என் மலர்
பெண்கள் மருத்துவம்
தாம்பத்திய உறவு முடிந்ததும், ஆண் துணை 'குட் நைட்' என்று கூறிவிட்டு புரண்டுபடுத்தால் பெண்கள் அதிகம் ஏமாற்றமடைகிறார்கள்.
ஆணும் பெண்ணும் மிக நெருக்கமாவது உடலுறவின்போதுதான். உடலுறவினை குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுள்ளன; அவற்றில் புதிய புதிய உண்மைகள் வெளிவருகின்றன.
உடலுறவின்போது மனதுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய எண்டார்பின் வெளிப்படுகிறது. ஆகவே, உடலுறவு இன்பம் மிக்கதாக திகழ்கிறது. தாம்பத்திய உறவு முடிந்ததும், ஆண் துணை 'குட் நைட்' என்று கூறிவிட்டு புரண்டுபடுத்தால் பெண்கள் அதிகம் ஏமாற்றமடைகிறார்கள். பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணர்கிறார்கள்.
உடலுறவுக்கு முன்பான நேரம், உடலுறவு நிகழும் நேரம் இவற்றை காட்டிலும் உறவு முடிந்த பொழுதையே பெண்கள் முக்கியமானதாக உணர்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். உடலுறவில் உச்சநிலையை அடையும்போது பெண்கள் துணையின்மீது பெரிய நம்பிக்கை கொள்கிறார்கள்.
பெண்களில் இந்த நம்பிக்கையுணர்வு தோன்றுவதற்கு ஆக்ஸிடாக்சின் என்ற ஹார்மோன் காரணமாகிறது. ஆனால், ஆண்களில் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரந்து, ஆக்ஸிடாக்சினை மேற்கொண்டுவிடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆகவே, உடலுறவுக்கு பின்பு ஆண்களின் எதிர்பார்ப்பும், பெண்களின் எதிர்பார்ப்பும் முற்றிலும் வேறுபட்டவையாய் உள்ளன. பெண்கள் உடலுறவை உணர்வுரீதியானதாக கருதுகிறார்கள்.
உடலுறவை உள்ளம் சார்ந்த அர்ப்பணிப்பு சார்ந்ததாக பெண்கள் கருதுகிறார்கள். ஆகவே, உடலுறவின் பின்பு உரையாடாவிட்டால் அது மனம் சார்ந்த உறவாக அல்லாமல் வெறுமனே உடல் இச்சையை தணிப்பதாக மட்டுமே அவர்களுக்குத் தோன்றுகிறது. பெண்கள் உடலுறவை உணர்வோடு தொடர்புடையதாக நோக்குகிறார்கள்.
உடலுறவுக்குப் பின் துணைவர் தன்னுடன் நன்றாக பேசவேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு. அவர்கள் நம்பும் விஷயங்கள், அவர்களது விருப்பங்கள், மன அழுத்தத்தை தரக்கூடிய விஷயங்கள் உள்ளிட்டவற்றை குறித்து பேசும் மற்றும் பேசுவதை கவனிக்கக்கூடியவராக துணைவர் இருக்கவேண்டும் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பாகும்.
உடலுறவில் உச்ச இன்பத்தை அடைய தனக்கு உதவும் ஆண், உறவு முடிந்த பின்னர் தன்னுடன் மனம்விட்டு பேசவேண்டும்; தான் மனம் விட்டு பேசுவதை பொறுமையாக கேட்கவேண்டும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பு. ஜஸ்ட் 'குட் நைட்' என்று கூறிவிட்டு திரும்பி படுத்தால் அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள் என்பதே ஆராய்ச்சியாளர்களின் முடிவாகும்..
திருமணத்திற்கு பின் கருத்தரிப்பதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் புரிந்து கொண்டு, அதில் மாற்றங்களை கொண்டு வந்தால் நிச்சயம் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
தற்போது நிறைய தம்பதியர்களால் கருத்தரிக்கவே முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, உணவுப்பழக்கவழக்கம், அதிகப்படியான வேலைப்பளு என்று பல உள்ளன. அதுமட்டுமின்றி, கருத்தரிக்க முடியாமல் இருப்பதற்கு பெண்கள் தான் காரணமாக சொல்லப்பட்டு வந்தனர். ஆனால் பெண்களை விட ஆண்கள் தான் முக்கிய காரணமாக உள்ளனர். ஆகவே யாராக இருந்தாலும், திருமண வயது நெருங்க ஆரம்பித்தால், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வருவது மிகவும் நல்லது.
இங்கு திருமணத்திற்கு பின் கருத்தரிப்பதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் புரிந்து கொண்டு, அதில் மாற்றங்களை கொண்டு வந்தால் நிச்சயம் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
தினமும் சரியாக தூங்காமல் இருந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது குறைந்துவிடும். இப்படி உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருந்தாலும், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். எப்படியெனில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைவாக இருப்பதால், நோய்த்தொற்றுகள் அதிகம் ஏற்படும். இதனால் இனப்பெருக்க மண்டலமும் பாதிப்படைந்து கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படக்கூடும்.
பெண்கள் அளவுக்கு அதிகமாக அல்லது அளவுக்கு குறைவான எடையுடன் இருந்தால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். எனவே அவ்வப்போது உடல் எடையை பார்ப்பதுடன், அதனைப் பராமரிக்கவும் செய்ய வேண்டும்.
நிறைய ஆய்வுகளில் விந்தணுக்களின் பாதிப்பிற்கும், தொழில்நுட்பத்திற்கும் நிறைய தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எப்படியெனில் பெரும்பாலும் ஆண்கள் தங்களின் மொபைல் போனை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால், இனப்பெருக்க உறுப்புகளானது, போனில் இருந்து வெளிவரும் கதிர்களால் பாதிக்கப்படுகிறது. அதேப்போல் லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதாலும் பாதிக்கப்படுகிறது.
பிரஷ் செய்த பின்னர் உங்களின் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிகிறதா? அதுமட்டுமின்றி, உங்களின் ஈறுகள் சிவப்பாகவும், வீங்கியும் உள்ளதா, அப்படியெனில் ஈறுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று அர்த்தம். இதனால் ஈறுகளை தாக்கியுள்ள கிருமிகளானது உடலினுள் சென்று, இனப்பெருக்க மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, கருத்தரிப்பதில் பிரச்சனையை ஏற்படுகிறது. எனவே பெண்கள் ஈறுகளில் பிரச்சனை இருந்தால், அதனை சாதாரணமாக எண்ணாமல் மருத்துவரை சந்தித்து போதிய ஆலோசனையைப் பெற்று பின்பற்றுங்கள்.
பிசிஓஎஸ் பிரச்சனை இருந்தால் கருத்தரிப்பதே மிகவும் கடினமாகிவிடும். ஏனெனில் இந்த பிரச்சனை வந்தால், ஓவுலேசனானது சரியாக நடைபெறாமல் போவதோடு, கருப்பையில் கருமுட்டை தங்காமல் போய்விடும். ஆனால் ஆய்வு ஒன்றில் பிசிஓஎஸ் இருந்தால், அதனை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறது. அதற்கு சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை தவறாமல் தினமும் பின்பற்றி வர வேண்டும்.
கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி-யின் பங்கு நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, உங்கள் குழந்தைக்கான வைட்டமின் டி பிரத்யேகமாக தாயின் மூலமாக தான் பெறப்படுகிறது.
பொதுவாகவே எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி முக்கியமானது என்பது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். எலும்புகளுக்கு வலு சேர்ப்பதோடு மட்டும், வைட்டமின் டி-யின் நன்மைகள் நின்றுவிடாது. கோவிட்-19 தொற்றுநோய் பரவத் தொடங்கிய பின்பு, வைட்டமின் டி குறித்த பரபரப்பான விவாதங்கள் அதிகரித்து விட்டன என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இதுபோன்ற காலங்களில் சூரியனின் வெளிப்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. தொற்றுநோயில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே இருந்ததன் விளைவு தான் இது. வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் எலும்புகள் பாதிக்கக்கூடும். அது ஒட்டுமொத்த உடலுக்குமே தீங்கு விளைவிக்கும்.
கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் வைட்டமின் டி அளவானது, அவர்களின் குழந்தைகளின் ஐ.க்யூ உடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. கர்ப்பத்தில் அதிக வைட்டமின் டி அளவு இருந்தால், குழந்தைகளின் ஐ.க்யூ மதிப்பும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு தாயின் வைட்டமின் டி சத்து தனது குழந்தைக்கு கருப்பையின் மூலமாக அனுப்பப்படுகிறது. அதனால், மூளை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளை சீராக்க உதவுகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
வைட்டமின்-டி குறைபாடு சியாட்டில் குழந்தைகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் குழந்தை சுகாதாரம், நடத்தை மற்றும் மேம்பாட்டுத் துறையின் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானியின் முதன்மை எழுத்தாளரான மெலிசா மெலோஃப் கூறுகையில், வைட்டமின் டி குறைபாடானது, பொது மக்களிடமும் கர்ப்பிணிப் பெண்களிடமும் பொதுவாக காணப்படக்கூடிய ஒரு பிரச்சனை. ஆனால், இந்த பிரச்சனையானது கறுப்பின பெண்களுக்கு அதிகமாக ஏற்படக்கூடும். ஏனென்றால், சருமத்தில் உள்ள மெலனின் என்ற நிறமி சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. ஆனால், அந்த நிறமி புற ஊதா கதிர்களையும் சேர்த்து தடுப்பதன் மூலம், சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தியையும் குறைக்கிறது. ஆய்வின் படி, அமெரிக்காவில் கறுப்பின கர்ப்பிணிப் பெண்களின் சுமார் 80 சதவிகிதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
வைட்டமின் டி நிறைந்த உணவுகள் அதிக அளவு வைட்டமின் டி நிறைந்த உணவுகளில் மீன், முட்டை மற்றும் பசுவின் பால் மற்றும் சீரியல்ஸ் போன்றவை அடங்கும். அது தவிர பின்வரும் உணவுகளிலும் வைட்டமின் டி சத்து அதிகம் நிறைந்துள்ளது.
கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி-யின் பங்கு நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, உங்கள் குழந்தைக்கான வைட்டமின் டி பிரத்யேகமாக தாயின் மூலமாக தான் பெறப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு காணப்படும் வைட்டமின் டி குறைபாடு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஏனென்றால், கர்ப்ப காலத்தில் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் எலும்புகள் வேகமாக வளரச்கூடும். கால்சியம் மற்றும் பாஸ்பேட் அளவைக் கட்டுப்படுத்துவதில் வைட்டமின் டி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, எதிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு உதவக்கூடிய போதுமான அளவு வைட்டமின் டி-யை உட்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்.
நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது கையில் ஒரு கட்டு பரிசோதனை குறிப்புகளுடன் டாக்டர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது கையில் ஒரு கட்டு பரிசோதனை குறிப்புகளுடன் டாக்டர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அது பற்றி கூகுளில் சர்ச் செய்தபோது அது இன்னென்ன நோய் என்று தெரியவந்ததாகவும் கூறி, டாக்டர்களிடம் பயத்துடன் ஆலோசனை கேட்கிறார்கள். அது மட்டுமின்றி அவர்களே பரிசோதனை கூடங்களுக்கு சென்று சுயமாக தேவையற்ற பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளையும் மேற்கொள்கிறார்கள். அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதற்கு ‘வேறு நோய்கள் இருந்தால் அவர்களை கொரோனா எளிதாக தொற்றிக்கொள்ளும்’ என்ற பயம்தான் அடிப்படை காரணமாக இருக்கிறது. இந்த மாதிரியான பயம் இப்போது பலரையும் சூழ்ந்திருக்கிறது. அந்த பயமே அவர்களுக்கு நோயாக மாறுகிறது.
மார்பகத்தில் எந்த கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க்கான கட்டியாகத்தான் இருக்கும் என்ற பயம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்களுக்கும் இந்த கவலை அதிகம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு ‘பைப்ரோ அடினோமா’ என்ற கட்டிகளே இருக்கின்றன. அவை, மார்பகத்தில் அங்கும் இங்குமாக அசையும் மிருதுவான வலியற்ற கட்டிகள். இந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது. வலியோடு உள்ள கட்டிகள் பைப்ரோ சிஸ்டிக் டிசீஸ் எனப்படும். சிறுவயதிலே பூப்படைந்த பெண்களுக்கும், குறிப்பிட்ட வயதை கடந்த பின்பும் தாய்மையடையாத பெண்களுக்குமே இந்த பாதிப்பு தோன்றும்.
கவனிக்க வேண்டியவை : அங்கும் இங்குமாக அசையாத கடுமையான கட்டிகள். மார்பகத்தில் கட்டி ஏற்படுவதோடு அக்குளிலும், கழுத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் தென்படுதல். மார்பக காம்புகள் உள்அமுங்குதல். அவைகளில் இருந்து ரத்தம் கலந்த திரவம் வெளிப்படுதல் போன்றவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை.
சுவாசத் தடை ஏற்பட்டாலே அது ஆஸ்துமா தான் என்ற பயம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. ஆனால் இதயத்தையும், சுவாச கட்டமைப்புகளையும் பாதிக்கும் பல்வேறு நோய்கள் மூலம் சுவாசத்தடை ஏற்படலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் அனீமியா, சுவாச தடைக்கு முக்கிய காரணமாகும். ரத்தத்தை ‘பம்பிங்’ செய்யும் ஆற்றல் இதயத்திற்கு குறையும்போது ஏற்படும் இதய செயலிழப்பை தொடர்ந்தும் சுவாசத்தடை உருவாகும். அப்போது நடக்கும்போதும், மாடிப்படிகளில் ஏறும்போதும் சுவாசத் தடையோடு உடல் நடுக்கமும் ஏற்படலாம். ஆஸ்துமா மூலமான சுவாசத் தடை ஏற்பட்டால் விடாத இருமலும், இழுப்பும் தோன்றும்.
கவனிக்க வேண்டியவை : சுவாசத் தடையோடு நெஞ்சுவலி, மூச்சிறைப்பு இருந்தால் கவனியுங்கள். கை, கால்கள் வீங்கி காணப்படுதல், வெளியேறும் சிறுநீரின் அளவு குறைதல், துப்பும்போது ரத்தம் வெளியேறுதல் போன்றவை ஆஸ்துமாவின் அறிகுறியாக இருக்கலாம்.
தலைசுற்றினால் அதை ஆபத்தின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. தலைசுற்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதே நேரத்தில் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவும் அதனை எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு தலையை திடீரென்று திருப்பும்போது தலைசுற்றும்.
கவனிக்க வேண்டியவை : தலைசுற்றிக்கொண்டிருக்கும் நிலையில் பேசும்போது நாக்கு உளறுதல், ஒவ்வொரு பொருளும் இரண்டாக காட்சியளித்தல், நடக்கும்போது பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறுதல் போன்றவை பக்கவாதம் தோன்றுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். தலைசுற்றலோடு தலைவலியும் இருந்தால் அது ஒற்றைத்தலைவலி பாதிப்பாக இருக்கலாம்.
பல்வேறு வகையான நோய்கள் இருந்தாலும் எல்லா நோய்களும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை அல்ல. அப்படி ஒருவேளை ஆபத்தை விளைவிக்கும் நோயாக இருந்தாலும் அதற்கான சரியான சிகிச்சையை பெறுவதற்கு விழிப்புணர்வுதான் தேவை. அதனால் இல்லாத நோய்களை நினைத்து பெண்கள் பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. பயம், இல்லாத நோய்களையும் இருப்பதாக நம்பவைத்து தேவையில்லாத மனஉளைச்சலையும், கவலையையும் எற்படுத்திவிடும்.
தாங்கள் பெற்றெடுத்த குழந்தையின் தேவைக்கு அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை சேமித்து மற்ற குழந்தைகளுக்கு தானமாக வழங்குவார்கள். தாய்ப்பாலை பாதுகாத்து பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கும் வங்கிகளும் இருக்கின்றன.
தாய்ப்பால் கிடைக்காமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு மனிதாபிமானத்துடன் உதவும் தாய்மார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள், தாங்கள் பெற்றெடுத்த குழந்தையின் தேவைக்கு அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை சேமித்து மற்ற குழந்தைகளுக்கு தானமாக வழங்குவார்கள். தாய்ப்பாலை பாதுகாத்து பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கும் வங்கிகளும் இருக்கின்றன.
சைப்ரஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் தாய்பாலை இணையதளம் வழியாக ஆண்களுக்கு வழங்கி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். பாடி பில்டிங்க் பயிற்சி பெறுபவர்கள் உடல் கட்டுறுதிக்காக இதனை வாங்கி பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இப்படி தாய்ப்பாலை விற்பவர் பெயர் ரபேலா லாம்ப்ரூ. 26 வயதாகும் இவருக்கு திருமணமாகி ஹைலே என்ற மகளும், அஞ்சலோ என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்களில் இளைய மகனான அஞ்சலோ பிறந்தபோது அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரந்து கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறார், ரபேலா.
மகனுக்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்து ஏழு மாதங்களை கடந்த பிறகும் தினமும் இரண்டு லிட்டர் தாய்ப்பால் சுரந்து கொண்டிருந்திருக்கிறது. அதனை சேமித்து வைத்து, தாய்ப்பால் சுரக்காமல் சிரமப்படும் பெண்களின் குழந்தைகளுக்கு தானமாக வழங்கி வந்திருக்கிறார்.
“எனக்கு தாய்ப்பால் சுரந்து கொண்டே இருந்தது. அதனை வீணாக்க விரும்பவில்லை. அதை சேமிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. பின்னர் தாய்ப்பால் கொடுப்பதற்கு சிரமப்படும் இரண்டு தாய்மார்களிடம் பேசினேன். தங்களின் குழந்தைகளுக்கு எனது தாய்ப்பாலை கொடுப்பதற்கு சம்மதித்தார்கள். அந்த குழந்தைகளுக்கு உதவ முடிந்ததை நினைத்தபோது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. அதனால் இந்த சேவையை தொடர்வதற்கு விரும்பினேன்” என்கிறார்.
ஆரம்பத்தில் சைப்ரஸ் நாட்டில் தாய்ப்பால் கிடைக்காமல் வாடும் குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை சேமித்து பாதுகாத்து அனுப்பி வந்திருக்கிறார். பிறகு இங்கிலாந்து நாட்டை ரபேலாவின் தாய்ப்பால் சென்றடைந்திருக்கிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ரபேலாவை ஏராளமானோர் நாடி இருக்கிறார்கள். ஆண்களும் அதிக அளவில் ரபேலாவிடம் தாய்ப்பால் கேட்டு ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். அப்போதுதான் கட்டுக்கோப்பான உடல் கட்டமைப்பின் மீது ஆர்வமுள்ள ஆண்கள் தங்கள் உடல் தசையை பலப்படுத்துவதற்கு தாய்ப்பால் பருகும் விஷயம் ரபேலாவுக்கு தெரியவந்திருக்கிறது.
“ஆண்கள் நிறைய பேர் எனக்கு போன் செய்து தாய்ப்பால் பற்றி விசாரித்தார்கள். என்னிடம் தாய்ப்பாலை வாங்கி என்ன செய்கிறார்கள் என்பது ஆரம்பத்தில் எனக்கு தெரியவில்லை. உடல் தசைகளை வலுப்படுத்துவதற்காக அதை உட்கொள்வதாக கூறினார்கள்” என்பவர், இரண்டு ஆண்டுகளில் இணையதளம், சமூகவலைத்தளங்கள் வழியாக தாய்ப்பாலை விற்பனை செய்து பெருமளவு பணம் சம்பாதித்திருக்கிறார். அதே நேரத்தில் தாய்ப்பால் கிடைக்காமல் வாடும் பச்சிளம் குழந்தைகளுக்கும் தொடர்ந்து தாய்ப்பாலை தானமாகவும் வழங்குகிறார்.
பிறக்கும் குழந்தையாவது சிவப்பாக பிறக்கட்டும் என்று எண்ணி கணவனோ, மனைவியோ, அல்லது குடும்பத்தில் உள்ள மற்றவர்களோ குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்பதற்காக இதை வாங்கி கொடுப்பார்கள்.
பிறக்கும் குழந்தையாவது சிவப்பாக பிறக்கட்டும் என்று எண்ணி கணவனோ, மனைவியோ, அல்லது குடும்பத்தில் உள்ள மற்றவர்களோ குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ வாங்கி கொடுப்பார்கள். குங்குமப்பூ சாப்பிடாலாவது குழந்தை சிவப்பாக பிறக்காதா என்ற ஆதங்கத்தின் வெளிபாடு தான் இது. ஆனால் உண்மையில் குழந்தையின் நிறத்திற்கும், குங்குமப்பூ சாப்பிடுவதற்கும் எந்த வித சம்பந்தமமே இல்லை என்பதே உண்மை. கர்ப்ப காலத்தில் சொல்லப்படும் கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று. ஏனெனில் பிறக்க உள்ள குழந்தையின் நிறத்தை தீர்மானிக்கும் சக்தியெல்லாம் குங்குமப் பூவிடம் அறவே இல்லை.
கர்ப்ப காலத்தில் சிலருக்கு வயிற்றை பிரட்டி கொண்டு வரும். எதை சாப்பிடாலும் உடனே வாந்தி வரும். முன்பு விரும்பி சாப்பிட்ட உணவுகள் எதுவும் தற்போது பிடிக்காது. இதனால் சத்துக்கள் நிறைந்த பாலை கண்டால் கூட சிலருக்கு அதன் பால் வாடை பிடிக்காது. மசக்கையாக உள்ள நேரத்தில் அது இன்னும் அதிகபடியாக வயிற்றைப் பிரட்டி எடுக்கும்.
பாலும் குடிக்க வேண்டும், ஆனால் வாந்தியும் வர கூடாது என்று நினைத்ததன் வெளிபாடு தான் குங்குமப்பூ. குங்குமபூவின் மணம் மற்றும் சுவையால் வெறும் பாலை குடிப்பதை விட குங்குமப்பூ கலந்த பாலை கரைத்துக் குடிக்கும் வழக்கம் வந்தது. ஆனால் அதையும் கூட குடிக்க மாட்டேன் என கூறும் பெண்களை எவ்வாறு குடிக்க வைப்பது. அதனால் தான் நம் முன்னோர்கள் தந்திரமாக யோசித்து கர்ப்பிணி பெண்களிடம், நீ குங்குமப்பூ சாபிட்டால் உன் குழந்தை சிவப்பாக பிறக்கும் என சொல்லி வைத்தார்கள். அதனால் தான் குங்குமப்பூ கலந்த பாலை குடித்தார்கள் நம் பெண்கள்.
குழந்தைக்கு நிறம் கிடைக்கும் என்ற சொக்கவைக்கும் வார்த்தையைச் சொல்லி கொடுத்திருக்கிறார்கள். இன்றும் கூட கர்ப்பிணி பெண்கள் குங்கமப்பூ கலந்த பாலை குடித்து வருகிறார்கள். அப்படியாவது நம் குழந்தை சிவப்பாக பிறந்து விடாதா என்ற ஏக்கம் தான் அது. ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் குழந்தையின் நிறத்துக்கும் குங்குமப்பூ சாப்பிடுவதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. குழந்தையின் நிறத்துக்கு முழு காரணம் பரம்பரை பரம்பரையாக வரும் மரபணுக்கள் மட்டுமே.
பிரசவம் சில நாட்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ தொடங்க இருப்பதை நம்முடைய உடலானது சில அறிகுறிகள் மூலம் வெளிப்படுத்தும். அந்த அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.
பிரசவ தேதியானது சரியாக அறிக்கைகளில் குறிப்பிட்ட அதே தேதியில் நடக்காது. பிரசவ தேதியானது குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ நடக்கும். சரியாக அதே தேதியில் பிரசவமானது குறிப்பிட்ட ஒரு சிலருக்கே நடக்கும்.
பிரசவம் சில நாட்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ தொடங்க இருப்பதை நம்முடைய உடலானது சில அறிகுறிகள் மூலம் வெளிபடுத்தும். அந்த அறிகுறிகள் என்ன என்பதை கீழ்காணும் அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அவை பின் வருமாறு,
1. அடிவயிறு லேசாகும் :
குழந்தையானது அடிவயிற்றில் மிகவும் இறங்கி இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இது எதனால் ஏற்படுகிறது என்றால் குழந்தையானது பிறப்புறுப்பு பாதையில் பிரசவம் நடப்பதற்க்கு ஏதுவாக சரியாக பொருந்தியதால் ஏற்படுகிறது. இந்த அறிகுறியானது பிரசவம் நடப்பதற்க்கு சில நாட்களுக்கு முன்போ அல்லது சில மணி நேரத்திற்கு முன்போ நடக்கும்.
2. ரத்தக்கசிவு ஏற்படும் :
பிறப்புறுப்பு வழியே ரத்தகசிவு ஏற்படும், இந்த ரத்தமானது தெளிவான பிங்க் நிறத்தில் இருக்கும். கருப்பையின் வாயில் சேர்ந்திருந்த திரவகட்டியானது பிறப்புறுப்பின் வழியே வெளியே தள்ளுவதால் ஏற்படுகிறது. இந்த அறிகுறியானது பிரசவத்திற்கு சில நாட்களுக்கு முன்போ அல்லது பிரசவம் தொடங்க உள்ள சில மணி நேரம் முன்போ ஏற்படும்.
3. பிறப்புறுப்பு சவ்வு கீறப்படும் :
பிறப்புறுப்பிலிருந்து நீர் வெளியேறுதல். இந்த நீரானது குழந்தையை சுற்றியுள்ள பனிக்குடம் உடைவதால் வெளியாகிறது. இந்த அறிகுறியானது பிரசவத்திற்கு பல மணி நேரங்கள் முன்பு தொடங்கி பிரசவத்தின் போதும் நிகழும்.
குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த காலநிலை தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆதலால் பாலூட்டும் தாய்மார்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த காலநிலை தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆதலால் பாலூட்டும் தாய்மார்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். உடலில் நீர்ச்சத்து நிரம்பி இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும். எண்ணெய் வகை உணவுகள், காரமான மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளவும் வேண்டும். அறையின் வெப்பநிலையை சீராக பராமரிக்க வேண்டும். குளிர் காலங்களில் தாயும்-சேயும் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் கவனமுடன் செயல்பட வேண்டும்.
பாலூட்டும் தாய்மார்கள் தினமும் காலையில் மிதமான சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகிவருவது நல்லது. அது செரிமான செயல்பாடுகளையும், குடல் இயக்கத்தையும் ஒழுங்குபடுத்த உதவும். மேலும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவும். சூப்கள் பருகுவது செரிமானத்தை எளிதாக்கும். பூண்டு, இஞ்சி போன்றவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டவை என்பதால் சமையலில் அவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும். காளான்கள், தக்காளி, பச்சை இலை காய்கறிகள், கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு, பீன்ஸ், சால்மன் மீன், சியா விதைகள், பால், நட்ஸ் வகைகள், பழச்சாறுகள், வெண்ணெய், முலாம்பழம் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். பிராக்கோலி, காலிபிளவர், துரித உணவுகள் மற்றும் கடல் உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசித்து உடல்நலத்திற்கு பொருத்தமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருவது குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கும்.
குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு சவுகரியமாக இருக்கும் வகையிலான ஆடைகளை அணிவதும் முக்கியமானது. குளிர்த்தன்மை காரணமாக மார்பக காம்பில் வலி, உணர்வின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். அதிக குளிர்ச்சியால் பால் சுரக்கும் நுண்குழாய்களில் அடைப்பு ஏற்படக்கூடும். அதனால் மார்பகங்களில் மசாஜ் செய்து வருவது நல்லது. அதன் மூலம் வலியில் இருந்தும் விடுபடலாம். குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று வீசும் என்பதால் வெளியே செல்வதை தவிர்க்கவேண்டும். அவ்வாறு செய்தால் ஒவ்வாமை, நோய்த்தொற்றுகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.
பெண்களும், தாய்மை அடைந்த பெண்களும், இரும்பு சத்து கொண்ட உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்பவர்களும் இரும்பு சத்து குறைபாடு பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.
ஆண்களை விட பெண்களுக்கு இரும்பு சத்து இன்றியமையாதது. உடலுக்கு தேவையான ரத்தத்தை உற்பத்தி செய்வதில் இரும்பு சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கை ஈடு செய்வதற்கு இரும்பு சத்துதான் பக்கபலமாக இருக்கும். உடலில் இருக்கும் இரும்பு சத்தில் 70 சதவீதம் ஹீமோகுளோபின் எனப்படும் ரத்த சிவப்பணுக்களிலும், மியோகுளோபின் எனப்படும் தசை செல்களிலும் காணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனை நுரையீரலில் இருந்து மற்ற திசுக்களுக்கு எடுத்து செல்வதற்கு ஹீமோ குளோபின் அவசியம்.
இரும்பு சத்து குறைபாடு ஏற்படும்போது ஹீமோ குளோபினின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். ரத்தசோகை பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். உடல் சோர்வு, தலைச்சுற்றல், மூச்சு திணறல், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, தொடர்ந்து தலைவலி ஏற்படுவது, கூந்தல் வறட்சி, கால்களில் நடுக்கம், பதற்றம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவை இரும்பு சத்து குறைபாட்டிற்கான பிற அறிகுறிகளாகும். முடி கொட்டுவது, திடீரென்று சருமம் வெளிர் நிறத்திற்கு மாறுவது போன்ற பிரச்சினைகளும் தோன்றும்.
சரும ஆராய்ச்சி மருத்துவர் மோனிகா பம்ரோ கூறுகையில், “தாய்மை அடைந்த பெண்களும், இரும்பு சத்து கொண்ட உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்பவர்களும் இரும்பு சத்து குறைபாடு பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். ஹீமோகுளோபினை உற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு இரும்புச்சத்து இல்லாத போது ரத்த சோகை பிரச்சினை தலைதூக்குகிறது. அதன் தாக்கம் சருமத்தில் வெளிப்படும். சரும வறட்சி, அரிப்பு, வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறுவது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். நகங்கள் உடைவது, வெடிப்பு ஏற்படுவது, உடல் வலுவிழந்து போவது போன்ற பிரச்சினைகளும் தோன்றும். முகத்திலும், உடல் முழுவதும் சோர்வு ஏற்படக்கூடும். கருவளையம் பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். சருமம், கூந்தல் மற்றும் நகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு இரும்புச்சத்து கொண்ட உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்” என்கிறார்.
நட்ஸ் வகைகள், பயறு வகைகள், பீன்ஸ், கீரை வகைகள், சிறு தானியங்களை அதிகம் உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்.
எல்லா பெண்களுமே நாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வரத்தான் விரும்புகிறார்கள். விரும்பினால் மட்டும் போதாது. அதற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை அவர்கள் கையாளவேண்டும். அந்த வாழ்க்கைமுறை உணவு, உடல், மனம் சார்ந்ததாகும்.
‘உங்களை பார்த்தால் நாற்பது வயது என்று சொல்லவே முடியாது. இருபத்தைந்து வயதே ஆகியிருப்பது போன்று உங்களிடம் இளமைத் துள்ளுகிறது’ என்று நீங்கள் சந்திக்கும் பெண்ணிடம் சொன்னால், அந்த பெண் தன்னை 40 வயது சினிமா கதாநாயகிபோல் நினைத்துக்கொண்டு அந்தரத்தில் சிறகடித்து பறப்பார். உங்கள் இருவருக்கும் இடையேயான சந்திப்பு மிக இனிமையானதாக அமைந்துவிடும். அதே பெண்ணிடம், ‘உங்களுக்கு நாற்பது வயதுதான் ஆகியிருக்கிறதா? பார்த்தால் ஐம்பது வயதுக்கு மேல் மதிக்கும்படி இருக்கிறீர்களே..’ என்று சொல்லிவிட்டால், அப்படியே தலைகவிழ்ந்தபடி சோர்ந்துபோய் உங்களை கடந்துசென்றுவிடுவார்.
எல்லா பெண்களுமே நாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வரத்தான் விரும்புகிறார்கள். விரும்பினால் மட்டும் போதாது. அதற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை அவர்கள் கையாளவேண்டும். அந்த வாழ்க்கைமுறை உணவு, உடல், மனம் சார்ந்ததாகும்.
பெண்கள் பெரும்பாலும் தங்கள் புற அழகைப்பற்றித் தான் கவலைப்படுகிறார்கள். நாற்பது வயதில் புறஅழகை மட்டும் மேம்படுத்திவிட்டால் நாயகிகள் போல் கட்டுக்கோப்பான உடலுடன் வலம் வர முடியாது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுதான் மிக முக்கியம். நாற்பது வயதை கடக்கும்போது உடலில் சக்தி குறைந்து, தசைகள் தளரத் தொடங்கிவிடும் என்பதை முப்பது வயதை கடக்கும்போதே பெண்கள் மனதில்கொள்ளவேண்டும். அப்போதே உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தினால், நாற்பது வயதில் உடல்நல பிரச்சினை எதுவும் தோன்றாது.
இது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கூறுவதை கேளுங்கள்..
“நாற்பது வயது பருவம் என்பது பெண்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்கள் பெரும்பாலும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியிருப்பார்கள். அதனால் உடல்வலு குறைந்திருக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அந்த காலகட்டத்தில் கால்சியம் மற்றும் புரதசத்து குறைபாடுகள் தோன்றும் என்பதால், அதை ஈடுகட்டும் விதத்திலான உணவுகளை உண்ணவேண்டும். நாற்பது வயதுகளில் பெரும்பாலான பெண்களுக்கு உடல்பருமன் பிரச்சினை ஏற்படுகிறது. அது ஏற்படாமல் இருக்க வறுத்த, பொரித்த உணவுகள் உண்பதை வெகுவாக குறைத்திடுவது நல்லது. அதாவது 30 வயதை கடக்கும்போதே வீட்டில் சமையல் எண்ணெய்யின் தேவையை பாதியாக குறைத்திடவேண்டும். அசைவ விரும்பிகள் வாரத்தில் ஒருநாள் அசைவம், ஆறு நாள் சைவம் என்ற உணவுமுறையை கடைப்பிடிப்பது நல்லது.
மதிய உணவில் சாதத்தின் அளவை குறைத்து, காய்கறிகளை அதிகம் சேர்க்கவேண்டும். புடலை, பூசணி, அவரை, முட்டைகோஸ், பீன்ஸ் போன்றவைகளை சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்கு ஆன்டி ஆக்சிடென்ட் நிறைய தேவைப்படும். அதனால் அந்தந்த சீசனில் கிடைக்கும் இரண்டு வகை பழங்களையாவது அன்றாடம் உட்கொள்வது அவசியம். தினம் ஒரு வகை கீரையை உணவில் சேர்க்கும் பழக்கத்தையும் உருவாக்கிக்கொள்ளவேண்டும்” என்றார்.
நாற்பது வயதில் நாயகிகளாக வலம்வர கட்டுடலும் மிக அவசியம். அதற்கு முறையான உடற்பயிற்சி தேவை. அது பற்றி உடற்பயிற்சி நிபுணர் சொல்கிறார்!
“உடல் எடையை கட்டுக்குள்வைத்தபடி எப்போதும் புத்துணர்ச்சியோடு வலம்வர வேண்டும் என்றால், உடற்பயிற்சி அவசியம். ஆனால் இதில் இருக்கும் சில உண்மைகளை பெண்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். உடற்பயிற்சியை தாங்களாகவே வீடுகளில் தொடங்குகிறவர்கள் புத்தகத்தை படித்தோ, டி.வி.யை பார்த்தோ பயிற்சியை ஆரம்பித்துவிடக்கூடாது. ஏன்என்றால் அனைவருக்கும் அனைத்துவிதமான பயிற்சிகளும் பொருந்தாது.
ஒவ்வொரு பெண்ணின் உடல்வாகு மற்றும் உடல்நிலைக்கு தகுந்தபடி அவர்களுக்கான உடற்பயிற்சியையும் அமைத்துக்கொள்ள வேண்டும். அவரவர் உடல் நிலைக்கு ஏற்ற பயிற்சி எது என்பதை கண்டறிய, உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையை பெறவேண்டும். அத்தகைய ஆலோசனையை பெற வாய்ப்பில்லாதவர்கள் தினமும் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். பெண்கள் குறிப்பிட்ட சில பயிற்சிகள் மூலம் கை, வயிற்றுப் பகுதி, தோள்பட்டை, புஜம், இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் உள்ள தசைகளை கட்டுப்படுத்தலாம்” என்கிறார்.
நாற்பது வயதில் நாயகிகளாக வலம் வர மனதும் உற்சாக மாக இயங்கவேண்டும். “மனதே சரியில்லை என்ற வார்த்தையை நாற்பது வயதுகளில் இருக்கும் பெண்கள் உச்சரிக்கும் நிலை ஏற்பட்டால் அதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து, அதில் இருந்து விடுபட்டு, தன்னை உற்சாகமான மனநிலைக்கு மாற்றிக்கொள்ளவேண்டும். பெண்கள் என்றாலே எப்போதும் ஏதாவது பிரச்சினைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அதையே நினைத்து வருந்தக்கூடாது. பொருளாதார நெருக்கடி, குடும்ப நெருக்கடி போன்றவைகள் இருந்தாலும் அதை நினைத்து மனதை நெருக்கடிக்கு உள்ளாக்கிக்கொள்ளக்கூடாது. மற்றவர்களை குறை சொல்வதை தவிர்ப்பதும், எதிர்காலத்தை நினைத்து கவலைகொள்ளாமல் இருப்பதும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதற்கான வழிமுறையாகும்” என்று மனநல நிபுணர்கள் சொல்கிறார்கள்.
எல்லா பெண்களுமே நாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வரத்தான் விரும்புகிறார்கள். விரும்பினால் மட்டும் போதாது. அதற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை அவர்கள் கையாளவேண்டும். அந்த வாழ்க்கைமுறை உணவு, உடல், மனம் சார்ந்ததாகும்.
பெண்கள் பெரும்பாலும் தங்கள் புற அழகைப்பற்றித் தான் கவலைப்படுகிறார்கள். நாற்பது வயதில் புறஅழகை மட்டும் மேம்படுத்திவிட்டால் நாயகிகள் போல் கட்டுக்கோப்பான உடலுடன் வலம் வர முடியாது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுதான் மிக முக்கியம். நாற்பது வயதை கடக்கும்போது உடலில் சக்தி குறைந்து, தசைகள் தளரத் தொடங்கிவிடும் என்பதை முப்பது வயதை கடக்கும்போதே பெண்கள் மனதில்கொள்ளவேண்டும். அப்போதே உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தினால், நாற்பது வயதில் உடல்நல பிரச்சினை எதுவும் தோன்றாது.
இது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கூறுவதை கேளுங்கள்..
“நாற்பது வயது பருவம் என்பது பெண்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்கள் பெரும்பாலும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியிருப்பார்கள். அதனால் உடல்வலு குறைந்திருக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அந்த காலகட்டத்தில் கால்சியம் மற்றும் புரதசத்து குறைபாடுகள் தோன்றும் என்பதால், அதை ஈடுகட்டும் விதத்திலான உணவுகளை உண்ணவேண்டும். நாற்பது வயதுகளில் பெரும்பாலான பெண்களுக்கு உடல்பருமன் பிரச்சினை ஏற்படுகிறது. அது ஏற்படாமல் இருக்க வறுத்த, பொரித்த உணவுகள் உண்பதை வெகுவாக குறைத்திடுவது நல்லது. அதாவது 30 வயதை கடக்கும்போதே வீட்டில் சமையல் எண்ணெய்யின் தேவையை பாதியாக குறைத்திடவேண்டும். அசைவ விரும்பிகள் வாரத்தில் ஒருநாள் அசைவம், ஆறு நாள் சைவம் என்ற உணவுமுறையை கடைப்பிடிப்பது நல்லது.
மதிய உணவில் சாதத்தின் அளவை குறைத்து, காய்கறிகளை அதிகம் சேர்க்கவேண்டும். புடலை, பூசணி, அவரை, முட்டைகோஸ், பீன்ஸ் போன்றவைகளை சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்கு ஆன்டி ஆக்சிடென்ட் நிறைய தேவைப்படும். அதனால் அந்தந்த சீசனில் கிடைக்கும் இரண்டு வகை பழங்களையாவது அன்றாடம் உட்கொள்வது அவசியம். தினம் ஒரு வகை கீரையை உணவில் சேர்க்கும் பழக்கத்தையும் உருவாக்கிக்கொள்ளவேண்டும்” என்றார்.
நாற்பது வயதில் நாயகிகளாக வலம்வர கட்டுடலும் மிக அவசியம். அதற்கு முறையான உடற்பயிற்சி தேவை. அது பற்றி உடற்பயிற்சி நிபுணர் சொல்கிறார்!
“உடல் எடையை கட்டுக்குள்வைத்தபடி எப்போதும் புத்துணர்ச்சியோடு வலம்வர வேண்டும் என்றால், உடற்பயிற்சி அவசியம். ஆனால் இதில் இருக்கும் சில உண்மைகளை பெண்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். உடற்பயிற்சியை தாங்களாகவே வீடுகளில் தொடங்குகிறவர்கள் புத்தகத்தை படித்தோ, டி.வி.யை பார்த்தோ பயிற்சியை ஆரம்பித்துவிடக்கூடாது. ஏன்என்றால் அனைவருக்கும் அனைத்துவிதமான பயிற்சிகளும் பொருந்தாது.
ஒவ்வொரு பெண்ணின் உடல்வாகு மற்றும் உடல்நிலைக்கு தகுந்தபடி அவர்களுக்கான உடற்பயிற்சியையும் அமைத்துக்கொள்ள வேண்டும். அவரவர் உடல் நிலைக்கு ஏற்ற பயிற்சி எது என்பதை கண்டறிய, உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையை பெறவேண்டும். அத்தகைய ஆலோசனையை பெற வாய்ப்பில்லாதவர்கள் தினமும் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். பெண்கள் குறிப்பிட்ட சில பயிற்சிகள் மூலம் கை, வயிற்றுப் பகுதி, தோள்பட்டை, புஜம், இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் உள்ள தசைகளை கட்டுப்படுத்தலாம்” என்கிறார்.
நாற்பது வயதில் நாயகிகளாக வலம் வர மனதும் உற்சாக மாக இயங்கவேண்டும். “மனதே சரியில்லை என்ற வார்த்தையை நாற்பது வயதுகளில் இருக்கும் பெண்கள் உச்சரிக்கும் நிலை ஏற்பட்டால் அதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து, அதில் இருந்து விடுபட்டு, தன்னை உற்சாகமான மனநிலைக்கு மாற்றிக்கொள்ளவேண்டும். பெண்கள் என்றாலே எப்போதும் ஏதாவது பிரச்சினைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அதையே நினைத்து வருந்தக்கூடாது. பொருளாதார நெருக்கடி, குடும்ப நெருக்கடி போன்றவைகள் இருந்தாலும் அதை நினைத்து மனதை நெருக்கடிக்கு உள்ளாக்கிக்கொள்ளக்கூடாது. மற்றவர்களை குறை சொல்வதை தவிர்ப்பதும், எதிர்காலத்தை நினைத்து கவலைகொள்ளாமல் இருப்பதும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதற்கான வழிமுறையாகும்” என்று மனநல நிபுணர்கள் சொல்கிறார்கள்.
குடும்ப நலன் மீதும், குடும்பத்தினர் மீதும் அக்கறை கொள்ளும் குடும்பத்தலைவிகள் தங்கள் உடல் நலன் மீது போதுமான கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு காலங்காலமாக பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது.
குடும்ப நலன் மீதும், குடும்பத்தினர் மீதும் அக்கறை கொள்ளும் குடும்பத்தலைவிகள் தங்கள் உடல் நலன் மீது போதுமான கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு காலங்காலமாக பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலை நீடித்தால் முதுமை பருவத்தை எட்டுவதற்குள்ளாகவே ஏராளமான நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். சில நோய்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கும்வரை வெளிப்படையான அறிகுறிகளை கொண்டிருக்காது.
ஆரம்பக்கட்டத்திலேயே பரிசோதனைகள் மூலம் கண்டறிந்துவிட்டால் கடுமையான பக்கவிளைவுகளில் இருந்து தப்பிவிடலாம். வயது, பாலினத்தை பொறுத்து ஒருசில பரிசோதனைகளை குறிப்பிட்ட காலகட்டத்தில் தவறாமல் மேற்கொள்ள வேண்டியது அவசியம். உடல் நலன் குறித்த தனிப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பராமரித்து வருவதும் முக்கியம். பெண்கள் தவறாமல் செய்ய வேண்டிய சிலவழக்கமான பரிசோதனைகள் இருக்கின்றன. அவை குறித்து பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் மார்பக பரிசோதனை மேற்கொள்வது அவசியம். மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட முடியும்.
‘பேப் ஸ்மியர்’ எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது தவறாமல் மேற்கொள்வதும் அவசியமானது.
பல் பராமரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அது பற்களின் சுகாதாஇரத்தை மேம்படுத்த உதவும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது இரத்த அழுத்தத்தை சரிபார்ப்பது அவசியமானது. உயரம் மற்றும் உடல் எடை இரண்டும் பி.எம்.ஐ. கணக்கீடு அடிப்படையில் சீராக இருப்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
தைராய்டு, நிண நீர், கருப்பை, சருமம் போன்றவற்றை பரிசோதனை செய்யும் வழக்கத்தை இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மேற்கொள்ள வேண்டும். இத்தகைய பரிசோதனை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
உடலில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு எவ்வளவு விகிதத்தில் இருக்கிறது என்பதை கண்டறிய ‘லிப்பிட் புரோபைல்’ பரிசோதனை உதவும். இதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும்.
40 முதல் 65 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்பகம், சருமம், தைராய்டு, கருப்பை, மலக்குடல் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கு உடல் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. 50 வயதை கடந்த பெண்கள் மார்பகத்தை பரிசோதிக்கும் மெமோகிராம் பரிசோதனையை மேற்கொள்வதும் அவசியமானது.
40 முதல் 65 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இரத்த பரிசோதனை மற்றும் கண் பார்வை திறனை கண்டறியும் பரிசோதனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மேற்கொள்வதும் நல்லது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதிப்பதும் நல்லது.
50 வயதை கடந்த பெண்கள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதும் நல்லது.
ஆரம்பக்கட்டத்திலேயே பரிசோதனைகள் மூலம் கண்டறிந்துவிட்டால் கடுமையான பக்கவிளைவுகளில் இருந்து தப்பிவிடலாம். வயது, பாலினத்தை பொறுத்து ஒருசில பரிசோதனைகளை குறிப்பிட்ட காலகட்டத்தில் தவறாமல் மேற்கொள்ள வேண்டியது அவசியம். உடல் நலன் குறித்த தனிப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பராமரித்து வருவதும் முக்கியம். பெண்கள் தவறாமல் செய்ய வேண்டிய சிலவழக்கமான பரிசோதனைகள் இருக்கின்றன. அவை குறித்து பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் மார்பக பரிசோதனை மேற்கொள்வது அவசியம். மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட முடியும்.
‘பேப் ஸ்மியர்’ எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது தவறாமல் மேற்கொள்வதும் அவசியமானது.
பல் பராமரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அது பற்களின் சுகாதாஇரத்தை மேம்படுத்த உதவும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது இரத்த அழுத்தத்தை சரிபார்ப்பது அவசியமானது. உயரம் மற்றும் உடல் எடை இரண்டும் பி.எம்.ஐ. கணக்கீடு அடிப்படையில் சீராக இருப்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
தைராய்டு, நிண நீர், கருப்பை, சருமம் போன்றவற்றை பரிசோதனை செய்யும் வழக்கத்தை இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மேற்கொள்ள வேண்டும். இத்தகைய பரிசோதனை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
உடலில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு எவ்வளவு விகிதத்தில் இருக்கிறது என்பதை கண்டறிய ‘லிப்பிட் புரோபைல்’ பரிசோதனை உதவும். இதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும்.
40 முதல் 65 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்பகம், சருமம், தைராய்டு, கருப்பை, மலக்குடல் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கு உடல் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. 50 வயதை கடந்த பெண்கள் மார்பகத்தை பரிசோதிக்கும் மெமோகிராம் பரிசோதனையை மேற்கொள்வதும் அவசியமானது.
40 முதல் 65 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இரத்த பரிசோதனை மற்றும் கண் பார்வை திறனை கண்டறியும் பரிசோதனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மேற்கொள்வதும் நல்லது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதிப்பதும் நல்லது.
50 வயதை கடந்த பெண்கள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதும் நல்லது.
65 வயதை கடந்த பெண்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் பரிசோதனை செய்து கொள்வதும் சிறப்பானது. அதுபோல் ஒவ்வொரு ஆண்டும் உடல் எடை, மார்பகம், இரத்த அழுத்தம், தைராய்டு, கருப்பை, நிணநீர், மலக்குடல் போன்ற உறுப்புகள் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதற்கு பரிசோதனை மேற்கொள்வதும் அவசியமானது.
மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை காது, பார்வைத்திறன் பரிசோதனை, இரத்தத்தில் உள்ள வெள்ளை, சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை பற்றிய பரிசோதனை, இரத்தத்தில் சர்க்கரை அளவு பற்றிய பரிசோதனைகளை மேற்கொள்வதும் நல்லது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதும் ஆரோக்கியத்தை மேம்படுத்த துணைபுரியும்.
தாம்பத்தியம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன் குறிப்பிட்ட இவைகளை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இல்லற வாழ்வில் இணையும் ஆண், பெண் இருவரும் தன் அன்பை, காதலை, புரிதலை வெளிபடுத்த உதவும் ஒரு கருவியாக அமைவது தாம்பத்தியம் தான். மன அழுத்தத்தை குறைக்கவும் தாம்பத்தியம் பெரிதும் உதவுகிறது. தாம்பத்தியம் திருப்திகரமாக அமைய சில விஷயங்களை நாம் கட்டாயம் சில விஷயங்களை செய்ய வேண்டும்.
தாம்பத்தியம் சிறப்பாக அமைய முதலில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்க்கு நாம் ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று தாம்பத்தியத்திற்கு முன்னர் சாப்பிடும் உணவு. தாம்பத்தியம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இரத்த ஓட்டம் சீராக இருக்க நாம் சில பழ வகைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன் குறிப்பிட்ட சில பழங்களை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* தாம்பத்தியத்தை ஆரம்பிப்பதற்கு முன் ஸ்டாபெர்ரி பழத்தை சாப்பிட்டால் தாம்பத்தியத்தில் அதிக அளவு விருப்பம் உண்டாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
* ஐஸ்க்ரீம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதிலும் தன் துணையுடன் ஒன்றாக சாப்பிடுவது என்றால் கேட்கவா வேண்டும். தாம்பத்திய உறவை துவங்குவதற்கு முன்னதாக ஐஸ்கீரிம் போன்ற குளிர்ந்த உணவுகளை சாப்பிட்டு தாம்பத்தியத்தை மேற்கொண்டால் இருவருக்கும் இடையேயான நெருக்கமானது அதிகரிக்கும்.
* தாம்பத்திய உறவில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான சக்தியை கொடுப்பது திராட்சை பழம் தான். திராட்சை பழம் சாப்பிட்டால் தாம்பத்திய நேரம் அதிகரிக்குமாம்.
* தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது சுரக்கும் ஹார்மோன்களை சீரான முறையில் சுரக்க வைக்க சாக்லேட் அதிகளவு உதவி செய்கிறது. தாம்பத்தியத்திற்கு முன்னதாக தம்பதிகள் சாக்லெட்டை சாப்பிட்டு துவங்கினால் தாம்பத்திய ஆர்வம் அதிகளவு தூண்டப்படும்.
* தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு தம்பதிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும். வாழைப்பழத்தில் தாம்பத்திய ஹார்மோன்களை அதிகரிக்க செய்யும் ஊட்டசத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இதன் மூலமாக உடலுக்கு தேவையான ஆற்றலானது உடனடியாக வழங்கப்பட்டு உடலை சோர்வடையாமல் இருக்க வழிவகுக்கும்.
மேற்கண்ட பழ வகைகளை தாம்பத்தியத்தின் போது உட்கொண்டால் உங்களின் தாம்பத்திய வாழ்க்கையானது இனிமையானதாக அமையும்.
தாம்பத்தியம் சிறப்பாக அமைய முதலில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்க்கு நாம் ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று தாம்பத்தியத்திற்கு முன்னர் சாப்பிடும் உணவு. தாம்பத்தியம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இரத்த ஓட்டம் சீராக இருக்க நாம் சில பழ வகைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன் குறிப்பிட்ட சில பழங்களை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* தாம்பத்தியத்தை ஆரம்பிப்பதற்கு முன் ஸ்டாபெர்ரி பழத்தை சாப்பிட்டால் தாம்பத்தியத்தில் அதிக அளவு விருப்பம் உண்டாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
* ஐஸ்க்ரீம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதிலும் தன் துணையுடன் ஒன்றாக சாப்பிடுவது என்றால் கேட்கவா வேண்டும். தாம்பத்திய உறவை துவங்குவதற்கு முன்னதாக ஐஸ்கீரிம் போன்ற குளிர்ந்த உணவுகளை சாப்பிட்டு தாம்பத்தியத்தை மேற்கொண்டால் இருவருக்கும் இடையேயான நெருக்கமானது அதிகரிக்கும்.
* தாம்பத்திய உறவில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான சக்தியை கொடுப்பது திராட்சை பழம் தான். திராட்சை பழம் சாப்பிட்டால் தாம்பத்திய நேரம் அதிகரிக்குமாம்.
* தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது சுரக்கும் ஹார்மோன்களை சீரான முறையில் சுரக்க வைக்க சாக்லேட் அதிகளவு உதவி செய்கிறது. தாம்பத்தியத்திற்கு முன்னதாக தம்பதிகள் சாக்லெட்டை சாப்பிட்டு துவங்கினால் தாம்பத்திய ஆர்வம் அதிகளவு தூண்டப்படும்.
* தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு தம்பதிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும். வாழைப்பழத்தில் தாம்பத்திய ஹார்மோன்களை அதிகரிக்க செய்யும் ஊட்டசத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இதன் மூலமாக உடலுக்கு தேவையான ஆற்றலானது உடனடியாக வழங்கப்பட்டு உடலை சோர்வடையாமல் இருக்க வழிவகுக்கும்.
மேற்கண்ட பழ வகைகளை தாம்பத்தியத்தின் போது உட்கொண்டால் உங்களின் தாம்பத்திய வாழ்க்கையானது இனிமையானதாக அமையும்.






