search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வட கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தியது பிரதமர் மோடி அரசுதான்: அமித்ஷா
    X

    வட கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தியது பிரதமர் மோடி அரசுதான்: அமித்ஷா

    • கடந்த 8 ஆண்டுகளில் வன்முறை சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்து விட்டன.
    • பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல் 60 சதவீதம் சரிந்து விட்டது.

    ஷில்லாங் :

    இந்தியாவின் 8 வட கிழக்கு மாநிலங்களான அருணாசலபிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகியவற்றின் நலனுக்காக, குறிப்பாக அவற்றின் பொருளாதார, சமூக மேம்பாட்டுக்காக 1972-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி வடகிழக்கு கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது.

    இந்த வட கிழக்கு கவுன்சில் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி அதன் பொன்விழா கொண்டாட்டம், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடியுடன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் கலந்து கொண்டார்.

    இந்த விழாவில் பேசும்போது அமித்ஷா கூறியதாவது:-

    வட கிழக்கு மாநிலங்கள் என்றால் வன்முறை, பிரிவினைவாதம் என்றுதான் ஒரு காலத்தில் அறியப்பட்டன. ஆனால் (மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிற) கடந்த 8 ஆண்டுகளில் வன்முறை சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்து விட்டன. பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல் 60 சதவீதம் சரிந்து விட்டது. வன்முறை சம்பவங்களில் பொதுமக்கள் பலியாவது 89 சதவீதம் குறைந்திருக்கிறது.

    வட கிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் அமைதியை ஏற்படுத்தியது.

    கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி 50 முறை இங்கு வந்துள்ளார். இந்த பிராந்திய வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டியவரும் அவர் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×