search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சான்றிதழ் பெறும் கதிர் ஆனந்த்
    X
    சான்றிதழ் பெறும் கதிர் ஆனந்த்

    திமுக தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி - கதிர் ஆனந்த்

    வேலூர் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் கதிர் ஆனந்த், இந்த வெற்றி தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. துவக்கத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடும் போட்டி நிலவியது.

    இறுதியில், மாலை 3.30 மணி நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

    இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியில் நான் பெற்ற வெற்றி, ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.

    வேலூர் தொகுதியை தி.மு.க. கைப்பற்றியதன் மூலம் மக்களவையில்  தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×