என் மலர்
ஈரோடு
- மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்தி வேல் வாங்கும் வைபோகம் நடந்தது.
- இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் சஷ்டியையொட்டி சூரசம்காரம் விழா கொடி யேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
கோவிலில் அமைந்துள்ள முத்துக்குமாரசுவாமி எனும் முருகப்பெருமானுக்கு தினந்தோறும் பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் பெண்கள் விரதமிருந்து வழிபட்டனர். தொடர்ந்து நேற்று சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி எனும் முருகப்பெருமான், வீரபாகு, சூரன் ஆகியோர் சப்பரத்தில் சத்தி சாலை மாரியம்மன் கோவில் வழியாக வந்து பவானிசாகர் சாலை மற்றும் முக்கிய வீதி வழியாக சென்று முருகப்பெருமான் வீரபாகு உடன் சேர்ந்து முதலில் கஜமுகனை வதம் செய்தார்.
இதையடுத்து 2-வதாக வானு கோவணை வதம் செய்தார். 3-வதாக சிங்க மகனை வதம் செய்து 4-வதாக கோவில் வளாகத்தில் சராகா சூரனை வதம் செய்துவிட்டு வான வேடி க்கைகளுடன் முருகப்பெரு மான் சிவபெருமானுக்கு சிவ பூஜைகள் செய்து முத்துக்குமாரசாமி எனும் முருகப்பெருமான் பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார்.
இந்த விழாவில் புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். இதை தொடர்ந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், மற்றும் திருக்கல்யாண விழா விழா கடந்த 14-ந் தேதி காலை தொடங்கியது.
அன்று காலை 8 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவில் இருந்து முருகன், வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு தொடங்கி மலை கோவிலை அடைந்தது அதன் பிறகு காலை 10 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது.
11 மணிக்கு மகா பூர்ணாகுதியும் 11.30 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் ஆபிஷேகம் நடை பெற்றது. தொடந்து பகல் 12 மணிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு வள்ளி தெய்வானை க்கு அபிஷேம் நடைபெற்றது.
இந்த அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள் தொடந்து நேற்று மதியம் வரை 5 நாட்களும் தினசரி சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்பு நேற்று மதியம் 2 மணிக்கு மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்தி வேல் வாங்கும் வைபோகம் நடந்தது.
இதில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச் சாரியார் முருகப்பெரு மானிடம் சிறப்பு பூஜைகள் செய்து சக்தி வேல்லினை ஒப்படைத்தார்.
அதை தொடர்ந்து சாமி புறப்பாடு தொடங்கி படி வழியாக இரவு முருகப்பெருமான் சமேதராக மலை அடிவார த்தில் எழுந்தருளி இரவு 8.30 மணிக்கு சிறப்பு வானவேடி க்கை மற்றும் சிறப்பு மேள தாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹார விழா தொடங்கியது.
சென்னிமலை டவுன், நான்கு ராஜா வீதிகளில் நடைபெற்ற இந்த சூரன்வதம் செய்யும் நிகழ்சி யை ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபத்தியுடன் கண்டு களித்தனர்.
இதில் மேற்கு ராஜா வீதியில் ஜெகமகாசூரன் வதம் செய்தும், வடக்கு ராஜா வீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ராஜா வீதியில் வானுகோபன் வதமும், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெரு மான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்சியும் நடந்தது.
அதன் பின்பு முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் ஏழுந்தருளினார். அதை தொடந்து இன்று காலை 10.30 மணிக்கு முருகப்பெரு மான் தெய்வானையை மணம் செய்யும் திருமண விழா நடைபெற்றது.
கந்த சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.
- காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
- அதில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே ஆசனூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அதில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் விசாரணையில் காரில் வந்த 2 பேர் ஈரோடு சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் சந்திரசேகர் (வயது 38), சரவணன் என்பதும்,
அதிலிருந்த மது பாக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த 144 மது பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வடிவேல் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
- நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம்பியூர்:
நம்பியூர் அருகே உள்ள புதுசூரிபாளையம் ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் வடிவேல் (25). மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி சிந்து. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று குடும்ப தகராறு காரணமாக வடிவேல் தனது மனைவியுடன் சண்டையிட்டு தென்னை மரத்திற்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த வடிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தென், வட மாநிலங்களின் பல பகுதிகளிலும் நெல் உற்பத்தியாகிறது.
- நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி வழங்க முன்வர வேண்டும்.
ஈரோடு, நவ. 19-
கீழ்பவானி பாசன பயனாளிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி நெல்லு க்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு 150 ரூபாய் வரை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. பல ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு விலையை உயர்த்தி உள்ளது.
இதை விவசாயிகள் வரவேற்கிறோம். ஆனால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
வட மாநிலங்களில் மட்டும் கோதுமை அதிகமாக விளைகிறது. இதனால் மத்திய அரசின் இந்த அறிவிப்பு வடமாநில விவசாயிகளுக்கு மட்டும் பயன் தரும் வகையில் அமைந்துள்ளது.
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், வட மாநிலங்களின் பல பகுதிகளிலும் நெல் உற்பத்தியாகிறது.
எனவே தென் மாநில விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி வழங்க முன்வர வேண்டும்.
அத்துடன் 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டம், விவசாய பணிகளுக்கும், பயன்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மாற்றி அமைத்து செயல்படுத்த முன்வர வேண்டும்.
விவசாய பணிக்கு கூலி ஆட்கள் தட்டுப்பாடு அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு வேளாண் பணிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் மாற்றி செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் செல்லப்பன் பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்துக்கொன்றது தெரிய வந்தது.
- ஏதேனும் விலங்குகள் கால் தடம் பதிவாகியுள்ளதா என்று வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் திங்களூர் செல்லப்பன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 54). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் 24 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்து தூங்க சென்று விட்டார்.
பின்னர் இன்று காலை செல்லப்பன் பட்டியை பார்த்தபோது பட்டியில் இருந்த 10 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 4 ஆடுகள் காயத்துடன் கிடந்தன. பின்னர் இது குறித்து திங்களூர் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வனத்துறையினரும் போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் செல்லப்பன் பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்துக்கொன்றது தெரிய வந்தது. வனத்துறையினர் அங்கு ஏதேனும் விலங்குகள் கால் தடம் பதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்தனர்.
மேலும் காயம் அடைந்த 4 ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். உயிரிழந்த ஆடுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என செல்லப்பன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வனத்துறையினர் இந்தப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அம்மாபேட்டை அருகே மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தது. அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்தோடு அருகே மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்தது. தொடர்ந்து மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் உயிரிழக்கும் சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.
- இரவு நேரத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை அமைந்துள்ளது.
இந்த சாலை வழியாக கர்நாடகாவிற்கு செல்வதற்கு குறைந்த தூரம் என்பதாலும் வளைவுகள் குறைவு என்பதாலும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றார்கள்.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ராமாபுரம் பகுதியில் இருந்து தர்பூசணிகள் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கேரளா மாநிலத்துக்கு செல்வதற்காக அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த லாரியில் 6 பேர் இருந்தனர்.
இதை தொடர்ந்து அந்த லாரி நேற்று இரவு வரட்டுப்பள்ளம் அணை வளைவு பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த லாரி திடீரென தலை குப்புற கவிந்தது. இதில் லாரியில் வந்தவர்கள் கதறி துடித்தனர். மேலும் லாரியில் இருந்த தர்ப்பூசணி பழங்களும் ரோட்டில் சிதறி கிடந்தன்.
இதில் லாரியில் வந்த சென்னம்பட்டி சனிசந்தை சித்தகவண்டனூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (47), பழனியம்மாள் (44), ராமாயி (45), செவன் (48), மாரி முத்து (49) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனை மற்றும் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் கேரளா மாநிலம் திருச்சிசூர் கொடுங்கல்லூர் பகுதியை சேர்ந்த டிரைவர் ரியாஸ் (34) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒரு வயது பெண் குழந்தை வயிற்று வலியால் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே காந்தி சாலை பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி மகன் விக்னேஷ் (வயது 22). இவருக்கு ஒரு வயதில் ஹதீஜா என்ற ஒரு மகள் உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கதிஜா வயிற்று வலியால் அழுது கொண்டிருந்தார். பின்னர் அவரை விக்னேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹதீஜா மூச்சு விட சிரமப்பட்டதால் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹதீஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து விக்னேஷ் புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு வயது பெண் குழந்தை வயிற்று வலியால் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தண்ணீரானது பாலம் தொடங்கும் இடத்திலும், முடியும் இடத்திலும் தேங்கி நின்றுள்ளது.
- பாலம் பகுதியில் போடப்பட்டுள்ள தார்சாலையில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது நகலூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்டது கொண்டையம்பாளையம், செலம்பன் குட்டை கிராம ங்கள்.
இந்த கிராமங்களுக்கு செல்வதென்றால் கொண்டையம்பாளையம் ஏரிக்குச் செல்லும் நீர் வழி பாதையில் உள்ள தரைவழி பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.
ஏரி நிரம்பும் போதெல்லாம் தரைப்பாலம் ஏரிக்கு மிக அருகிலேயே உள்ளதன் காரணமாக தரைப்பாலம் ஆனது மூழ்கி விடும்.
இதன் காரணமாக இந்த கிராமங்களுக்குச் செல்லும் பாதையானது துண்டிக்க ப்பட்டு சுமார் 8 கிலோமீட்டர் தூரம் இப்பகுதி கிராம மக்கள் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.
இதன் காரணமாக அப்பகுதி யில் மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் நெடுஞ்சா லைத்துறை மூலம் அப்பகுதி யில் சுமார் ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைப்பத ற்கான பூமி பூஜை போட ப்பட்டு பணிகள் தொடங்க ப்பட்டன.
பணிகள் தொடங்கப்பட்ட போது அவ்வப்போது ஏரி க்கு தண்ணீர் வந்து அப்ப குதியில் தண்ணீர் தேங்கி விட்டதன் காரணமாக பாலம் கட்ட தாமதமாகி கொண்டே வந்தது.
மேலும் பாலம் பகுதியில் தார் சாலை அமைப்பது என சுமார் 7 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் முழுமை யாக முடிக்கப்பட்டன.
இந்த நிலையில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்ததன் காரணமாக கொண்டயம்பாளையம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமானது.
தற்போது கொண்டையம்பாளையம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலை யில் தண்ணீரானது பாலம் தொடங்கும் இடத்திலும் முடியும் இடத்திலும் சுமார் 3 அடி உயரம் வரை தேங்கி நின்றுள்ளது.
இதன் காரணமாக கொண்டைபாளையம் கிராமத்திற்கு செல்லும் பாதையானது துண்டிக்க ப்பட்டு மீண்டும் அவர்கள் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி த்தான் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தண்ணீர் முழுமையாக தேங்கி நிற்பதன் காரணமாக பாலம் பகுதியில் போடப்பட்டுள்ள தார்சாலையில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து அப்பகுதி பொது மக்கள் தெரிவிக்கையில், பாலத்தின் இருபுறமும் தண்ணீர் தேங்கி நின்று தற்போது பாலத்தை உபயோ கப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளதாகவும்,
நாங்கள் அந்தியூர் செல்ல வேண்டுமென்றால் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி தான் செல்ல வேண்டும் எனவும், இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்வார் உள்ளிட்டோர் பாதிக்க ப்படுவதால் தங்களுக்கு பாலத்தை மறுசீரமைப்பு செய்து போக்குவரத்தை சீர் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குடியிருப்பு பகுதியில் பாம்பு உள்ளதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
- சாரைப்பாம்பினை உயிருடன் மீட்டு சென்னிமலை அடர் வன பகுதியில் விட்டனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே கொளத்துபாளையம், தமிழ்நகர் குடியிருப்பு பகுதியில் பாம்பு உள்ளதாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு சதீஸ்குமார் தலைமையில் சென்ற வீரர்கள் குடியிருப்பு பகுதியில் காலியிடத்தில் பதுங்கி இருந்த 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பினை உயிருடன் மீட்டு சென்னிமலை அடர் வன பகுதியில் விட்டனர்.
இதனால் அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
- மேளதாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹார விழா நிகழ்ச்சி நடக்கும்.
- நாளை திருக்கல்யாண விழா நடைபெறும்.
சென்னிமலை:
சென்னிமலை மலை மீது அமைந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், மற்றும் திருக்கல்யாண விழா வருடந்ததோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா கடந்த 14-ந் தேதி காலை தொடங்கியது.
அன்று காலை 8 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் திருக்கோவில் இருந்து முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு தொடங்கி மலை கோவிலை அடைந்தது அதன் பிறகு யாகசாலை பூஜை மகா பூர்ணாகுதியும், உற்சவர் மற்றும் மூலவர் ஆபிஷேகம் நடைபெற்றது.
தொடந்து பகல் 12 மணிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பகல் 12.30 மணிக்கு வள்ளி தெய்வானைக்கு அபிஷேம் நடைபெற்றது.
இந்த அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள் தொடந்து இன்று மதியம் வரை 5 நாட்களும் தினசரி இதே நேரத்தில் நடந்தது. அதன் பின்பு இன்று மதியம் 2 மணிக்கு மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்தி வேல் வாங்கும் வைபோகம் நடக்கிறது.
இதில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநா தசிவ ச்சாரியார் முருகப்பெரு மானிடம் சிறப்பு பூஜைகள் செய்து சக்தி வேல்லினை ஒப்படைப்பார்.
அதை தொடர்ந்து சாமி புறப்பாடு தொடங்கி படி வழியாக இரவு முருகப்பெருமான் சமேதராக மலை அடிவாரத்தில் எழுந்தருளி இன்று இரவு 8.30 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை மற்றும் சிறப்பு மேளதாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹார விழா நிகழ்ச்சி நடக்கும்.
சென்னிமலை டவுன், நான்கு ராஜா வீதிகளில் நடைபெற்ற இந்த சூரன்வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்சியை ஆயிரக்கா ணக்கான பக்தர்கள் பயபத்தி யுடன் கண்டுகளிப்பர்.
அதன் பின்பு முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் ஏழுந்தருளுவார். அதை தொடந்து நாளை காலை 10:30 மணிக்கு முருகப்பெ ருமான் தெய்வானையை மணம் செய்யும் திருக்க ல்யாண விழா நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன், தலைமையில், கமிட்டியினர் மற்றும் முருகபக்தர்கள் செய்து வருகின்றனர்.
- சீனாபுரத்தில் மாட்டு சந்தை நடைபெற்றது.
- மொத்தம் ரூ.80லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் மாட்டு சந்தை நடைபெற்றது.
இந்த சந்தைக்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 70-ம், இதே இன கிடாரிக் கன்றுகள் 50-ம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.
இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகள் 60-ம், இதே இன கிடாரிகள் கன்றுகள் 100-ம் விற்பனைக்கு வந்திருந்தன. வழக்கத்தை விட மாடுகளின் வரத்து குறைந்திருந்ததால் விலையும் அதிகரித்து இருந்தது.
சந்தையில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ. 52 ஆயிரம் வரையிலும் விற்றது.
சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரிக் கன்று ஒன்று ரூ.12 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரையிலும் விற்ப னை யானது.
மொத்தம் ரூ.80லட்ச த்துக்கு மாடுகள் விற்பனையாகி இருக்கலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை வாங்கி வாகனங்களில் கொண்டு சென்றனர்.
- உணவு பாதுகாப்பு அலுவலர் கொண்ட குழுவினரால் சோதனை நடத்தப்பட்டது.
- உணவு பொருட்களையும் தனித்தனியே இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெருந்துறை தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கும் சமையலறை, மூலப்பொருட்கள் இருப்பு அறை மற்றும் உணவு கூடம் ஆகிய இடங்களில் பெருந்துறை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவினரால் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின்போது உணவு பாதுகாப்பு சட்ட விதிகளில் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்படி தரமான மூலப் பொருட்களை கொண்டு, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து நோயாளிகளுக்கு வழங்குவது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் மூலப் பொருட்களை பாதுகாப்பான முறையில் இருப்பு வைக்கும் முறை மற்றும் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட லேபிள் விபரங்களை கவனித்து வாங்கி, காலாவதி தேதி முடியும் முன்பே அதனை பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.
மூலப் பொருட்களை உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். உணவு பொருட்களையும், உணவு பொருள் அல்லாத பொருட்களையும் தனித்தனியே இருப்பு வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
சமையல் கூடத்தின் அனைத்து பகுதிகளிலும் பூச்சி தொற்று நடவடி க்கைகள் சீரான இடை வெளிகளில் மேற்கொ ள்ளப்பட வேண்டும். பணியாளர்கள் தலைக் கவசம், முகவுரை, கையுறை, ஏப்ரன் போன்ற உணவு பாதுகாப்பு கவசங்களை அணிந்து தன் சுத்தம் பேணுவதுடன், தொற்று நோய் தடுப்பு நடவடி க்கைகள் மேற்கொ ண்டதற்கான மருத்துவ தகுதி சான்றிதழ் வைத்தி ருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை மூடி வைத்து உடனுக்குடன் நோயாளிகளுக்கு வழங்குவதுடன், ஒவ்வொரு முறையும் அதில் உணவு மாதிரிகள் சேகரித்து வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக் கல்லூரி உதவி உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர்.கண்ணன் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் உடன் இருந்தனர்.






