என் மலர்
மத்திய பட்ஜெட் - 2022
புதுடெல்லி:
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாதுகாப்பு துறையில் இறக்குமதிகள் குறைக்கப்படும். இத்துறையில் சுயசார்பு இந்தியாவை உருவாக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பாதுகாப்பு துறைக்கு தேவையான ராணுவ தளவாடங்களில் 60 சதவீதத்தை உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடுத்தர மக்களின் வீட்டு வசதி திட்டங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
2022-2023-ம் நிதியாண்டில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3.8 கோடி குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் 2023-க்குள் 2 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு ரெயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரெயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை அமல்படுத்தப்படும். போக்குவரத்து வசதிகளுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்த ரெயில்கள் கொண்டுவரப்படுகின்றன.
சிறந்த ஆற்றல் திறன் கொண்ட புதிய தலைமுறை வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 100 பிரதம கதி சக்தி ரெயில் முனையங்கள் அமைக்கப்படும்.
சிறு விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரெயில்வே புதிய தயாரிப்புகளை உருவாக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... 5ஜி மொபைல் சேவைகள் கொண்டு வரப்படும்- மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு






