முகத்தில் மிளகாய் பொடி தூவி கத்தியால் அவரது உடலில் கை, கழுத்து, முதுகு மார்பு என சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்துள்ளார். பிறகு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து காலிங்கராயன் அணைக்கட்டு பின்புறம் உள்ள உத்தண்டராயன்கோவில் வரை ஒடி சென்று நின்று கொண்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையான மணிகண்டன் மீது பவானியில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் சூதாட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. எனவே சூதாட்டத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
சூதாட்ட விடுதி நடத்தி வந்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி சீனிவாசபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் மெட்ராஸ் மணி என்கிற மணிகண்டன் (வயது 50). இவர் பவானியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூதாட்ட விடுதி நடத்தி வந்தார். இந்த நிலையில் அந்த விடுதியை மூடிவிட்டார். அதன்பின்னர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணம் வைத்து சூதாடுவதே தொழிலாக செய்து வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம்போல் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து சூதாட வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். இந்தநிலையில் மணிகண்டன் இரவு 10.30 மணி அளவில் சீனிவாசபுரம் தலைமை தபால் நிலையம் பின்புறம் உடல் முழுவதும் பலத்த ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவர் முகத்தில் மிளகாய் பொடியும் தூவப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் மணிகண்டனை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுபற்றி பவானி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார்கள்.
மணிகண்டன் மொபட்டில் சென்றபோது யாரோ மர்மநபர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பின்னர் அவரது முகத்தில் மிளகாய் பொடி தூவி கத்தியால் அவரது உடலில் கை, கழுத்து, முதுகு மார்பு என சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்துள்ளார். பிறகு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து காலிங்கராயன் அணைக்கட்டு பின்புறம் உள்ள உத்தண்டராயன்கோவில் வரை ஒடி சென்று நின்று கொண்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையான மணிகண்டன் மீது பவானியில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் சூதாட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. எனவே சூதாட்டத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
சூதாட்ட விடுதி நடத்தி வந்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
பவானி:
காலிங்கராயன் வாய்க்கால் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 30-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 16-ந் தேதி வரை 10 மாதங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த பாசன பகுதியில் நெல், வாழை, கரும்பு, மஞ்சள் ஆகிய பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பவானிசாகர் அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி பவானி அருகே காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு மதகுகளை திருகி தண்ணீரை திறந்து விட்டனர். பின்னர் அவர்கள் வாய்க்காலில் சீறி பாய்ந்த தண்ணீரில் மலர் தூவினார்கள். குடிநீர் தேவை, நிலுவையில் உள்ள பயிர்களை காப்பாற்றுதல் உள்ளிட்டவற்றுக்காக 28-10-2020 அன்று வரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி தலைவர் மகேஸ்வரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் குமார், காலிங்கராயன் பாசன சங்க தலைவர் வேலாயுதம், காலிங்கராயன் விவசாயிகள் சங்க தலைவர் ரமேஷ், உழவர் விவாதக்குழு மாவட்ட செயலாளர் வெங்கடாசலபதி, மஞ்சள் விவசாயிகள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், கூட்டுறவு சிக்கன கடன் சங்க தலைவர் கணேஷ்குமார், நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் குமரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காலிங்கராயன் வாய்க்கால் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 30-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 16-ந் தேதி வரை 10 மாதங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த பாசன பகுதியில் நெல், வாழை, கரும்பு, மஞ்சள் ஆகிய பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பவானிசாகர் அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி பவானி அருகே காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு மதகுகளை திருகி தண்ணீரை திறந்து விட்டனர். பின்னர் அவர்கள் வாய்க்காலில் சீறி பாய்ந்த தண்ணீரில் மலர் தூவினார்கள். குடிநீர் தேவை, நிலுவையில் உள்ள பயிர்களை காப்பாற்றுதல் உள்ளிட்டவற்றுக்காக 28-10-2020 அன்று வரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி தலைவர் மகேஸ்வரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் குமார், காலிங்கராயன் பாசன சங்க தலைவர் வேலாயுதம், காலிங்கராயன் விவசாயிகள் சங்க தலைவர் ரமேஷ், உழவர் விவாதக்குழு மாவட்ட செயலாளர் வெங்கடாசலபதி, மஞ்சள் விவசாயிகள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், கூட்டுறவு சிக்கன கடன் சங்க தலைவர் கணேஷ்குமார், நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் குமரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய வங்கியின் மூலம் இதுவரை நூறு கோடி ரூபாய் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நீட் தேர்வுக்கு இ- பாக்ஸ் நிறுவனம் மூலம் 10 நாட்களாக மாணவர்களுக்கு நடைபெற்று வருகிறது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பது பற்றி கல்வியாளர்கள் மற்றும் முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும்.
அரசு பள்ளிகளில் 7,200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ள நிலையில், 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய வங்கியின் மூலம் இதுவரை நூறு கோடி ரூபாய் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நீட் தேர்வுக்கு இ- பாக்ஸ் நிறுவனம் மூலம் 10 நாட்களாக மாணவர்களுக்கு நடைபெற்று வருகிறது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பது பற்றி கல்வியாளர்கள் மற்றும் முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும்.
அரசு பள்ளிகளில் 7,200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ள நிலையில், 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவுந்தப்பாடி பகுதியில் முககவசம் அணியாத 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சோதனை நடத்தப்பட்டது. சலங்கபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பழனியப்பன், கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், இளநிலை உதவியாளர் நாகராஜன் ஆகியோர் சலங்கபாளையம் நால்ரோடு, கிருஷ்ணாபுரம் பிரிவில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் இருசக்கர வாகனம், காரில் முககவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.
கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சோதனை நடத்தப்பட்டது. சலங்கபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பழனியப்பன், கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், இளநிலை உதவியாளர் நாகராஜன் ஆகியோர் சலங்கபாளையம் நால்ரோடு, கிருஷ்ணாபுரம் பிரிவில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் இருசக்கர வாகனம், காரில் முககவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.
பவானியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆய்வு செய்தார். ஒவ்வொரு குடும்பத்தினரும் கபசுர குடிநீர் குடிக்கவும் அறிவுறுத்தினார்.
பவானி:
பவானி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இதுவரை 10 பேர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வசித்த பகுதியை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
பவானி மேற்கு தெரு, குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சங்கமம் தெரு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்-மனைவிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியுடன் அங்கு சென்று பார்வையிட்டார். அப்போது அந்த பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் அரசு அதிகாரிகளிடமும், சுகாதாரப் பணியாளர்களிடமும் காலை, மாலை இருவேளை மருந்து தெளிக்கவும், சுகாதாரமான குடிநீர் வழங்கவும் கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு குடும்பத்தினரும் கபசுர குடிநீர் குடிக்கவும் அறிவுறுத்தினார்.
அப்போது ஜம்பை வட்டார சுகாதார துறை மேற்பார்வையாளர் மகேந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், பவானி ஒன்றியக் குழு தலைவர் பூங்கோதை வரதராஜ், கிராம நிர்வாக அலுவலர் செந்தில், ஊராட்சி மன்ற செயலாளர் சண்முகம் ஆகியோர் அமைச்சருடன் இருந்தனர்.
பவானி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இதுவரை 10 பேர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வசித்த பகுதியை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
பவானி மேற்கு தெரு, குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சங்கமம் தெரு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்-மனைவிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியுடன் அங்கு சென்று பார்வையிட்டார். அப்போது அந்த பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் அரசு அதிகாரிகளிடமும், சுகாதாரப் பணியாளர்களிடமும் காலை, மாலை இருவேளை மருந்து தெளிக்கவும், சுகாதாரமான குடிநீர் வழங்கவும் கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு குடும்பத்தினரும் கபசுர குடிநீர் குடிக்கவும் அறிவுறுத்தினார்.
அப்போது ஜம்பை வட்டார சுகாதார துறை மேற்பார்வையாளர் மகேந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், பவானி ஒன்றியக் குழு தலைவர் பூங்கோதை வரதராஜ், கிராம நிர்வாக அலுவலர் செந்தில், ஊராட்சி மன்ற செயலாளர் சண்முகம் ஆகியோர் அமைச்சருடன் இருந்தனர்.






