என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    தம்பதியர் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அரவணைப்பதன் மூலம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
    தம்பதியர் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அரவணைப்பதன் மூலம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டிப்பிடிப்பது மன அழுத்தத்தை போக்க வழிவகை செய்யும் என்பதும் தெரியவந்துள்ளது. வாழ்க்கை துணையுடன் செலவிடும் நேரம் மகிழ்ச்சிக்குரியதாகவும், அந்த மகிழ்ச்சி பின் தொடர்வதற்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கும் விதமாகவும் ‘கட்டிப்பிடித்தல்’ பழக்கம் அமைந்திருக்கிறது. கட்டிப்பிடிப்பதால் மேலும் சில நன்மைகளும் இருக்கின்றன.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் அரவணைப்புக்கு இருக்கிறது. ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்கும்போது ஆக்ஸிடோஸின் ஹார்மோன் அதிக அளவு வெளிப்படும். நோய் தொற்றை எதிர்த்து போராட உதவும் ஹார்மோன்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

    கட்டிப்பிடிப்பது நிம்மதியான தூக்கத்துக்கும் வழிவகுக்கும். ஒருவருக்கொருவர் நேசத்துடன் அரவணைக்கும்போது மூளையின் செயல்பாடுகளில் சுறுசுறுப்பு மிகும். மூளை செல் களுக்கு பாதுகாப்பான சூழலும் உண்டாகும். 10 நிமிடங்கள் கட்டிப்பிடிப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவும். நன்றாக தூக்கத்தையும் வரவழைக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு கட்டிப்பிடித்தல் பலன் கொடுக்கும். நிம்மதியாக தூங்கி எழ வழிவகுக்கும்.

    கட்டிப்பிடிக்கும்போது துணையுடனான நெருக்கமும், பாசமும் அதிகரிக்கும். அதற்கு ஆக்ஸிடோஸின் ஹார்மோன் வழிவகை செய்யும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் உணர்வையும், இணக்கமான போக்கை கடைப்பிடிக்கும் தன்மையையும் உண்டாக்கும்.

    ஆக்ஸிடோஸின் ஹார்மோன் நாள்பட்ட வலியை குறைக்கவும் உதவும். பொதுவாக ஆக்ஸிேடா ஸின் ஹார்மோன் குறைவாக உள்ளவர்கள் நாள்பட்ட வலியால் அவதிப்படுவார்கள். கட்டிப்பிடிப்பதன் மூலம் ஆக்ஸிடோஸின் ஹார்மோன் அதிகரிப்பதால் உடல் நலனும் மேம்படும்.
    பெண்களின் வயதையும்-தாய்மையையும் ஒப்பீடு செய்துஎபார்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணங்கள் தான் தாய்மை அடைவதற்கு பிரச்சனையாக இருக்கின்றன.
    உலகளாவிய பல்வேறு ஆய்வுகள் மூலம், பெண்கள் தாய்மையடைவதற்கு 20 முதல் 30 வயதே மிகச் சரியானது என்று கண்டறிந்திருக்கிறார்கள். பெண்களின் வயதையும்-தாய்மையையும் ஒப்பீடு செய்துபார்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் இதர உறுப்புகளைவிட வேகமாக முதிர்ச்சி அடைந்துவிடுவதுதான் அதற்கு முக்கிய காரணம். இனப்பெருக்க உறுப்புகளின் முதிர்ச்சி, அவர்களது தாய்மைக்கு மிகப்பெரிய தடையாகிவிடுகிறது. அதனால்தான் இனப்பெருக்க உறுப்புகள் முழு செயல்பாட்டில் இருக்கும் 20 முதல் 30 வயது, தாய்மைக்கு ஏற்ற வயதாக கூறப்படுகிறது.

    முப்பது வயதுக்குப் பிறகு கருப்பை முதிர்ச்சியடைந்து கருத்தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது. நாற்பது வயதுக்கு மேல் மாதவிலக்கு நிற்கும் சூழல் தொடங்குவதால் கருத்தரிக்கும் வாய்ப்பு முடிவுக்கு வந்துவிடக்கூடும். இளம் வயதில் பெண்களின் சினைமுட்டைகள் தரமானதாக இருக்கும். 30 வயதுக்கு மேல் முட்டையின் தரம் குறையும் சூழலும், முதிர்ந்து வெடித்து வெளியே வருவதில் தாமதமும் ஏற்படலாம். இன்னொரு விஷயம் ஆண்கள் நாற்பது வயதை தொடும்போது அவர்களது உயிரணு எண்ணிக்கை, ஆற்றல் ஆகியவை குறைந்து போவதால் அதுவும் கருத்தரிப்பில் சிக்கலை ஏற்படுத்தலாம்.

    இரண்டாவது குழந்தை உடனே தேவையில்லை என்று கருதும் தாய்மார்கள், முதல் குழந்தை பிறந்த உடன் கருத்தடை சாதனமான காப்பர்-டி பொருத்திக்கொள்கிறார்கள். முதல் குழந்தை ஓரளவு வளர்ந்த பின்பு இரண்டாவதாக தாய்மையடைய விரும்பும்போது காப்பர்-டியை அகற்றிக்கொள்கிறார்கள். ஆனால் பெரும்பாலான பெண்கள் அகற்றிய அடுத்த ஒருசில மாதங்களிலே உடனடியாக தாங்கள் தாய்மையடைந்துவிடுவோம் என்று எதிர்பார்க்கிறார்கள். எல்லோருக்கும் அவ்வாறு அமைந்துவிடுவதில்லை. ஆனால் காப்பர்-டியை அகற்றி ஒரு வருடம் ஆகியும் தாய்மையடையாவிட்டால் மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.

    மதுப்பழக்கம் சில பெண்களிடம் இருக்கிறது. ஒருசில பெண்கள் கொஞ்சமாக, எப்போதாவது குடிப்பதாக சொல்கிறார்கள். மதுவில் எதை குடித்தாலும், எந்த அளவில் குடித்தாலும் அது அவர்கள் தாய்மையடையும்போது கருவின் வளர்ச்சியில் குறைபாட்டை ஏற்படுத்தும். கர்ப்பிணியாக இருக்கும்போது குடித்தால் மதுவில் இருக்கும் கெடுதியான ரசாயனங்கள் தாயின் ரத்தத்தின் வழியாக, வயிற்றில் இருக்கும் குழந்தையின் ரத்த ஓட்டத்தில் கலந்து அதற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் மதுப்பழக்கத்தால் ஆண்களைவிட அதிக பாதிப்பு பெண்களுக்கு ஏற்படும். அதனால் பெண்கள் மதுப்பழக்கத்தில் இருந்துவிடுபடவேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம். மது அருந்தும் தம்பதியினர் தாய், தந்தையாகும் வாய்ப்பும் குறைந்துவிடும். அவர்களால் இல்லற இன்பத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியாது.
    கொரோனா தொற்றுக்கு ஆளான தாயிடம் இருந்து சிசுவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பரிமாற்றம் ஆவதை ஒரு ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    புதுடெல்லி :

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான 16 கர்ப்பிணிகளை அடிப்படையாக வைத்து விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘தி அனிமல்ஸ்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

    இந்த ஆய்வில் சிங்கப்பூரில் 4 மூன்றாம் நிலை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட 16 கர்ப்பிணிகளிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

    அந்த ஆய்வில், மாதிரிகளை முறையாக ஆய்வு செய்ததில் தாயிடம் இருந்து குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது நஞ்சுக்கொடி வாயிலாக கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

    பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு கொரோனாவின் தாக்கம் மிதமாகவே இருந்தது. 2 பேர் உடல் பருமன் மற்றும் வயது மூப்பு காரணமாக ஆபத்து காரணிகளை கொண்டிருந்தனர்.

    ஒரு கர்ப்பிணிக்கு கொரோனா தாக்கம் 80 நாட்கள் வரை நீடித்தது.

    தொப்புள்கொடி ரத்தத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருட்களை கண்டுபிடிக்க முடிந்தது. எனவே தாயிடம் இருந்து சிசுவுக்கு நோய் எதிர்ப்பு பொருள் பரிமாற்றம் நடைபெற முடியும்.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறி உள்ளனர்.
    நாப்கின்களில் பல பிராண்டுகள் இருந்தாலும் அதுபற்றிய புரிதல் பெரும்பாலான பெண்களுக்கு இல்லை. மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.
    “பெண்கள் கடைக்கு சென்று மாதவிடாய் கால நாப்கின் வாங்கும் விஷயத்தில் அசவுகரியங்கள் இருக்கத்தான் செய்கிறது. வீட்டிலுள்ள ஆண்களிடம் நாப்கின் வாங்கி தர சொல்வதற்கு ஒருவித தயக்கம் இருக்கிறது. பெரும்பாலும் பெண்கள்தான் நேரடியாக சென்று வாங்க வேண்டி இருக்கிறது. கடையில் கூட்டமாக இருக்கும்போது கேட்பதற்கும் சில பெண்கள் தயங்குகிறார்கள். நாப்கினை பேப்பரில் மடித்து வாங்கி வீட்டுக்கு கொண்டு வரும்போது மன நெருக்கடியையும் எதிர்கொள்கிறார்கள்.

    “நாப்கின்களில் பல பிராண்டுகள் இருந்தாலும் அதுபற்றிய புரிதல் பெரும்பாலான பெண்களுக்கு இல்லை. தங்களுக்கு பொருத்தமான நாப்கின்களை தேர்வு செய்வதற்கும் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் தேவையற்ற சரும பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். நாப்கின்களை சீரான இடைவெளியில் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதனை அசவுகரியமாக கருதி நீண்ட நேரம் பயன்படுத்தவும் செய்கிறார்கள். நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும் என்பது சுகாதார நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

    காட்டன் நாப்கினைகளை உபயோகித்தால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அதற்கு சிரமப்பட்டு நிறைய பெண்கள் காட்டன் நாப்கின்களை உபயோகிப்பதில்லை. மற்ற நாப்கின்களை விட காட்டன் நாப்கின்கள் சிறந்தது என்பது படித்த பெண்களுக்கு தெரிந்திருந்தாலும் அதனை உபயோகிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

    மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்களை நாப்கின் டெலிவரி செய்யும் கவர்களில் அச்சிட்டும் வழங்கி வருகிறார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள்:

    *மாதவிடாய் காலத்தில் பழங்கள், காய்கறிகளை வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுங்கள். அது உடல் ஆற்றல் திறனை அதிகரிக்க வழிவகை செய்யும்.

    *உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதும் முக்கியம். அதனால் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அது வலியை குறைக்க உதவும். இடுப்பு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.

    *டார்க் சாக்லேட்டையும் சாப்பிடலாம். அது பசியை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதோடு மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

    *மாதவிடாய் காலத்தில் பேரீச்சம் பழத்தையும் தவறாமல் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் இரும்பு சத்து மாதவிடாயின்போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடு செய்ய உதவும்.

    *மாதவிடாய் காலத்தில் உடல் சுத்தத்தை பராமரிப்பதும் முக்கியம். நாப்கின்களை அதிகபட்சம் 6 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும். 4 மணி நேரத்திற்குள் மாற்றுவது நல்லது. மாதவிடாய் கப்கள் உபயோகித்தால் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும்.

    *மாதவிடாயின்போது தினமும் இருமுறை குளிப்பதும் நல்லது. அது வலியை குறைக்கும். மன நிலையையும் மேம்படுத்த வழிவகை செய்யும்.

    *வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை மாதவிடாய் காலத்திலும் தவறாமல் பின் தொடர வேண்டும். உடல் இயக்கம் செயல்பாட்டில் இல்லாமல் போனால் வலி அதிகரிக்கும். குறைந்தபட்சம் நடைப்பயிற்சி மேற்கொள்வது வலியை குறைக்கும். மனதிற்கும் இதமளிக்கும்.

    * இரவில் தூங்க செல்லும்போது நாப்கின்களை அப்புறப்படுத்தக்கூடாது. துரித உணவுகள், உப்பு சேர்க்கப்பட்ட சிப்ஸ்களை அதிகம் உட்கொள்ளக்கூடாது. அவைகளை தவிர்ப்பது உடலில் திரவத்தின் இருப்பை அதிகரிக்க செய்யும்.

    * காபின் கலந்த பானங்களையும் தவிர்க்க வேண்டும். அதனை அதிகம் பருகுவது வலியை அதிகரிக்க செய்துவிடும்.

    *நாப்கின்களை உபயோகித்த பிறகு அதனை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். கழிவறையில் நாப்கினை போடுவதை தவிர்க்க வேண்டும்.

    *உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருந்தால் வலி அதிகரிக்கும். வலி அதிகம் இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    பிரசவத்துக்குப் பிறகு எடை அதிகரிப்பது ஏன்? அதைத் தவிர்க்க முடியாதா? என்ன சிகிச்சைகள் இருக்கின்றன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    தாய்மை அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தாலும், அதன் பிறகு ஏற்படும் எடை அதிகரிப்பு பெண்களை அதிகம் கவலை கொள்ளச் செய்துவிடுகிறது. பிரசவத்துக்குப் பிறகு எடை அதிகரிப்பது ஏன்? அதைத் தவிர்க்க முடியாதா? என்ன சிகிச்சைகள் இருக்கின்றன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    பொதுவாக பிரசவத்துக்குப் பிறகு உடல் சோர்வு, மனச்சோர்வு, குழந்தையை கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்புகளால் ஏற்படும் அழுத்தம் ஆகியவற்றால் தாயின் உடலில் அதிகரிக்கும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களாலும் உடல் எடை அதிகரிக்கிறது. பாலூட்டுவதால் தாய்மார்கள் இயல்பை விட அதிகளவு உணவு உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனாலும், முழு நேரம் ஓய்வில் இருப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது. பல சமயம் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகும் அதிக அளவு கலோரிகளை தொடர்ந்து உட்கொள்ளுவதாலும் அதிக உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை பின்பற்றுவதாலும் உடல் எடை அதிகரிப்பு தொடர்கிறது.

    இதேபோல் பிரசவத்துக்குப் பிறகு தொப்பை அதிகரிப்பதாக ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால், உடல் எடை முழுவதுமே அதிகரிக்கிறது என்பதே உண்மை. இப்போது பரவலாக கர்ப்ப காலத்தின்போது உடற்பயிற்சிகள், யோகா ஆகியவை செய்யப்படுகின்றன. அதேபோல பிரசவத்துக்குப் பிறகும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு சிக்கலும் இல்லாத சுகப்பிரசவமாக இருந்தால், பிரசவத்துக்குப் பின் வரும் நாட்களில் மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதாவது நடைப்பயிற்சி, வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளை இறுகச் செய்யும் பயிற்சிகள் ஆகியவற்றை செய்யலாம்.

    இத்தகைய உடற்பயிற்சிகள் தாய்மார்களின் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள தசை நார்களை இறுகச் செய்து பின்னாளில் கர்ப்பப்பை இறக்கம், தானாக சிறுநீர் வெளியேறுவது(Urinary Incontinence) போன்றவை ஏற்படாமலும் தவிர்க்கும்.பிரசவத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தாலோ அல்லது சிசேரியன் அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ 6 முதல் 8 வாரங்கள் கழித்து உடற்பயிற்சிகளை செய்யலாம். எந்தவொரு உடற்பயிற்சியை செய்வதற்கு முன்பும் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

    தாய்ப்பால் கொடுக்கும் நாட்களில் 2,500 கிலோ கலோரிகள் அளவிலான உணவு உட்கொண்டால் உடல் எடை இழப்பு ஏற்படாமல் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்ட முடியும். இதுவே தாய்மார்கள் 2,000- 2,300 கிலோ கலோரி உணவுகளை உட்கொண்டு வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மிதமான உடற்பயிற்சிகள் செய்யும்போது தாய்ப்பால் சுரப்பதில் தடை இல்லாமல் உடல் எடையும் குறைய வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு தாங்கள் உட்கொள்ளும் கலோரிகளின் அளவுகளை மேலும் குறைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்யும் போது உடலின் எடை வேகமாக குறைகிறது. மேலும் உடலில் உள்ள கலோரிகளை குறைக்க ஏரோபிக் பயிற்சிகள் எனப்படும் ஜாகிங், ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங், டான்ஸிங் ஆகியவற்றைச் செய்யலாம்.

    பிரசவத்துக்குப் பிறகு அதிகரிக்கும் எடையானது குறையாமல் இருப்பதாலும், அதிக அளவு உடல் உழைப்பு இல்லாததாலும் பிற்காலத்தில் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பது, சுவாசக் கோளாறுகள், மூட்டு தேய்மானம், பித்தப்பையில் கற்கள், நெஞ்சுவலி, பக்கவாதம் உள்ளிட்ட பல வகையான உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாம் உட்கொள்ளும் உணவுகளே 80% நமது உடல் எடையை தீர்மானிக்கின்றன. எனவே, உடல் எடையைக் குறைக்க முற்படும்போது முதலில் என்ன உட்கொள்கிறோம், எவ்வளவு உட்கொள்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள் கொழுப்புச்சத்து குறைந்த மீன் மற்றும் கடல் உணவுகள், கோழிக்கறி, பருப்புகள், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவை எடுத்துக் கொள்ளத் தகுந்தவை. கொழுப்புச்சத்து நிறைந்த பொரித்த உணவுகள், ஜங்க்ஃபுட் எனப்படும் பீட்சா, பர்கர், உப்புச்சத்து நிறைந்த பட்கெட் உணவுகள், இனிப்பு, பிஸ்கெட், மைதா பொருட்கள் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

    அதிகமான உடல் எடையோ, தொப்பையோ ஒரே நாளில் ஏற்படுவதல்ல. எனவே, அதை மருந்து மாத்திரையால் சில நாட்களில் கரைத்து விட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இவ்வகையான மாத்திரைகளை உட்கொள்வோருக்கு அதிக ரத்த அழுத்தம், பசியின்மை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு, தூக்கமின்மை, படபடப்பு, தலைசுற்றல், ஜீரணக் கோளாறு, இதயக் கோளாறு போன்றவை வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். எனவே, எடை, தொப்பையைக் குறைக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்ள நினைப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

    கர்ப்பிணி பெண்களில் சிலருக்கு கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய இயலாது. குறிப்பாக நஞ்சுப்பை (Placenta previa) கர்ப்பப்பையின் வாய் பகுதியில் இருந்தால் உடற்பயிற்சி செய்யும்போது ரத்தப்போக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு (Placenta previa) நடைப்பயிற்சி கூட சாத்தியப்படாமல் இருப்பதால் உடல் எடை அதிகமாகும்.

    சிலர் அவர் எடையில் இருந்து கூட 20 கிலோ எடை அதிகமாகக் கூட வாய்ப்புள்ளது. எனவே, அவர்களுக்கு உணவு கட்டுப்பாடுமுறை கற்று தரப்படுகிறது. பிரசவத்திற்கு பிறகு இவர்களும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு இருந்தால் உடல் எடையைக் குறைக்கலாம்!
    கர்ப்பகாலத்தில் பிரச்சனைக்குரிய தீர்வினை ஆரம்ப நிலையிலேயே கவனித்தால் எந்த நேரத்திலும் உங்க அசல் உடல் கட்டமைப்புக்குத் திரும்ப முடியும்.
    கர்ப்பகாலம் வாழ்க்கையின் மகிழ்ச்சியான கட்டம். ரசிக்க வேண்டிய இந்த ஒன்பது மாதங்களில் பெண்கள் உடலளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். பிரச்னைக்குரிய தீர்வினை ஆரம்ப நிலையிலேயே கவனித்தால் எந்த நேரத்திலும் உங்க அசல் உடல் கட்டமைப்புக்குத் திரும்ப முடியும்.

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் உற்பத்தி மற்றும் மாற்றம் காரணமாக பெரும்பாலான பெண்கள் முகப்பரு பிரச்னையை சந்திப்பார்கள். இதனால் மனஉளைச்சலுக்கு தள்ளப்படுகிறார்கள். உடலில் துத்தநாகத்தின் அளவு குறைவதும், முகப்பரு தோன்றுவதற்கான அடிப்படை காரணம். இதனால் முகப்பருக்கள் எளிதில் குணமாகாது. அந்த காலக்கட்டத்தில் வைட்டமின் சி, சத்துள்ள உணவினை சேர்த்துக் கொள்ளலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். மேலும் முகப்பரு பரவுவதையும் தடுக்கும்.

    உடலில் உள்ள நச்சுத்தன்மை கூட முகப்பரு தோன்ற காரணமாகும். அதை வெளியேற்ற நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.பொதுவாக முகப்பரு தோன்றும் போது, டாக்டர்கள் சில மருந்துகளை பரிந்துரை செய்வது வழக்கம். கர்ப்பகாலத்தில் நாம் வேறு எந்த மருந்துகளையும் உட்கொள்ள கூடாது என்பதால் டாக்டரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே மருந்துகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் சந்தனக் கட்டையை உரைத்து பரு உள்ள இடத்தில் அப்ளை செய்து வரலாம். மஞ்சளும் உரசி பூசலாம்.

    பிரசவமும், பால் சுரப்பும் சருமத்தில் நீரிழப்பை உண்டாக்கும். மேலும் சருமம் மந்தமான மற்றும் உயிரற்ற தோற்றத்தில் காட்சியளிக்கும். ஆரோக்கியமான ரத்த அணுக்கள் நல்ல முறையில் செயல்பட, தண்ணீர் மிகவும் அவசியம். தண்ணீர் தாய்ப்பாலின் ஒரு முக்கிய அங்கமாகும். பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்ல பால் சுரப்புக்கு தண்ணீர் மிகவும் அவசியம். கர்ப்ப காலத்தின்போதும் அதற்கு பிறகும் நிறைய திரவங்கள் குடிப்பது, மலச்சிக்கலை எளிதாக்கும், தோலை மென்மையாக்கும், நச்சுத்தன்மையை வெளியேற்றும், நீர்க்கட்டை குறைக்கும், சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்த் தொற்றுகள் போன்ற அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

    வெறும் தண்ணீர் மட்டுமே எப்படி குடிப்பதுன்னு பலருக்கு தோன்றலாம். தண்ணீர் மட்டும் இல்லாமல் மற்ற திரவ சார்ந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது, பால், பழச்சாறுகள், சூப் வகைகள், ஸ்பார்க்லிங் வாட்டர் (நுரைக்கும் தண்ணீர்), டீ, காபி (காபீன் நீக்கப்பட்டது), பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். இதை எல்லாம் மீறி, உங்கள் சருமம் வறண்டு இருப்பதை நீங்கள் உணர்ந்தால் சரும நிபுணரை அணுகி மெடிஃபேஷியல்ஸ் ஃபார் ஹைட்ரேஷன் (MediFacials for Hydration) சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். இது சருமத்தில் ஏற்பட்டுள்ள நீரிழப்பை கட்டுப்படுத்தும். கர்ப்ப காலத்தின் போதும் அதற்கு பிறகும் கூட இந்த சிகிச்சையை டாக்டரின் ஆலோசனைபடி எடுத்துக் கொள்ளலாம்.

    கர்ப்பகாலத்தில் குழுந்தை கருவில் இருப்பதால், வயிறு பெரிசாகும். உடல் வேகமாக வளரும்போது வரித் தழும்புகள் தோன்றும். சரும அடிப்பகுதியில் உள்ள மீள்நார்கள் விரிவடைவதாலும் வரித் தழும்புகள் ஏற்பட ஒரு காரணமாகும். இவை பெரும்பாலும் அடிவயிறு, மார்பகங்கள், இடுப்பு மற்றும் தொடைப் பகுதி, கால்கள் போன்ற இடங்களில் ஏற்படும். ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் ஒன்பதாவது மாதத்தில், சராசரியாக 9 முதல் 12 கிலோ வரை எடைக் கூடும். இதற்கு மேல் எடை கூடினால் வரித் தழும்புகள் அதிகம் தோன்ற வாய்ப்புள்ளது. சில சமயம் வரித் தழும்பு காரணமாக அரிப்பு ஏற்படும். அந்த சமயத்தில் மாய்சரைசிங் கிரீம் பயன்படுத்துவது நல்லது. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவும். கர்ப்பத்திற்கு பிறகும் சிலருக்கு மறைந்துவிடும். ஒரு சிலருக்கு தங்கிவிடும். அவர்கள் லேசர் சிகிச்சை மூலம் சீர் செய்து கொள்ளலாம்.

    பிரசவத்திற்கு பிறகு முடி உதிர்தல் என்பது பொதுவானது. குழந்தைப் பிறப்புக்கு பிறகு 50% பெண்களுக்கு முடிஉதிர்வு பாதிப்பு ஏற்படுகிறது. அதே சமயம் அந்தப் பிரச்னை அதிகமாக இருந்தால், உடனடியாக சரும நிபுணரை அணுகி ஆலோசனை பெறவும்.

    கர்ப்ப காலத்தின் போது உங்க எடை கூடுவதால், நீங்கள் முன்பு பயன்படுத்திய உடை உங்களுக்கு பொருந்தாது. பிரசவத்திற்கு பிறகு உணவு ஆலோசகர் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் ஆலோசனை பெற்று கட்டக்கோப்பான உடலை நீங்கள் மீண்டும் பெறலாம். பிரசவ காலத்தில் சருமம் விரிவடைவதால் பல பெண்களுக்கு வயிற்று பகுதியில் சருமம் தளர்வடையும். அதனை தோல் இறுக்கம் சிகிச்சை மூலம் சீர் செய்யலாம். இடுப்பு அங்குலங்களையும் சிகிச்சை மூலம் குறைக்கலாம்.
    திருமண உறவில் தாம்பத்தியம் முக்கியமான ஒன்று. முதல் முறை தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது சொதப்பாமல் இருக்க இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.
    திருமண உறவில் தாம்பத்தியம் முக்கியமான ஒன்று. முதல் முறை தாம்பத்தியம் கொள்பவர்களுக்கு எல்லாமே புதிதாக இருக்கலாம். அதனால் பயம், பதட்டம் இருக்கலாம். எனவே முதல் முறை தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது சொதப்பாமல் இருக்க இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.

    முதலில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன பார்க்கலாம்.

    உடலுறவு கொள்வதற்கு முன் அதில் இருவருக்கும் விருப்பம் இருக்க வேண்டும். மகிழ்ச்சி இருக்க வேண்டும். அது இருந்தால்தான் மற்ற விஷயங்களை சிறப்பாக செய்ய முடியும்.

    குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பம் இல்லை அதற்காக முன்பே திட்டமிட்டு கருத்தடை உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்துங்கள்.

    படுக்கையில் சௌகரியமாக இருங்கள். உங்கள் துணையையும் சௌகரியமாக வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் அடுத்த கட்ட நகர்வுக்கு நல்லது. எடுத்ததும் சீறிப் பாயாமல் எனவே கொஞ்சம் விளையாட்டு, குறும்பு என துவங்கினால் அது ஆர்வத்தை தூண்டும். பதட்டம் விலகும்.

    இருவரும் பேசிக்கொள்ளுதல் நல்லது. உரையாடல் துணையின் எண்ணத்தை புரிந்துகொள்ள உதவலாம். வலி இல்லா மென்மையான உடலுறவுக்கும் இது வழிவகுக்கும்.

    செய்யக் கூடாத விஷயங்கள்

    உங்கள் துணைக்கும் விருப்பம் இருக்கும் என நீங்களாக நினைத்துக்கொண்டு திட்டம் போடாதீர்கள். அவரின் விருப்பதை கேட்டு தெரிந்துகொண்டு செயல்படுவது நல்லது.

    அதிகமாக கற்பனை செய்தல், இதையெல்லாம் செய்ய வேண்டும் என ஓவராக மனக்கணக்கு போட்டால் பதட்டத்தில் அனைத்தையும் விட்டுவிடுவீர்கள்.

    அதிக எதிர்பார்ப்பும் தவறு. எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கவில்லை எனில் மகிழ்ச்சி இருக்காது. எனவே முதல் முறை உடலுறவில் எதிர்பார்ப்புகள் முற்றிலும் தவறு.

    முதல் முறை உடலுறவு கொள்ளும்போது புதிய செக்ஸ் நிலைகளை முயற்சிப்பது தவறு. இது துணைக்கு அதிக அழுத்தம் தருவதாக இருக்கும். எனவே எளிமையான முறையே சிறந்தது.

    பெண்ணாக இருப்பின் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை தவிருங்கள். கருத்தடை உபகரணங்களே போதுமானது.

    கர்ப்ப காலத்தில் மனநிலை மாற்றங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். அதனை சரிசெய்ய உதவிகள் தேவைப்பட்டால் யோசிக்காமல் கணவரிடமோ, குடும்பத்தினரிடமோ கேட்பதில் தவறில்லை.
    பெண்களின் கர்ப்ப காலத்தில் மனநிலை மாற்றங்கள் என்பது மிகவும் பொதுவான பிரச்சினை ஆகும். இதற்கு காரணம் உடலில் வேகமாக மாறி வரும் ஹார்மோன்கள், உடல் உபாதைகள் மற்றும் அடுத்தடுத்து ஏற்படும் வளர்ச்சி மாற்றங்கள் தான். மேலும், கர்ப்பிணிகள் ஒரே நேரத்தில் உடல் மாற்றங்களுடன் பல்வேறு உணர்ச்சி மாற்றங்களையும் சந்திக்கிறார்கள். பொதுவாக பெண்களின் உணர்ச்சி நல்வாழ்வு மற்றும் மனக் கண்ணோட்டம் கர்ப்ப காலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் குறிப்பாக அவை குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

    மனநிலை மாற்றங்களை சமாளிக்க கர்ப்பிணிகள் பின்வரும் சில வழிகளை முயற்சி செய்யலாம்:

    கர்ப்ப காலத்தில் உங்கள் மனதில் ஏற்படும் கோபம் மற்றும் எரிச்சல் போன்ற உணர்ச்சிகள் குறித்து பகிர்ந்து கொள்வது நல்லது. நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது குறித்து உங்கள் கணவர், குடும்பத்தினர், நண்பர்களிடம் வெளிப்படையாக கூறுவது மனஅமைதியை தரும்.

    நீங்கள் சோர்வாக இருந்தால் உங்கள் மனநிலையை நிர்வகிப்பது சற்று கடினமாக இருக்கும். எனவே உங்களுக்கு போதுமான தூக்கம் வருவதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பகலில் சிறிது நேரம் தூங்குவதால் உங்கள் உடல் அதிக ஆற்றலைப் பெறவும், உங்கள் உணர்ச்சிகளை அமைதிப்படுத்தவும் உதவும். பகலில் தூங்குவது மனநிலை மாற்றங்களை நிவர்த்தி செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

    உங்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கும், மனதை சுறுசுறுப்புடன் வைத்திருக்கவும் உடற்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் சோர்வாக இருப்பது போன்று உணர்ந்தால், நடைபயிற்சி அல்லது நீச்சல் போன்ற லேசான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்யும் போது உடலில் இருந்து எண்டோர்பின்கள் வெளியேறும், இதனால் மனதில் நேர்மறை மற்றும் மகிழ்ச்சியான உணர்வுகள் அதிகரிக்கும். மேலும் தினமும் யோகா, தியானம் போன்றவற்றையும் கடைபிடிப்பது நல்லது.

    எப்போதும் உங்களுக்காக சில மணி நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். அந்த நேரத்தில் ஒரு நல்ல திரைப்படத்தை பார்க்கலாம், உங்கள் நண்பர்களிடம் பேசலாம், பூங்கா அல்லது சுற்றுலாவிற்கு செல்லலாம். அல்லது உங்கள் தோட்டத்தில் அமர்ந்து ஒரு நல்ல புத்தகம் படித்துக்கொண்டே ஓய்வெடுக்கலாம். உங்கள் கணவர் உதவியுடன் கை, கால்களை மசாஜ் செய்து கொள்ளலாம். நீங்கள் மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் இருக்க இதுபோன்று நேரங்களை செலவிடுவது நல்லது.
    பெண்கள் கரு முட்டைகளை இளம் வயதிலேயே சேமித்துவைத்து அவர்கள் கருத்தரிக்க விரும்பும்போது உபயோகிக்கும் நடைமுறை இந்தியாவில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
    இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் படிப்பை முடித்ததும், நல்லவேலைக்கு சென்ற பிறகுதான் திருமணம் செய்து கொள்வதற்கு விரும்புகிறார்கள். 30 வயதை நெருங்கும்போதுதான் திருமணத்தை பற்றி யோசிப்பவர்களும் இருக்கிறார்கள். இளம் வயதில் திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுபவர்களும் உண்டு. காலதாமதமாக திருமணம் செய்து கொள்வது, குழந்தை பேற்றை தள்ளிப்போடுவது போன்றவை சில சமயங்களில் தாய்மை அடைவதில் சிக்கல்களை உருவாக்கும். அப்படிப்பட்ட பெண்கள் கரு முட்டைகளை இளம் வயதிலேயே சேமித்துவைத்து அவர்கள் கருத்தரிக்க விரும்பும்போது உபயோகிக்கும் நடைமுறை இந்தியாவில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

    அப்படி தாய்மை அடைந்து குழந்தை பெற்றவர்களுள் ஒருவர், டாக்டர் ரூபினா கே.டி. சிங். கருத்தரிப்பு நிபுணரான இவர், 28 வயதில் தனது கரு முட்டைகளை சேமித்து வைத்திருக்கிறார். பின்னர் இவரது திருமணம் நடந்திருக் கிறது. கருமுட்டைகளை சேமித்து வைத்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் அதனை பயன்படுத்தி கண வரின் உயிரணு மூலம் நவீன மருத்துவ முறையில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியிருக்கிறார். காலதாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் கரு முட்டைகளை சேமித்து வைப்பதன் அவசியம் குறித்தும் விளக்குகிறார்.

    “நான் மருத்துவத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலையில் சேர்ந்தேன். அப்போதே எனக்கு திருமண வயது கடந்துவிட்டது. படிப்பை முடித்துவிட்டு அப்போதுதான் வேலை பார்க்க தொடங்கி இருந்ததால் உடனே திருமணம் செய்து கொள்வதற்கு நான் விரும்பவில்லை. மருத்துவம் சார்ந்த படிப்பை தொடரவும் விரும்பினேன். கருத்தரிப்பு பற்றிய பெல்லோஷிப் திட்டம் என் கனவாக இருந்தது. அந்த வாய்ப்பும் கைகூடியது.

    ஒரு மருத்துவராக மட்டுமின்றி குடும்ப பெண்மணியாக, காலம் தாழ்ந்து திருமணம் செய்யும்போது கருத்தரிப்பில் இருக்கும் சிக்கல்களை பற்றி சிந்திக்க தொடங்கினேன். பெண்களுக்கு வயது அதிகரிக்கும்போது உடலில் உற்பத்தியாகும் கரு முட்டைகளின் தரம் குறைய தொடங்கும். அதனால் கருத்தரிப்பு சாத்தியம் இல்லாத சூழ்நிலை கூட உருவாகலாம் என்பதையும் அறிவேன். அப்போது எனக்கு 28 வயது கடந்திருந்தது. அதுதான் கரு முட்டைகளை சேமித்து வைப்பதற்கான சரியான தருணம் என்று முடிவு செய்தேன். உடனே கரு முட்டைகளை சேகரித்து பதப்படுத்தி வைத்தேன்” என்கிறார்.

    ரூபினா 2014-ம் ஆண்டு கரு முட்டையை சேமித்து வைத்திருக்கிறார். தான் விரும்பிய படிப்பை படித்து கருத்தரிப்பு நிபுணராகவும் ஆகிவிட்டார். அதன் பிறகு திருமணமும் செய்திருக்கிறார். அதேவேளையில் சேமித்துவைத்திருந்த கருமுட்டைகளை கொண்டு கருத்தரித்து 2018-ம் ஆண்டு இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார்.

    “காலதாமதமாக திருமணம் செய்து கொள்ள நினைக்கும் பெண்கள் தங்கள் கருமுட்டைகளை எடுத்து அதற்குரிய நவீன முறையில் சேமித்து பாதுகாப்பது தவறில்லை. ஆனால் அப்படி செய்வது தவறானது என்ற எண்ணம் பெரும்பாலான குடும்பத்தினரிடம் இருக்கிறது. என் பெற்றோருக்கு கூட அச்சங்கள் இருந்தன. எனது உடல் இயல்பான முறையில் குழந்தையை பெற்றெடுக்கும் தன்மையுடன் இருக்கும்போது ‘இதை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று ஆதங்கப்பட்டார்கள். ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்தினேன். பொதுவாகவே 25 முதல் 30 வயதுக்குள்தான் பெண்களின் கருமுட்டைகள் ஆரோக்கியமானதாகவும், தரமாகவும் இருக்கும். அத்தகைய கருமுட்டைகள்தான் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்தவை.

    அந்த வயதுக்குள் கருமுட்டைகள் செழுமையாக இருப்பதால் பெண்கள் எளிதில் கர்ப்பம் அடைந்துவிடுவார்கள். திருமணத்தை தாமதப்படுத்தும்போது கரு முட்டைகளை வெளியே எடுத்து அதற்காக பிரத்யேகமாக உள்ள கருத்தரிப்பு மையங்களில் சேமித்து வைக்கமுடியும். சுமார் 10 ஆண்டுகள் வரை அந்த கருமுட்டைகளை பயன்படுத்தி கணவரின் உயிரணுவுடன் சேர்த்து கருவுறச் செய்யமுடியும். அதனை விரும்பாத பட்சத்தில் கருமுட்டைகளை தானமும் கொடுக் கலாம்” என்கிறார்.
    கொரோனா தொற்றுக்கு மத்தியில் குழந்தைகளுடன் வீட்டில் அமர்ந்தபடி அலுவலக வேலைகளை செய்வது ஆண்களை விட பெண்களுக்குத்தான் சவாலானதாக அமைந்திருக்கிறது.
    வீட்டில் அலுவலகப் பணி என்பது இயல்பான விஷயமாக மாறிப்போனாலும் அதனால் உருவாகியிருக்கும் புதிய ஆபத்துகளை எதிர்கொள்ளவும் பழகிக்கொள்ள வேண்டுமோ என்ற அச்சமே பல ஊழியர்களின் மனநிலையாக உள்ளது. ஆம்...இந்த பழகிப்போன Work From Home வாழ்க்கைமுறையால் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது.

    பெண்களில் 20 - 60 வயது கொண்ட பெண்கள் வரை முதுகு வலி, தோள்பட்டை வலி, கழுத்து வலி ஆகிய குறைகளால் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. அந்த ஆய்வில் ஆரம்பத்தில் வீட்டில் அலுவலக வேலை என்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அதை அனுபவிக்கும்போது அதில் உள்ள சிக்கல்கள் புரிகிறது எனக் கூறியுள்ளனர். மேலும் நீண்ட நேர வேலை சுமை, தவறான அமரும் அமைப்பு, சரியான நாற்காலி, அமர்ந்து வேலை செய்யும் சூழலின்மை , லாப்டாப், கணினி வேலை செய்ய ஏதுவாக இல்லை என பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

    இது தவிர வீட்டு வேலைகளையும் தாங்கள்தான் செய்ய வேண்டிய நிர்பந்தம், குழந்தைகள் இருந்தால் அவர்களின் கல்வி, ஆன்லைன் பாடங்களுக்காக ஒத்துழைப்பு அளித்து கற்றுத்தருவது, அதிக எடை கொண்ட சிலிண்டர், தண்ணீர் கேன் போன்றவற்றையும் தாங்களே தூக்கும் நிலை என இவை அலுவலகப் பணி தாண்டிய கூடுதல் சுமையாக அதிகரித்துள்ளன.

    இவை ஒட்டுமொத்தமும் சேர்ந்து அவர்களுக்கு முதுகுவலி, கழுத்துவலி, தோள்பட்டை வலி என பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    ஆண்கள் வெளியே சென்று வருவதும் , பெண்கள் வீட்டு வேலைகள் மொத்தமாக கவனித்துக்கொள்வதுமாக இருப்பதால் அவர்கள் நடக்கும் நேரம் கூட குறைந்துவிட்டது. அவர்களுக்கான நேரம் என்பதும் இல்லாமல் போய்விட்டது. 
    இந்தியாவில் ரத்த சோகைக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் அதிக அளவில் ரத்த இழப்பு ஏற்படுவதும் இதற்கு காரணமாக இருக்கிறது.
    இந்தியாவில் 10 பெண்களில் ஆறு பேருக்கு ரத்த சோகை ஏற்படும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரபலமான மருத்துவ மையம் சார்பில் 36 நகரங்களை சேர்ந்த 17 லட்சம் பெண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதில் மும்பையைச் சேர்ந்த பெண்கள் 11 லட்சத்து 41 ஆயிரத்து 600 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

    பொதுவாக 20 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள்தான் அதிக அளவில் ரத்தசோகை பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதனால் அந்த வயதுக்குட்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டு காலம் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

    சோம்பல், உடல் சோர்வு, சருமம் மற்றும் கண்கள் வெளிர் நிறத்துக்கு மாறுதல் போன்ற ரத்தசோகைக்கான அறிகுறிகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆய்வு முடிவில் 10 பெண்களில் 6 பேருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இது ரத்த சோகைக்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாகும்.

    20 முதல் 40 வயதிற்குட்பட்ட பெண்களில் 65 சதவீத பேர் இரும்புச்சத்து குறை பாடு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதாவது ஆய்வுக்குட்டப்பட்ட 17 லட்சம் பெண்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இரும்புச்சத்து குறை பாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

    “இரும்புச்சத்து குறைபாடுதான் ரத்த சோகைக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. ஊட்டச்சத்துமிக்க உணவு பொருட்களை கூடுதலாக உணவில் சேர்ப்பதன் மூலம் இந்த குறைபாட்டை போக்கலாம். ஆனால் இந்தியாவில் ரத்த சோகைக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் அதிக அளவில் ரத்த இழப்பு ஏற்படுவதும் இதற்கு காரணமாக இருக்கிறது.

    படித்த இளம் பெண்கள் கூட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்த இழப்பு விஷயத்தில் போதிய கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள். குழந்தை பருவத்தில் அழுக்கு படிந்த பொருட்களை சாப்பிடுவது, வளர்ந்து ஆளான பிறகும் கூட களிமண் போன்ற மண் சார்ந்த பொருட்களை சாப்பிடுவது கூட ரத்தசோகைக்கு காரணமாக இருக்கிறது. ரத்தசோகை குணமானவுடன் இந்த சுபாவம் மறைந்துவிடும்.

    ரத்தப்போக்கும், இரும்புச்சத்தை உறிஞ்சும் தன்மையை உடல் இழப்பதும் ரத்தசோகைக்கான பிற காரணங்களாக இருக்கின்றன. இருப்பினும் ரத்தசோகைக்கான சரியான காரணத்தைக் கண்டறிய முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டியது அவசியம்” என்கிறார், டாக்டர் நிகாலி.

    80 வயதுக்குட்பட்ட பெண்களில் 73 சதவீதம் பேர் ரத்தசோகை பாதிப்பு கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் 10 வயதுக்குட்பட்ட 40 சதவீத சிறுமிகள் ரத்தசோகை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
    கர்ப்பிணிப் பெண்கள் தங்களது உணவு முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளில்தான் குழந்தைகளின் ஆரோக்கியமே இருக்கிறது.
    “கர்ப்பிணிப் பெண்கள் தங்களது உணவு முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளில்தான் குழந்தைகளின் ஆரோக்கியமே இருக்கிறது, என்பதை நினைவில் கொண்டு, கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தான் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சுமார் 2200 கலோரி அளவிலான உணவைத் தாண்டி, 300 கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலோரிகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியம். இந்த கலோரிகளை நல்ல சத்து நிறைந்த உணவுகள் மூலம் கிடைக்கப் பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

    கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் உள்ள கருவின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் சத்து மிகவும் தேவை. கால்சியம் சத்தை போதிய அளவு கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளாத பட்சத்தில் குழந்தை பிறந்த பிறகு அதனுடைய எலும்பு மிகவும் பலவீனமாக இருக்கும்.

    ஒரு சராசரி பெண்ணுக்குத் தேவையான இரும்புச்சத்து அளவை விட 2 மடங்கு இரும்புச்சத்து கர்ப்பிணி பெண்ணுக்கு தேவைப்படும். இந்த இரும்புச்சத்தே கருவறையில் உள்ள குழந்தைக்குப் போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்க வழி செய்கிறது.இந்த சத்துக் குறைபாடு ஏற்படும் பட்சத்தில் குழந்தை குறை மாதத்தில் பிறந்து விடும்.சரியான உடல் எடை இருக்காது. மேலும் தாய்க்குப் பிரசவத்திற்குப் பிறகு மன அழுத்தம் ஏற்படும்.

    தினமும் பால், ஒரு கீரை வகை, பழங்கள், என சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க உதவியாக இருக்கும். மேலும், குழந்தைப் பிறப்புக்கு பிறகு நிறைய பெண்களுக்கு முடி கொட்டுகிறது,  தாய்ப்பால் சரியாக சுரக்கவில்லை, எப்போதும் சோர்வாகவே உள்ளது போன்ற பிரச்னைகளோடு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

    கர்ப்பிணி பெண்கள் எந்த வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?

    கேப்ஃபைன் நிறைந்த உணவுகள்,எண்ணெயில் பொரித்த உணவுகள் ,துரித உணவுகள், அதிக காரத்தன்மை வாய்ந்த உணவுகள் , சாக்லேட் ,வெள்ளை சர்க்கரையால் தயாரித்த இனிப்பு வகைகள், மிகவும் சூடு தன்மை வாய்ந்த உணவுப் பொருட்கள், ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவு வகைகள்,மது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    ஆகக் கர்ப்பிணி பெண்கள் அளவான அளவில் தானிய வகைகள், வாழைப் பழம், மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்கள், கீரைகள், சர்க்கரைவள்ளி கிழங்கு, கொட்டைகள், முட்டை, இறைச்சி , பால் முதலான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் கர்ப்பிணிகளும் வயிற்றில் இருக்கும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

    இவற்றையெல்லாம் தடுக்க  மகப்பேறின் போதே முன் எச்சரிக்கையோடு உணவுகள் எடுத்துக்கொண்டால், ஆரோக்கியமான குழந்தைக்கு அம்மாவாக திகழலாம்.

    ×