என் மலர்
பெண்கள் மருத்துவம்
நகர்புறங்களில் நெரிசல்மிக்க குடிசை பகுதியில் வசிக்கும் பெண்கள் மாதவிடாய் கால சிரமங்களை எதிர்கொள்ளத்தான் செய்கிறார்கள்.
மாதவிடாய் கால சுகாதாரம், ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு பெண்களிடம் அதிகரித்திருக்கிறது. நகர்புறம் மட்டுமின்றி கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களிடமும் இதில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதேவேளையில் நகர்புறங்களில் நெரிசல்மிக்க குடிசை பகுதியில் வசிக்கும் பெண்கள் மாதவிடாய் கால சிரமங்களை எதிர்கொள்ளத்தான் செய்கிறார்கள்.
அந்த நாட்களில் போதிய ஓய்வெடுக்க முடியாத நிலை, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை போன்ற பிரச்சினைகளால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது துயரத்தை போக்கி ஆசுவாசப்படுத்திக்கொள்ள வசதியாக இந்தியாவிலேயே முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாநகராட்சி சார்பில் ‘பிரீயட் ரூம்’ அமைக்கப்பட்டிருக்கிறது. தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாதவிடாய் கால அறையில் பயன்படுத்திய நாப்கின்களை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்தும் மெஷின், போதிய தண்ணீர் வசதி, கழிவறை வசதி, கண்ணாடி, கால்களை பயன்படுத்தி திறக்கும் குப்பை தொட்டி, ஓய்வெடுக்கும் வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
2019-ம் ஆண்டு தானேவில் குடிசை பகுதியில் வசிக்கும் பெண்களின் சுகாதாரம் குறித்து அறக்கட்டளை ஒன்று ஆய்வு நடத்தியது. அதில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை பட்டியலிட்டதோடு பிரத்யேக அறை அமைப்பது அவசியம் என்றும் பரிந்துரை செய்தது. இதையடுத்து அங்கு மாதவிடாய் கால அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தானே மாநகராட்சி துணை ஆணையர் மணீஷ் ஜோஷி கூறுகையில், ‘‘தானேவில் குடிசை பகுதிகளில் வசிக்கும் 1000 பெண்களிடம் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் சுகாதார பிரச்சினைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு பொது கழிப்பிடங்கள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவுகிறது. பயன்படுத்திய நாப்கின்களை அப்புறப்படுத்துவதிலும் பிரச்சினை இருக்கிறது. இதுதவிர மன ரீதியாகவும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வது தெரியவந்தது. அவை ‘பிரீயட் ரூம்’ அமைப்பதன் அவசியத்தை புரியவைத்தன. உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டோம்’’ என்கிறார்.
அந்த கட்டிடத்தில் மாதவிடாய் கால சுகாதாரம் பற்றிய முக்கியமாக தகவல்கள் இடம்பெற்றுள்ளன. விழிப்புணர்வு தகவல்கள் சுவர் ஓவியங்களாகவும் இடம்பெற்றுள்ளன. இந்த அறை, பெண்கள் மத்தியில் ஆனந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த நாட்களில் போதிய ஓய்வெடுக்க முடியாத நிலை, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை போன்ற பிரச்சினைகளால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது துயரத்தை போக்கி ஆசுவாசப்படுத்திக்கொள்ள வசதியாக இந்தியாவிலேயே முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாநகராட்சி சார்பில் ‘பிரீயட் ரூம்’ அமைக்கப்பட்டிருக்கிறது. தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாதவிடாய் கால அறையில் பயன்படுத்திய நாப்கின்களை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்தும் மெஷின், போதிய தண்ணீர் வசதி, கழிவறை வசதி, கண்ணாடி, கால்களை பயன்படுத்தி திறக்கும் குப்பை தொட்டி, ஓய்வெடுக்கும் வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
2019-ம் ஆண்டு தானேவில் குடிசை பகுதியில் வசிக்கும் பெண்களின் சுகாதாரம் குறித்து அறக்கட்டளை ஒன்று ஆய்வு நடத்தியது. அதில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை பட்டியலிட்டதோடு பிரத்யேக அறை அமைப்பது அவசியம் என்றும் பரிந்துரை செய்தது. இதையடுத்து அங்கு மாதவிடாய் கால அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தானே மாநகராட்சி துணை ஆணையர் மணீஷ் ஜோஷி கூறுகையில், ‘‘தானேவில் குடிசை பகுதிகளில் வசிக்கும் 1000 பெண்களிடம் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் சுகாதார பிரச்சினைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு பொது கழிப்பிடங்கள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவுகிறது. பயன்படுத்திய நாப்கின்களை அப்புறப்படுத்துவதிலும் பிரச்சினை இருக்கிறது. இதுதவிர மன ரீதியாகவும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வது தெரியவந்தது. அவை ‘பிரீயட் ரூம்’ அமைப்பதன் அவசியத்தை புரியவைத்தன. உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டோம்’’ என்கிறார்.
அந்த கட்டிடத்தில் மாதவிடாய் கால சுகாதாரம் பற்றிய முக்கியமாக தகவல்கள் இடம்பெற்றுள்ளன. விழிப்புணர்வு தகவல்கள் சுவர் ஓவியங்களாகவும் இடம்பெற்றுள்ளன. இந்த அறை, பெண்கள் மத்தியில் ஆனந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திருமணமான பிறகு இயற்கையாக கருத்தரித்தல் நிகழ்வு நடைபெறாத நிலையில் அவர்களுக்கு செயற்கை கர்த்தரிப்பு முறை பரிந்துரைக்கப்படுகிறது. செயற்கை கருத்தரிப்பு முறை குறித்த விழிப்புணர்வை தெரிந்து கொள்வோமா?
செயற்கை முறையில் கருவுறுதல் என்பது கர்ப்பப்பையில் நேரடியாக விந்தணுக்களை செலுத்தும் சிகிச்சை முறை.பெண்ணின் கருமுட்டைகளும் ஆணின் விந்தணுக்களும் கலக்கப்பட்டு இது கருவாக உருவானதும் பெண்ணின் கர்ப்பபைக்குள் செலுத்தி விடப்படும். பிறகு கரு உருவாதல் நடைபெறுகிறது.
இந்த செயற்கை கருவூட்டல் இரண்டு முறையில் செய்யப்படுகிறது. ஒன்று ஐயூஐ. மற்றொன்று ஐசிஐ .ஐசிஐ என்பது கர்ப்பப்பை வாயில் விந்தணுக்களை செருகுவார்கள். கர்ப்பப்பைவெளியே இருக்கும் பாதை வழியே இதை செய்வார்கள். ஐயூஐ என்பது கர்ப்பப்பை வாய் கடந்து கர்ப்பப்பையில் விந்தணுக்களை செலுத்தும் முறை ஆகும். இம்முறையில் கருத்தரிப்பை பாதிக்காமல் இருக்க விந்தணுக்கள் செறிவூட்டப்பட்டு உள்செலுத்தப்படுகிறது.
பெண்ணின் சினைப்பையில் அதிக கருமுட்டைகளை உற்பத்தி செய்ய வைத்து அவை முதிர்ச்சி அடைய செய்வார்கள். பிறகு அது வெடிக்க மருந்தை ஊசி வழியாக செலுத்தி அதை வெடிக்க செய்வார்கள். அந்த முட்டையை ஊசிக்குழலில் எடுப்பார்கள். அதற்கு முன்பு ஆணின் விந்தணுக்கள் கோடிக்கணக்கில் ஐவிஎஃப் டிஷ்ஷில் வைக்கப்பட்டிருக்கும். ஊசிக்குழலில் எடுத்த கருமுட்டையை இந்த விந்தணுக்களுடன் கலப்பார்கள். 18 மணி நேரங்கள் வரை வைத்து இரண்டும் கலந்து கருத்தரிப்பு நடந்திருக்கும். பிறகு 72 மணி நேரத்தில் அந்த கரு 8 செல் நிலைக்கு வந்த பிறகு மீண்டும் ஊசிக்குழல் மூலம் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்துவார்கள்.
தரமான விந்தணுக்களோடு கருமுட்டை இணைந்து கருவாக உருவாகிய பிறகு மீதியிருக்கும் விந்தணுக்களை சேமித்துவைப்பார்கள். ஊசிக்குழல் மூலம் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்திய கருமுட்டை கருத்தரிக்காமல் போனால் மீண்டும் இதை கருத்தரிக்க பயன்படுத்தி கொள்வார்கள். இந்த சிகிச்சைக்கு பிறகு கரு கர்ப்பப்பையில் தங்கி இருக்க மருந்தும் மாத்திரைகளும் உண்டு.
செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொண்டதும் பெண்ணின் ரத்தத்தில் ஹெச்சிஜி அளவு அதிகரிக்கும். இதை பரிசோதனை செய்து பார்ப்பார்கள். கரு உருவாகி இருந்தால் இதன் அளவு அதிகரிக்கும். பிறகும் ஓய்வில் இருக்க சொல்லி இரண்டு வாரங்கள் கழிந்து அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும். எனினும் இது மட்டும் கொண்டு உறுதி செய்ய முடியாது. மீண்டும் வாரங்கள் கழிந்து கருவின் இதயத்துடிப்பும் பரிசோதனை செய்யப்படும்.
கருவின் இதயத்துடிப்பு சீராக ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் கருத்தரிப்பு முறை வெற்றி பெற்றதாகும். எனினும் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். இதே போன்று வேறு சிகிச்சைகளும் உண்டு. ஐசிஐ, கிஃப்ட் முறைகள். தம்பதியரின் உடல் நலன் கொண்டு உரிய சிகிச்சை முறையை மருத்துவர்களே தேர்வு செய்வார்கள்.
குழந்தைப்பேறின்மை பிரச்சனையை எதிர்கொள்ளும் தம்பதியருக்கு முதலில் அவர்களது மருத்துவ வரலாறு அறிந்து சிகிச்சையின் மூலமே கருவுறுதலுக்கான சிகிச்சை அளிக்கப்படும். அவை இயலாத நிலையில் செயற்கை கருவுறுதலுக்கு அறிவுறுத்துவார்கள்.
சிகிச்சையில் சில ஆண்களுக்கு விந்தணு பிரச்சனை தீர்க்கப்பட முடியாமல் இருந்தாலும், பெண்ணுக்கு கருமுட்டை பிரச்சனை நிவர்த்தி செய்ய முடியாமல் இருந்தாலும் இறுதியில் கருமுட்டை, விந்தணு தானம் அறிவுறுத்தப்படுகிறது.
செயற்கை முறை கருத்தரிப்பு தேவை என்பதை தம்பதியர் முடிவு செய்ய முடியாது. இந்த சிகிச்சையை மருத்துவர் தொடங்குவதற்கு முன்பு இயற்கையான முறையில் கருத்தரிக்க சிகிச்சைகள் அளிக்கப்படும். அதன் பிறகு தான் மருத்துவர் இந்த முறையை தேர்வு செய்வார்.
செயற்கை முறை கருவுறுதலின் போது பக்கவிளைவுகள் உண்டாகாது. கருத்தரித்தாலும் கருவுக்கு எவ்வித பாதிப்பும் நேராது. பெரும்பாலும் இரட்டைக்குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் வயிற்றில் வளர வாய்ப்புண்டு.
இந்த செயற்கை கருவூட்டல் இரண்டு முறையில் செய்யப்படுகிறது. ஒன்று ஐயூஐ. மற்றொன்று ஐசிஐ .ஐசிஐ என்பது கர்ப்பப்பை வாயில் விந்தணுக்களை செருகுவார்கள். கர்ப்பப்பைவெளியே இருக்கும் பாதை வழியே இதை செய்வார்கள். ஐயூஐ என்பது கர்ப்பப்பை வாய் கடந்து கர்ப்பப்பையில் விந்தணுக்களை செலுத்தும் முறை ஆகும். இம்முறையில் கருத்தரிப்பை பாதிக்காமல் இருக்க விந்தணுக்கள் செறிவூட்டப்பட்டு உள்செலுத்தப்படுகிறது.
பெண்ணின் சினைப்பையில் அதிக கருமுட்டைகளை உற்பத்தி செய்ய வைத்து அவை முதிர்ச்சி அடைய செய்வார்கள். பிறகு அது வெடிக்க மருந்தை ஊசி வழியாக செலுத்தி அதை வெடிக்க செய்வார்கள். அந்த முட்டையை ஊசிக்குழலில் எடுப்பார்கள். அதற்கு முன்பு ஆணின் விந்தணுக்கள் கோடிக்கணக்கில் ஐவிஎஃப் டிஷ்ஷில் வைக்கப்பட்டிருக்கும். ஊசிக்குழலில் எடுத்த கருமுட்டையை இந்த விந்தணுக்களுடன் கலப்பார்கள். 18 மணி நேரங்கள் வரை வைத்து இரண்டும் கலந்து கருத்தரிப்பு நடந்திருக்கும். பிறகு 72 மணி நேரத்தில் அந்த கரு 8 செல் நிலைக்கு வந்த பிறகு மீண்டும் ஊசிக்குழல் மூலம் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்துவார்கள்.
தரமான விந்தணுக்களோடு கருமுட்டை இணைந்து கருவாக உருவாகிய பிறகு மீதியிருக்கும் விந்தணுக்களை சேமித்துவைப்பார்கள். ஊசிக்குழல் மூலம் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்திய கருமுட்டை கருத்தரிக்காமல் போனால் மீண்டும் இதை கருத்தரிக்க பயன்படுத்தி கொள்வார்கள். இந்த சிகிச்சைக்கு பிறகு கரு கர்ப்பப்பையில் தங்கி இருக்க மருந்தும் மாத்திரைகளும் உண்டு.
செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொண்டதும் பெண்ணின் ரத்தத்தில் ஹெச்சிஜி அளவு அதிகரிக்கும். இதை பரிசோதனை செய்து பார்ப்பார்கள். கரு உருவாகி இருந்தால் இதன் அளவு அதிகரிக்கும். பிறகும் ஓய்வில் இருக்க சொல்லி இரண்டு வாரங்கள் கழிந்து அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும். எனினும் இது மட்டும் கொண்டு உறுதி செய்ய முடியாது. மீண்டும் வாரங்கள் கழிந்து கருவின் இதயத்துடிப்பும் பரிசோதனை செய்யப்படும்.
கருவின் இதயத்துடிப்பு சீராக ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் கருத்தரிப்பு முறை வெற்றி பெற்றதாகும். எனினும் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். இதே போன்று வேறு சிகிச்சைகளும் உண்டு. ஐசிஐ, கிஃப்ட் முறைகள். தம்பதியரின் உடல் நலன் கொண்டு உரிய சிகிச்சை முறையை மருத்துவர்களே தேர்வு செய்வார்கள்.
குழந்தைப்பேறின்மை பிரச்சனையை எதிர்கொள்ளும் தம்பதியருக்கு முதலில் அவர்களது மருத்துவ வரலாறு அறிந்து சிகிச்சையின் மூலமே கருவுறுதலுக்கான சிகிச்சை அளிக்கப்படும். அவை இயலாத நிலையில் செயற்கை கருவுறுதலுக்கு அறிவுறுத்துவார்கள்.
சிகிச்சையில் சில ஆண்களுக்கு விந்தணு பிரச்சனை தீர்க்கப்பட முடியாமல் இருந்தாலும், பெண்ணுக்கு கருமுட்டை பிரச்சனை நிவர்த்தி செய்ய முடியாமல் இருந்தாலும் இறுதியில் கருமுட்டை, விந்தணு தானம் அறிவுறுத்தப்படுகிறது.
செயற்கை முறை கருத்தரிப்பு தேவை என்பதை தம்பதியர் முடிவு செய்ய முடியாது. இந்த சிகிச்சையை மருத்துவர் தொடங்குவதற்கு முன்பு இயற்கையான முறையில் கருத்தரிக்க சிகிச்சைகள் அளிக்கப்படும். அதன் பிறகு தான் மருத்துவர் இந்த முறையை தேர்வு செய்வார்.
செயற்கை முறை கருவுறுதலின் போது பக்கவிளைவுகள் உண்டாகாது. கருத்தரித்தாலும் கருவுக்கு எவ்வித பாதிப்பும் நேராது. பெரும்பாலும் இரட்டைக்குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் வயிற்றில் வளர வாய்ப்புண்டு.
கர்ப்ப காலத்தில் கசப்பான உணவை உட்கொள்வதால் வயிற்று போக்கு, குறைப்பிரசவம், கருக்கலைப்பு போன்றவற்றை சந்திக்கின்றனர். எனவே பாகற்காயை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா இல்லையா என்பதை அறிந்து கொள்வோம்.
பாகற்காயின் கசப்புத் தன்மைக்கு காரணமான கெமிக்கல்கள் பெண்களுக்கு இரத்த போக்கை ஏற்படுத்தி கருக்கலைப்பை உண்டாக்குகிறது. இது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனீசு, ஃபோலேட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பல பி வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் நிரம்பிய பாகற்காய் நமக்கு நிறைய நன்மைகளை அளித்தால் கூட கர்ப்பிணி பெண்கள் இதை பார்த்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் கசப்பான உணவை உட்கொள்வதால் என்ன மாதிரியான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என அறிந்து கொள்வோம்.
பாகற்காயில் உள்ள கசப்பான தன்மைக்கு காரணமான மூலக்கூறுகள் குடலிறக்கத்தை ஏற்படுத்தும். இது உங்கள் உடலின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் சிவப்பு இரத்த அணுக்களை அழிக்கிறது. இது இரத்த சோகைக்கு வழிவகுக்கும் மற்றும் கர்ப்ப சிக்கல்களுக்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் கடுமையான இரத்த சோகை முன்கூட்டிய பிறப்புக்கான ஆபத்து, குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தை, மற்றும் பிறப்பதற்கு முன்பே அல்லது அதற்குப் பிறகு உடனடியாக குழந்தை இறப்பு ஆகிய விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
பாகற்காயில் மோமார்டிகா மற்றும் கிளைகோசைடுகள் போன்ற மூலக்கூறுகளும் உள்ளன. அவை உடலில் விஷத்தை ஏற்படுத்தும். இந்த பொருட்களை உட்கொள்வது குடல் வலி, பார்வை கோளாறுகள், வாந்தி, சோர்வு, தசை சோர்வு, குமட்டல் மற்றும் உமிழ்நீரின் அதிக உற்பத்தி போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் கசப்பு அல்லது கசப்பான விதைகளை சாப்பிடுவதால் வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படுகிறது. சில நிபுணர்கள் கர்ப்ப காலத்தில் கசப்பான சாறு குடிப்பதால் சுருக்கங்களைத் தூண்டும் மற்றும் இரத்தப்போக்கு கூட ஏற்படலாம், இது கருக்கலைப்புக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றனர்.
பாகற்காயை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கசப்பை தவிர்ப்பது நல்லது. இருப்பினும் ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற்ற பிறகு சாப்பிடுங்கள். சிறிய அளவு எடுத்துக் கொள்வதே சிறந்தது. ஒரு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஒரு கப் பாகற்காயை சாப்பிடலாம்.
முடிந்த வரை கர்ப்ப காலத்தில் கசப்பு உணவுகளை முற்றிலுமாக தவிருங்கள். உங்களுக்கு குளுக்கோஸ் -6-பாஸ்பேட் டீஹைட்ரஜனேஸ் என்ற நொதி குறைபாடு இருந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. காரணம் இந்த நொதி தான் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை பாதுகாக்கிறது.
பாகற்காய் விதைகளில் வைரசின் என்ற கெமிக்கல் உள்ளது. இது காய்ச்சல், குமட்டல், அனிமியா, வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் 3 மாதங்களில் பாகற்காய் சாப்பிடுவது சிலருக்கு செரிமான உளைச்சலை ஏற்படுத்தும். சில நிபுணர்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கசப்பான உணவை உட்கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும், இந்த கோட்பாடு தொடர்பான ஆய்வக தகவல்கள் குறைவாகவே உள்ளன.
கர்ப்ப காலத்தில் கசப்பான உணவை உட்கொள்வதால் என்ன மாதிரியான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என அறிந்து கொள்வோம்.
பாகற்காயில் உள்ள கசப்பான தன்மைக்கு காரணமான மூலக்கூறுகள் குடலிறக்கத்தை ஏற்படுத்தும். இது உங்கள் உடலின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் சிவப்பு இரத்த அணுக்களை அழிக்கிறது. இது இரத்த சோகைக்கு வழிவகுக்கும் மற்றும் கர்ப்ப சிக்கல்களுக்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் கடுமையான இரத்த சோகை முன்கூட்டிய பிறப்புக்கான ஆபத்து, குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தை, மற்றும் பிறப்பதற்கு முன்பே அல்லது அதற்குப் பிறகு உடனடியாக குழந்தை இறப்பு ஆகிய விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
பாகற்காயில் மோமார்டிகா மற்றும் கிளைகோசைடுகள் போன்ற மூலக்கூறுகளும் உள்ளன. அவை உடலில் விஷத்தை ஏற்படுத்தும். இந்த பொருட்களை உட்கொள்வது குடல் வலி, பார்வை கோளாறுகள், வாந்தி, சோர்வு, தசை சோர்வு, குமட்டல் மற்றும் உமிழ்நீரின் அதிக உற்பத்தி போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் கசப்பு அல்லது கசப்பான விதைகளை சாப்பிடுவதால் வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படுகிறது. சில நிபுணர்கள் கர்ப்ப காலத்தில் கசப்பான சாறு குடிப்பதால் சுருக்கங்களைத் தூண்டும் மற்றும் இரத்தப்போக்கு கூட ஏற்படலாம், இது கருக்கலைப்புக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றனர்.
பாகற்காயை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கசப்பை தவிர்ப்பது நல்லது. இருப்பினும் ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற்ற பிறகு சாப்பிடுங்கள். சிறிய அளவு எடுத்துக் கொள்வதே சிறந்தது. ஒரு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஒரு கப் பாகற்காயை சாப்பிடலாம்.
முடிந்த வரை கர்ப்ப காலத்தில் கசப்பு உணவுகளை முற்றிலுமாக தவிருங்கள். உங்களுக்கு குளுக்கோஸ் -6-பாஸ்பேட் டீஹைட்ரஜனேஸ் என்ற நொதி குறைபாடு இருந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. காரணம் இந்த நொதி தான் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை பாதுகாக்கிறது.
பாகற்காய் விதைகளில் வைரசின் என்ற கெமிக்கல் உள்ளது. இது காய்ச்சல், குமட்டல், அனிமியா, வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் 3 மாதங்களில் பாகற்காய் சாப்பிடுவது சிலருக்கு செரிமான உளைச்சலை ஏற்படுத்தும். சில நிபுணர்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கசப்பான உணவை உட்கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும், இந்த கோட்பாடு தொடர்பான ஆய்வக தகவல்கள் குறைவாகவே உள்ளன.
முதல் மூணு மாசத்தில் சரியான உணவு மூலமே கர்ப்பிணிகள் தங்களையும் வயிற்றில் இருக்கும் கருவையும் பாதுகாக்க முடியும். இந்த முக்கிய காலங்களில் கண்டிப்பாக சேர்க்கவேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
ஒரு பெண் கர்ப்பமான முதல் மூன்று மாதம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த மாதங்களில் தான் பெரும்பாலும் கருச்சிதைவு உண்டாகிறது. அதே போல் இந்த மாதங்களில் தான் கருவின் வளர்ச்சியும் அதிகரிக்க செய்கிறது. கருவின் வளர்ச்சியில் அடித்தளமான இந்த காலம் கர்ப்பிணிகள் தங்களை வலிமையோடு வைத்திருக்க வேண்டிய காலமும் கூட.
இப்போது உடலுக்கு ஆற்றலும் அதிக ஊட்டச்சத்தும் நிறைவாக தேவை. இந்த நேரத்தில் சரியான உணவு மூலமே கர்ப்பிணிகள் தங்களையும் வயிற்றில் இருக்கும் கருவையும் பாதுகாக்க முடியும். இந்த முக்கிய காலங்களில் கண்டிப்பாக சேர்க்கவேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
கீரைகள்
வளரும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் அனைவருக்குமே இது மிகவும் தேவையானது. அதிலும் கருவை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கு அதிகம் தேவை. கீரைகள் வைட்டமின் பி என்னும் ஃபோலிக் அமிலம் நிறைந்தவை. ஒரு பெண் கருவுற்றதை உறுதி செய்ததும் உணவில் சேர்க்க வேண்டிய முதல் பொருள் கீரையாகத்தான இருக்க வேண்டும். கீரையில் நிறைவாக இருக்கும் ஃபோலிக் அமிலமானது கருவின் மூளை மற்றும் முதுகெலும்பு தொடர்பான நரம்புக் குழாய் குறைபாடுகள் அல்லது கருவின் பிறப்பு குறைபாடுகளை தடுக்கிறது. தினம் ஒரு கீரையாக முருங்கைக்கீரை, பாலக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி என்று வகைவகையாக எடுத்துகொள்ளுங்கள். ஒரு கப் அளவு போதுமானது. கீரையை சூப் ஆக்கியும் எடுத்துகொள்ளலாம். மிளகு சேர்ப்பதால் குமட்டல் உணர்வும் சற்று குறையகூடும்.
சிட்ரஸ் பழங்கள்
இதை சொல்லிதான் எடுக்க வேண்டுமென்பதில்லை. ஏனெனில் கர்ப்பிணி குமட்டலை தடுக்க சிட்ரஸ் பழங்களை தான் விரும்புகிறார்கள். சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி கொண்டவை. தினமும் ஒவ்வொரு நாளும் 1 சிட்ரஸ் பழத்தை எடுத்துகொள்ளுங்கள். இதைசாறாக்கி குடிக்க விரும்பினால் தினம் 1 கப் அளவு எடுக்க வேண்டும். ஏனெனில் சாறுகளில் கலோரிகள் அதிகம், நார்ச்சத்து குறைவு என்பதால் அளவை அதிகரிக்க வேண்டாம். எலுமிச்சை பழம், ஆரஞ்சு,நெல்லிக்காய் போன்றவை எடுத்துகொள்ளலாம். இது வைட்டமின் சி நிறைந்தது என்பதால் எதிர்ப்பு சக்தியும் உடலில் அதிகரிக்க கூடும்.
கொட்டைகள்
நட்ஸ் வகைகள் கர்ப்பகாலம் முழுமையுமே தேவை. அளவாக இதை எடுத்துகொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யலாம். கருவுற்ற முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிக்கு புரதம் அவசியம். ஒவ்வொரு நாளும் 60 கிராம் அல்லது அதற்கு மேல் புரதம் தேவை என்று அறிவுறுத்தப்படுகிறது. அக்ரூட், பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற கொட்டைகளில் ஆரோக்கியமான அளவு நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் புரதங்கள் உள்ளது. கர்ப்பிணிகள் கொட்டையை சாப்பிடுவதன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஒவ்வாமையை தடுக்க உதவுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
தயிர்
கர்ப்பிணிகள் தயிர், மோர் சாப்பிட்டால் குளுமை வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் தயிர் கால்சியத்தின் சிறந்த ஆதாரம். கர்ப்பிணிக்கு கால்சியம் குறைபாடு இருக்கும் போது வயிற்றில் வளரும் கருவுக்கு கால்சியம் தேவை என்னும் போது அது கர்ப்பீயின் எலும்புகளிலிருந்து உறிஞ்சப்படுகிறது. தினம் ஒரு கப் தயிர் சேர்ப்பதன் மூலம் கருவின் எலும்புகள் வலுவாக வைத்திருக்க முடியும். குழந்தை வளர வளர குழந்தைக்கு வேண்டிய கால்சியம் பற்றாக்குறையில்லாமல் கிடைக்கும். உறுதியான எலும்புகளோடு குழந்தை வளர கருவுற்ற தொடக்கத்தில் ஒரு கப் தயிர் அவசியம் எடுத்துகொள்ளுங்கள்.
பீன்ஸ் வகைகள்
கர்ப்பிணி முதல் மற்றும் மூன்றாம் ட்ரை மெஸ்டர் காலங்களில் அதிகமாக மலச்சிக்கலை சந்திக்கிறார்கள். இந்த காலங்களில் அவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துகொள்வதன் மூலம் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. நார்ச்சத்து உணவில் பீன்ஸ் சிறந்த தேர்வு. இது கர்ப்பிணிக்கு தேவையான புரதம் மற்றும் நார்ச்சத்து வழங்குவதோடு மலச்சிக்கலையும் வராமல் செய்கிறது. பீன்ஸ் வகைகள் குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க செய்யும். கர்ப்பிணிக்கு மலச்சிக்கல் கவனிக்காத போது அது மூலநோய் வரை உண்டாக்கிவிடும். மேலும் மலக்குடல் பகுதியில் இருக்கும் நரம்புகள் வீங்குவதால் அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்க செய்யும். அதனால் உணவில் ஒரு வேளை பீன்ஸ் வகைகளை சேர்ப்பது நல்லது.
முட்டை
கர்ப்பிணி அசைவப்பிரியராக இருந்தால் முட்டையை அவ்வபோது உணவில் சேர்க்க வேண்டும். முட்டை கர்ப்பிணிக்கு வேண்டிய புரத அளவை பூர்த்தி செய்கிறது. இதில் வைட்டமின் டி மற்றும் கால்சியமும் உள்ளது. இதனால் குழந்தையின் எலும்புகள் உறுதியாக வைத்திருக்க உதவும். கருவுற்ற காலத்தில் எல்லா உணவுகளுமே ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே நேரம் சில உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடிக்கடி சேர்ப்பது மேலும் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.
இப்போது உடலுக்கு ஆற்றலும் அதிக ஊட்டச்சத்தும் நிறைவாக தேவை. இந்த நேரத்தில் சரியான உணவு மூலமே கர்ப்பிணிகள் தங்களையும் வயிற்றில் இருக்கும் கருவையும் பாதுகாக்க முடியும். இந்த முக்கிய காலங்களில் கண்டிப்பாக சேர்க்கவேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
கீரைகள்
வளரும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் அனைவருக்குமே இது மிகவும் தேவையானது. அதிலும் கருவை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கு அதிகம் தேவை. கீரைகள் வைட்டமின் பி என்னும் ஃபோலிக் அமிலம் நிறைந்தவை. ஒரு பெண் கருவுற்றதை உறுதி செய்ததும் உணவில் சேர்க்க வேண்டிய முதல் பொருள் கீரையாகத்தான இருக்க வேண்டும். கீரையில் நிறைவாக இருக்கும் ஃபோலிக் அமிலமானது கருவின் மூளை மற்றும் முதுகெலும்பு தொடர்பான நரம்புக் குழாய் குறைபாடுகள் அல்லது கருவின் பிறப்பு குறைபாடுகளை தடுக்கிறது. தினம் ஒரு கீரையாக முருங்கைக்கீரை, பாலக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி என்று வகைவகையாக எடுத்துகொள்ளுங்கள். ஒரு கப் அளவு போதுமானது. கீரையை சூப் ஆக்கியும் எடுத்துகொள்ளலாம். மிளகு சேர்ப்பதால் குமட்டல் உணர்வும் சற்று குறையகூடும்.
சிட்ரஸ் பழங்கள்
இதை சொல்லிதான் எடுக்க வேண்டுமென்பதில்லை. ஏனெனில் கர்ப்பிணி குமட்டலை தடுக்க சிட்ரஸ் பழங்களை தான் விரும்புகிறார்கள். சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி கொண்டவை. தினமும் ஒவ்வொரு நாளும் 1 சிட்ரஸ் பழத்தை எடுத்துகொள்ளுங்கள். இதைசாறாக்கி குடிக்க விரும்பினால் தினம் 1 கப் அளவு எடுக்க வேண்டும். ஏனெனில் சாறுகளில் கலோரிகள் அதிகம், நார்ச்சத்து குறைவு என்பதால் அளவை அதிகரிக்க வேண்டாம். எலுமிச்சை பழம், ஆரஞ்சு,நெல்லிக்காய் போன்றவை எடுத்துகொள்ளலாம். இது வைட்டமின் சி நிறைந்தது என்பதால் எதிர்ப்பு சக்தியும் உடலில் அதிகரிக்க கூடும்.
கொட்டைகள்
நட்ஸ் வகைகள் கர்ப்பகாலம் முழுமையுமே தேவை. அளவாக இதை எடுத்துகொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யலாம். கருவுற்ற முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிக்கு புரதம் அவசியம். ஒவ்வொரு நாளும் 60 கிராம் அல்லது அதற்கு மேல் புரதம் தேவை என்று அறிவுறுத்தப்படுகிறது. அக்ரூட், பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற கொட்டைகளில் ஆரோக்கியமான அளவு நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் புரதங்கள் உள்ளது. கர்ப்பிணிகள் கொட்டையை சாப்பிடுவதன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஒவ்வாமையை தடுக்க உதவுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
தயிர்
கர்ப்பிணிகள் தயிர், மோர் சாப்பிட்டால் குளுமை வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் தயிர் கால்சியத்தின் சிறந்த ஆதாரம். கர்ப்பிணிக்கு கால்சியம் குறைபாடு இருக்கும் போது வயிற்றில் வளரும் கருவுக்கு கால்சியம் தேவை என்னும் போது அது கர்ப்பீயின் எலும்புகளிலிருந்து உறிஞ்சப்படுகிறது. தினம் ஒரு கப் தயிர் சேர்ப்பதன் மூலம் கருவின் எலும்புகள் வலுவாக வைத்திருக்க முடியும். குழந்தை வளர வளர குழந்தைக்கு வேண்டிய கால்சியம் பற்றாக்குறையில்லாமல் கிடைக்கும். உறுதியான எலும்புகளோடு குழந்தை வளர கருவுற்ற தொடக்கத்தில் ஒரு கப் தயிர் அவசியம் எடுத்துகொள்ளுங்கள்.
பீன்ஸ் வகைகள்
கர்ப்பிணி முதல் மற்றும் மூன்றாம் ட்ரை மெஸ்டர் காலங்களில் அதிகமாக மலச்சிக்கலை சந்திக்கிறார்கள். இந்த காலங்களில் அவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துகொள்வதன் மூலம் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. நார்ச்சத்து உணவில் பீன்ஸ் சிறந்த தேர்வு. இது கர்ப்பிணிக்கு தேவையான புரதம் மற்றும் நார்ச்சத்து வழங்குவதோடு மலச்சிக்கலையும் வராமல் செய்கிறது. பீன்ஸ் வகைகள் குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க செய்யும். கர்ப்பிணிக்கு மலச்சிக்கல் கவனிக்காத போது அது மூலநோய் வரை உண்டாக்கிவிடும். மேலும் மலக்குடல் பகுதியில் இருக்கும் நரம்புகள் வீங்குவதால் அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்க செய்யும். அதனால் உணவில் ஒரு வேளை பீன்ஸ் வகைகளை சேர்ப்பது நல்லது.
முட்டை
கர்ப்பிணி அசைவப்பிரியராக இருந்தால் முட்டையை அவ்வபோது உணவில் சேர்க்க வேண்டும். முட்டை கர்ப்பிணிக்கு வேண்டிய புரத அளவை பூர்த்தி செய்கிறது. இதில் வைட்டமின் டி மற்றும் கால்சியமும் உள்ளது. இதனால் குழந்தையின் எலும்புகள் உறுதியாக வைத்திருக்க உதவும். கருவுற்ற காலத்தில் எல்லா உணவுகளுமே ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே நேரம் சில உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடிக்கடி சேர்ப்பது மேலும் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.
பெண்களை இரண்டுவிதமான புற்றுநோய்கள் பெருமளவு தாக்குகின்றன. அவை எந்த வகையான புற்றுநோய்கள் எதனால் இந்த நோய் வருகிறது என்று அறிந்து கொள்ளலாம்.
பெண்களை இரண்டுவிதமான புற்றுநோய்கள் பெருமளவு தாக்குகின்றன. அவை: மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய். உலக அளவில் கணக்கிட்டால் சுவாசப்பகுதியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு முதலிடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களை மார்பக மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பிடித்திருக்கிறது.
மார்பக புற்றுநோய் பாரம்பரியத்தன்மை கொண்டது என்று கருதப்படுகிறது. நெருங்கிய உறவினர்களில் யாருக்காவது வந்திருந்தாலும் அதே குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். 12- வயதுக்கு முன்பு வயதுக்கு வந்துவிட்டாலும், 55-வயதுக்கு பின்பு மாதவிலக்கு நிலைத்துப்போனாலும் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். மாதவிலக்கு நிலைத்த பின்பு உடல் எடை அதிகரிக்கும் பெண் களையும் மார்பக புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.
கொழுப்பு நிறைந்த உணவுகள், மாமிசங்கள், மது போன்றவைகளை தவிர்ப்பது மார்பகபுற்று நோயை தடுக்கும். கர்ப்பத்தடை மாத்திரைகள், மாதவிலக்கு நாட்களை தள்ளிப்போடுவதற்காக உட்கொள்ளும் மாத்திரைகள், குழந்தையின்மைக்காக சாப்பிடும் மாத்திரைகளில் இருக்கும் ஹார்மோன் தன்மைகள் போன்றவை மார்பக புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதாக கண்டறிந்திருக்கிறார்கள்.
30 வயதிற்கு பின்பு முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும் பெண்களும், ஒரு தடவை கூட கர்ப்பமே ஆகாத பெண்களும், 45 வயதைக்கடந்த பெண்களும் இந்த நோய்க்கான எச்சரிக்கை உணர்வினை கடைப்பிடிக்கவேண்டும்.
மார்பகங்களில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் ஏதாவது தோன்றியிருந்தாலும், அந்த கட்டிகளை ஆபரேஷன் மூலம் நீக்கியிருந்தாலும் கவனமாக இருங்கள். பிற்காலத்தில் ஒருவேளை அதனால் மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.
கருப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கருப்பை வாய்ப் பகுதி, பெண்களின் பிறப்பு உறுப்பின் உள்பகுதியில் அமைந்திருக்கிறது. பெண்கள் தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பித்து மூன்று வருடங்கள் கடந்த பின்பு, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ‘பாப்ஸ்மியர்’ பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இந்த பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடலாம். 30 வயதைக் கடந்த பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை ‘பாப்ஸ்மியர்’ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. 65 முதல் 75 வயதுக்கு உள்பட்ட மூதாட்டிகள் இந்த பரிசோதனையை மேற்கொள்ளவேண்டியதில்லை.
பரிசோதனையில் பாதிப்பு இருப்ப தாக கண்டறிந்தால், அது முதல் நிலை அல்லது இரண்டாவது நிலையில் இருந்தால் 85 முதல் 95 சதவீத நோயாளிகளை குணப்படுத்தி விடலாம். அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் குணப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
ஹுயூமன் பாபிலோமா என்ற ஒருவகை கிருமிகள்தான் இந்த நோய்க்கு காரணம். அவை கருப்பைவாய் திசுக்களை கடந்து சென்று, அந்த திசுக்களில் ஆபத்தான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது திடீரென்று ஏற்படும் மாற்றமல்ல. பல வருடங்களாக நடப்பதாகும்.
இளம் பருவத்திலே பாலியல் தொடர்பில் ஈடுபடுகிற பெண்கள், இளம் வயதிலே பிரசவிக்கும் பெண்கள் போன்றவர்களுக்கும் இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
கர்ப்பிணிகளை கொரோனா பாதித்தாலும், முதியவர்களுக்கு ஏற்படுவது போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பது இதுவரை நடந்த மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
கர்ப்பிணிகளை கொரோனா கூடுதலாக தாக்கும் என்று கூறுவது சரியா? இல்லை! ஆனால் சராசரி பெண்களுக்கு ஏற்படுவது போன்ற கொரோனா பாதிப்பு கர்ப்பிணிகளுக்கும் உண்டு. கர்ப்பிணிகளை கொரோனா பாதித்தாலும், முதியவர்களுக்கு ஏற்படுவது போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பது இதுவரை நடந்த மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
கொரோனா பாதித்த கர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்களுக்கு மிதமான அறிகுறிகளே தென்பட்டிருக்கின்றன. ஆனால் கர்ப்பிணிகள் 7-ம் மாதத்திற்கு பின்பு மிக கவனமாக இருக்கவேண்டும். அப்போது கொரோனா தாக்கினால் அதன் பாதிப்பு ஒருவேளை அதிகமாக இருக்கலாம். அதனால் 7-ம் மாதத்திற்கு பின்பு கர்ப்பிணிகள் உடல் நலனில் மிகுந்த அக்கறைகாட்டவேண்டும்.
கர்ப்பிணிகள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். மாஸ்க் அணிவதிலும், சோப்பிட்டு கைகளை கழுவுவதிலும் மிகுந்த அக்கறை செலுத்துவது அவசியம். பயணங்களை தவிர்த்திடுவது நல்லது. கட்டாயம் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்றால், சொந்த வாகனங்களை பயன்படுத்தவேண்டும். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், உறவினர்கள் வந்து பார்ப்பதையும் தவிர்த்திடலாம்.
அந்தந்த காலகட்டங்களில் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். டாக்டரை சந்திப்பதை தள்ளிப்போடுவது ஆபத்தை உருவாக்கும். லேசான உடல் உபாதைகள் இருந்தால் டாக்டரை போனில் அழைத்து ஆலோசனை பெற்றால் போதுமானது.
கொரோனா அறிகுறிகள் இருப்பதாக உணர்ந்தால் முன்பின் யோசிக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக டாக்டரை சந்திக்க செல்லவேண்டாம். முதலில் உங்கள் மகப்பேறு டாக்டருக்கு தகவலைத் தெரிவியுங்கள். அவர் உங்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை ஏற்பாடுகளை செய்த பின்பு அங்கு செல்லுங்கள். ஆனால் இதில் காலதாமதமும் ஏற்பட்டுவிடக்கூடாது.
பயணங்கள் செய்திருந்தாலோ, உடன் இருந்தவர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ சுகாதார அலுவலர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளச் சொன்னால், அதை முழுமையாக ஏற்று தனிமையில் இருங்கள். உங்களோடு சேர்ந்து உங்கள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை யையும் பாதுகாக்கவேண்டியது இருக்கிறது. அதனால் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் போன்றவை எடுக்கும் சூழ்நிலை ஏற்படும்போது நீங்கள் கர்ப்பிணி என்பதை முதலிலே கூறிவிடுங்கள். வயிற்றில் இருக்கும் சிசுவின் பாதுகாப்பிற்கு இது மிக அவசியம்.
தாயை கொரோனா தாக்கினால் அது அவரது வயிற்றுக்குழந்தையையும் பாதிக்கும் என்பதற்கோ, சிசுவின் வளர்ச்சியை தடுக்கும் என்பதற்கோ இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. கொரோனா தாக்கினால் கருச்சிதைவு ஏற்படும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. பிரசவ நேரத்தில் தாய் கொரோனாவால் பாதித்திருந்தால், வைரஸ் தாய் மூலம் குழந்தையை தாக்கலாம். ஆனாலும் இதுவரை உள்ள மருத்துவ ஆய்வுத் தகவல்கள்படி, பாதுகாப்பு முறைகளை சரியாக கடைப்பிடித்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவதில்லை என்றே தெரியவந்திருக்கிறது. அதே நேரத்தில் ஒருசிலருக்கு மாதம் முழுமை அடையும் முன்பே குழந்தை பிறந்திருக்கிறது. சிசேரியனும் தேவைப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
சமச்சீரான சத்துணவுகளை உண்பது, எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, மன மகிழ்ச்சியை பேணுவது போன்றவைகளில் கர்ப்பிணிகள் கவனம் செலுத்தவேண்டும். தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும். வைட்டமின், கால்சியம் மாத்திரைகளையும் டாக்டரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்.
பெண்கள் புகட்டும் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு கொரானோ பரவும் என்று சொல்வதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அதே நேரத்தில் தாய்- குழந்தை இரண்டு பேருக்கும் இடையே தாய்ப்பால் புகட்டுவது மூலம் நெருக்கமான உடல்தொடர்பு ஏற்படுகிறது. தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பால்புகட்டும்போது குழந்தையுடன் உடல்ரீதியான தொடர்பு ஏற்படுவதால், குழந்தைக்கு அது பரவக்கூடும். அதனால் முன்எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும். தாய்ப்பாலில் பெருமளவு நோய் எதிர்ப்புசக்தி இருந்தாலும், தாய் தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டால் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்தாலே போதுமானது.
தாய்க்கு இருமலோ, தும்மலோ இருக்கும்போது குழந்தையை சற்று விலக்கிவைப்பது நல்லது. குழந்தையை தொடுவதற்கு முன்பும், பால் புட்டி- பிரெஸ்ட் பம்ப் போன்றவைகளை தொடுவதற்கு முன்பும் சோப்பிட்டு நன்றாக கைகளை கழுவிக்கொள்ளவேண்டும்.
கர்ப்பகாலத்தில் வாயிலிருந்து வரக்கூடிய துர்நாற்றம் பொதுவானது. உடலில் உண்டாகும் மாற்றத்தால் இது நிகழ்கிறது. இதற்கு பொதுவான காரணங்கள் என்ன என்று பார்க்கலாம்.
கர்ப்பகால மசக்கையில் கர்ப்பிணிகள் வாந்தி எடுப்பது பொதுவானது. காலை நோய் மற்றூம் குமட்டலுடன் வாந்தியெடுத்தல் பிரச்சனையை கொண்டிருக்கிறார்கள். இதனால் வாந்தி எடுக்கும் போது அமில சூழல் உண்டாகிறது. இந்த நேரத்தில் புளிப்பு மிகுந்த அமிலம் வாயின்னுள் வருவதால் பல் அரிப்பு உண்டாகலாம்.
இது பற்களின் இடையில் நுழைந்து தேங்கி அதிக துர்நாற்றத்தை உண்டாக்குகிறது. இதை தவிர்க்க வாந்தி எடுக்கும் போதெல்லாம் வாய் கொப்புளிப்பது அவசியம். இதன் மூலம் அமிலம் வெளியேற்றப்படுகிறது.
கர்ப்பகாலத்தில் வயிற்றீல் வளரும் கருவுக்கு கால்சியம் நிறைவாக கிடைக்க வேண்டும். இது தாயிடமிருந்துதான் பெறப்படுகீறது. கால்சியம் பற்றாக்குறை இருக்கும் கர்ப்பிணி போதுமான சத்தை குழந்தைக்கு வழங்காத போது வயிற்றில் வளரும் கருவுக்கு தேவையான கால்சியத்தை கர்ப்பிணியின் எலும்பு மற்றும் கால்சியம் இருக்கும் இடத்திலிருந்து உறிஞ்சுகொள்கிறது.
அப்போது தாயின் ரத்தம் மற்றும் எலும்புகள் பற்களிலிருந்து கால்சியம் வெளியேறூகிறது. இது பற்களை பலவீனப்படுத்துகிறது. இதனால் பற்களுக்கு இடையில் துவாரங்கள் உண்டாவதும் சிதைவதும் பற்களின் துர்நாற்றத்தை அதிகரிக்க செய்கிறது.
கர்ப்பிணி பெண் அதிகமாக வாந்தி எடுப்பதால் உடலில் நீரிழப்பு உண்டாகிறது. மேலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துகுறையக்கூடும். அதனால் தான் கர்ப்பிணிகள் அதிகமாக நீர் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. நீர்ச்சத்து குறைபாடு இருக்கும் பொது வாயில் வறட்சி உண்டாகலாம்.
இது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அதிகரித்து வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் உணவுக்கு பிறகு சுத்தமான நீரில் வாய் கொப்புளிப்பதும் பற்களில் உள்ள உணவை வெளியேற்ற உதவும்.
கர்ப்பிணிகள் கருவுற்ற முதல் மூன்று மாதங்கள் உணவின் மீது வெறுப்பை கொண்டிருப்பார்கள் என்றாலும் அடிக்கடி வாந்தி எடுப்பது நீரிழப்பு போன்ற நேரங்களில் பசி உணர்வை அதிகரிப்பார்காள். அப்போது அதிகமாக சிற்றூண்டி வகைகளை தேடுவார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் அப்போது அவர்களது வாயிலிருந்து மேலும் துர்நாற்றம் வீசக்கூடும். அதிலும் மோசமான உணவு பழக்கங்கள்நிச்சயம் வாய் துர்நாற்றத்தை உண்டாக்க செய்யும்.
கர்ப்பிணிக்கு அதிக உமிழ்நீர் சுரப்பது போலவே சிலருக்கு உமிழ்நீர் சுரப்பு குறைவாக இருக்கும். இது வாயை உலர செய்து செரிமானத்தை தாமதப்படுத்தி துர்நாற்றத்தை உண்டாக்க கூடும்.
கர்ப்பகாலத்தில் மோசமான உணவுகள் போன்று சில ஆரோக்கியமான உணவுகளும் வலுவான மணம் கொண்டவை. இவையும் வாய் துர்நாற்றத்தை உண்டாக்க கூடும். குறிப்பாக பூண்டு, வெங்காயம் போன்றவை வலுவான மணம் கொண்டவை என்றாலும் இதை பச்சயாக அரை வேக்காட்டில் சாலட்டில் சேர்த்து சாப்பிடும் போது ஏற்கனவே இருகக் கூடிய வாய் துர்நாற்றத்தை பன்மடங்கு அதிகரிக்க செய்யும்.
இவை தவிர கெட்ட வாடையுடன் மூச்சு இருப்பது சுவாசக்குழாய்களில் நோய்த்தொற்றுகளுக்கான அறிகுறியாக இருக்கலாம். காது, மூக்கு, தொண்டை நோய்த்தொற்றுகள், நீரிழிவு, கல்லீரல், இரைப்பை, குடல் நோய்கள், நாளமில்லா சுரப்பி நோய்கள், வளர்சிதை மாற்ற கோளாறூகள் போன்றவை கூட கெட்ட வாடையோடு கூடிய மூச்சுக்கான காரணங்களாக இருக்கலாம்.
இயன்றவரை கர்ப்பகாலத்தில் உணவில் கவனம் செலுத்துவது போன்று வாய் சுகாதாரம், பல் சிதைவு, பல் அழற்சி , ஈறு அழற்சி போன்ற பிரச்சனைகள் உண்டாகாமல் தடுத்துவிடுவது நல்லது. கர்ப்பகாலத்தில் பல் சுத்தம் மிக மிக அவசியம்.
தாய் அதிக நேரம் தூங்குவது குழந்தையை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒன்பது மணி நேரத்திற்கு மேலாக தூங்குவது குழந்தையின் உடல் நலத்தை பாதிக்கும் என்கிறார்கள் மகப்பேறியியல் மருத்துவர்கள்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் இரவில் தூக்கத்தை இழக்கிறார்கள். நல்ல இரவு தூக்கம் என்பது அவர்களுக்கு கஷ்டமான விஷயமாக உள்ளது. இந்த கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தை குறைந்தது 7-8 மணி நேரம் வரையாவது தூங்க வேண்டும். பெரும்பாலும் முன்கூட்டிய குழந்தை பிறப்பு, வளர்ச்சி கட்டுப்பாடுகள் மற்றும் பல போன்ற மோசமான கர்ப்ப விளைவுகளுடன் சரியான ஓய்வு பெறாமல் இருப்பதும் தொடர்புடையது. இது ஒரு பக்கம் இருக்க தாய் அதிக நேரம் தூங்குவது குழந்தையை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒன்பது மணி நேரத்திற்கு மேலாக தூங்குவது குழந்தையின் உடல் நலத்தை பாதிக்கும் என்கிறார்கள் மகப்பேறியியல் மருத்துவர்கள்.
வளர்ந்து வரும் வயிறு மற்றும் பதட்டம் காரணமாக உடல் ரீதியான அசெளகரியம் கர்ப்பிணிப் பெண்களிடையே தூக்கத்தை சீர்குலைக்க வழிவகுக்கும். இது ஒட்டுமொத்த தூக்க நேரத்தையும் அதிகரிக்கும். இப்படி அதிக தூக்கத்திற்கான வேறு சில பொதுவான காரணங்கள்
பொதுவாக ஹார்மோன்கள் பெண்களுக்கிடையே தூக்கமின்மை பிரச்சினையை உண்டு பண்ணுகிறது. புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பது மற்றும் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவுகளில் வீழ்ச்சி ஆகியவை சோர்வுக்கு வழிவகுக்கும். இதனால் பெண்கள் கர்ப்ப காலத்தில் தூங்க விரும்புகிறார்கள்.
உணவுக்குழாயின் அடிப்பகுதியில் தளர்வான தசை வளையம் உள்ள பெண்களுக்கு இது ஒரு பொதுவான பிரச்சினையாகும். இது வயிற்றுக்குள் உணவைத் திறக்கும். இது உணவுகள் மற்றும் திரவம் மீண்டும் தொண்டைக்கு வர ஆசிட் ரிஃப்ளக்ஸ் க்கு வழிவகுக்கிறது. குறிப்பாக நீங்கள் படுத்துக் கொள்ளும் போது இது தூக்கத்தை சீர்குலைக்கிறது.
இதனால் கர்ப்பிணிப் பெண்கள் சுவாசிப்பதில் சிரமத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு முழு இரவு தூக்கத்திற்குப் பிறகும் ஒரு பெண் குறட்டை மற்றும் சோர்வாக உணர்ந்தால், அவளுக்கு ஸ்லீப் மூச்சுத்திணறல் இருக்கலாம்.கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் தூக்கத்தில் மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்ததால் அப்படி ஒரு பிரச்சினை உங்களுக்கு இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
தூண்டுதலால் சீர்குலைந்த தூக்கத்தை அனுபவிக்கின்றனர். ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதாலோ அல்லது ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து இல்லாததாலோ இது ஏற்படுகிறது.
மருத்துவரின் உதவியை கொண்டு வழக்கமான உடல் செயல்பாடுகளில் நீங்கள் ஈடுபடலாம். உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது உங்களை சோர்வடையச் செய்து உங்களுக்கு நல்ல தூக்கத்தை தரும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கர்ப்பகால நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவும், மேலும் நீங்கள் நிம்மதியாக தூங்கவும் உதவும்.
தூக்கம் வராமல் இருக்கலாம். எனவே ஒரு நல்ல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது பலனளிக்கும். ஒரு தூக்க வழக்கத்தை உருவாக்குவது, தூங்குவது மற்றும் ஒரே நேரத்தில் எழுந்திருப்பது உங்களுக்கு நன்றாக தூங்க உதவுகிறது. நீங்கள் தூங்குவதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் கேஜெட்களிலிருந்து விலகி இருங்கள்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்காக எழுந்திருக்க நேரிடும். இது உங்க தூக்கத்தை சீர்குலைக்கும். எனவே படுப்பதற்கு முன்பே சிறுநீர் கழித்து விட்டு தூங்குங்கள்.
முதல் மற்றும் மூன்றாவது மாதங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதனால் கூட பல பெண்கள் நிம்மதியாக தூங்க முடியாது.வளர்ந்து வரும் குழந்தை சிறுநீர்ப்பையில் கூடுதல் அழுத்தத்தை கொடுப்பதால் இது நிகழ்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவதற்கு பெரும்பாலும் கர்ப்பம் மட்டுமே காரணமாக இருக்கமுடியாது. மாதவிடாய் தள்ளிப்போவதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன.
பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவதற்கு பெரும்பாலும் கர்ப்பமே காரணமாக இருக்கமுடியும். மாதவிடாய் தள்ளிப்போவதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன. இளம்பெண் பருவமடைந்த புதிதில் அல்லது மாதவிடாய் நிற்கப்போகும் (மெனோபாஸ்) வயதில் மாதவிடாய் தள்ளிப் போகக்கூடும். 28 நாள்கள் என்பதே சரியான மாதவிடாய் சுற்றாகும். பெண்களின் உடல் பல்வேறு மாற்றங்களை கடந்து செல்வதால் 21 முதல் 35 வரையிலான நாள்களும் ஆரோக்கியமாகவே கருதப்படுகிறது. 35 நாள்கள் கடந்துதான் மாதவிடாய் வருகிறதென்றால் அதை கவனிக்கவேண்டும். கருத்தரிப்பு உறுதியாகாத நிலையில் அடிக்கடி மாதவிடாய் தள்ளிச் சென்றால் அல்லது மாதவிடாயே வரவில்லையென்றால் அதற்குச் சில காரணங்கள் இருக்கக்கூடும். .
மாதவிடாய் தள்ளிப்போவதற்கு முக்கியமான காரணமாக ஹார்மோன் மாற்றம் இருக்கிறது. சினைப்பை நீர்க்கட்டி (பிசிஓடி) பாதிப்பு மாதவிடாய் தள்ளிப் போவதற்கும் சராசரி சுற்றின் அளவு நீண்டுபோவதற்கும் காரணமாகிறது. ஹார்மோன் சமச்சீராக இல்லாதபட்சத்தில் சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன. சில பெண்களுக்கு ஆண்களில் இருக்கக்கூடிய ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருக்கும். அது மாதவிடாய் சுற்றிலும், கருத்தரிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும். வாழ்க்கை முறையை மாற்றுவது, சரியான மருந்துகளை சாப்பிடுவது ஆகியவை இப்பிரச்னையை தீர்த்து மீண்டும் மாதவிடாய் சுற்றை ஒழுங்காக்குவதற்கு உதவும்..
மாதவிடாய் சுற்று ஒழுங்கற்று அமைவதற்கு மன அழுத்தமும் காரணமாகிறது. மிகுந்த மன அழுத்தத்தினூடாக செல்லும் பெண்கள் சிலருக்கு 2 மாதங்கள் கூட மாதவிடாய் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. மன அழுத்தம் ஹார்மோன் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் ஹைபோதலாமஸின் செயல்பாட்டில் மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. இந்தப் பாதிப்பு, உடல் பருமனாவதற்கு காரணமாகிறது.. இரத்த சோகை மற்றும் இரும்புச் சத்து குறைபாடு குழந்தை பேற்றுக்கான பருவத்தில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு இரத்தசோகை மற்றும் இரும்புச் சத்து குறைபாடு இருக்கும். உடலில் இரும்புச் சத்து கிரகிக்கப்படுவதில் குறைபாடு இருந்தால், இரத்த ஓட்டம் பாதிப்படையும். அதன் காரணமாக மாதவிடாய் தள்ளிப் போகக்கூடும்..
சில பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்குபடுத்துவதற்காக குழந்தைப் பேற்றை தடுக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டின் இருப்பதால் ஹார்மோன் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி மாதவிடாயை 28 நாள் சுற்றாக மாற்றுகிறது. இம்முறையில் முதல் மூன்று வாரங்கள் வெளியாகும் ஹார்மோன்கள் கருத்தரிப்பை தடுக்கும். ஆகவே, மாதவிடாய் தள்ளிப் போகலாம். பிரசவத்தை தள்ளிப்போடும் மாத்திரைகளை நீண்டகாலம் சாப்பிடும் பெண்களுக்கும் மாதவிடாய் சுற்றில் பாதிப்பு ஏற்படலாம்..
வயதுக்கு ஏற்ற உடல் எடை இல்லையென்றால் கரு முட்டை வெளியேறுவதில் பாதிப்பு உண்டாகும். அதிக எடை இருந்தாலும் இதில் பாதிப்பு ஏற்படும். சரியான வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும் மாதவிடாய் சுற்று சீரற்று போவதற்கு காரணமாகலாம்..
நீரிழிவு மற்றும் அழற்சி போன்ற குறைபாடுகள், வயிற்று பிரச்னை இருப்போருக்கு ஹார்மோன் பாதிப்பும், மாதவிடாயில் சீரற்ற தன்மையும் இருக்க வாய்ப்புண்டு. அதிர்ச்சி தரும் நிகழ்வுகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மன அழுத்தத்தின் காரணமாக மாதவிடாய் தள்ளிப்போகக்கூடும்..
தைராய்டு சுரப்பி, உடலின் வளர்சிதை மாற்றத்தில், ஹார்மோன் தூண்டுதலில், இனப்பெருக்க மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. தைராய்டு சுரப்பி குறைவாகவோ அல்லது மிகுதியாகவே செயல்பட்டால் பெண்களின் மாதவிடாய் சுற்று பாதிக்கப்படலாம்.
உடல் எடை குறைவாக இருப்போருக்கு உடல் செயல்பாட்டிலும் மாதவிடாய் சுற்றிலும் பாதிப்பு ஏற்படுவதுபோல, மிகுதியான உடல் எடையும், பருமனும் கொண்டவர்களுக்கும் ஹார்மோன் பிரச்னை இருக்கும். அதிகப்படியான உடல் எடை, அழற்சி (inflammation) ஏற்பட காரணமாகிறது. உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு ஆஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கக்கூடும். இதன் காரணமாக மாதவிடாய் தள்ளிச் செல்வதை மருத்துவர் கண்டுபிடித்தால், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை அறிவுறுத்தி மீண்டும் மாதவிடாயை சரியான சுற்றுக்கு கொண்டு வர உதவுவார்..
தாம்பத்திய விஷயத்தில் மனைவியின் விருப்பங்களை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பொதுவாக படுக்கை அறையில் செய்யும் தவறுகள் என்னென்ன தெரியுமா?
பாலியல் விஷயத்தில் மனைவியின் விருப்பங்களை புரிந்துகொள்ள இயலாத ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மனைவியை முறையாக அணுகத் தெரியாதவர்களாகவும், வாழ்க்கையை ருசிக்கத் தெரியாதவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பொதுவாக படுக்கை அறையில் செய்யும் தவறுகள் என்னென்ன தெரியுமா?
தவறு: மனைவி எப்போதுமே கணவரிடம் அன்பையும், பாசத்தையும் தான் எதிர்பார்ப்பார். பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் கொள்வதில்லை.
நிஜம்: கணவருக்கு பாலியல் ஆர்வம் இருப்பதுபோல் மனைவிக்கும் இருக்கும். பசி, தாகம் போன்று பாலியல் செயல்பாடும், திருப்தியும் மனைவிக்கு அத்தியாவசியமானதுதான். அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கடமை கணவருக்கு இருக்கிறது. அதே நேரத்தில் அன்பும், பாசமும்தான் பாலியல் செயல்பாடுகளுக்கான எரிபொருள் போன்றது. அதனால் அன்பு நிறைந்த தம்பதியினரே பாலியல் செயல்பாடுகளின் எல்லையை அடிக்கடி எட்டுகிறார்கள்.
தவறு:பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட அதிகமான தயாரெடுப்புகள் ஆண்களுக்கு அவசியம்.
நிஜம்: மனைவியுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட அதிகமான தயாரெடுப்புகள் ஆண்களுக்கு தேவையில்லை. தம்மால் இயலாமல் போய்விடுமோ என்ற பதற்றமே அதிக தயாரெடுப்பிற்குரிய காரணமாக இருக்கும். போட்டித் தேர்வுக்கு போன்று இதற்கும் தயாராகவேண்டியதில்லை. பதற்றம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. இயல்பான அணுகுமுறையே முழுமையான தாம்பத்யத்திற்கு தேவை. ஆண்களின் தேவையற்ற தயாரெடுப்புகள் முரண்பாடான சூழலை உருவாக்கி, மனைவியை படுக்கையில் மனங்கோண வைத்துவிடும்.
தவறு:மனைவியுடன் படுக்கையில் படுத்துக்கொண்டே அதிக நேரம் செல்போனை துழாவிக்கொண்டிருப்பது மற்றும் சாட்டிங் செய்வது.
நிஜம்: படுக்கை அறை சூழல், தம்பதிகளின் சுவாரஸ்யமான பேச்சு, அவர்களது தோற்றப்பொலிவு போன்ற அனைத்துமே நிறைவான தாம்பத்ய தொடர்புக்கு மிக அவசியம். மனைவி பாலியல் விருப்பத்தோடு நல்ல மனநிலையில் இருக்கும்போது கணவர் செல்போனில் கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தால் அது படுக்கை அறை சூழலை கெடுத்துவிடும். மனைவிக்கு எரிச்சலும், சந்தேகமும் தோன்றிவிடும். பெரும்பாலான குடும்பங்களில் மகிழ்வான தாம்பத்யத்திற்கு செல்போன் பெரும் இடைஞ்சலாக இருந்துகொண்டிருக்கிறது.
தவறு:தாம்பத்யத்தில் மனைவியின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டியதில்லை.
நிஜம்: பாலியல் செயல்பாட்டில் கணவன்- மனைவி இருவரின் உடலும்- மனமும் ஒன்றிணைகிறது. ஒவ்வொரு முறை இணைவதும் வசந்தமான நினைவுகளாக இருக்கும். கட்டிப்பிடித்தலில் இருவரும் சமநிலையை கடைப்பிடிக்கிறார்கள். இருவரும் சமமாக இணைந்தால்தான் கட்டிப்பிடித்தல் முழுமைபெறும். ஆனால் பாலியல் செயல்பாட்டின்போது அந்த சமநிலையில் ஏற்றத்தாழ்வு உருவாகிவிடுகிறது. மனைவியின் உணர்வுகளுக்கும், விருப்பங்களுக்கும் உரிய மதிப்பை அளிக்காமல், "என் உடல்.. எனது ஆசை.. எனது இன்பம்..எனக்கு மட்டுமே திருப்தி.." என்ற நிலைக்கு கணவன் சென்றுவிடக்கூடாது. இப்படிப்பட்ட மனோநிலை கொண்டவர்கள் தாம்பத்யத்தில் மனைவியின் விருப்பங்களுக்கு உரிய மரியாதையை வழங்கமாட்டார்கள். தாம்பத்ய செயல்பாடுகளில் நிர்பந்தம், திணிப்பு, அடிமைத்தனம், அறுவறுப்பு, சுயநலம் போன்ற எதற்கும் ஆண்கள் இடம்கொடுத்துவிடக்கூடாது.
தவறு:ஆண்கள் டென்ஷனை தீ்ர்க்கும் மருந்து போல் மனைவியை பாலியலுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
நிஜம்: ஆண்களுக்கு ஏற்படும் பல பாதிப்புகளுக்கு திருமணம்தான் தீர்வாக இருக்கும் என்ற தவறான கருத்து சமூகத்தில் நிலவியதுண்டு. தினசரி வாழ்க்கையில் அனுபவிக்கும் பிரச்சினைகளுக்கும் மருந்துபோல் பாலியல் இன்பம் தீர்வு தரும் என்ற நம்பிக்கையும் சிலருக்கு இருக்கிறது. சிலர் தூக்கத்திற்கான மருந்துபோல் பாலியல் செயல்பாட்டை பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் கணவன்-மனைவி இடையேயான அன்பை பெருக்கவும், வாழ்க்கையில் ஆனந்தத்தை ஏற்படுத்தவும் அத்தியாவசியமான தேவையாக பாலியல் இருக்கிறது. அதே நேரத்தில் நெருக்கடிகளில் இருந்து மனதை மீளவைக்கும் சக்தியும், கணவன்-மனைவி இடையேயான சின்னச்சின்ன சண்டைகளை தீர்த்துவைக்கும் சக்தியும் பாலியல் செயல்பாட்டிற்கு இருக்கிறது. மருந்தை நோய் வந்தால் மட்டுமே பயன்படுத்துவோம். அதுபோல் கணவர் தாம்பத்யத்தை கசப்பு மருந்துபோல் ஆக்கி மனைவியை முகம் சுளிக்கவைத்துவிடக்கூடாது. தம்பதிகளுக்கு எல்லா காலகட்டத்திலும் பாலியல் இன்பம் தேவை.
தவறு:உடல் சுத்தம் இல்லாமல் படுக்கை அறையில் மனைவியை அணுகுவது.
நிஜம்: பெரும்பாலான ஆண்கள் உடல் சுத்தத்தோடு படுக்கை அறைக்கு செல்வதில்லை. உடல் சுத்தம் என்பது காலையில் அலுவலகத்திற்கு செல்லும்போது மட்டுமே அவசியம் என்று நினைக்கிறார்கள். படுக்கைக்கு செல்லும்போது உடல் சுத்தமும், மனஉற்சாகமும் மிக அவசியம். ஆண்கள் அலட்சியத்தால்தான் உடல் சுத்தத்தை பேண மறுக்கிறார்கள். ஆண்களில் பெரும்பகுதியினர் ‘‘படுக்கைக்கு வரும்போது நான் இப்படித்தான் இருப்பேன். நீதான் சுத்தமாக குளித்து அலங்காரம் செய்துகொண்டு அசத்தலாக வரவேண்டும்’’ என்பதுபோல் மனைவியிடம் பேசுகிறார்கள். மனைவி அழகாக இருக்கவேண்டும் என்று கணவர் விரும்புவதுபோல், கணவர் அழகாக இருக்கவேண்டும் என்று மனைவியும் விரும்புவார் என்ற நிஜம் பெரும்பாலான ஆண்களுக்கு புரிவதில்லை. இதில் இருக்கும் கசப்பான உண்மை என்னவென்றால், உடல் சுத்தம் இல்லாத கணவரை மனைவி அரைகுறை மனதோடுதான் அனுசரிப்பார். அது முழு இன்பம் தராது.
கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் சோர்ந்து போகிறார்கள். சோர்வில் இருந்து மீள என்ன செய்யலாம்? என்று அறிந்து கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் சோர்ந்து போகிறார்கள். மன நிலை மாற்றம், உடல் அசதி, அதிக பசி உணர்வையும் எதிர்கொள்வார்கள். கர்ப்பகாலத்தில் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவது சோர்வுக்கு காரணமாக அமைகிறது. சோர்வில் இருந்து மீள என்ன செய்யலாம்?
தூக்கம்: கர்ப்ப காலத்தில் போதுமான நேரம் தூங்க வேண்டும். கால்களுக்கும் போதுமான ஓய்வு கொடுக்க வேண்டும். தாயின் ஓய்வு வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நல்லது. தினமும் குறிப்பிட்ட இடைவெளியில் சிறிது நேரம் தூங்கும் வழக்கத்தை பின்பற்றினால் சோர்வு மறைந்து உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
உடற்பயிற்சி: டாக்டர்கள் ஓய்வெடுக்குமாறு பரிந்துரைத்திருந்தால் கர்ப்பிணிகள் அதை முழுமையாக பின்பற்றவேண்டும். அதேவேளையில் யோகா, நடைப்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபடலாம். அது உடலுக்கு போதுமான ஆற்றலை வழங்கும். தினமும் இத்தகைய உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவது தாய்க்கும், சேய்க்கும் நலம் சேர்க்கும்.
புரத உணவு: வயிற்றில் வளரும் கருவுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அவசியமானது. ஆதலால் அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளடங்கிய சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக முட்டை, இறைச்சி, பால், பாலாடைக்கட்டி, பீன்ஸ் போன்ற புரத உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். தூக்க சுழற்சியையும் சீராக்கும். சீரான இடைவெளியில் ஊட்டச்சத்துமிக்க ஏதாவதொரு உணவு, பலகாரங்களை உட்கொண்டு வந்தால் நாள் முழுவதும் உற்சாகம் நீடிக்கும்.
தண்ணீர்: கர்ப்ப காலத்தில் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பது சோர்வை போக்கும். தேவையான அளவு தண்ணீர் பருகாவிட்டால் சோர்வு ஏற்படுவதோடு, செரிமான அமைப்பும் பாதிப்புக்குள்ளாகும்.
உணவின் அளவு: கர்ப்ப காலத்தில் மூன்று வேளை உட்கொள்வதற்கு பதிலாக ஐந்து, ஆறு தடவைகளாக உணவை பிரித்து சாப்பிடலாம். இந்த வழக்கம் உடலை ஆற்றலுடன் வைத்திருக்க உதவும். ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வழிவகுக்கும்.
காபி: கர்ப்பகாலத்தில் காபி பருகுவது உற்சாகத்துடன் இருக்க செய்யும் என்று கருதலாம். முடிந்தவரை காபின் கலந்த பானங்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை வளர்சிதை மாற்றத்தை குறைத்து செயலற்ற தன்மை கொண்டவர்களாக மாற்றிவிடும். மருத்துவர் ஆலோசனைபடி சமச்சீரான சத்துணவுகளை உண்பது மிக அவசியம்.
‘டீன் ஏஜ்’ பெண்கள் ஆர்வம் செலுத்தாமலே இருந்தாலும் அடிப்படையான ஆரோக்கிய பாடங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்துதான் ஆகவேண்டும்.
‘டீன் ஏஜ்’ பெண்கள் ஆர்வம் செலுத்தாமலே இருந்தாலும் அடிப்படையான ஆரோக்கிய பாடங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்துதான் ஆகவேண்டும். சொல்லிக்கொடுப்பதோடு நிறுத்தாமல் அதை அவர்கள் கடைப்பிடிக்கவும் தாய்மார்கள் தொடர்ந்து வற்புறுத்தவேண்டும். அதனை அவர்கள் வாழ்வியல் பாடமாக ஏற்றுக்கொள்ளும் வரை கண்காணிப்பது தாய்மார்களின் பொறுப்பாகும்.
இன்றைய மாணவிகளில் பெரும்பாலானவர்கள் பள்ளிகளில் கழிவறை சுத்தம் இல்லாமல் இருந்தால், அதனை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுகிறார்கள். டாய்லெட் செல்வதற்கு வருத்தப்பட்டு தண்ணீர் பருகுவதையும் தவிர்க்கிறார்கள். காலை முதல் மாலை வரை சிறுநீர் கழிக்காமலே இருந்தால் ‘யூரினரி இன்பெக்ஷன்’ தோன்றும். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் பருகுவதும், அடக்கிவைக்காமல் சிறுநீர் கழிப்பதும் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும்.
மாதவிலக்கு நாட்களில் சுத்தத்தில் அதிக அக்கறை தேவை. தினமும் 3 முதல் 5 பேடுகள் மாற்றவேண்டும். பள்ளியில் வைத்து பேடு மாற்றுவதற்கு தயங்கி காலை முதல் மாலை வரை ஒரே பேடு பயன்படுத்தினால் அது தொற்றுக்கு வழிவகுத்துவிடும்.
அந்த நாட்களில் சிறுநீர் கழித்ததும் உறுப்பு பகுதியை தண்ணீரால் சுத்தம் செய்வது அவசியம். உறுப்பு பகுதியில் சொறி ஏற்படுவதும், வாடை வீசும் விதத்தில் வெள்ளைப்படுதல் ஏற்படுவதும் தொற்று உருவாகியிருப்பதின் அறிகுறியாகும். எல்லாவிதமான வெள்ளைப்படுதலும் தொற்றின் அறிகுறியல்ல. சினைமுட்டை வெளிப்படும் காலகட்டத்திலும், மாதவிலக்கு தொடங்குவதற்கு முன்பும் இயற்கையாகவே வெள்ளைப்படுதல் உருவாகும். உறுப்பு பகுதியில் சுடுநீரை பயன்படுத்தி கழுவக்கூடாது. அது நல்ல பாக்டீரியாக்களையும் கொன்றுவிடும். அதனால் எப்போதுமே உறுப்பு பகுதியை தண்ணீரால் மட்டுமே கழுவவேண்டும். குளிக்கும்போது மட்டும் வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்தி கழுவலாம். ஆனால் உறுப்பு பகுதியை அடிக்கடி சோப் பயன்படுத்தி கழுவக்கூடாது.
உள்ளாடைகளை துவைத்து சூரிய ஒளியில் காயவைத்து பயன்படுத்தவேண்டும். தொற்று ஏற்பட்டிருந்தால் அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. டாக்டர் பரிந்துரைக்கும் ‘ஆன்டி பங்கல் கிரீம்’ பூசுவதும், ‘வஜைனல் வாஷ்’ உபயோகிப்பதும் தொற்றை நீக்கும். சிறுநீர் கழிக்கும்போது வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுதல், சிறுநீர் நிறம் மாறுதல், அடிவயிற்றில் வலி ஏற்படுதல் போன்றவை சிறுநீர் தொற்று ஏற்பட்டிருப்பதன் அறிகுறியாகும்.
அதிக அளவில் உடல்பருத்து காணப்படுதல், அதிக ரோம வளர்ச்சி, நெஞ்சுப் பகுதியில் ரோமம் வளருதல், அதிக அளவில் முடி உதிர்தல் போன்றவை இருந்தால், அது ஒருவேளை பி.சி.ஓ.டி. பாதிப்பாக இருக்கலாம். வாழ்க்கை முறை மாற்றங்களால் பெரும்பாலான டீன்ஏஜ் பெண்கள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். மகப்பேறு டாக்டரை சந்தித்து இதற்கான ஆலோசனைகளை பெறவேண்டும்.
தற்போது குண்டான உடல்வாகுவை கொண்ட பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். துரித உணவுகள், பேக்கரி பலகாரங்கள், கலோரி அதிகமுள்ள பதார்த்தங்களை சாப்பிடுதல் போன்றவைகளால் உடல் குண்டாகிறது. வறுத்த, பொரித்த உணவுகளையும் தவிர்க்கவேண்டும். ஒரு நேரம் உணவே சாப்பிடாமல் இருப்பதும், இன்னொரு தடவை அதிகமாக சாப்பிடுவதும்கூட உடல் குண்டாக காரணமாகிவிடும். பல நிறங்களை கொண்ட பழங்களும், காய்கறிகளும் உணவில் அதிகம் சேர்க்கப்படவேண்டும்.
வாரத்தில் மூன்று நாட்களாவது டீன்ஏஜ் பெண்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கைப்பந்து, பேட்மிண்டன் போன்ற ஏதாவது ஒரு விளையாட்டிலும் அவர்களை பங்குபெற செய்ய வேண்டும். சிறுமிகளுக்கு 12-வது வயதில் கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது நல்லது. கருப்பை பகுதியோடு தொடர்புடைய புற்றுநோய்கள் எதிர்காலத்தில் உருவாகுவதை இது தடுக்கும்தன்மைகொண்டது. டீன்ஏஜ் பெண்கள் சுத்தம் மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.






