என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாத 72 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்3 July 2020 12:23 PM GMT (Updated: 3 July 2020 12:23 PM GMT)
பெருந்துறையில் கடந்த 3 நாட்களில் முககவசம் அணியாத 72 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறை பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார், குன்னத்தூர் ரோட்டில் செல்லாண்டியம்மன் கோவில் எதிரே, நேற்று மாலை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அப்போது அந்த வழியாக நடந்து மற்றும் வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் காரில் ஒரு பெண் முககவசம் அணியாமல் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மாவதி, முககவசம் அணியாமல் வந்ததற்கு ரூ.50 அபராதம் கட்டுங்கள் என்று கூறினார். அதற்கு அந்த பெண், தனியாக கார் ஓட்டி வருபவர்கள் முககவசம் அணிய தேவையில்லை என்று போலீசாரிடம் கூறினார். இதனால் அவருக்கும், போலீஸ்காரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண் அங்கிருந்து வேகமாக சென்றுவிடார். அந்த பெண் வந்த கார் பதிவு எண்ணை குறித்துக்கொண்ட போலீசார் அவரை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தனர்.
பெருந்துறையில் நேற்று மற்றும் கடந்த 2 நாட்களில் நடந்த வாகன சோதனையில் முககவசம் அணியாமல் வந்த 72 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராத தொகையாக மொத்தம் ரூ.3 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெருந்துறை பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார், குன்னத்தூர் ரோட்டில் செல்லாண்டியம்மன் கோவில் எதிரே, நேற்று மாலை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அப்போது அந்த வழியாக நடந்து மற்றும் வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் காரில் ஒரு பெண் முககவசம் அணியாமல் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மாவதி, முககவசம் அணியாமல் வந்ததற்கு ரூ.50 அபராதம் கட்டுங்கள் என்று கூறினார். அதற்கு அந்த பெண், தனியாக கார் ஓட்டி வருபவர்கள் முககவசம் அணிய தேவையில்லை என்று போலீசாரிடம் கூறினார். இதனால் அவருக்கும், போலீஸ்காரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண் அங்கிருந்து வேகமாக சென்றுவிடார். அந்த பெண் வந்த கார் பதிவு எண்ணை குறித்துக்கொண்ட போலீசார் அவரை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தனர்.
பெருந்துறையில் நேற்று மற்றும் கடந்த 2 நாட்களில் நடந்த வாகன சோதனையில் முககவசம் அணியாமல் வந்த 72 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராத தொகையாக மொத்தம் ரூ.3 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X