search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக-பா.ம.க. கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாது: ப.சிதம்பரம் பேச்சு
    X

    அதிமுக-பா.ம.க. கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாது: ப.சிதம்பரம் பேச்சு

    பாரதீய ஜனதாவுக்கு துணைபோகும் அதிமுக-பா.ம.க. கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ப.சிதம்பரம் பேசியுள்ளார். #PChidambaram #pmk #admk #congress

    சென்னை:

    மத்திய அரசின் ரபேல் ஊழலை கண்டித்தும், ஜி.எஸ்.டி., பணமதிப்பு இழப்பு உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை விளக்கியும் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருவான்மியூரில் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    மோடி தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சிறு, குறு தொழில் துறை உள்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படும் வகையில் வருமான வரி, ஜி.எஸ்.டி., சுங்கவரி ஆகியவற்றில் இருந்து நோட்டீசுகளை அனுப்பி கதறவைக்கின்றனர். இது தான் வரி பயங்கரவாதம்.

    ஜி.எஸ்.டி. வரியை சிதைத்ததால் ஏராளமான சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. பொருளாதாரரீதியாக இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு பின்னாக தள்ளி இருக்கிறது பா.ஜ.க. அரசு. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 31 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு ஏற்றுமதி இருந்தது. இதை கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு தாண்டியதே இல்லை. சமூக நீதி கட்சி என்று சொல்லும் பா.ம.க., பா.ஜ.க. கூட்டணிக்கு சென்றது அதைவிட கேவலமானது.

    ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்று கூறும் பா.ஜ.க.வுக்கு துணைபோகும் அ.தி.மு.க., பா.ம.க.வை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் ஒருபோதும் வரவேற்பு இருக்காது.


    மாணவர்கள், விவசாயிகள், குடும்ப தலைவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் தெரிவித்த கருத்துகள், கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையாக வெளிவரும். நாங்கள் செய்ய முடிந்தவைகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வோம். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு முன்பு தந்ததுபோல 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றியை தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், விஜயதரணி எம்.எல்.ஏ., தென்சென்னை மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார்.

    மாங்கா சேகர், தரமணி கோபி, நாச்சிக்குளம் சரவணன், கோடம்பாக்கம் ராஜசேகர், விருகை ராமசந்திரன், சைதை முத்தமிழ், கிண்டி லோகநாதன், கோபால் சுந்தரம், ஆதிநாராயணன், இஸ்மாயில்

    அடையார் துரை, சாந்தி, மலர்கொடி, மகேஷ்வரி, மயிலை நாராயணன், திருவான்மியூர் சீத்தாராமன், காலனி சரவணன், ராயப்பேட்டை ஆரிப், சைதை கோகுல், சைதை சசிகுமார், பி.டி.சி. ஏழுமலை, நொச்சிக்குப்பம் பாண்டியன், மயிலை தாமஸ், அப்பு ஜெயபால், சீனிவாசபுரம் ரகுகுமார், வக்கீல்கள் சித்தார்த்தன், மயிலை பாலு, மீனா வெங் கட்ராமன், சுசீலா கோபாலகிருஷ்ணன், மகேஸ்வரி, கோட்டூர் ஜான்சன், விக் னேஷ்வரன்,

    திருவான்மியூர் கதிரேசன், பழனி, சீத்தாராமன், தரமணி சீனு,, அடையார் மாதவன், தங்கராஜ், பட்டினபாக்கம் பன்னீர் செல்வம், கவுரிசங்கர், தங்கம், விஜி, சிவகுமார், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். #PChidambaram #pmk #admk #congress 

    Next Story
    ×