என் மலர்tooltip icon

    மேகாலயா

    • தேர்தல் வெற்றியைத்தொடர்ந்து மேகாலய ஆளுநர் பாகு சௌஹானை நேரில் சந்தித்தார் கான்ராட் சங்மா.
    • பாஜக மற்றும் மற்ற கட்சி ஆதரவு தேசிய மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது.

    வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதலமைச்சர் கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

    அங்கு 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 27ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி, 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலை என்.பி.பி. கட்சியும், பா.ஜ.க.வும் தனித்தனியே சந்தித்தன. இந்தத் தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின.

    பதிவான வாக்குகள், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இங்கு 59 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடந்ததால் தனிப்பெரும்பான்மை பெற 30 இடங்கள் தேவை. ஆனால், இங்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தது போலவே எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.

    தற்போதைய ஆளும் கட்சியான என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

    இந்தநிலையில், மேகாலயாவில் ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை உள்ளதாக அக்கட்சியின் தேசிய மக்கள் கட்சி தலைவரும், முதலமைச்சருமான கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றியைத்தொடர்ந்து மேகாலய ஆளுநர் பாகு சௌஹானை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க கான்ராட் சங்மா இன்று உரிமை கோரினார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கான்ராட் சங்மா, பாஜக எங்களுக்கு முழு ஆதரவைக் கொடுப்பதாக அறிவித்துள்ளது. அதனால் ஆளுநர் பாகு சௌஹானைச் சந்தித்து ஆட்சி அமைக்க நாங்கள் உரிமை கோரினோம். ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்தோம்.

    பாஜக மற்றும் மற்ற கட்சி ஆதரவு தேசிய மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

    • மேகாலயாவில் உள்ள துரா என்ற நகரில் இருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு 29 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.

    யூகா:

    மேகாலயா மாநிலத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று காலை 6.57 மணிக்கு மேகாலயாவில் உள்ள துரா என்ற நகரில் இருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு 29 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.

    முன்னதாக வடகிழக்கு பகுதியான மணிப்பூர் அருகே உள்ள நோனி பகுதியில் இன்று அதிகாலையில் 2.46 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது.

    சுமார் 5 மணி நேரத்தில் வடகிழக்கு பகுதியில் பதிவான 2 நிலநடுக்கங்களால் அப்பகுதி மக்கள் சற்று பீதியடைந்தனர்.

    • பூமிக்கடியில் 25.கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

    மேகாலயாவின் தூர நகரில் இருந்து 27 கி.மீ தொலைவில் இன்று காலை 9.40 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    பூமிக்கடியில் 25.கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதை அடுத்து, பீதியமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

    • வாரிசு அரசியலின் பிடியில் இருந்து மேகாலயா மாநிலம் விடுதலை பெற வேண்டும்.
    • தமது நாட்கள் எண்ணப்படுவதாக கூறிய பிரதமர், மக்கள் தாமரை தொடர்ந்து மலரும் என வாழ்த்துவதாக கூறினார்.

    ஷில்லாங்:

    மேகாலயா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இதனை ஒட்டி, ஷில்லாங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாலை பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பேரணியில், இரு புறமும் திரண்டு நின்றிருந்த தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர், பிரசார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, வாரிசு அரசியலின் பிடியில், இருந்து மேகாலயா மாநிலம் விடுதலை பெற வேண்டும் என்றார். மக்களால் நிராகரிக்கப்பட்டு விரக்தியின் குழியில் உள்ள சிலர், தமது நாட்கள் எண்ணப்படுவதாக கூறிய பிரதமர், ஆனால், மக்கள் தாமரை தொடர்ந்து மலரும் என வாழ்த்துவதாக கூறினார்.

    மேகாலயாவில், எங்கு பார்த்தாலும் பாஜக காணப்படுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, சமதள பகுதி முதல் மலைப்பகுதி வரை கிராமம் முதல் நகரம் வரை எல்லா இடங்களிலும் தாமரை மலர்ந்து கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

    • பாஜக ஆட்சி செய்து வரும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து என்னால் பேச முடியாது.
    • இந்தியாவில் பாஜக ஆட்சி செய்து வரும் 9 ஆண்டுகளில் எந்த கிறிஸ்தவ ஆலயங்களும் இடிக்கப்படவில்லை. இவை வெற்று அரசியல் பிரசாரம்தான்.

    மேகாலயாவில் வருகிற 27ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் மேகாலயா மாநில பாஜக தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பாஜக கட்சியில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எந்த தடையும் இல்லை. மேகாலயாவில் அனைத்து தரப்பு மக்களும் மாட்டிறைச்சி சாப்பிட்டு வருகிறார்கள். நானும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன். எங்களின் சொந்த உணவு பழக்க வழக்கங்களையே நாங்கள் கடை பிடித்து வருகிறோம். அதை பின்பற்றுவதற்கு எந்த தடையும் கிடையாது. பாஜக ஜாதி, மதம் பார்க்காது.

    யாராலும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தடுக்க முடியாது. எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்ற எந்தவிதமான கட்டுப்பாடுகளும் எங்களுக்கு இல்லை. ஜாதி, மதம், பழக்க வழக்கங்கள் சார்ந்து பாஜக எந்த காரணத்தை கொண்டும் யோசிக்காது.

    பாஜக ஆட்சி செய்து வரும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து என்னால் பேச முடியாது. நாங்கள் இருப்பது மேகாலயா. இங்குள்ள கலாச்சார முறையை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். இங்கு பெரிய கறிக்கடைகள் இயங்கி வருகின்றன. அந்த கடைகளில் மாட்டுக்கறி, பன்றி இறைச்சி ஆகியவை வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    பாஜக கிறிஸ்தவர்களுக்கு எதரான கட்சி என்று சில அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். பாஜக கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி இல்லை. இந்தியாவில் பாஜக ஆட்சி செய்து வரும் 9 ஆண்டுகளில் எந்த கிறிஸ்தவ ஆலயங்களும் இடிக்கப்படவில்லை. இவை வெற்று அரசியல் பிரசாரம்தான்.

    மேகாலயா கிறிஸ்தவர்கள் அதிக அளவில் வசிக்கும் மாநிலம். இங்குள்ள தேவாலயங்களுக்கு அனைத்து தரப்பினருமே வருகிறார்கள். கோவா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் கிறிஸ்தவ மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அந்த மாநிலங்களிலும் ஒரு தேவாலயம் கூட தாக்கப்படவில்லை. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜக, கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என்ற கருத்தை பரப்பி வருகின்றன. ஆனால் அவை எல்லாமே பொய் பிரசாரம் தான்.

    நானும் ஒரு கிறிஸ்தவன்தான். நான் தேவாலயத்துக்கு செல்லக்கூடாது என்று யாருமே என்னிடம் கூறியது கிடையாது. மேகாலயாவில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்த தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேகாலயாவில், இம்மாதம் 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
    • மேகாலயாவில் எந்த வளர்ச்சியும் இல்லை.

    ஷில்லாங் :

    வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், இம்மாதம் 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசும் போட்டியிடுகிறது.

    இந்தநிலையில், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மேகாலயாவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    மேகாலயாவில் எந்த வளர்ச்சியும் இல்லை. மருத்துவ கல்லூரி இல்லை. நல்ல ஆஸ்பத்திரி இல்லை. ஆனால் ஊழல் மட்டும் இருக்கிறது.

    மேகாலயாவில் நடக்கும் கான்ராட் சங்மா அரசு, எந்த வளர்ச்சி பணியும் மேற்கொள்ளவில்லை. ஊழலில்தான் ஈடுபடுகிறது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் இந்த அரசை மாற்றி, மேகாலயாவை வளர்ச்சி அடைய செய்ய முடியும்.

    மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள். டெல்லியில் இருந்து பா.ஜனதா ஆட்சியை அகற்றுகிறோம்.

    வெளியில் இருந்து வரும் யாரும் உங்கள் மீது குடியுரிமை திருத்த சட்டத்தையோ, தேசிய குடிமக்கள் பதிவேட்டையோ திணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மேற்கு வங்காளத்தில் வன்முறைகள், ஊழல்கள் அதிகரித்து உள்ளன.
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.

    சில்லாங் :

    சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மேகாலயாவில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். சில்லாங்கில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக விமர்சித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் எல்லாம் தங்களுக்கு தெரியும் என்று நினைக்கும் வர்க்கக் கொடுமைக்காரனைப் போன்றவை ஆகும். தாங்கள் அனைத்தையும் புரிந்து வைத்திருப்பதாக நினைக்கிறார்கள். யாரையும் மதிப்பதும் இல்லை. அவர்களுக்கு எதிராக நாம் இணைந்து போராட வேண்டும். மேகாலயாவின் மொழி, கலாசாரம் மற்றும் வரலாற்றை பா.ஜனதா அழிக்க பார்க்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அதை அனுமதிக்காது.

    நான் உங்களுடைய பாரம்பரிய ஜாக்கெட்டை அணிந்திருக்கிறேன். உங்கள் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மதிக்கும் வகையில் இதை அணிந்துள்ளேன். எனது செயல்கள் இந்த ஜாக்கெட்டில் பிரதிபலிக்கின்றன. ஆனால், பிரதமர் வருவதைப் போல நான் இங்கு வந்திருந்தால், இந்த ஜாக்கெட்டை அணிந்து கொண்டு, உங்கள் மதம், கலாசாரம், வரலாறு மற்றும் மொழியைத் தாக்கினால் நான் உங்களை அவமதித்ததாகவே இருக்கும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'திரிணாமுல் காங்கிரசின் வரலாறு உங்களுக்கு தெரியும். மேற்கு வங்காளத்தில் வன்முறைகள், ஊழல்கள் அதிகரித்து உள்ளன. அவர்களது பாரம்பரியத்தை நீங்கள் அறிவீர்கள். கோவா தேர்தலில் மிகப்பெரிய தொகையை அவர்கள் செலவழித்தார்கள். பா.ஜனதாவுக்கு உதவுவதற்கே இந்த யோசனை' என சாடினார்.

    இதே திட்டத்தை மேகாலயாவிலும் பின்பற்றுவதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, மேகாலயாவில் பா.ஜனதா வலுவடைந்து ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே அந்த கட்சியின் திட்டம் என்றும் கூறினார்.

    • திரிபுராவில் ஆளும் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள ஐ.பி.எப்.டி. கட்சி முடிவு செய்துள்ளது.
    • திரிபுராவில் கூட்டணி விவகாரங்களை கவனித்துக் கொள்ள பா.ஜனதாவில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த 3 மாநிலங்களிலும் தேர்தல் பணியில் பாரதிய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது. மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து பா.ஜனதா விலகி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதா தனித்து போட்டியிடுவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2017-ம் ஆண்டும் அதே கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. இப்போது 2-வது முறையாக தனித்து போட்டியிடுகிறது.

    அதே நேரத்தில் நாகாலாந்தில் என்.டி.பி.பி. கட்சியுடன் கூட்டணியை தக்க வைத்துள்ளது. அங்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டை போலவே பா.ஜனதா 20 இடங்களிலும், என்.டி.பி.பி. கட்சி 40 இடங்களிலும் போட்டியிடுகிறது.

    திரிபுராவில் ஆளும் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள ஐ.பி.எப்.டி. கட்சி முடிவு செய்துள்ளது. இதையடுத்து அங்கு கூட்டணி விவகாரங்களை கவனித்துக் கொள்ள பா.ஜனதாவில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

    • மேகாலயாவில் அடுத்த மாதம் 27-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
    • மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரசால் மட்டுமே நல்லாட்சி அளிக்க முடியும்.

    ஷில்லாங்:

    வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், அடுத்த மாதம் 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்தநிலையில், அங்குள்ள நார்த் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சி தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரசால் மட்டுமே நல்லாட்சி அளிக்க முடியும். இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் ஆகியோரின் கனவுகளை திரிணாமுல் காங்கிரஸ்தான் நனவாக்கி வருகிறது.

    மேகாலயாவில், மக்களுக்காக, மக்களால், மக்களின் அரசை அமைக்க விரும்புகிறோம். பா.ஜனதா கட்சி இரட்டை முகம் கொண்டது. தேர்தலுக்கு முன்பு ஒன்று சொல்லும். தேர்தலுக்கு பிறகு வேறு எதையாவது செய்யும். பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு நிதி கொடுக்கிறது. இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை ஆதரியுங்கள் என்று அவர் பேசினார்.

    • மேகாலயாவில் நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது 3.2 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

    ஷில்லாங்:

    மேகாலயா மாநிலம் நாங்போ பகுதியின் வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் நேற்று நள்ளிரவு 11.28 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    நேற்று காலை அரியானாவில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது.

    தொடர்ந்து வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டதாக தகவல்.
    • வங்காளதேச பாதுகாப்பு படையினரிடம் சிறுவன் ஒப்படைப்பு.

    ஷில்லாங்:

    வங்காளதேசத்தை ஒட்டி அமைந்துள்ள மேகாலயா மாநிலத்தின் தெற்கு கரோ ஹில்ஸ் மாவட்ட எல்லைக்குள் சிறுவன் ஒருவன் சுற்றித் திரிந்துள்ளான். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் காணப்பட்ட அந்த சிறுவனை பிடித்த எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது வங்காளதேச நாட்டைச் சேர்ந்த தாம் வேண்டுமென்றே இந்த பகுதிக்குள் நுழையவில்லை என்றும், கவன குறைவாக வழி தவறி வந்து விட்டதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான்.

    இதையடுத்து நல்லெண்ண நடவடிக்கையாக, வங்காளதேச பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் அந்த சிறுவன் ஒப்படைக்கப் பட்டதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். 


    இதுகுறித்து பேசிய இந்திய பாதுகாப்பு படை அதிகாரி பிரதீப் குமார், இது போன்று இந்திய பகுதிக்குள் நுழைபவர்கள் சிறார்களாகவும், அப்பாவிகளாகவும் இருக்கும் நிலையில் இரு அண்டை நாடுகளின் எல்லை பாதுகாப்பு படையினர் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

    இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்தவும், பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும் இது போன்ற பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 8 ஆண்டுகளில் வன்முறை சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்து விட்டன.
    • பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல் 60 சதவீதம் சரிந்து விட்டது.

    ஷில்லாங் :

    இந்தியாவின் 8 வட கிழக்கு மாநிலங்களான அருணாசலபிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகியவற்றின் நலனுக்காக, குறிப்பாக அவற்றின் பொருளாதார, சமூக மேம்பாட்டுக்காக 1972-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி வடகிழக்கு கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது.

    இந்த வட கிழக்கு கவுன்சில் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி அதன் பொன்விழா கொண்டாட்டம், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடியுடன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் கலந்து கொண்டார்.

    இந்த விழாவில் பேசும்போது அமித்ஷா கூறியதாவது:-

    வட கிழக்கு மாநிலங்கள் என்றால் வன்முறை, பிரிவினைவாதம் என்றுதான் ஒரு காலத்தில் அறியப்பட்டன. ஆனால் (மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிற) கடந்த 8 ஆண்டுகளில் வன்முறை சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்து விட்டன. பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல் 60 சதவீதம் சரிந்து விட்டது. வன்முறை சம்பவங்களில் பொதுமக்கள் பலியாவது 89 சதவீதம் குறைந்திருக்கிறது.

    வட கிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் அமைதியை ஏற்படுத்தியது.

    கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி 50 முறை இங்கு வந்துள்ளார். இந்த பிராந்திய வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டியவரும் அவர் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×