search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிரட்டல்
    X
    மிரட்டல்

    ஓசூரில் பா.ஜனதா நிர்வாகிக்கு கொலை மிரட்டல்

    ஓசூரில் பா.ஜனதா நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சீனிவாசன் என்பவருக்கு மர்மநபர் ஒருவர் போன் மூலம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அவர் ஒசூர் ஏ.எஸ்.பி.யிடம் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளார்.

    ஓசூர் பஸ்தி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 55) இவர் பா.ஜ.க.வில் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளராக பதவியில் உள்ளார்.

    இவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் அவரிடம் ஆபாச வார்த்தைகளால் திட்டி படுகொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.

    ஓசூரில் இதுவரை நடந்த கொலைகளை விட மிகவும் பயங்கரமான முறையில் கொலை செய்து விடுயவதாக மிரட்டியதால் சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சமடைந்தனர்.

    இதையடுத்து அவர், பாஜ.க. நிர்வாகிகள் மற்றும் கட்சியினருடன் ஓசூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என புகார் அளித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஏ.எஸ்.பி. தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×