search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எல்லா இடங்களிலும் தாமரை மலர்ந்து கொண்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்
    X

    எல்லா இடங்களிலும் தாமரை மலர்ந்து கொண்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்

    • வாரிசு அரசியலின் பிடியில் இருந்து மேகாலயா மாநிலம் விடுதலை பெற வேண்டும்.
    • தமது நாட்கள் எண்ணப்படுவதாக கூறிய பிரதமர், மக்கள் தாமரை தொடர்ந்து மலரும் என வாழ்த்துவதாக கூறினார்.

    ஷில்லாங்:

    மேகாலயா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இதனை ஒட்டி, ஷில்லாங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாலை பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பேரணியில், இரு புறமும் திரண்டு நின்றிருந்த தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர், பிரசார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, வாரிசு அரசியலின் பிடியில், இருந்து மேகாலயா மாநிலம் விடுதலை பெற வேண்டும் என்றார். மக்களால் நிராகரிக்கப்பட்டு விரக்தியின் குழியில் உள்ள சிலர், தமது நாட்கள் எண்ணப்படுவதாக கூறிய பிரதமர், ஆனால், மக்கள் தாமரை தொடர்ந்து மலரும் என வாழ்த்துவதாக கூறினார்.

    மேகாலயாவில், எங்கு பார்த்தாலும் பாஜக காணப்படுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, சமதள பகுதி முதல் மலைப்பகுதி வரை கிராமம் முதல் நகரம் வரை எல்லா இடங்களிலும் தாமரை மலர்ந்து கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

    Next Story
    ×