search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்நாடக மது பாக்கெட்டுகள் கடத்திய 2 பேர் கைது
    X

    கர்நாடக மது பாக்கெட்டுகள் கடத்திய 2 பேர் கைது

    • காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
    • அதில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே ஆசனூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

    அதில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் விசாரணையில் காரில் வந்த 2 பேர் ஈரோடு சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் சந்திரசேகர் (வயது 38), சரவணன் என்பதும்,

    அதிலிருந்த மது பாக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரபட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த 144 மது பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×