என் மலர்tooltip icon

    ஈரோடு

    கவுந்தப்பாடி அருகே உள்ள கவுண்டம்பாளையம் காமாட்சிஅம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நடந்தது.
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே உள்ள கவுண்டம்பாளையம் காமாட்சிஅம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நடந்தது. 

    விவசாயம் செழிக்கவும், நெசவுத்தொழில் வளம் பெறவும், வியாபாரம் பெருகவும், பொதுமக்கள் பெண்கள் மற்றும்  குழந்தைகள் கொரோனா பெரும் தொற்றில் இருந்து காபாற்றவும், உலக நன்மைக்காக பெண்கள் குத்து விளக்கு பூஜை செய்து காமாட்சிஅம்மனை வழிபட்டனர். 

    காமாட்சி அம்மன் துதிபாடல்கள் பாடியும், பராசக்தி சரணம் போற்றி கூறி  பெண்கள்  குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர். 

    இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் கணேசன், கோவில் பூசாரி கார்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
    சத்தியமங்கலம் கடம்பூர் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஈரோடு:

    சத்தியமங்கலம் கடம்பூர் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கடம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் கடம்பூர் வனப்பகுதியான கல்கடம்பூர், நடுர் மற்றும் மல்லியம்மன் தூர்க்கம் செல்லும் வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

    அப்போது அந்த வழியாக 3 நபர்கள் வெள்ளை பையுடன் சென்று கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அந்த கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கடம்பூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 36), சுப்ரமணி (44), சதீஷ் (24) ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 3 நாட்டு துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து அவர்களிடம் கேட்டபோது வனவிலங்குகளை வேட்டையாட வைத்து இருந்ததாக கூறினர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3 நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
    Erode News 163 crore worth 103 dams in Erode district, ஈரோடு மாவட்டத்தில் ரூ.16.2 கோடி மதிப்பில் 103 தடுப்பணைகள்
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சி க்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட த்தின்கீழ் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    அப்போது மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

    இயற்கை வள மேம்பாட்டு ப்பணி மற்றும் நீர்ப்பாது காப்பு சார்பில் தடுப்பணைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. தடுப்பணை கட்டும் பணியினை மேற்கொள்வ தால்  நிலத்தடிநீர் மட்டம் உ யர்ந்து விவசாய நிலங்களுக்கு மிகவும் பயனள்ளதாக  அமைகின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் 2021-2022-ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அம்மாபேட்டை வட்டாரத்தில் ரூ.285.50 லட்சம் மதிப்பீட்டில் 16 தடுப்பணைகள், அந்தியூர் வட்டாரத்தில் ரூ.281.23 லட்சம் மதிப்பீட்டில் 23 தடுப்பணைகள், 

    பவானி வட்டாரத்தில் ரூ.112.70 லட்சம் மதிப்பீட்டில் 9தடுப்பணைகள், கோபி வட்டாரத்தில் 90 லட்சம் மதிப்பீட்டில் 4 தடுப்பணைகள்,கொடுமுடி வட்டாரத்தில்  ரூ.8.43 லட்சம் மதிப்பீட்டில் 2 தடுப்பணைகள், மொடக்கு றிச்சி வட்டாரத்தில் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் 4 தடுப்பணைகள், 

    சென்னிமலை வட்டாரத்தில் ரூ.49.88 லட்சம் மதிப்பீட்டில் 1 தடுப்பணை, நம்பியூர் வட்டாரத்தில்  ரூ.133.92 லட்சம் மதிப்பீட்டில் 14 தடுப்பணைகள், பெருந்துறை வட்டாரத்தில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் 4 தடுப்பணைகள், தாளவாடி வட்டாரத்தில் ரூ.446.67 லட்சம் மதிப்பீட்டில் 21 தடுப்பணைகள், 

    தூக்க நாயக்கன்பாளை யம் வட்டாரத்தில் ரூ.87.61 லட்சம் மதிப்பீட்டில்  5 தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கு அனுமதி பெற்று பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் 11 வட்டாரங்களில் ரூ.1601.95 லட்சம் மதிப்பீட்டில் 103 தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும் மலைப் பகுதி யானஅந்தியூர் வட்டாரம் பர்கூர் ஊராட்சியில் 21 தடுப்பணைகள் கட்டும் பணிகளும் மற்றும் தாளவாடி வட்டாரத்தில் 21 தடுப்பணைகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    இந்த ஆய்வி ன்போது அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
    சிவம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு பின் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்று அனுமதிக்கபட்டார். தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா பர்கூர் மலை பகுதியை அடுத்துள்ள தேவர்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜி. கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவம்மாள் (வயது 24).

    இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவம்மாளுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 108 ஆம்புலன்சை அழைத்தனர்.

    டிரைவர் ஆனந்தன் ஆம்புலன்ஸ் மூலம் தேவர்மலை கிராமத்திற்கு வந்து சிவம்மாளை பிரசவத்திற்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது செல்லும் வழியில் தாமரைக்கரை அடர்ந்த வன பகுதியில் ஒற்றை யானை ஒன்று சாலையை வழிமறித்தது நின்றது.

    தொடர்ந்து அந்த யானை நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது.

    இந்நிலையில் சிவம்மாளுக்கு பிரசவ வலி அதிகமாகவே நிலைமையை புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் சிவம்மாளுக்கு 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவர் சிவா பிரசவம் பார்த்தார்.

    அப்போது சிவம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு பின் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்று அனுமதிக்கபட்டார். தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

    ஈரோட்டில் காதலனுடன் மகள் சென்றதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி, சங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 40). இவரது கணவர் முருகேசன். இவர்களுக்கு 23 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் சுமதி,முருகேசனுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 5 வருடங்களாக சுமதி கணவரை பிரிந்து தாய் வீட்டில் மகன், மகளுடன் வசித்து வந்தார். அவ்வப்போது முருகேசன் தனது மகள் மற்றும் மகனைப் பார்த்து சென்று வந்தார்.

    சுமதியின் மகள் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுமதியின் மகள் தான் காதலிக்கும் வாலிபருடன் வீட்டை விட்டு சென்று விட்டார். இதுகுறித்து சுமதி சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் சுமதிக்கு அவரது மகள் போன் செய்து தான் மீண்டும் வந்துவிடுவதாக கூறினார்.

    பின்னர் சுமதி வீட்டுக்கு வந்து சோகத்துடன் இருந்துள்ளார். தன்னுடைய கணவரும் தன்னுடன் இல்லை. மகளும் காதலுடன் சென்றுவிட்டாளே என்ற வேதனையில் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் திடீரென தூக்குப்போட்டு கொண்டார்.

    உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுமதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும் போது, தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று முதல் வரும் 4ந் தேதி வரை பொதுமக்கள் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் அனுமதி இல்லை என்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருேக கொடிேவரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் கொடிேவரி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும் கண்டு ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் உளபட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை நாட்கள் மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். அணைக்கு வரும் பொதுமக்கள் தடுப்பு அணையில்  கொட்டும் தண்ணீரில் குளித்தும் மகிழ்வார்கள். மேலும் அங்கு விற்பனை செய்யப்படும் மீன்களை ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுவார்கள். இதற்காகவே பலர் தடுப்பணைக்கு வருவார்கள்.

    இந்த நிலையில் பவானி சாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் வரத்து குறைந்து பாறைகளாக காட்சி அளிக்கிறது.

    இந்த நிலையில் கொடிவேரி தடுப்பணை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் 4ந் தேதி (புதன்கிழமை) வரை 6 நாட்களுக்கு பொதுமக்கள் கொடிவேரி தடுப்பணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளே செல்ல தடை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும் போது, தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று முதல் வரும் 4ந் தேதி வரை பொதுமக்கள் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் அனுமதி இல்லை என்றனர்.

    மொடக்குறிச்சி வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கில் மெழுகுவண்டு தாக்கும் அபாயம் குறித்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மேகலா அறிக்கை ெவளியிட்டுள்ளார்.
    மொடக்குறிச்சி:


    மொடக்குறிச்சி வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கில் மெழுகுவண்டு தாக்கும் அபாயம் குறித்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மேகலா அறிக்கை ெவளியிட்டுள்ளார்.

    மொடக்குறிச்சி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மேகலா மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக் கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மொடக்குறிச்சி வட்டாரத்தில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். தற்போது மரவள்ளி கிழங்கை மெழுகுவண்டு தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

    மெழுகுவண்டானது பகல் நேரத்தில் வேம்பு, கருவேலம், பீயமரம் போன்ற மரங்களில் அதிகமாக காணப்படுகிறது. இதன் புழு பருவம் கரும்பு, நிலக்கடலை, கம்பு, ராகி போன்ற சல்லிவேர் கொண்ட பயிர்களில் வேரை தாக்கும் பண்புடையது.

    இந்த மெழுகு வண்டா னது தற்போது சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பரவ வாய்ப்புள்ளதால் விவசாயிகள் முன்னெச் சரிக்கை யாக தடுப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    கோடை உழவு செய்தல், பிவேரியா பேசியான பூஞ்சாணத்தை ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இட வேண்டும். பின்னர் ஒருமாத இடைவெளியில் மீண்டும் ஒருமுறை 1 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடவேண்டும்.

    மெழுகுவண்டு வயலில் தென்பட்டவுடன் 8 அடி உயரத்தில் பெட்டர்மாஸ் லைட் அமைத்து தார்பாலின் விரித்து வண்டுகள் சேகரித்து குலோர்பை ரிபாஸ் லிட்டருக்கு 5 மில்லி என்ற அளவில் கலந்து வைத்துள்ள நீரில் இட்டு அழித்தில் வேண்டும் அல்லது தீயிலிட்டு அழித்தல் வேண்டும்.

     மேலும் தகவல்களுக்கு மொடக் குறிச்சி வட்டார தோட்டக் கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் மட்டும்  சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மார்ச் மாதம் முதல் குறைய தொடங்கி ஒற்றை இலக்கில் பதிவாகி வந்தது. இந்நிலையில் கடந்த 2-ந் தேதி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பினார்.

    இதனையடுத்து கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பிறகு கடந்த 17-ந் தேதி ஈரோட்டில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 20-ந் தேதி ஒருவருக்கும், 21-ந் தேதி மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

    இதில் கடந்த 21-ந் தேதி  கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனை அடுத்து மாவட்டத்தில் 2 பேர் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருந்து வந்தது. 

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேரில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினர்.  மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 670 ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 935 ஆக உயர்ந்து உள்ளது. 

    இதுவரை சிகிச்சை பலனின்றி 734 பேர் இறந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் மாவட்டத்தில் ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சத்தியமங்கலம்-பங்களாபுதூர் பகுதிகளில் போதை பொருட்கள், கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    சத்தியமங்கலம்-பங்களாபுதூர் பகுதிகளில் போதை பொருட்கள், கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பங்களாபுதூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனபால் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இலூர்மேடு பஸ் நிறுத்தம், சக்தி-அத்தாணி சாலையில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். 

    போலீசை கண்டதும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார்.  அவரை மடக்கிப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சத்தியமங்கலம் அடுத்த வரதம் பாளையம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (32) என்பதும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.

    இதேபோல் சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சத்தியமங்கலம்-பண்ணாரி செல்லும் சாலை பழைய மார்க்கெட் பகுதி அருகே ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தபோது அந்த நபர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. 
    போலீஸ் விசாரணையில் அவர் சத்தியமங்கலம் மேற்கு சந்து பகுதியை சேர்ந்த குணசேகரன் (69) என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
    நடைபெற்றது.

    கொரோனா தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி  போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம்  தொடங்கியது. அதைத்தொடர்ந்து முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
     
    தொடர்ந்து உருமாற்றம் அடைந்த கொரோனா தாக்கத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்றும் வகையில்  முதல் கட்டமாக  15 வயது முதல் 18 வயதுடைய மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. அதைத் தொடர்ந்து 12 முதல் 15 வயது உடைய மாணவ, மாணவி களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வந்தது
    ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவ ர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் 12 முதல் 14 வயது உடைய மாண வர்களுக்கு முதல் தவணையாக 44,710 தடுப்பூசி களும், 2-வது தவணையாக 13,268 தடுப்பூசிகளும் செலுத்த ப்பட்டுள்ளன.  இதுபோல் 15 முதல் 18 வயதுடைய பள்ளி மாண வர்களுக்கு முதல் தவணையாக 89,373 தடுப்பூசிகளும், 2-வது தவணையாக 77,321 தடுப்பு களும் இது வரை செலுத்த ப்பட்டுள்ளன.

    இந்நிலை யில் ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளி மாணவ ர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 304 பள்ளிகளில் 281  மருத்துவக் குழுக்களால் 12 வயது முதல் 15 வயது உடைய மாணவ- மாணவிகள், 15 முதல் 18 வயதுடைய மாணவ மாணவிகளுக்கு என மொத்தம் 20 ஆயிரத்து 103 மாணவ மாணவிகளுக்கு இன்று தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மாணவ- மாணவிகள் இன்று நடந்த முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்து கொண்டனர். இதேபோல் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர்.
    சென்னிமலை அருகே குடியிருப்பு பகுதியில் 8½ அடி பாம்பு சிக்கியது.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே குடியிருப்பு பகுதியில் 8½ அடி பாம்பு சிக்கியது.

    சென்னிமலை தினசரி மார்க்கெட் அருகே உள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டி காலி இடம் உள்ளது. இந்த காலி இடத்திற்கு கடந்த ஒரு வாரமாக சாரைப்பாம்பு ஒன்று வந்து சுற்றி கொண்டு இருந்தது.

     இந்த பாம்பு தினமும் வந்து சென்றதால் சென்னிமலை பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் என்.இளங்கோவன் ஈரோட்டில் உள்ள பாம்பு பிடி வீரர் யுவராஜூக்கு தகவல் கொடுத்தார். 

    அதைத்தொடர்ந்து யுவராஜ் வந்து பாம்பை தேடியபோது அங்குள்ள மதில் சுவருக்குள் பாம்பு பதுங்கி விட்டது. பின்னர் ஜே.சி.பி. உதவியுடன் மதில் சுவரை உடைத்து சுமார் 8½ அடி நீளமுள்ள சாரைப்பாம்பை யுவராஜ் உயிரோடு பிடித்தார்.

     பின்னர் அந்த பாம்பை வனப்பகுதிக்குள் விட கொண்டு செல்லப்பட்டது.
    கோபிசெட்டிபாளையம் அருகே வேனில் கடத்திய 3½ டன் ரேசன் அரிசி சிக்கியது. இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே வேனில் கடத்திய 3½ டன் ரேசன் அரிசி சிக்கியது. இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள.

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பழனிகவுண்டன்  புதூர் பகுதியில் கடத்துர் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    அப்போது வேனை ஓட்டி வந்த எலத்தூர் செட்டி பாளையம் பகுதியை சேர்ந்த பிரசாத் (24) என்பவரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் 3½ டன்ரேசன் அரிசி கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து கடத்தூர் போலீசார் ரேசன் அரிசி மற்றும் பிரசாத்தை உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அவர்கள் பிரசாத்தை கைது செய்து ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த அரிசி எங்கு இருந்து யாருக்கு கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×