என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
இணையதளத்தில் தாய்ப்பால்
Byமாலை மலர்4 Jan 2021 6:23 AM GMT (Updated: 4 Jan 2021 6:23 AM GMT)
தாங்கள் பெற்றெடுத்த குழந்தையின் தேவைக்கு அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை சேமித்து மற்ற குழந்தைகளுக்கு தானமாக வழங்குவார்கள். தாய்ப்பாலை பாதுகாத்து பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கும் வங்கிகளும் இருக்கின்றன.
தாய்ப்பால் கிடைக்காமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு மனிதாபிமானத்துடன் உதவும் தாய்மார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள், தாங்கள் பெற்றெடுத்த குழந்தையின் தேவைக்கு அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை சேமித்து மற்ற குழந்தைகளுக்கு தானமாக வழங்குவார்கள். தாய்ப்பாலை பாதுகாத்து பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கும் வங்கிகளும் இருக்கின்றன.
சைப்ரஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் தாய்பாலை இணையதளம் வழியாக ஆண்களுக்கு வழங்கி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். பாடி பில்டிங்க் பயிற்சி பெறுபவர்கள் உடல் கட்டுறுதிக்காக இதனை வாங்கி பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இப்படி தாய்ப்பாலை விற்பவர் பெயர் ரபேலா லாம்ப்ரூ. 26 வயதாகும் இவருக்கு திருமணமாகி ஹைலே என்ற மகளும், அஞ்சலோ என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்களில் இளைய மகனான அஞ்சலோ பிறந்தபோது அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரந்து கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறார், ரபேலா.
மகனுக்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்து ஏழு மாதங்களை கடந்த பிறகும் தினமும் இரண்டு லிட்டர் தாய்ப்பால் சுரந்து கொண்டிருந்திருக்கிறது. அதனை சேமித்து வைத்து, தாய்ப்பால் சுரக்காமல் சிரமப்படும் பெண்களின் குழந்தைகளுக்கு தானமாக வழங்கி வந்திருக்கிறார்.
“எனக்கு தாய்ப்பால் சுரந்து கொண்டே இருந்தது. அதனை வீணாக்க விரும்பவில்லை. அதை சேமிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. பின்னர் தாய்ப்பால் கொடுப்பதற்கு சிரமப்படும் இரண்டு தாய்மார்களிடம் பேசினேன். தங்களின் குழந்தைகளுக்கு எனது தாய்ப்பாலை கொடுப்பதற்கு சம்மதித்தார்கள். அந்த குழந்தைகளுக்கு உதவ முடிந்ததை நினைத்தபோது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. அதனால் இந்த சேவையை தொடர்வதற்கு விரும்பினேன்” என்கிறார்.
ஆரம்பத்தில் சைப்ரஸ் நாட்டில் தாய்ப்பால் கிடைக்காமல் வாடும் குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை சேமித்து பாதுகாத்து அனுப்பி வந்திருக்கிறார். பிறகு இங்கிலாந்து நாட்டை ரபேலாவின் தாய்ப்பால் சென்றடைந்திருக்கிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ரபேலாவை ஏராளமானோர் நாடி இருக்கிறார்கள். ஆண்களும் அதிக அளவில் ரபேலாவிடம் தாய்ப்பால் கேட்டு ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். அப்போதுதான் கட்டுக்கோப்பான உடல் கட்டமைப்பின் மீது ஆர்வமுள்ள ஆண்கள் தங்கள் உடல் தசையை பலப்படுத்துவதற்கு தாய்ப்பால் பருகும் விஷயம் ரபேலாவுக்கு தெரியவந்திருக்கிறது.
“ஆண்கள் நிறைய பேர் எனக்கு போன் செய்து தாய்ப்பால் பற்றி விசாரித்தார்கள். என்னிடம் தாய்ப்பாலை வாங்கி என்ன செய்கிறார்கள் என்பது ஆரம்பத்தில் எனக்கு தெரியவில்லை. உடல் தசைகளை வலுப்படுத்துவதற்காக அதை உட்கொள்வதாக கூறினார்கள்” என்பவர், இரண்டு ஆண்டுகளில் இணையதளம், சமூகவலைத்தளங்கள் வழியாக தாய்ப்பாலை விற்பனை செய்து பெருமளவு பணம் சம்பாதித்திருக்கிறார். அதே நேரத்தில் தாய்ப்பால் கிடைக்காமல் வாடும் பச்சிளம் குழந்தைகளுக்கும் தொடர்ந்து தாய்ப்பாலை தானமாகவும் வழங்குகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X