என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் அது கர்ப்பப் பையில் மட்டும் தான் இருக்கும். அதுவே புற்றுநோயாக மாறினால் நுரையீரல், கல்லீரல், மூளை என எங்கே வேண்டுமானாலும் பரவி பாதிக்கலாம்.
    எல்லா கர்ப்பத்தையும் உறுதி செய்கிற முதல் அறிகுறியான மாதவிலக்கு தள்ளிப் போவதுதான் முத்துப்பிள்ளை கர்ப்பத்திலும் இருக்கும். அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கும். முத்துப்பிள்ளை கர்ப்பமாக இருந்தால் இந்த வாந்தியும், மயக்கமும் அதிகமாவதுடன், 90 முதல் 95 சதவிகிதப் பெண்களுக்கு ரத்தப் போக்கும் ஏற்படும். அதனால் பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்படுவார்கள்.

    சில பெண்களுக்கு ரத்தப்போக்குடன் திராட்சை மாதிரியான குட்டித் திசுக்களும் வெளியேறும். அரிதாக சில பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிமாகும். சிறுநீரில் புரதத்தின் அளவு கூடும். ஹைப்பர் தைராய்டு ஏற்பட்டு, அதன் அறிகுறிகளான அதிக களைப்பு, அதிக வியர்வை போன்றவையும் இருக்கலாம். முத்துப்பிள்ளை கர்ப்பம் உள்ள பெண்களின் கர்ப்பப்பை, சாதாரண கர்ப்பம் தரித்ததை விட அளவில் மிகப் பெரியதாக இருக்கும்.

    அதாவது மாதவிலக்கு தள்ளிப் போனதில் இருந்து கணக்கிட்டால் கர்ப்பப் பை இருக்க வேண்டிய அளவைவிட, அதிகப் பெரிதாக இருப்பதை மருத்துவர் கண்டுபிடிப்பார். ரத்தப் பரிசோதனையின் மூலம் கர்ப்பம் தரித்த பின் வருகிற ஹெச்.சி.ஜி ஹார்மோன் அதிகரித்திருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அடுத்து ஸ்கேன் செய்து அதை உறுதிப்படுத்தலாம். சினைப்பையின் இரண்டு பக்கங்களிலும் கட்டிகள் இருக்கலாம்.

    தீர்வுகள்...

    ஹெச்.சி.ஜி ஹார் மோன் அளவுகளை சரி பார்த்ததும், ரத்தசோகை இருக்கிறதா எனப் பார்க்க சிபிசி (complete blood count test) சோதனையும், நெஞ்சுப் பகுதிக்கு ஒரு எக்ஸ் ரேவும் எடுக்க வேண்டியிருக்கும். முத்துப் பிள்ளை கர்ப்பத் திசுக்கள் அங்கே பரவியிருக்கிறதா என்பதை அறியவே இந்தச் சோதனை. அந்தத் திசுக்கள் நுரையீரல் உள்பட உடலில் எங்கு வேண்டுமானாலும் பரவலாம். அடுத்து வாக்குவம் ஆஸ்பிரேஷன் என்கிற முறையில் அந்தக் கருவை வெளியே எடுப்பதுதான் தீர்வு. இந்த அறுவை சிகிச்சையின் போது ரத்த இழப்பு அதிகமிருக்கும் என்பதால் தேவையான ரத்தத்தைத் தயாராக வைத்துக்கொண்டே செய்யப்படும். கர்ப்பப் பை சுருங்கவும் மருந்துகள் கொடுக்கப்படும்.

    கர்ப்பம் அசாதாரணமாக வளர்ந்துவிட்டது.... கர்ப்பிணியின் வயதும் அதிகம் என்கிற நிலையில், எதிர்காலத்தில் கருத்தரிக்கிற எண்ணம் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, கர்ப்பப் பையையும் சேர்த்தே அகற்ற வேண்டி வரும் முத்துப்பிள்ளை கர்ப்பத்தை அறுவையின் மூலம் அகற்றி விடுவதோடு முடிந்து போகிற பிரச்னை அல்ல இது. அதன் பிறகான தொடர் கண்காணிப்பு மிக முக்கியம். முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் அது கர்ப்பப் பையில் மட்டும் தான் இருக்கும். அதுவே புற்றுநோயாக மாறினால் நுரையீரல், கல்லீரல், மூளை என எங்கே வேண்டுமானாலும் பரவி பாதிக்கலாம்.

    ஆனால் அதைப் பற்றியும் பயப்படத் தேவையில்லை. கீமோதெரபி சிகிச்சையின் மூலம் இந்தப் புற்றுநோயை 100 சதவிகிதம் குணப்படுத்திவிட முடியும். முத்துப்பிள்ளை கர்ப்பக் கட்டியானது புற்று நோயாக மாறுமா என்பதை தொடர் கண்காணிப்பு மூலம் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். புற்றுநோயாக மாறுகிற வாய்ப்பானது முழுமையான முத்துப்பிள்ளை 15 முதல் 20 சதவிகிதமும், பகுதி முத்துப்பிள்ளைக் கர்ப்பத்தில் 5 சதவிகிதமும் இருக்கிறது. அறுவைசிகிச்சை முடிந்தாலும் 2 வாரங்கள் கழித்து மறுபடி ஹெச்.சி.ஜி சோதனை செய்து அதன் அளவைப் பார்க்க வேண்டும். பிறகு வாராவாரம் அதை சரி பார்க்க வேண்டும். ஹெச்.சி.ஜி அளவானது 100க்கும் கீழே வரும்.

    அதையடுத்து 2 வாரங்களுக்கு ஒருமுறை அந்தச் சோதனையை அது 5க்கும் கீழே வரும் வரை செய்ய வேண்டும். 5க்கும் கீழே வந்துவிட்டால் பிறகு மாதம் ஒரு முறை சோதனை செய்தால் போதுமானது. 8 முதல் 10 வாரங்களில் ஹெச்.சி.ஜி அளவானது சகஜ நிலைக்கு வந்து விடும். 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை இந்தத் தொடர் கண்காணிப்பு அவசியம்.

    ஹெச்.சி.ஜியின் அளவானது குறையாமல் அப்படியே இருந்தாலோ அல்லது திடீரென அதிகரித்தாலோ எச்சரிக்கையாக வேண்டும். அந்தக் குறிப்பிட்ட அளவை எட்டும்வரை சம்பந்தப்பட்ட பெண் கருத்தரிக்கக் கூடாது. அப்படிக் கருத்தரித்தால் ஹெச்.சி.ஜி அளவானது அதிகரித்து, அனாவசியக் குழப்பத்தைத் தரும். எல்லாம் குணமாகி, ஹெச்.சி.ஜி மற்றும் ஸ்கேன் மூலம் மருத்துவர் அதை உறுதி செய்த பிறகே கர்ப்பம் தரிக்கலாம்.
    ஒற்றைத்தலைவலியால் ஆண்களை விட பெண்கள் மூன்று மடங்கு அவதிப்படுகிறார்கள். ஒற்றைத்தலைவலி 25 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பாதிப்பு அதிகம்.
    பெண்களின் உடல்நலம் சார்ந்த தகவல் தொகுப்பை இங்கே பார்க்கலாம்

    * ஒற்றைத்தலைவலியால் ஆண்களை விட பெண்கள் மூன்று மடங்கு அவதிப்படுகிறார்கள். ஒற்றைத்தலைவலி 25 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பாதிப்பு அதிகம்.

    யாரை சந்திப்பது - (நியூராலாஜிஸ்ட் )நரம்பியல் நோய் நிபுணர்

    * 71 சதவீத பெண்கள் மன அழுத்தத்திற்கு எந்த சிகிச்சையும் நாடுவதில்லை

    யாரை சந்திப்பது - மனநல மருத்துவர்

    * 3-ல் 1 நபருக்கு ஈறு சார்ந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்களை ஒப்பிடும் போது பெண்கள் அதிக அளவில் பல் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெறுகிறார்கள்.

    யாரை சந்திப்பது - பல் மருத்துவர்

    * சுவாச நோய்கள்

    ஆஸ்துமா, சைனஸ், நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி உள்ளிட்ட சுவாச நோய்களுக்கு 47 சதவீத பெண்கள் ஆளாகிறார்கள்.

    யாரை சந்திப்பது - நுரையீரல் நிபுணர்

    திருமணமான பெண்கள் பெரும்பாலும் 25 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுக்கிறார்கள். 32 சதவீதம் சிசேரியன் முறையிலேயே பிரசவம் நடக்கிறது.

    யாரை சந்திப்பது - மகப்பேறு நிபுணர்

    * வருடத்திற்கு சுமார் 7 லட்சம் பேர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். வாழ்நாளில் 29 பெண்களில் ஒருவர் மார்பக புற்றுநோய் சார்ந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார். 42 சதவீத பெண்கள் பொருத்தமில்லாத காலணிகளை அணிகிறார்கள். 73 சதவீத பேர் காலணிகளுடன் தொடர்புடைய நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    * 3 பேரில் ஒருவர் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்கிறார்.

    யாரை சந்திப்பது - ஊட்டச்சத்து நிபுணர்

    * 4-ல் 1 பெண் இதயநோய் பாதிப்புக்குள்ளாகி மரணம் அடைகிறார்கள்.

    யாரை சந்திப்பது -  இதய நோய் நிபுணர்

    ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி பேர் மூட்டு வலி சார்ந்த பிரச்சனைக்காக மருத்துவரை நாடுகிறார்கள். இடுப்பு அளவு அதிகரிப்பு, ஈஸ்ட்ரோஜன் சீரற்ற தன்மை போன்றவை அதற்கு காரணமாக இருக்கிறது.

    * கீல்வாதம்

    65 வயதை கடக்கும் பெண்களில் 59 சதவீதம் பேர் கீழ்வாதம் எனப்படும் மூட்டு தேய்மானம், மூட்டு பிறழ்வு பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    யாரை சந்திப்பது - எலும்பியல் நிபுணர்
    ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்வதன் மூலம் எந்தவொரு பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல் கர்ப்பகாலத்தை இனிமையாக கழிக்கலாம்.
    கர்ப்பகாலத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். அதை பார்த்து பயப்பட தேவையில்லை. அவற்றுள் பெரும்பாலானவை இயல்பாக நடைபெறும் மாற்றங்கள்தான். ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்வதன் மூலம் எந்தவொரு பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல் கர்ப்பகாலத்தை இனிமையாக கழிக்கலாம்.

    நீர்ச்சத்து: கர்ப்பகாலத்தில் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அது கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் வழிவகை செய்யும். தொடர்ந்து தண்ணீரையே பருகிக்கொண்டிருந்தால் ஒருவித சலிப்பு ஏற்படக்கூடும். அதற்கு மாற்றாக ஐஸ்கட்டியை தேர்ந்தெடுக்கலாம்.

    அதாவது உங்களுக்கு பிடித்தமான பானத்தை குளிர்சாதனப்பெட்டியின் பிரீசரில் வைத்து அதனை ஐஸ்கட்டியாக மாற்றலாம். பின்பு அதனை தண்ணீரில் கலந்து பருகலாம். சிலருக்கு குளிர்ச்சியான உணவுகள் ஒத்துக்கொள்ளாது. அவர்கள் இதனை தவிர்த்துவிடலாம். மருத்துவரின் ஆலோசனை பெற்று பானங்களை பருகுவது நல்லது.

    முதுகுவலி: கர்ப்பகாலத்தில் முதுகுவலி உள்பட பிற உடல் வலி சார்ந்த பிரச்சினைகளை அனுபவிக்கக்கூடும். முதுகு தண்டுவட பகுதி வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியமானது. ஆகையால் எலும்பு மற்றும் முதுகுதண்டுவட சிகிச்சை நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது. ஒட்டுமொத்த உடல் நலத்தை பேணவும் முதுகு தண்டு ஆரோக்கியத்தை காக்கவும் கர்ப்பகாலத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்வது நல்லது.

    பாதாம் எண்ணெய்: சுக பிரசவமாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் கர்ப்பிணி பெண் மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவரிடமும் இருக்கும். அதற்கு சாத்தியமான சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம். பாதாம் எண்ணெய்யையும் உபயோகிக்கலாம். கருத்தரித்து 8 மாதங்கள் கடந்த பிறகு குழந்தை வெளியேறும் பகுதியில் இரவு தூங்க செல்வதற்கு முன்பு பாதாம் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வரலாம். அது தசைகளை நெகிழ்வடைய செய்யும். சுகப்பிரசவம் ஆவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவும்.

    உள்ளாடை தேர்வு: கர்ப்ப காலத்தில் மார்பகத்தின் அளவு அதிகரிப்பது இயல்பானது. அதனால் பழைய பிராவை தவிர்த்து, அதற்கு ஏற்ற வகையிலான பிராவை தேர்ந்தெடுப்பது நல்லது. குறிப்பாக வயருடன் கூடிய பிராவை தவிர்த்துவிட வேண்டும். அவை பால் சுரப்பதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

    குறட்டை சத்தம்: கர்ப்பகாலத்தில் உடலின் சில பகுதிகள் வீக்கம் அடையும். பாதங்களின் அதன் தாக்கத்தை நேரடியாக உணரலாம். சுவாச குழாய்களிலும் அதன் தாக்கம் எதிரொலித்து குறட்டை சத்தமாக வெளிப்படும். அது இயல்பானதுதான். அதனை கட்டுப்படுத்த விரும்பும் பட்சத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

    கூந்தல் பராமரிப்பு: கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் கூந்தல் பராமரிப்புக்கு போதிய நேரம் செலவிடமுடியாமல் போகும். குழந்தை பிறந்த பிறகு ரொம்பவே சிரமப்பட வேண்டியிருக்கும். அதனை தவிர்க்க பிரசவத்திற்கு சில நாட்கள் முன்பு சிறிதளவு கூந்தலை கத்தரித்து நேர்த்தியாக அலங்கரித்துவிடலாம்.

    நடைப்பயிற்சி: கர்ப்ப காலத்தில் உடல் நலனில் போதிய அக்கறை செலுத்த வேண்டும். அது கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். கர்ப்ப காலத்தில் ஒருவித சோர்வை உணரக்கூடும். அதற்கு இடம் கொடுக்காமல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். எளிமையான உடற்பயிற்சிகளை செய்ய முடியாவிட்டாலும் நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். அது பிரசவம் சுமுகமாக நடைபெற உதவும்
    பெண்களுக்கு பிரசவத்தின் போதும், கர்ப்பப்பை தொடர்பான அறுவைச் சிகிச்சையின் போதும் சிறுநீர்ப்பை உள்பட சிறுநீர் தொடர்பான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
    ஆண்களைப் போல் அல்லாமல் பெண்களுக்கு கர்ப்பப் பை (Uterus), சிறுநீர்ப் பை (UrinaryBladder) கர்ப்பப் பை வாய்க்குழாய் (Vagina),சிறுநீர் குழாய் (Urethra) மலக் குடல் (Rectum) ஆகியவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன. இதனால் பிரசவத்தின்போதும், கர்ப்பப்பை தொடர்பான அறுவைச் சிகிச்சையின் போதும் சிறுநீர்ப் பை உள்பட சிறுநீர் தொடர்பான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. விளைவு, சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை (Incontinence) 63 சதவீத பெண்களுக்கு உள்ளது. இப்பிரச்சினையை வெளியே சொல்லுவதற்கு பெண்களிடம் தயக்கம், கூச்ச சுபாவம் இன்னமும் தொடர்கிறது. மருத்துவ முன்னேற்றம் காரணமாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண நவீன சிகிச்சை உள்ளது.

    ஒரு பெண் வளர்ந்து பூப்பெய்து, திருமணம் செய்து கொள்ளும் வரை பெரும்பாலும் தொடர் சிறுநீர்ப் பிரச்சினைகள் வருவதில்லை. ஏற்கெனவே சொன்னது போல், பெண்களுக்கு இயற்கையிலேயே கர்ப்பப்பை, சிறுநீர்ப் பை, கர்ப்பப்பை வாய்க்குழாய், சிறுநீர்க் குழாய், மலக்குடல் ஆகியவை மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன.

    இயல்பான பிரசவத்தின் போது குழந்தை வெளியே வரும்போது கர்ப்பப் பையை ஒட்டினாற்போல் உள்ள சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவை அழுத்தத்துக்குள்ளாகி சிறுநீர்ப் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. இதே போன்று பிரசவம் தாமதமாகி ஆயுதம் பயன்படுத்தப்படுதல், சிசேரியன், கர்ப்பப்பை நீக்குதல் அறுவைச் சிகிச்சைகளின் போதும் இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக சிறுநீர்ப் பை, சிறுநீர்த் தாரையில் ஓட்டை ஏற்படலாம். இதனால் சிறுநீரை வெளியேற்றும் கட்டுப்பாட்டை சிறுநீர்ப் பை இழக்க (Incontinence) நேரிடும். தொடர்ந்து சிறுநீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.

    சிறுநீர் கட்டுப்பாடு இல்லாத பிரச்சினைகளுக்குச் சிகிச்சை என்ன?

    * சிறுநீர் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறும் பிரச்சினைக்கு (Uroflowmeter) பிரச்சினையின் தன்மைக்கு ஏற்ப கூபகத் தசைப் பயிற்சி, மருந்துகள், அறுவைச் சிகிச்சை ஆகியவை பலன் அளிக்கும்.

    * சிறுநீரை வெளியேற்றுவதில் சிறுநீர்ப் பைக்குப் பயிற்சி (Bladder Training): பெண்கள் வீட்டை விட்டு வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையில், சிறுநீர் கழித்துவிட்டுப் புறப்படுவது வழக்கம். ஏனெனில் போகும் இடத்தில் கழிப்பறை இருக்குமோ, இருக்காதோ என்ற சந்தேகம். இதனால் சிறு நீர்ப்பை முழுவதும் நிரம்பாமலேயே சிறுநீரை வெளியேற்றும் பழக்கம் ஆரம்பிக்கிறது. இதனால் சிறிதளவு மட்டுமே சிறுநீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மைக்கு சிறுநீர்ப்பை (Bladder) உட்படுகிறது. தொடர் பழக்கம் காரணமாகச் சிறிதளவு சிறுநீர் சேர்ந்தவுடனேயே வெளியேற்றும் தன்மையும் உருவாகி விடுகிறது. இது நல்லது அல்ல.

    * குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகத்தில் கழிப்பறை சுகாதாரமின்மையை மனத்தில் கொண்டு மாலை வரை சிறுநீரை அடக்கிக் கொள்வார்கள். இதனால் சிறுநீர்ப் பையில் சிறுநீர் நிரம்பு நோய்த் தொற்றும் ஏற்படும். எனவே அலுவலகத்திலும் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும். மேலும் கழிப்பறைக்குச் செல்வதில் குறிப்பிட்ட நேரங்களை ஆரம்பம் முதலே நிர்ணயித்துக் கொள்ளுதல் நல்லது.

    * கூபகத் தசைகளுக்குப் பயிற்சி (Pelvic Floor Exercises): கூபகத் தசைகளுக்கு எளிய பயிற்சிகள் கொடுத்து சிறுநீர்ப் பையின் கட்டுப்பாட்டுத் தன்மையை மேம்படுத்த முடியும். பெண்கள் எப்போது வேண்டுமானாலும் அப்பயிற்சியினை செய்யலாம். தினந்தோறும் செய்ய வேண்டிய அப் பயிற்சிகளின் பலன் வெளிப்படுத்துவதற்கு சில வாரங்கள், சில மாதங்கள் ஆகலாம். பொறுமை அவசியம்.
    நெருங்கிய உறவு திருமணங்களையும் தவிர்க்க வேண்டும். நெருங்கிய சொந்தத்தில் முடிக்கப்படும் திருமணத்தினால் ஏற்படும் நோய்கள் என்னென்ன என்று அறிந்து கொள்ளலாம்.
    அண்மை காலமாக நிறைய விவாகரத்துகள் ஏற்படுகின்றன. அதுவும் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படையாகக் கூறாமல், உண்மையை மறைத்து திருமணம் நடத்தி வைத்தால் விவாகரத்து ஏற்படத்தான் செய்யும்.

    திருமணத்துக்கு முன்பாக மதம், சாதி, உட்பிரிவு, குடும்ப கவுரவம், வயது, படிப்பு, வேலை, சம்பளம், நிறம், அழகு, உயரம் என பலவற்றையும் பார்க்கிறார்கள். இவற்றில் சில சரியில்லை என்றால் நிராகரிக்கிறார்கள். அதேபோல மணமகன், மணமகளின் உடல்நல, மனநலப் பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்படுமா? என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது, தேவையற்ற சிக்கல்களை தடுக்கும். இதுபற்றி நேரடியாகப் பேசிவிட்டால் பிரச்சினை இல்லை.

    உறவு விட்டுப்போகக் கூடாது, சொத்து போகக் கூடாது என்று நடத்தப்படும் நெருங்கிய உறவு திருமணங்களையும் தவிர்க்க வேண்டும். நெருங்கிய சொந்தத்தில் முடிக்கப்படும் திருமணத்தினால் ஏற்படும் நோய்கள் என்னென்ன தெரியுமா?

    தலசீமியா, சிஸ்டிக் பைப்ரோஸிஸ், டவுன் சிண்ட்ரோம், பெருமூளை வாதம் (சிபி), காதுகேளாமை, பார்வைக் குறைபாடு போன்றவை முக்கியமானவை. இந்தப் பாதிப்பு உள்ள குடும்பத்தினர் ஆரம்பத்திலேயே மரபணு பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். அதைத் தேவையற்ற ஒன்றாக பார்க்க வேண்டியதில்லை.

    இப்படிப் பல்வேறு காரணங்களுக்காக திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம். இன்றைக்கு இது விநோதமாகவும் அதிசயமாகவும் தெரியலாம். ஆனால், ஆரோக்கியமான குடும்பம் உருவாவதற்கும், விவாகரத்தை தடுப்பதற்கும், வருங்காலச் சந்ததியினரை பிறவி நோய்களிலிருந்து காப்பதற்கும் திருமணத்துக்கு முந்தைய மருத்துவ பரிசோதனைகள் பெரிதும் உதவும், என்கிறார்கள், மருத்துவம் மற்றும் சட்டத்துறை வல்லுனர்கள்.
    குழந்தையின்மை பிரச்சனைக்கு தற்போது பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்ப்படி சரியான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
    குழந்தையின்மை பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனையாக உருமாறி வருகிறது. வாழ்க்கைமுறை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளில் இதுவும் ஒன்று. ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமும் தகுந்த சிகிக்சைகளின் மூலமும் குழந்தையின்மைக்கு தீர்வு காணலாம்.

    பரபரப்பான மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால் பெண்களுக்கு ஹார்மோன்கள் சீரற்று சுரக்க ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகி ஓழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. கருமுட்டை வளர்ச்சி பாதிக்கப்படுவதால் கருவுறுதல் நிகழ்வது சிரமாகிறது. தைராய்டு சுரப்பி சரியாக இயங்கவில்லை என்றாலும் பெண்களின் கருமுட்டை வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன்கள் சரியாக சுரக்காது.

    உடல்பருமன் அதிகமான உடல் எடை, ஒழுங்கற்ற உணவுமுறை, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை போன்ற காரணங்களும் கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்தும். மது அருந்துதல் புகை பிடித்தல் பழக்கம் இருந்தாலும் குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும்.

    குழந்தையின்மை பிரச்சனைக்கு தற்போது பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்ப்படி சரியான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

    அன்றாக வாழ்வில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துவதாலும், குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

    தினமும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். ஒரு நாளில் குறைந்தது இரண்டு வகைப்பழங்கள், இரண்டு வகை காய்கள், ஒரு வகை கீரை, தேவையான அளவு புரதம், வாரம் இரண்டு முறை அசைவ உணவு என உணவு முறையை மாற்றி அமைக்க வேண்டும். தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

    தினசரி ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி, மெல்லோட்டம், யோகா, மிதிவண்டி பயிற்சி, நீச்சல் பயிற்சி என ஏதேனும் ஒரு பயிற்சியை செய்யலாம். இதன் மூலம் உடல் எடை குறையும். ஹார்மோன்கள் சீராக சுரக்க ஆரம்பிக்கும்.

    ஒரு நாளுக்கு 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்த தூக்கம் அவசியமானது. இது மனதை அமைதியாகவும், உடலை தளர்வாகவும் வைக்க உதவும்.

    சீரற்ற ஹார்மோன் சுரப்பை ஏற்படுத்துவதில் மன அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. தியான பயிற்சி மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.
    பிறந்த குழந்தையின் உச்சந்தலை வழியாக வெப்பம் வெளியேறும் என்பதால் பிள்ளையின் தலையையும், கூடவே பாதத்தையும் மூடியே வைக்க வேண்டும்.
    ‘‘நார்மல் டெலிவரியோ, சிசேரியனோ, பிறந்த 48 மணி நேரத்துக்குள் குழந்தை கருப்பாக முதல் மலம் கழிக்க வேண்டும். இதுதான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி. அப்படி இல்லாவிட்டால் மலத்துவாரம் இருக்கிறதா என்று கவனியுங்கள். அடுத்தது, உங்கள் உடல்சூட்டிலேயே குழந்தையை வைத்திருங்கள்.

    ஒரு மணி நேரத்திற்குள் ‘சீம்பால்’ என்று சொல்லப்படும் முதல்பால் கொடுப்பதை மறந்து விடாதீர்கள். பிறந்த குழந்தையின் உச்சந்தலை வழியாக வெப்பம் வெளியேறும் என்பதால் பிள்ளையின் தலையையும், கூடவே பாதத்தையும் மூடியே வைக்க வேண்டும்.’’

    வீட்டிற்கு கொண்டு சென்றபிறகு என்ன செய்ய வேண்டும்?

    ‘‘குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும், எவ்வளவு இடைவெளிகளில் தாய்ப்பால் எப்படி கொடுக்க வேண்டும் போன்ற விஷயங்களை மருத்துவமனைகளிலேயே சொல்லிக் கொடுத்து அனுப்புவார்கள். இதுதவிர, பச்சிளம் பாப்பா விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

    குழந்தையை குளிப்பாட்டும் போது பூப்போல கையாள வேண்டும். எண்ணெய் மசாஜ் செய்கிறேன் என்று தலையை தட்டுவது, மூக்கு, காதில் துணியால் சுத்தம் செய்வது, கண்களில் எண்ணெய் வைப்பது போன்ற தவறுகளை செய்யக் கூடாது.

    குழந்தையின் உடல் முழுவதும் பவுடரைக் கொட்டினால், தொடை இடுக்குகளில் தங்கி மேலும் அழுக்கை அதிகரிக்கும். இதனால் அங்கு புண் வரலாம். அடுத்து குழந்தை மருத்துவர் பரிந்துரைப்படி, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக அவசியம்.”
    லேசாக குளிர்ச்சியாக தாய்ப்பால் இருந்தாலோ இளஞ்சூடாக தாய்ப்பால் இருந்தாலோ குழந்தை தாய்ப்பாலை குடிக்காது. குழந்தைக்கு வித்தியாசம் தெரிந்துவிடும்.
    தாய்ப்பாலை சேமித்து வைத்திருந்தால், அதை ஃபிரிட்ஜிலிருந்து வெளியில் எடுத்துவிட்டு மீண்டும் அந்த தாய்ப்பால் அறையின் வெப்பநிலைக்கு வந்த பிறகே குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

    அதாவது, குளிர்ச்சியோ சூடாகவோ தாய்ப்பால் இருக்க கூடாது. தாய்ப்பால் எப்படி ரூம் டெம்பரேச்சர் (அறையின் வெப்ப நிலைத்தன்மையில் இருக்கிறதோ) அதே தன்மையில் மாறிய பிறகே சேமித்து வைத்தப் பாலை கொடுக்க வேண்டும்.

    சாதாரண நீர், அல்லது இளஞ்சூடான நீரில் சேமித்து வைத்த பாட்டிலை வைத்து குளிர்ச்சியைத் தணித்து அறை வெப்பநிலைக்கு தாய்ப்பாலை கொண்டு வர வேண்டும். இதற்கு 20-40 நிமிடங்கள்கூட ஆகலாம். ஆனால், இதுவே சரியான முறை.

    எக்காரணத்துக்கும் தாய்ப்பாலை சூடு செய்யவே கூடாது. இது மிக மிக முக்கியம்.

    தற்போது கடைகளில் பாட்டில் வாம்மர் கிடைக்கிறது. அதை வாங்கியும் நீங்கள் சேமித்து வைத்த தாய்ப்பாலின் குளிர்ச்சித்தன்மையை நீக்கலாம்.
    தாய்ப்பால் சேமித்து வைப்பதில் உள்ள சிக்கல்கள்… தீர்வுகள்…

    தாய்ப்பால் சேமித்து வைத்து, அதை சூடாக்கினால் தாய்ப்பாலில் உள்ள தன்மை நீங்கிவிடும். இதைக் குழந்தைக்கு கொடுக்க கூடாது.

    லேசாக குளிர்ச்சியாக தாய்ப்பால் இருந்தாலோ இளஞ்சூடாக தாய்ப்பால் இருந்தாலோ குழந்தை தாய்ப்பாலை குடிக்காது. குழந்தைக்கு வித்தியாசம் தெரிந்துவிடும்.

    சிறிதளவு குளிர்ச்சியான தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுத்தாலும், குழந்தையின் தொண்டையில் புண்கள் வரக்கூடும்.

    சேமித்து வைத்த தாய்ப்பாலை குழந்தை சுவைத்துவிட்டு, மிச்சமிருக்கும் பாலை மீண்டும் ஃபிரிட்ஜிலோ ஃப்ரீசரிலோ சேமித்து வைக்க கூடாது. குழந்தையின் உமிழ்நீர் பட்ட தாய்ப்பாலில் கிருமிகள் படர்ந்துகொண்டே போகும். இதைக் குழந்தைக்கு மீண்டும் கொடுக்க கூடாது.

    நீங்கள் சேமித்து வைக்கும் தாய்ப்பால் பாட்டிலை அவசியம் ஸ்டெரிலைஸ் செய்யுங்கள். சுகாதாரமற்ற பாட்டிலில் தாய்ப்பாலை சேமித்து வைக்க கூடாது.

    சேமித்து வைத்த தாய்ப்பாலை குளிர்ச்சி நீங்கி விட்டதா என அறிய, உங்களது கைகளில் 2-3 சொட்டு விட்டு பாருங்கள். பின் அதை சுவைத்துப் பாருங்கள். குளிர்ச்சி நீங்கிவிட்டதா எனத் தெரியும்.

    பிரெஸ்ட் பம்பை நன்கு ஸ்டெரிலைஸ் செய்ய வேண்டும். ஏனெனில் பிரெஸ்ட் பம்பில் தாய்ப்பால் இருக்கும் அல்லவா… எனவே நன்கு சுத்தப்படுத்தி, ஸ்டெரிலைஸ் செய்வது மிக மிக அவசியம்.

    எப்போது ஃபீடிங் பாட்டில் வேறு, தாய்ப்பால் சேகரித்து வைக்கின்ற பாட்டில் வேறு எனப் பிரித்துக் கொள்ளுங்கள்.

    தாய்ப்பால் சேமிப்பதற்கென பிரத்யேகமான பாட்டில்கள் விற்கின்றன. அதைப் பயன்படுத்துவது நல்லது.

    ஃபீடிங் பாட்டிலில் தாய்ப்பால் சேகரிக்க வேண்டாம். ஏனெனில் அதில் நிப்பிள் இருக்கிறது. சிறு ஓட்டையும் இருக்கிறது. அதை ஃபிரிட்ஜிலோ ஃபிரிசரிலோ வைக்க வேண்டாம். அவ்வளவு பாதுகாப்பானது கிடையாது.
    குளிர் காலத்தில் வழக்கத்தை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் உடல் நலனை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
    குளிர் காலத்தில் வழக்கத்தை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் உடல் நலனை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குளிரில் அவர்களது சருமம் வறட்சிக்குள்ளாகும்.

    அப்போது தோல் அரிப்பு பிரச்சினை ஏற்படும். குளித்த பிறகு சருமத்தை நன்றாக துடைக்காவிட்டால், அதுவும் தோல் அரிப்பு பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும். கர்ப்ப காலத்தில் உடலை தூய்மையாக பராமரிக்க வேண்டியதும் அவசியமானது. சுத்தமான உடைகளை அணிய வேண்டும். அதுவும் நோய் பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். போதுமான நேரம் தூங்குவதும் அவசியமானது. அது வயிற்று சிசுவின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.

    குளிர்காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க உப்பு, சர்க்கரையின் பயன்பாடுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். காபின் கலந்திருக்கும் காபி, டீ, குளிர் பானங்கள், சாக்லேட் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் அயோடின் பங்களிப்பு இன்றியமையாதது. அது தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு தேவை. மேலும் சிசுவின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தவும் துணை புரிகிறது. இரும்பு சத்து அதிகமுள்ள பச்சை இலை காய்கறிகள், பீன்ஸ் போன்றவற்றை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கால்சியம் மற்றும் புரத சத்துக்களின் தேவைகளை ஈடு செய்வதற்கு பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிட்டு வருவதும் நல்லது. தானிய வகைகளை சாப்பிடுவதும் உடல்நலத்தை மேம்படுத்த உதவும். நார்ச்சத்து அதிகம் கொண்ட பழங்கள், காய்கறிகள், சாலட்டுகள், பீன்ஸ், சூரிய காந்திவிதைகள், பூசணி விதைகள் போன்றவற்றை சாப்பிட்டு வருவதும் நல்லது.

    குளிர்ந்த காற்று சருமத்தில்படும்போது நீரிழப்பு பிரச்சினை ஏற்படக்கூடும். தோல் வியாதிகளும் உண்டாகும். சிறுநீர் தொற்று பிரச்சினையும் உருவாகும். உடலில் நீரின் அளவை சீராக பராமரிப்பதற்கு இளநீர், சூப் வகைகள் பருகி வரலாம். குளிர்காலங்களில் கர்ப்பிணி பெண்கள் வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
    தினமும் உடல் இயக்கத்தை தூண்டும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும், ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதும் நோய் பாதிப்புகளை தடுக்க உதவும்.

    இந்தியாவில் 54 சதவீத பெண்கள் முழுமையான உடல் இயக்கம் இன்றி இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் தினமும் குறைந்தபட்சம் 376 கலோரிகளையாவது செலவிட வேண்டும். ஆனால் பெரும்பான்மையான பெண்கள் 165 கலோரிகளே செலவிடுகிறார்கள். இது சராசரி கலோரி அளவைவிட 44 சதவீதம் குறைவாகும்.

    அதேபோல் ஆண்கள் சராசரியாக தினமும் 476 கலோரிகள் செலவிட வேண்டும். ஆனால் பெரும்பான்மையானவர்கள் 262 கலோரிகளே செலவிடுகிறார்கள். அதேவேளையில் 30 சதவீத ஆண்கள் முழு உடல் இயக்கத்துடன் இயங்குகிறார்கள். 80 சதவீதத்துக்கும் அதிகமாக அளவு கலோரிகளை செலவிட்டுவிடுகிறார்கள். பெண்களில் 24 சதவீதம் பேர்களே முழு உடல் இயக்கம் கொண்டிருக்கிறார்கள். 22 சதவீதம் பேர் மென்மையான உடல் செயல்பாடுகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

    இதுபற்றிய ஆய்வை மேற்கொண்ட அதிகாரி ‘‘ஆண்களும், பெண்களும் 50 சதவீதத்துக்கும் குறைவாக கலோரிகளை செலவிடுவதும், உடல் ரீதியாக செயல்பாடு இல்லாமல் இருப்பதும் கவலைக்குரிய விஷயம். செயலற்ற தன்மை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் போன்றவைகளால் குறைவான அளவிலேயே கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

    அதனால் உடல் பருமன், கெட்ட கொழுப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. 30 வயதை கடந்தவர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள். தினமும் உடல் இயக்கத்தை தூண்டும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும், ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதும் நோய் பாதிப்புகளை தடுக்க உதவும். இன்றைய காலகட்டத்தில் உடல் இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்’’ என்றார்..

    அதிக கலோரிகளை எரிப்பதற்கு உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீச்சல், ஜாக்கிங், சைக்கிளிங், கயிறு தாண்டுதல், யோகா, குத்துச் சண்டை போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்க முடியும். நடைப்பயிற்சியும் மிக நல்லது.
    அணியும் ஆடைகளுக்கேற்ற வகையில் பிராவை தேர்வு செய்வது முக்கியமானது. புடவை, சுடிதார், வெஸ்டர்ன் ஆடைகள், டீ-ஷர்ட் என ஆடைகளுக்கு தகுத்த பிராக்கள் சந்தையில் கிடைக்கின்றன.
    விதவிதமான ஆடைகள் அணிவதில் கவனம் செலுத்தும் பல பெண்கள் உள்ளாடைகளில் போதிய அக்கறை செலுத்துவதில்லை. அதிலும் பெண்களின் மார்பகங்களை பராமரிக்க உதவும் பிராவை தேர்ந்தெடுப்பதில் பலருக்கு விழிப்புணர்வு குறைவாக உள்ளது. 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள், தங்களுக்கு பொருத்தமில்லாத பிராவையே அணிகின்றனர் என ஆடை வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். தவறான அளவுள்ள பிரா அணிவதால் தோள்பட்டை, மார்பு, கழுத்து, முதுகெலும்பு போன்றவற்றில் வலி ஏற்படுவதாக சமீபத்திய ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.

    பொருத்தமான பிராவை தேர்ந்தெடுப்பதற்கான சில வழிகளை இப்போது பார்க்கலாம்.

    * பிராவின் அண்டர்பேண்ட், விலா எலும்பை சுற்ற உறுதியாக பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

    * தோள்பட்டை ஸ்ட்ராப் மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது. அவை உங்கள் தோள்களில் அழுத்தத்திற்கான அடையாளத்தை பதிக்கக்கூடாது.

    * மார்பகங்களை தாங்குவதில் 80 சதவீத ஆதரவு அண்டர்பேண்டிலிருந்து வர வேண்டும். 20 சதவீத ஆதரவு ஸ்ட்ராப்பிலிருந்து வர வேண்டும். பிரா ஸ்ட்ராப்கள் மிகவும் இறுக்கமாக இருந்தால் தோள்பட்டை, முதுகெலும்பு போன்றவற்றில் வலியை ஏற்படுத்தக்கூடும்.

    * மார்பகங்கள், பிராவில் இரண்டு பக்கங்களிலும் முழுவதுமாக பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். கப் அளவு மிகவும் இறுக்கமாக இருந்தால் மார்பக தசைகள் பக்கவாட்டில் வெளிப்படக்கூடும்.

    * உட்காரும் போதும், நடக்கும்போதும், நிற்கும் போதும், சரியான தோரணையை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள தசைகள் மற்றும் தசைநார்கள் மீது ஏற்படும் அழுத்தத்தை குறைக்கலாம்.

    * அணியும் ஆடைகளுக்கேற்ற வகையில் பிராவை தேர்வு செய்வது முக்கியமானது. புடவை, சுடிதார், வெஸ்டர்ன் ஆடைகள், டீ-ஷர்ட் என ஆடைகளுக்கு தகுத்த பிராக்கள் சந்தையில் கிடைக்கின்றன.

    * பெண்களின் தேவைகளுக்கேற்ப சரியான பிராக்களை தேர்ந்தெடுப்பதும் அவசியமானது. விளையாட்டில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்ற வகையில், ஸ்போர்ட்ஸ் பிராக்களை அணிய வேண்டும். தளர்ந்த மார்பகங்களை உடைய பெண்களுக்கு சரியாக பொருந்தும் வகையில் அண்டர் ஒயர் பிராக்கள் அமையும். இதன் மூலம் மார்பகங்கள் மேலும் தளராமல் பார்த்துக்கொள்ளலாம். பாலூட்டும் பெண்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பு பிராக்கள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால் பாலூட்டும் போது சிரமமில்லாமல் கையாளலாம்.
    நடன சிகிச்சை அதாவது டான்ஸ் தெரபி மேற்கொண்ட பிறகு உடல் சமநிலை, நடை, உடல் வலிமை என ஒட்டுமொத்த உடல் செயல்திறனில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
    மாதவிடாய் நின்ற பிறகு, எடை அதிகரிப்பு, ஒட்டுமொத்தமாக உடலில் கொழுப்பு அதிகரிப்பு, வளர்சிதை மாற்றக் கோளாறு போன்ற பிரச்சினைகளை பெண்கள்

    அனுபவிக்க வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்கள் இறுதியில் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன. நடனம் ஆடுவதன் மூலம் கொழுப்பு

    அளவை திறம்பட குறைக்கலாம். உடல் அமைப்பை மேம்படுத்தலாம் என்று புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

    பெண்கள் பெரும்பாலும் குறைந்த உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். மாதவிடாய் நின்ற பிறகு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகளை

    எதிர்கொள்கிறார்கள். மன ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஆளாகிறார்கள். இந்த நிலையில் மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலகட்டத்தை

    எதிர்கொள்ளும் பெண்களின் உடல் அமைப்பு, சுய மரியாதை உணர்வு, வளர்சிதை மாற்றம், உடற்பயிற்சி போன்றவற்றுடன் நடன பயிற்சியை ஒப்பிட்டு ஆய்வு

    மேற்கொள்ளப்பட்டது.

    வாரத்திற்கு மூன்று நாட்கள் நடன பயிற்சி மேற்கொள்ளுமாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பெண்களிடம் அறிவுறுத்தப்பட்டது. நடன சிகிச்சை அதாவது டான்ஸ்

    தெரபி மேற்கொண்ட பிறகு உடல் சமநிலை, நடை, உடல் வலிமை என ஒட்டுமொத்த உடல் செயல்திறனில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது ஆய்வில்

    தெரியவந்துள்ளது.

    "இந்த ஆய்வு வாரத்திற்கு மூன்று முறை நடனம் போன்ற எளிமையான செயல்முறையை எடுத்துக்காட்டுகிறது. நடன பயிற்சி மாதவிடாய் நின்ற பெண்களின்

    உடற்தகுதி, உருவத்தை மாற்றுகிறது’’ என்பது ஆய்வு குழுவினரின் கருத்தாக இருக்கிறது.
    ×