என் மலர்tooltip icon

    ஈரோடு

    • இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவுபெற்றது.
    • நாளை பதிவாகும் வாக்குகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இத்தேர்தலில் தி.மு.க.வின் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 பேர் போட்டியிடுகின்றனர்.

    இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவுபெற்றது. அதைத்தொடர்ந்து வெளியூர்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தொகுதியை விட்டு வெளியேறினர்.

    இதனைத்தொடர்ந்து, நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 53 பள்ளிகளுக்கு மட்டும் இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாக்குப்பதிவுக்காக நாளை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை பதிவாகும் வாக்குகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகிறது.  

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுகிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உயிரிழந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நாளை மறுநாள் ( பிப்ரவரி 5-ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 7-ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

    தி.மு.க. சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முக்கிய எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுகிறது.

    கடந்த 20-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதன்படி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதில் இருந்து தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் வாக்கு வேட்டையை துவங்கின.

    கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் போன்று எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இன்றியும், பரபரப்பு இன்றியும் தற்போதைய தேர்தல் களம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி புதுமாதிரி தேர்தலை சந்திக்கிறது.
    • நாங்கள் உதிரிகள் அல்ல. உறுதியானவர்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரி த்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இதுவரை எத்தனையோ தேர்தல்கள் நடந்து இருந்தாலும், ஈரோடு கிழக்கு தொகுதி புதுமாதிரி தேர்தலை சந்திக்கிறது.

    ஆளுங்கட்சியான தி.மு.க. வும், எதிர்கட்சியான அ.தி.மு.க.வும் நாம் தமிழர் கட்சியை வீழ்த்த ஒன்றி ணைகின்றன. அ.தி.மு.க வாக்காளர்களுக்கு கூடுதல் தொகை கொடுத்து, நீங்கள் தி.மு.க.விற்கு ஓட்டு போடா விட்டாலும் பரவாயில்லை, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து விடாதீர்கள் என்று கெஞ்சுகின்றனர்.

    எங்களைக் கண்டு இவ்வ ளவு பயப்படுவார்கள் என்று நான் நினைக்க வில்லை. அ.தி.மு.க, பா.ஜ.க. வினர் சில உதிரிகளை வைத்து பெரியாரை விமர்சனம் செய்கின்றனர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் உதிரிகள் அல்ல. உறுதியானவர்கள். நாங்கள் உறுதியாய் தனித்து தேர்தல் களத்தில் நிற்கிறோம்.

    உதிரிகளை கூட்டணி சேர்த்து தி.மு.க நிற்கிறது. நாங்கள் பெரியரை விமர்சிக்கவோ, இழிவாகவோ பேசவில்லை. கடந்த 60 ஆண்டுகளாக பெரியார்தான் எங்கள் மொழியை, இனத்தை இழிவுபடுத்தியுள்ளார்.

    என் கருத்துக்கு எதிர் கருத்து கூறாமல் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். பெரியார் இல்லாமல் ஒன்றுமில்லை என்பது அவர்களின் கருத்து. பெரியாரால் ஒன்றுமில்லை என்பது எங்கள் கருத்து.

    தமிழரான எங்களுக்கு திராவிடன் என பெயர் வைக்க வேண்டாம். எந்த நேரத்தில் எந்த ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறார்.

    அதுபோல நான் இப்போது பெரியாரை விமர்சிக்கிறேன். சனாதனத்தை ஒழிப்பதாக சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி, ஆதிதிராவிடர்களோடு அமர்ந்து உணவருந்துவதாக ஒரு விளம்பரம் வருகிறது. இதுதான் உண்மையான சனாதானம் என்பதை உணர்ந்து உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தமிழர்கள். கோபம் வராவிட்டால் நீங்கள் திராவிடர்கள்.

    தமிழக மீனவர்கள் சுடப்படும்போது, நான் இந்த நாட்டு மீனவர் இல்லையா என்று கேட்டால் அது தமிழ் தேசியம். கச்சதீவை கொடுத்தது தான் என்றால் திராவிடம். கச்சத்தீவை திரும்ப எடுப்போம் என்றால் தமிழ்தேசியம். தமிழை சனியன் என்று இழித்து பேசுவது திராவிடம். தமிழ் எங்களுக்கு உயிர், முகம், முகவரி, மூச்சு, பேச்சு என்று பேசுவது தமிழ்தேசியம்.

    60 ஆண்டுகளாக இலவசங்களைக் கொடுத்து வாக்கை பறித்து மக்களின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றாமல் ஏழையாய் வைத்திருப்பது திராவிடம்.

    தனக்கான தேவைகளை தாங்களே நிறைவேற்றும் தற்சார்பு வாழ்க்கையைத் தருவது தமிழ் தேசியம். மதிப்புமிக்க வாக்குகளை விலைக்கு விற்கும் நாடும், மக்களும் உருப்படமாட்டார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகு தியில் நடப்பது கடுமையான போர். இந்த போரில், எங்க ளுக்கு கை கொடுப்பது தமிழர்களின் கடமை. ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். என் வீட்டைப்போல நாட்டை பார்த்துக் கொள்வோம். என் தாய் மண்ணை என்னை விட எவரும் நேசிக்க முடியாது.

    என் மொழி, இனத்தின் மீது பெரியாருக்கு ஏன் வன்மம்? என் தாய்மொழி தமிழை சனியன் என்று சொன்ன சனியனை ஒழிக்க வேண்டும். வள்ளளார், வைகுந்தரை விட பெரியார் என்ன சீர்திருத்தம் செய்து விட்டார்? எல்லா எலியும் எழுந்து வந்து ஒரு புலிக்கு முன்னாள் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.

    தாய்ப்பால் போல் தாய்மொழிக் கல்வி அவசி யம் என்றார் காந்தி. உன் மொழியை உலகின் மூத்த மொழியை அசிங்கமாக பேசினால் விட முடியுமா? வீட்டுக்கு தகப்பனை, நாட்டுக்கு தலைவனை கடன் வாங்க முடியாது. என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது.

    ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் எதிரிதான். தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விட மாட்டேன். பெரியாரால் இந்த நிலத்தில் என்ன நடந்தது? சமூகநீதி, சாதி ஒழிப்பு, பெண்ணிய உரிமை இதெல்லாம் திராவிடத்தில் வெறும் சொல். தமிழ் தேசியத்தில் அது செயல்.

    பிரபாகரனை தீவிரவாதி என்று சொன்னது திராவிடம். இலங்கையில் போரை நிறுத்தவும், பிரபாகரன் உள்ளிட்டவர்களைக் காப்பாற்றவும் அமெரிக்கா விரும்பியது. ஆனால், காங்கிரஸ் குடும்பமும், தமிழக தலைவர்களும் அதனை விரும்பவில்லை.

    இலங்கை போரை விரைந்து முடிக்க அவர்கள் விரும்பினார்கள் என்று முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி சிவசங்கர மேனன் எழுதி இருக்கிறார்.

    பிரபாகரன் இருப்பது இவர்களின் எதிர்கால அரசியலுக்கு ஆபத்தாக இருக்கும் என்று கருதினார்கள். 13 கோடி தமிழ் சொந்தம் இருக்கும்போது, இசைப்பிரியா, பாலச்சந்திரனுக்கு கொடிய நிகழ்வு நடந்தது. பிரபாகரன் மகன் ராணுவ கட்டுப்பாட்டில் இருப்பது தமிழக, இந்திய தலைவர்களுக்கு சொல்லப்பட்டது.

    ஆனால், பிரபாகரன் குடும்பத்தில் ஒருவர் கூட இருக்கக்கூடாது என்று தகவல் சொல்லப்பட்டுள்ளது. அதனால் பாலச்சந்திரனைக் கொன்றார்கள். இதை மறந்து, கடந்து போக முடியுமா? இதற்கு காரணமானவர்களை வஞ்சம் வைத்து கருவருக்காமல் விடமாட்டேன்.

    பேரரசுகள் சாம்ராஜ்யங்களே வீழ்ந்துள்ள போது உங்களை வீழ்த்துவது எம்மாத்திரம்? வீழ்ந்து விட்டதால் தான் இப்போது காசு கொடுத்து ஓட்டு கேட்கின்றனர். சாதி பார்க்காமல் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளோம். ஈரோடு கிழக்கு மக்களுக்கு நான் யாருக்காக பேசுகிறேன் என்று தெரியும்.

    உதட்டில் இருந்து அல்ல, உள்ளத்தில் இருந்து பேசுகிறேன். உண்மையை, உரக்கப் பேசுவோம். உறுதியாக பேசு வோம். சத்தியத்தை சத்தமாக பேசுவோம். என்னை தோற்கடிக்க துடிக்கிறது திராவிடம். நான் வீழ்வது மகிழ்ச்சி என்றால் தி.மு.க. விற்கு வாக்களியுங்கள்.

    வீழ்ந்த தமிழினம் எழ வேண்டுமானால், தன்மானத்தோடு மக்கள் வாழ வேண்டுமானால் எங்களுக்கு வாக்களியுங்கள். கட்சிகளை, தலைவர்களை நம்பியது போதும். ஒருமுறை எங்களை நம்புங்கள். எங்களின் வெற்றி தமிழ் பேரினத்தின் வெற்றி. மக்களின் வெற்றி. அரசியல் புரட்சிக்கான வெற்றி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 20-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • இடைத் தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந் தேதி வெளியான உடனேயே ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

    கடந்த 20-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இன்று மாலை 6 மணிக்கு பிறகு தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை. ஈரோட்டில் தங்கி இருக்கும் வெளியூர் கட்சி நிர்வாகிகள் இன்று மாலை 5 மணிக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 3 நிலை கண்காணிப்பு குழுவினர், 3 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தவிர 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சோதனை சாவடிகளில் துணை ராணுவத்தினருடன் உள்ளூர் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இடைத்தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இன்று முதல் 5-ந் தேதி வரையும் மற்றும் வாக்குகள் எண்ணப்படும் நாளான பிப்ரவரி 8-ந் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த தடையை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுகிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உயிரிழந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நாளை மறுநாள் ( பிப்ரவரி 5-ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 7-ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

    தி.மு.க. சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முக்கிய எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுகிறது.

    கடந்த 20-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதன் படி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதில் இருந்து தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் வாக்கு வேட்டையை துவங்கின.

    கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் போன்று எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இன்றியும், பரபரப்பு இன்றியும் தற்போதைய தேர்தல் களம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    ஒரு பக்கம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் தி.மு.க.-வினரும், சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2 நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இரு தரப்பினரும் தீவிர இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று மாலை 6 மணிக்கு பிறகு தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை. ஈரோட்டில் தங்கி இருக்கும் வெளியூர் கட்சி நிர்வாகிகள் இன்று மாலைக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (பிப்ரவரி 5-ம் தேதி) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 8-ம் தேதி சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியம் முடிவுகள் தெரிந்து விடும்.

    • இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    • நாம் தமிழர் கட்சியினர் பெரியாரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி பேரணி.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி கட்சியினருடன் இன்று மதியம் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள பழமையான சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ தேவாலயம் முன்பாக பிரார்த்தனை நடத்தி விட்டு வெளியே வரும் கிறிஸ்துவ மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அதே பகுதியில் பெரியார் பற்றி அவதூறாக பேசிய சீமானை கண்டிக்கும் விதமாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சீமான் புகைப்படத்தை ஒருபுறம் நாம் தமிழர் கட்சி போலவும், மறுபுறம் பா.ஜ.க.வின் காவி உடை அணிந்தப்படி இருப்பது போல கார்டூன் புகைப்படத்தை போட்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    இதனால் நாம் தமிழர் கட்சியினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

    சீமானுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கி வந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை நாம் தமிழர் கட்சியினர் சென்று தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அங்கிருந்த போலீசார் 2 தரப்பினரையும் அப்பகுதியை விட்டு வெளியே செல்லக்கூறியதை தொடர்ந்து மீண்டும் தேவாலயம் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் பிரார்த்தனை முடித்து வெளியே வரும் கிறிஸ்தவர்களிடம் பிரசாரம் மேற்கொண்டனர்.

    தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் பெரியாரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி சாலையில் பேரணியாகச் சென்றனர். மேலும் இந்த மோதல் சம்பவத்தின் காரணமாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பன்னீர்செல்வம் பூங்காவில் குவிக்கப்பட்டு ள்ளனர்.

    இதற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சியினரை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரகுருபன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாம் தமிழர் கட்சியினர் மீது பதில் தாக்குதல் செய்வோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    நாளை மாலை பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில் தற்போது இந்த சம்பவம் கிழக்கு தொகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • நாம் தமிழர் கட்சியினர் துண்டறிக்கை விநியோகித்தவர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் சீமானுக்கு எதிராக துண்டறிக்கை விநியோகித்தனர். அப்போது அதே பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் துண்டறிக்கை விநியோகித்தவர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

    • இந்தியாவில் ஏ.கே 74 துப்பாக்கியை சுட்ட முதல் ஆள் நான் தான்.
    • மாற்று அரசியலுக்கான போராட்டத்தை முன்னெடுக்கிறோம்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சு மியை ஆதரித்து வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்த பிரசாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    உலகு எங்கிலும் உரிமை இழந்து அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் தங்களின் இனத்தின் பாதுகாப்பு எழுச்சிக்காக விடுதலை பெற்று இருப்பது வரலாறு. அதே போல நமது நிலத்தில் உரிமைகளை இழந்தும் உடமைகளை இழந்தும் இறுதியாக உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    கடந்த 14 ஆண்டுகளாக தாய் நிலத்தில் நாம் அடிமைகள். நம் நிலத்தில் தாய்மொழியிலே கல்வி கற்றால் வேலை வாய்ப்பு இல்லை. நதிநீர் உரிமை பெற முடியவில்லை.

    இந்திய பெருங்கடலில் மீன் பிடித்து திரும்ப முடியவில்லை. வேளாண்மை செய்ய முடியவில்லை. வேலை செய்ய முடியவில்லை. இதனால் அதிகார வலிமை தான் என்று பேசி பேசி 36 லட்சம் வாக்குகள் பெற்று தமிழகத்தில் 3-வது கட்சியாக அங்கீகாரம் பெற்று நிற்பது தான் புரட்சி.

    போராட வேண்டும், இல்லையென்றால் நீயும் நானும் பலிகடா தான். இதனால் போராடு. போராட்டத்தினால் பல மாற்றங்களை பெற்றுள்ளோம். போராட்டம் இல்லையென்றால் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்காது. மாற்று அரசியலுக்கான போராட்டத்தை முன்னெடுக்கிறோம்.

    ஒவ்வொருவரின் மனதில் மாற்றம் சிந்தனை வந்து விட்டால் மாற்றம் வந்து விடும். இப்படிப்பட்ட மாற்றம் வருவதற்கு அரிய வாய்ப்பு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தந்துள்ளது. நாம் தமிழர் கட்சி பயம் என்பது இல்லை என்பதால் துணிந்து நிற்கி றோம்.

    நாங்கள் வீரர்கள். அதனால் துணிந்து தனித்து நிற்கிறோம். நாங்கள் கையேந்தி வாக்கு கேட்பது உங்கள் இடத்தில். எங்கள் இனத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து வருகிறோம். இந்த நிலைமை எங்கள் பின்னால் வரும் பிள்ளைகளுக்கு இருக்க கூடாது என்பதற்காக வாக்கிற்கு ரூ.500, ரூ.1000-க்கு கையேந்த கூடாது என்று கத்திக் கொண்டு இருக்கிறோம்.

    நானே பீகார், கர்நாடக, கேரளாவில் இருந்து வந்து இருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னை முதல்வ ராக்கி இருப்பார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பழமொழியில் தான் தமிழன் தோற்று போய்விட்டான்.

    ஆங்கிலம் அறிவு இல்லை, ஒரு மொழி. வெள்ளை என்பது அழகு இல்லை ஒரு நிறம், தமிழில் எல்லா சாமிகள் கருப்பு தான். முருகன் கருப்பாக தான் இருப்பான்.

    பிறந்த நாட்டுக்காக பிரபாகரன் பின்னால் சென்று 50 ஆயிரம் பேர் இறந்தார்கள். பணத்தை கொடுத்து நீ பொருளை வாங்குவாய், நாங்கள் உயிரை கொடுத்து வாங்குவோம். பிரபாகரன் துப்பாக்கி ஆயுதம் தூக்கியது போல நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் வாக்கினை ஆயுதங்களை தூக்கி வெல்வோம்.

    அப்போது சீமான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவம் குறித்து பேசினார். சினிமாவில் என்கவுண்டர் செய்யுற இங்கே வந்து ஏன் தடுமாறுகிற என்று பிரபாகரன் என்னிடம் கேட்டார்.

    அப்போது ஏ.கே 74 ரக துப்பாக்கி குறித்தும் அதன் செய்முறை குறித்தும் எனக்கு அவர் பயிற்சி அளித்தார். அப்போது ஏ.கே 74 துப்பாக்கி ரஷ்யா இடமும், நம்மிடம் (விடுதலை புலிகள்) தான் உள்ளது என்றார்.

    அப்போது நான் ஏ.கே 74 துப்பாக்கியை அவரிடம் சுட்டு காண்பித்தேன். பிரபாகரன் எனக்கு துப்பாக்கி பயிற்சி அளித்தது உண்மை தான். இந்தியாவிலேயே ஏ.கே 74 ரக துப்பாக்கி சுட்ட முதல் ஆள் நான்தான். உங்களை மாதிரி பொய் சொல்லி பிழைப்பு செய்யவில்லை.

    ஒருநாள் வரலாற்றில் வாழ்ந்தவர்களை உரிமையோடு பெருமையோடு நான் திட்டுவது போல நீ என்னை ஒரு நாள் திட்டுவதை கைவிட வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்கள்.

    நீ எனக்கு ஓட்டு போட்டு தான் ஆக வேண்டும், என க்கு உன்னை விட்டால் வேறு வழியில்லை, அதே போல எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டு போட்டால் கடைசியில் பிரச்சனை என்றால் என்னிடம் தான் வரவேண்டும்.

    தலை நிமிர்ந்து தமிழ் இனம் சிறந்து வாழ கடைசி விடுதலை அரசியல் விடுதலை தான் என்பதை சிந்தித்து மக்கள் மைக் சின்னத்திற்கு வாக்கு அளியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுயேச்சை வேட்பாளர்களும் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் தொகுதி முழுக்க சென்று வாக்குகள் கேட்டு வருகிறார்கள்.
    • வருகிற 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி தலைமையில் தி.மு.க.வினர் தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தனர்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்காக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் முகாமிட்டு தினந்தோறும் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். தொண்டர்களும் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்கள். சுயேச்சை வேட்பாளர்களும் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் தொகுதி முழுக்க சென்று வாக்குகள் கேட்டு வருகிறார்கள்.

    இதனால் இடைத்தேர்தல் பிரசாரம் களைகட்டியிருந்தது. இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. அதைத்தொடர்ந்து வெளியூர்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    வருகிற 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    • 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
    • அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 5-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மொத்தம் 46 பேர் போட்டியிடும் இத்தேர்தர்லில் திமுகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

    தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் சீதாலட்சுமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மரப்பாலம் முனிசிபல் சத்திரம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்காததை கண்டித்து சாலை மறியிலில் ஈடுபட்ட சீதாலட்சுமி உள்பட 9 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையான, மோசமான வார்த்தைகளை சீமான் பேசுகிறார்.
    • அமைதியாக தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சீமானின் செயல்கள் உள்ளன.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் கட்சியான திமுக சார்பில் சந்திரகுமார் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி போட்டியிடுகிறார். மற்ற முன்னணி கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.

    பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கான பிரசாரத்திலும் பெரியார் குறித்து பேசி வருகிறார். மேலும், கட்சித் தலைவர்கள் கருத்துகளுக்கு கடுமையான வகையில் பதில் அளித்து வருகிறார்.

    இந்த நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சியை தடை செய்யக்கோரிய தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி மனு கொடுத்துள்ளார்.

    அந்த மனுவில் புகழேந்தி கூறியிருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையான, மோசமான வார்த்தைகளை சீமான் பேசுகிறார். திராவிட இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர்களை கொச்சைப்படுத்தி ஏராளமாக பேசுகிறார்.

    பிரச்சாரத்தின்போது சாதி, மதம், இனம் தொடர்பாக சர்ச்சை கருத்துகளை பேசி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அமைதியாக தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சீமானின் செயல்கள் உள்ளன.

    கட்சியின் அங்கீகாரத்தை திரும்பப்பெற்று நாம் தமிழர் கட்சியை தடை செய்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.

    • தூய அரசியல் அமைய 14 ஆண்டுகளாக போராடி வருகின்றோம்.
    • இளைஞர்கள் எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதா லட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீண்ட நாட்களாக இந்த நிலத்தில் நிலவி வரக்கூடிய தீய அரசியலை மாற்றி தூய அரசியல் அமைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் தமிழர் கட்சி 14 ஆண்டுகளாக போராடி வருகின்றோம்.

    குன்றக்குடி அடிகாளர் மக்களின் அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அந்த நாடு குற்றம் சமூகமாக மாறும், அப்படி குற்ற சமூகமாக இல்லாத வகையில் இருக்க மாற்ற துடிக்கக் கூடியவர்கள் நாம் தமிழர் பிள்ளைகள்.

    இந்த ஆட்சியாளர்கள் எப்படியாவது மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கம் வராமல் இருப்பது, மக்களை பற்றி கவலை படாமல் இருப்பது, தேர்தல் வரும் போது ஓட்டுக்கு காசு கொடுத்து வாக்கு பெறுவது, ஓட்டை விற்றுக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் ஓட்டை வாங்கி கொண்டு நாட்டை விற்கிறார்கள்.

    அடுத்த தேர்தல் வரும் போது சிந்திப்பார்கள். ஆனால் மக்களை பற்றி சிந்தித்து கொண்டே இருப்பது கட்சி அரசியல். தேர்தல் அரசியலில் பெண்கள் ஓட்டை வாங்குவது என தி.மு.க. நினைத்தது, பெண்கள் ஓட்டை தி.மு.க. வுக்கு போடுவது இல்லை என்றும் அதனை எப்படி வாங்குவது என்று சிந்தித்து குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்று நினைத்தது தான் தேர்தல் அரசியல்.

    அதே போன்று மாணவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுகிறார்கள். இளைஞர்கள் எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஏன் என்றால் எங்கு பார்த்தாலும் ஊழல், சுற்றுச்சூழல் பாதிப்பு, இதையெல்லாம் பார்த்து இளைஞர்கள் சீமான் பின்னால் செல்கிறார்கள்.

    சீமான் பின்னால் இருப்பவர்கள் எந்த அரசியல் பின்னணி கொண்டவர்கள் இல்லை. 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தாய்மார்கள் ஆயிரம் ரூபாய்க்கு கையேந்தி நிற்கிறார்கள். ஆயிரம் ரூபாய்க்கு பெண்கள் கையேந்தினால் அது புரட்சி பெண்ணா வறட்சி பெண்ணா.

    திராவிடம் என்று எந்த வழியில் பொருள் கொண்டாலும் திருடன் என்று தான் பொருள் வருகிறது. திராவிடம் தீராத கொடிய விஷம். நூறு ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுப்பது தான் தேர்தல் அரசியல்.

    45 ஆயிரம் கோடி சாராய விற்பனை தேர்தல் அரசியல், தாலிக்கு தங்கம் தேர்தல் அரசியல், இந்த தேர்தல் அரசியலை தீ வைத்து கொளுத்தி விட்டு கட்சி அரசியல் நோக்கி மக்கள் செல்வது தான் இந்த மண்ணுக்கு தேவையான தூய்மையான அரசியல்.

    அண்ணா பல்கலைக்கழகம் மாணவி எப்படியெல்லாம் பாலியல் கொடுமை குறித்து அளித்த வாக்கு மூலம் மாணவி எப்.ஐ.ஆர் குறித்து வெளியிட்டது தான் திருட்டு திராவிடம். இத்தனை எப்.ஐ.ஆர் இருக்கும் நிலையில் மாணவி நகல் மட்டும் இணையதளத்தில் இருந்து கசிந்து வெளியானது எப்படி?

    அந்த சார், எந்த சார் என்று ஏதாவது விசாரித்து இந்த அரசு வெளியிட்டுள்ள தா? போராட வந்த பா.ம.க சுற்றுச்சூழல் அமைப்பாளர் சவுமியா, பா.ஜ.க குஷ்பு ஆகிய பெண்கள் கைது செய்யப்பட்டது ஏன்? அப்போது ஞானசேகரன் குற்றவாளியா? அரசு குற்ற வாளியா? என் வீட்டை 15 நாட்களுக்கு முற்றுகை செய்ய அனுமதி அளித்தது ஏன்? பெரியாரை வேண்டு மென்று விமர்சனம் செய்ய வில்லை. பெரியார் வேண்டாம் என்று தான் விமர்சனம் செய்கின்றேன்.

    பெரியார் பெரியார் என்று பேசுகிறார்கள். ஆனால் பெரியார் பேசியதை பேச மறுக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் தென் மாநில கிளையை பெரியார் தலை மையில் உருவாக்கியது. சிறையில் இருந்த முத்துராமலிங்கத் தேவர், நல்லகண்ணு போன்ற தலைவர்கள் போல பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ், பெரியார் ஆகியோர் சிறையில் இல்லை.

    என்னை ஒன்று தான் செய்ய முடியும். வழக்கை போடலாம். சிறையில் போடலாம் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. கூட்டத்தில் தொடர்ந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை பார்த்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் பாதிக்க ப்பட்டவன் போறானா? பணம் போகிறதா என்று தெரியவில்லை.

    இப்போது தமிழகத்தில் பணம் இப்படி தான் போகி றது. இன்னும் ஒன்றை ஆண்டுகளில் 2026-ம்ஆண்டு புதிய அரசியல் படைப்போம். இனி என்னி டம் இருந்து தப்பிக்க முடியாது. சட்ட நகல் எரித்த பெரியார் நவம்பர் 26-ம் தேதி தி.மு.க சட்ட நகல் எரிப்பு நாள் என்று கொண்டாடி பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடு வதை திசை மாற்றுகிறார்கள்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என வரும் போது தி.மு.க. குதிப்பது என்ன? இந்த நடைமுறையை ஆதரித்து பேசியது தி.மு.க.வின் தலை வராக இருந்த 1971ம் ஆண்டு கருணாநிதி தான் ஓரே நாடு ஓரே தேர்தல் வரவேற்று பேசினார். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் ஒரே நாடு, ஓரே மதம், கட்சி ஆகிய கோட்டுப்பாடுகளை வரவேற்று பேசியவர் பெரியார்.

    ஓரே நாடு, ஓரே கட்சி, ஓரே மதம், வேண்டும் என்று பெரியார் எழுதியது இருக்கிறது. பா.ஜ.க. பி டீம் நாம் தமிழர் கட்சி என்றால், அப்போது ஏ டீம் யாரு, அது தி.மு.க. தான். அதனால் அதை ஒழிக்க வேண்டும்.

    5 நேரம் தொழும் இஸ்லாமிய மக்கள் தொழும் போது ஒருமுறை ஒரு நொடியில் எங்களுக்காக வெற்றி பெற துவா செய்யுங்கள் என்று கேட்டு கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×