என் மலர்
இந்தியா

கோப்பு படம்
பாதுகாப்பு துறையில் இறக்குமதியை குறைக்க முடிவு
பாதுகாப்பு துறைக்கு தேவையான ராணுவ தளவாடங்களில் 60 சதவீதத்தை உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புதுடெல்லி:
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாதுகாப்பு துறையில் இறக்குமதிகள் குறைக்கப்படும். இத்துறையில் சுயசார்பு இந்தியாவை உருவாக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பாதுகாப்பு துறைக்கு தேவையான ராணுவ தளவாடங்களில் 60 சதவீதத்தை உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.
Next Story






