என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் குதிக்கால் வலியை தடுப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
    பெண்களின் வீட்டு வேலைகளை செய்வது குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணி புரிவது போன்றவற்றில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். அதே நேரம் தங்களது ஆரோக்கியத்தை பேணுவதில் தவறி விடுகிறார்கள். இதன் மூலம் எண்ணற்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. அதில் முக்கியமானது 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் குதிக்கால் வலி. இதை தடுப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    குதிக்கால் வலிப்பதற்கான காரணங்கள்

    * உடல் பருமன் அதிகரிப்பதாலும் குதிக்கால் வலி ஏற்படும்

    * காலணிகளை காலுக்கு தந்தவாறு அணியாமல் பெரிதாக ஹீல்ஸ் வைத்து அணிவதன் மூலம் குதிக்கால் வலி உண்டாகும்.

    * ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தாலும் குதிக்கால் வலி வரலாம்.

    * அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்வதாலும் குதிக்கால் வலி ஏற்படும்.

    குதிக்கால் வலியை போக்கக்கூடிய எளிய மருத்துவ குறிப்புகள்

    * ஒரு வாணலியில் அரிசித்தவிடு மற்றும் உப்பை நன்றாக வறுத்துகொள்ள வேண்டும். அதை பருத்தி துணியில் மூட்டையாக கட்டிக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டு குதிக்கால் பகுதியில் தினமும் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும்.

    * நொச்சி இலை சாற்றில் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சூடுபடுத்த வேண்டும். இரவில் உறங்க செல்வதற்கு முன்பு இந்த எண்ணெயை குதிக்காலில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் குதிக்கால் வலி நீங்கும்.

    உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதற்கான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் எடையை குறைக்கலாம். இதன் மூலம் குதிக்கால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

    திராட்சை பழச்சாறில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதை தொடர்ந்து பருகுவதன் மூலம் குதிக்கால் வலி கட்டுப்படும்.

    * வில்வக்காயை நெருப்பில் சுட்டு அதை கொண்டு குதிக்கால் வலி உள்ள பகுதியில் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.

    * பாதங்களுக்குரிய எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் குதிக்கால் வலியில் இருந்து விடுபடலாம்.
    இல்லற சுகத்தை அனுபவிக்கும் ஆர்வம் கணவன், மனைவி இருவரிடமுமே குறைந்திருக்கிறது. இருவரில் யாராவது ஒருவரை மட்டும் இதில் குறை சொல்ல வாய்ப்பில்லை.
    தம்பதிகளிடம் இல்லற இன்பத்தை அனுபவிக்கும் ஆர்வம் குறைந்து வருவதாக, உலகளாவிய நிலையில் நடைபெற்ற பாலியல் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் நடந்திருக்கும் சுமார் 200 ஆய்வுகளை அடிப்படையாக வைத்து, பாலியல் நிபுணர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். “இல்லற சுகத்தை அனுபவிக்கும் ஆர்வம் கணவன், மனைவி இருவரிடமுமே குறைந்திருக்கிறது. இருவரில் யாராவது ஒருவரை மட்டும் இதில் குறை சொல்லவாய்ப்பில்லை” என்று ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் மரியா ஹோன்ட்ஸ் அதற்கு விளக்கம் தருகிறார்.

    ஆர்வம் குறைவதற்கான காரணங்களை அடுக்கி அவர்கள் நீண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

    சமூக சூழல் சரியில்லாமை, குடும்பத்தில் நிலவும் மன இறுக்கம், மகிழ்ச்சியின்மை, பண நெருக்கடி, வேலை இழப்பு, நிம்மதியின்மை, உடல் ஆரோக்கியமின்மை, உடலுறவு காட்சிகளை அதிகமாக இணையதளங்களில் பார்த்தல் என்பன போன்ற பலவிதமான காரணங்களை குறிப்பிடுகிறார்கள்.

    அதே நேரத்தில் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘இணக்கமாக இருக்கும் தம்பதிகள் வழக்கம்போல் இல்லற இன்பத்தில் திளைக்கிறார்கள். மன நெருக்கம் கொண்டவர் களாலே மிக நெருக்கமாக இன்பத்தை அனுபவிக்க முடிகிறது’ என்றும் கூறியிருக்கிறார்கள்.

    ‘தங்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. ஒன்றாக வாழப்பிடிக்கவில்லை. பிரிந்துவிடலாம் என்று நினைக்கிறோம்’ என்று சொல்லும் தம்பதிகளிடமும் இந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். “அவர்களிடம் நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், அவர்கள் பிரிய விரும்புவதற்கு அவர்களுக்குள் தாம்பத்ய திருப்தியின்மை தோன்றியிருப்பதும் ஒரு காரணம் என்பதை உணர்ந்துள்ளோம். பெண்களைவிட ஆண்களே தாம்பத்ய திருப்தியின்மைக்காக பிரிகிறோம் என்று வெளிப்படையாக கருத்து சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் பெரும்பாலான நாடுகளில் உள்ள பெண்கள், தாம்பத்யத்தில் தங்களை திருப்தி செய்யவேண்டியது கணவரின் கடமை என்பதை உணர்த்துகிறார்கள்” என்றும் கூறியுள்ளார்கள்.

    அமெரிக்காவில் 30 முதல் 60 சதவீதம் ஆண்கள் பாலியல் திருப்தியின்மைக்கு உள்ளாகியிருப்பதாக இந்த ஆய்வுத் தகவல் சொல்கிறது. அங்குள்ள பெண்களில் 40 முதல் 55 சதவீதம் பேர் இந்த பிரச்சினையை தாங்கள் எதிர்கொள்வதாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் நடுத்தர வயதில் தாங்கள் அதிக இன்பம் அனுபவிப்பதாக கூறியுள்ளனர்.

    ‘நீங்கள் அனுபவிக்கும் இன்பத்தின் அளவு என்ன?’ என்ற கேள்விக்கு, கனடா பெண்கள் துல்லியமாக பதிலளித்திருக்கிறார்கள். அதோடு தங்கள் கணவர் எந்த அளவுக்கு திருப்தி யடைகிறார் என்பதையும் விலாவாரியாக விளக்கியிருக்கிறார்கள்.

    ‘தாம்பத்யத்தில் உச்சகட்டம் அடைந்தீர்களா?’ என்ற கேள்விக்கு கணவன்-மனைவி இருவருமே மாறுபட்ட கருத்துக்களை கூறி, இப்போதும் இந்த விஷயத்தில் உலகளாவிய நிலையில் குழப்பம் நீடிப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

    இந்த ஆராய்ச்சிகளின் முத்தாய்ப்பாக பாலியல் நிபுணர்கள் சில தீர்வுகளை கூறியிருக்கிறார்கள். அதன் விவரம்:

    “உலகளாவிய நிலையில் இப்போது தம்பதிகளிடம் பாலியல் விழிப்புணர்வு மேம்பட்டிருக்கிறது. பசி, தாகம் போன்றதுதான் பாலியல் தேவையும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அதனால் கணவரை திருப்திபடுத்த மனைவியும், மனைவியை திருப்தி படுத்த கணவரும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். தங்களுக்குள் திருப்தியான உறவு இல்லை என்று கூறும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், ‘அவ்வப்போது அவர்கள் உறவில் உச்சகட்டத்தை அடையத்தான் செய்கிறார்கள்.’ அதுவே அவர்களுக்குள் எழும் பிரச்சினைகளை பூதாகரமாக்காமல், தணித்துக்கொண்டிருக்கிறது. இதை தம்பதிகள் உணர்ந்து, திருப்திக்கான வழிமுறைகளை ஆராய்ந்து உறவை மேம்படுத்தவேண்டும்.

    தாம்பத்யத்திறனை மேம்படுத்த பேச்சு மிக அவசியம். பேச்சு பாலியல் பற்றிய சூடான கதைகளை குறித்தும் இருக்கலாம். அத்தகைய பேச்சுடன், செயலில் இறங்கும் தம்பதிகள் இன்பத்தை அதிகம் அனுபவிக்கிறார்கள். அவர்களுக்குள் அதிகமாக நெருக்கமும் இருக்கிறது. அதனால் உங்கள் இணையோடு அந்தரங்கமாகவும் நிறைய பேசுங்கள்.

    அது மட்டுமின்றி, இணையின் விருப்பங்களுக்கு முக்கியத் துவம் கொடுங்கள். விருப்பங்களை மனந்திறந்து சொல்லும்படி கூறுங்கள். பொதுவாக பெண்ணின் விருப்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது இருவருக்குமே தாம்பத்ய செயல்பாடு அதிக மகிழ்ச்சியை தரும். தம்பதிகள் வயதினை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எல்லா வயதிலும் அவர்கள் படுக்கை அறையில் தங்களை இளைஞராகவே பாவித்துக்கொள்ள வேண்டும். அந்த நினைப்பே அவர்களுக்கு கூடுதல் பலத்தையும், மகிழ்ச்சியையும் தரும்” என்றும் சொல்கிறார்கள்.
    மார்பக புற்றுநோயை ஆரம்பகாலத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணம் அடையலாம். ஆகவே பெண்கள் தனக்கு தானே பரிசோதை செய்து கொள்ள வேண்டும்.
    மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சி அரசு மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டிட தரைதளத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அரசு மருத்துவமனை டீன் வனிதா கலந்து கொண்டார். அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் அர்ஷியாபேகம், மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ், அறுவை சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர் ஏகநாதன், டாக்டர்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் மார்பக புற்றுநோயை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது. மேலும் மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடல் நடத்தி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பிங்க் நிற பலூன்களும் பறக்கவிடப்பட்டன.

    இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் வனிதா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாதமாக இந்த மாதம் கருதப்படுகிறது. மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்களிடம் அச்சம் இருக்கக்கூடாது என்ற குறிக்கோளுக்காக இளஞ்சிவப்பு நிற (பிங்க்) பலூன் பறக்கவிடப்பட்டது. மார்பக புற்றுநோயை ஆரம்பகாலத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணம் அடையலாம். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட உடல் பருமனும் முக்கிய காரணமாகும்.

    மேலும், தாய்ப்பால் கொடுக்காமல் இருத்தல் போன்ற காரணங்களாலும் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. ஆகவே பெண்கள் தனக்கு தானே பரிசோதை செய்து கொள்ள வேண்டும். திருச்சி அரசு மருத்துவமனையில் இன்னும் ஓரிரு மாதத்தில் மேமோகிராம் என்ற எந்திரம் நிறுவப்பட உள்ளது. இதன்மூலம் புற்றுநோயை ஆரம்ப காலத்தில் துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும். இதுதவிர ரேடியோதெரபி எந்திரமும் வர இருக்கிறது. இந்த வசதிகள் வந்தால் சிறந்த சிகிச்சை அளிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020-ம் ஆண்டு நிலவரப்படி, 13 லட்சத்து 9 ஆயிரமாக இருந்த மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டில் 15 லட்சத்து 7 ஆயிரமாக அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோய் 2016-ல் 9,200-லிருந்து தற்போது 12,300 ஆக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன.
    கருவுற்ற பெண்ணுக்கு மகிழ்ச்சியை பகிர முத்தம் கொடுத்தால் அந்த மகிழ்ச்சியை குழந்தையும் அனுபவிக்கும். அதனால் கர்ப்பிணி மனைவிக்கு கணவரின் அன்பான முத்தம் மிக அவசியம்.

    பிரிந்திருக்கும் உதடுகள், மேலும் இரண்டு உதடுகளோடு சேர்ந்துகொள்ளும்போது முத்தம் உருவாகிறது. பிடித்தமானவர் களுக்கு நிறைய முத்தங்களை கொடுக்கும்போது அது முத்தமழையாகிவிடுகிறது. முத்தம் உடலின் வெளிப்புற நிகழ்வாக இருந்தாலும், முத்தம் கொடுக்கும்போது உடலின் உள்புறமும் சேர்ந்து சிலிர்த்துவிடுகிறது. முத்தம் பாலியலை மட்டுமே அடிப்படையாகக்கொண்டது அல்ல. அன்பை வெளிக்காட்டவும், பாசத்தை பகிர்ந்துகொள்ளவும் அது மிக அவசியம்.

    ‘உனக்கு நான் இருக்கிறேன். உன் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் நான் உன்னோடு இறுக்கமாக இருப்பேன்’ என்று, துக்கத்தில் இருப்பவரை கட்டிப்பிடித்து தேற்றும்போது அது ‘கட்டிப்பிடி வைத்தியம்’ ஆகிவிடுகிறது. அதுபோல் முத்தத்திலும் உணர்வுபூர்வமான விஷயங்கள் இருக்கின்றன. அதுவும் உடல் நலத்தை மேம்படுத்தி, மருத்துவ முத்தமாகிவிடுகிறது.

    முத்த மருத்துவம் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

    மனதுக்கு பிடித்த இருவர் உற்சாகமாக முத்தம் கொடுத்துக்கொள்ளும்போது அது அவர்கள் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களைச் சுரக்க செய்கிறது. ஆக்சிடோசின், எண்டார்பின் ஆகியவை அதிகம் சுரப்பதால் உடல்வலி, கை-கால் வலி நீங்கும். ஆர்த்ரைடிஸ் வலி, மாதவிலக்கின் போது ஏற்படும் வலி, தலைவலி போன்ற வலிகளை நீக்கி முத்தம் ஒரு வலி நிவாரணியாக செயல்படுகிறது.

    முத்தம் கொடுக்கும் போது மன அழுத்தம், மனக் கவலையும் நீங்கும். உதட்டோடு உதடு சேர்த்து ஆங்கில முத்தம் கொடுப்பதால் தலைவலி, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைக்கிறது.

    சிலருக்கு முத்தம் என்றாலே அலர்ஜி ஏற்படும். அதற்கு ‘பிலிமாபோபியா’ என்று பெயர். முத்தத்தை பற்றிய படிப்புக்கு ‘பிலிமொடாலஜி’ என்று பெயர்.

    இரு கன்னங்களையும் கைகளால் பற்றி பெண்ணின் நெற்றிப் பொட்டில் கொடுக்கும் முத்தம் உச்சபட்ச அன்பின் வெளிப்பாடாகும். இந்த முத்தம் அன்புக்குரியவர்களின் மீது நம்பிக்கையினையும் நேசத்தினையும் அதிகரிக்கும். இந்த முத்தம் மனதை வலுவாக்கும்.

    தைராய்டு ஹார்மோன் சுரப்பை சீராக்கும் தன்மை அன்பான முத்தத்திற்கு இருக்கிறது. மருந்தோடு சேர்ந்து முத்தமும் இதில் முக்கியபங்காற்றும்.

    முத்தம் கொடுக்கும்போது கருப்பையின் செயல்பாடு இயல்பு நிலைக்கு திரும்பும். முத்தத்தால் கருப்பை நன்கு தூண்டப்படும். கருவுற்ற பெண்ணுக்கு மகிழ்ச்சியை பகிர முத்தம் கொடுத்தால் அந்த மகிழ்ச்சியை குழந்தையும் அனுபவிக்கும். அதனால் கர்ப்பிணி மனைவிக்கு கணவரின் அன்பான முத்தம் மிக அவசியம்.

    மூக்குகள் உரசிக் கொள்ளும் வகையில் பெற்றோர் பிள்ளைகளுக்கும், அன்புக்குரியவர் களுக்குள்ளும் கொடுக்கப்படும் முத்தம் ‘எஸ்கிமோக்கள்’ முத்தம் எனப்படும். பாசத்தின் வெளிப்பாடு இந்த முத்தம்.

    முப்பது வயதுக்கு மேல் இருப்பவர்கள் அடிக்கடி முத்தம் கொடுத்தால் அவர்களுடைய வாழ்நாள் நீடிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒருமனிதன் தனது சராசரி வாழ்நாளில் இரண்டு வாரங்களை முத்தமிடுவதற்காக செலவிடுகிறான். நீங்கள் கூடுதலாக முத்தம் கொடுத்தும் இ்ந்த கால அளவை நீடித்துக்கொள்ளலாம்.

    முத்தம் கொடுக்கும் போது 112 வகையான தசைகள் தூண்டப்படுவதால் முகம் பொலிவாகிறது. தம்பதிகள் முயற்சித்துப் பார்க்கலாம்.

    முத்தம் மூளைச் செயல்பாட்டை தூண்டி மனதையும் உடலையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இதை வயதான தம்பதிகள் நன்கு உணர்ந்திருப்பார்கள்.

    குழந்தையில்லாதவர்கள் அடிக்கடி முத்தமிடுவது நல்லது. இதனால் கருமுட்டையின் வளர்ச்சி மேம்படும்.

    முக்கியமான வேலைக்கு செல்லும்போது இணைக்கு முத்தம் கொடுத்துச் சென்றால் அந்த வேலை இனிதாக அமைவதுடன் எளிதாகவும் முடியும். மனமும் மகிழ்ச்சியாக இருக்கும். இதனால் செல்லும் வேலை சுமூகமாக முடியும்.

    ஆண்மைக் குறைபாடோ, பெண்மைக் குறைபாடோ இருப்பவர்கள் தொடர்ந்து முத்தம் கொடுப்பதால் குழந்தையின்மை பிரச்சினையிலிருந்து விடுபட முடியும். முத்தம் கொடுப்பதால் கருப்பையும், விரைப்பையும் தூண்டப்பட்டு குழந்தை உருவாகுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

    உங்களை ஈர்த்த உங்கள் இணையின் கண் இமைகளில் முத்தமிடுங்கள். அவர் மகிழ்ச்சியடைவதுடன் உங்களிடம் அன்பை திரும்பத் தருவார். அங்கே முத்தமழை பொழிய வாய்ப்பிருக்கிறது.

    முத்தம் கொடுக்கும் போது உடலில் உள்ள ஹார்மோன்களின் இயக்கம் தூண்டப்பட்டு சீராக நடைபெறுவதால் புத்துணர்ச்சியும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
    சினைப்பை நீர்க்கட்டி (PCOS) பிரச்சினைகளுக்கு எளிமையான, இயற்கையின் உருவான, பக்கவிளைவுகள் இல்லாத சித்தா, ஆயுர் வேத மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.
    சினைப்பை நீர்க்கட்டி அதிகமாக இளம் பெண்களையே தாக்குகிறது. இதனை திருமணத்திற்கு முன்பே கவனித்து சிகிச்சை மேற்கொள்ளாவிடில் அவர்களின் திருமணத்திற்கு பின்பு குழந்தை பெறுவது பெரிய போராட்டமாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி ( PCOS ) இருக்கும் போது கருவுறுவது இல்லை. இன்றைய இளம் தம்பதியரிடையே குழந்தையின்மை அதிகமாக இருப்பதற்கு ( PCOS ) ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

    கழற்சிக்காய்த்தூள் 1 கிராம் உடன் 5 மிளகுத்தூள் சேர்த்து தினமும் காலை, மாலை இருவேளை 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர கருப்பையில் உண்டாகும் சினைப்பை நீர்க்கட்டி கரையும்.

    கருஞ்சீரகம் 1 கிராம் , சோம்பும் 1 கிராம் அளவிற்கு சம அளவு எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு 2கிராம் அளவு தினமும் காலை மாலை இருவேளை சாப்பிட்டுவர சினைப்பை நீர்க்கட்டி கரையும். மேலும் கருப்பையின் குற்றம் அகலும். மேலும் பெண்களுக்கு உண்டாகும் சூதகவலி குற்றங்கள் குறையும்.

    சோற்றுக்கற்றாழையை மேல்தோல் நீக்கிவிட்டு அதில் உள்ளே இருக்கும் சோற்றை நன்றாக 7 முறை கழுவிட்டு ஒரு கையளவு எடுத்துக்கொண்டு 1 டம்ளர் மோரில் கலக்கி வாரம் இருமுறை குடித்துவர சினைப்பை நீர்க்கட்டி குறையும். நம் உடலில் உள்ள ஹார்மோனை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

    எள் - 1 கிராம், வெந்தயம் - 1 கிராம் சமஅளவு எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு 2 கிராம் அளவு காலை மாலை இருவேளை 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர சினைப்பை நீர்க்கட்டி கரையும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் எனும் ஹார்மோனை ஒழுங்குப்படுத்தும்.

    கொள்ளு 1 கிராம், மஞ்சள் கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன் இந்த அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து வைத்துக்கொண்டு 1 கிராம் அளவு வெறும் வயிற்றில் கசாயம் செய்து குடித்துவர நீர்க்கட்டி குறையும்.

    வெட்சி பூ - 1 கொத்து, மிளகு - 5 (தூள் செய்து) இதனை குடிநீரிட்டு 60 மில்லி காலை மட்டும் 3 மாதம் தொடர்ந்து குடித்துவர கருப்பை குற்றம் குறையும். பெண்களின் கருப்பையில் உண்டாகும் புண்கள் வராமல் தடுக்கும். கர்ப்பபைபுற்றுநோய் வராமல் தடுக்கும்.

    இலவங்கப்பட்டை 2 கிராம், அதிமதுரம் - 1 கிராம் இந்த அளவு எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு காலை மட்டும் 1 கிராம் அளவு எடுத்து வைத்துக்கொண்டு கசாயமிட்டு 60 மில்லி குடித்து வர கருப்பை குற்றம் நீங்கி சினைப்பை கட்டி அகலும்.

    சுக்கு - 1 கிராம், பெருங்காயம் - 1 கிராம் அதாவது சுக்கை தோல் நீக்கி இளவறுப்பாக எடுத்துக்கொண்டு அதனுடன் பொரித்த பெருங்காயம் சமஅளவு சேர்த்து வைத்துக்கொண்டு காலை, மாலை இருவேளை 1 கிராம் அளவு தேன் சேர்த்து தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டுவர சினைப்பை நீர்க்கட்டி மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி அகலும்.

    மலைவேப்பிலைச்சாறு 60 மில்லி புதிதாக சாறு எடுத்து மாதவிடாயின்போது 3 நாளும் தினம் காலை 60 மில்லி உணவிற்குப் முன் அருந்திவர கருப்பையில் உண்டாகும் கட்டி சினைப்பை நீர்க்கட்டி நீங்கும். குழந்தையின்மை பிரச்சினை உள்ளவர்களும் இதை அருந்திவருவது நல்லது. இது கருப்பையில் உண்டாகும் மலட்டு புழுவை அகற்றும்.

    கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இவைகளை சம அளவு எடுத்து காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டு 1 கிராம் அளவு எடுத்து வெல்லம் சேர்த்து கசாயம் செய்து காலை மாலை இருவேளை 60 மில்லி அருந்திவர பெண்களுக்கு கருப்பைக்கோளாறுகள் வராமல் தடுக்கலாம். நம் உடலில் இன்சுலின் ஹார்மோனை சரியான அளவில் வைத்துக்கொள்ளும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்து இயல்பான நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.
    வேலை பார்க்கும் இடங்களில் பணி சார்ந்த மன அழுத்தம் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகமாக ஏற்படுகிறது. அதுவே பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணமாக இருக்கிறது
    திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்வதற்கு விரும்புகிறார்கள். அதன் மூலம் குடும்ப வருமானத்திற்கு வழிவகை செய்தாலும், பல்வேறு உடல்நல சிக்கலையும் எதிர்கொள்கிறார்கள். மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள். அந்த மன அழுத்தத்தின் மூலம் பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மனதளவில் சோர்வு தரும் வேலைக்கும், அதனால் உடல் நலம் பாதிப்புக்குள்ளாவதற்கும் சம்பந்தம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    பிரான்ஸை சேர்ந்த தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சுகாதார மையத்தை சேர்ந்த டாக்டர் கயி பெகிராக்ஸி தலைமையிலான குழுவினர் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கற்பிக்கும் தொழிலிலும், களப்பணியிலும் ஈடுபடுபவர்கள். அவர்களுடைய 22 ஆண்டு கால உடல் ஆரோக்கியமும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.

    ஆய்வின் முடிவில், 24 சதவீதம் பேர் அவர்கள் செய்யும் வேலையால் மன அழுத்தத்திற்கு ஆட்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 21 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆய்வின் போது அவர்களின் வயது, உடல் இயக்க செயல்பாடு, உணவு பழக்கம், புகை பிடித்தல் பழக்கம், ரத்த அழுத்தம், மூதாதையரின் நோய் பாரம்பரியம் போன்ற விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

    இந்த ஆய்வை மேற்கொண்ட பெகிராக்ஸி, ‘‘மனச்சோர்வு தரும் வேலை செய்யும் பெண்கள் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாவதை நேரடியாக கண்டறிய முடியாது. எனினும் மனச்சோர்வு அதற்கான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம். வேலை பார்க்கும் இடங்களில் பணி சார்ந்த மன அழுத்தம் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகமாக ஏற்படுகிறது. அதுவே பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணமாக இருக்கிறது’’ என்கிறார்.
    மாதவிடாய் சுழற்சி முறையாக நடைபெறாமல் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஒருசில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் மாதவிடாய் தாமத பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.
    மாதவிடாய் சுழற்சி முறையாக நடைபெறாமல் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. வழக்கமான மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் ஆகும். ஆனால் சுழற்சியின் கால அளவு 35 நாட்களுக்கு மேல் நீடிக்கும்போது அது ஒழுங்கற்ற மாதவிடாயாக கருதப்படுகிறது.

    ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, தைராய்டு கோளாறுகள், கல்லீரல் பாதிப்பு, கருச்சிதைவு, மனோபாஸ் காலகட்டம், எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு, காபின் கலந்த பானங்களை அதிகமாக நுகர்வது, கடுமையான உடற்பயிற்சி, சில மருந்துகள், பிற உடல்நலப் பிரச்சினைகள் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. மாத விடாய் தாமதமாகும்போது தேவையற்ற மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அடி வயிற்றில் பிடிப்பு, இடுப்பு பகுதியில் வலி, மன நிலையில் மாற்றம், எரிச்சல் போன்ற சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிடும். ஒருசில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் மாதவிடாய் தாமத பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.

    மஞ்சள்: ஒழுங்கற்ற அல்லது தாமதமான மாதவிடாய்க்கு இது சிறந்த நிவாரணியாக செயல்படும். இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி மாதவிடாய் சுழற்சியை மேம்படுத்த உதவும். ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட இது வலி மற்றும் பிடிப்புகள் உள்ளிட்ட மாதவிடாய் அறிகுறிகளுக்கு தீர்வு அளிக்கக்கூடியது.

    பழுக்காத பப்பாளி: ஒழுங்கற்ற மாதவிடாயால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பழுக்காத பப்பாளியை சாப்பிடலாம். இது மாதவிடாயைத் தூண்டக்கூடியது. பப்பாளி காயை சமைத்தால் அதிலிருக்கும் நொதிகள், ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும். பப்பாளியை சாலட்டாக தயார் செய்து சாப்பிடலாம். இருப்பினும், கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிட பரிந்துரைக்கப்படாததால், நீங்கள் கர்ப்பமாக இருக்க வாய்ப்பு உள்ளதா என்பதை கவனித்துக்கொள்வது அவசியம்.

    இஞ்சி டீ: இஞ்சி ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவும். இஞ்சியை பொடித்து நீரில் நன்றாக கொதிக்க வைத்து தேநீராக தயாரித்து பருகலாம். அதனுடன் சர்க்கரை, தேன் அல்லது விருப்பமான இனிப்பு பொருளை சேர்த்துக்கொள்ளலாம். மாதவிடாய் தாமதமாகும் சமயத்தில் தினமும் இரண்டு முறை இஞ்சி டீ பருகலாம். இது மாதவிடாயைத் தூண்ட உதவும்.

    கொத்தமல்லி: மாதவிடாய் தாமதமாகி மன அழுத்தத்தை அனுபவித்தால் கொத்தமல்லியை தேர்ந்தெடுக்கலாம். கொத்தமல்லி இலை மற்றும் விதைகளை நீரில் கொதிக்க வைத்து கசாயமாக தயாரித்து பருகலாம். இது மாதவிடாயை சீராக்க உதவும். ஒழுங்கற்ற மாதவிடாயை குணப்படுத்த பல நூற்றாண்டுகளாக கொத்தமல்லி தழை புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மன அழுத்தம்: ஒழுங்கற்ற மாதவிடாய் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு மன அழுத்தம்தான் முக்கிய காரணமாக அமைகிறது.

    ஏனெனில் மன அழுத்தம்தான் தாமதமான மாதவிடாய்க்கு வித்திடுகிறது. பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. மாதவிடாய் தாமதமாவது இயல்பானது. பீதியோ, பதற்றமோ அடைய தேவையில்லை. நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். தூக்கமும் அவசியம். மாதவிடாய் சுழற்சியில் இரண்டு, மூன்று முறைக்கு மேல் தாமதம் நேர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
    எந்த வடிவத்தில் புகையிலையை பயன்படுத்தினாலும் வாய், தொண்டை, நுரையீரல், உணவுக்குழாய், வயிறு, சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளில் அது புற்று நோயை ஏற்படுத்திவிடுகிறது.
    புகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள். அவர்களில் அதிகமானோர் வளரும் நாடுகளில் வாழ்கிறார்கள்.

    புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய் இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு வருகிறது. புகையிலையால் உருவாகும் புற்றுநோய்களில் இதுவே அதிகம். புகைபிடிப்பவர்கள் புகையை மட்டும் விடுவதில்லை. அதோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான நச்சுகளையும் வெளியிடுகின்றனர். இந்த நச்சுகளில் 250 நச்சுகள் அதிக தீங்கு விளைவிப்பவை. 69 நச்சுகள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. புகைபிடிப்பவர்களில் பாதி பேரின் மரணத்துக்கு நச்சு கலந்த புகையை சுவாசிப்பதுதான் முதன்மை காரணம்.

    எந்த வடிவத்தில் புகையிலையை பயன்படுத்தினாலும் வாய், தொண்டை, நுரையீரல், உணவுக்குழாய், வயிறு, சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளில் அது புற்று நோயை ஏற்படுத்திவிடுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் 1½ கோடி பெண்கள் புகையிலை பயன்பாட்டால் வேறு பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இறக்கிறார்கள். புகையை சுவாசிக்கும் சிசுக்களுக்கு திடீர் மரணம் ஏற்படுகிறது. கர்ப்பிணிகள் எடை குறைந்த குழந்தையை பிரசவிக்கிறார்கள்.

    வீட்டில் புகைப்பதால் 40 சதவீத குழந்தைகள், அது சார்ந்த நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதில் பலர் இறக்கவும் செய்கிறார்கள். ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் அதிக அளவில் புகைக்கிறார்கள் என்கிறது, உலகச் சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு.

    உலகம் முழுவதும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ள 100 கோடி பேரில் 20 கோடி பேர் பெண்கள் என்கிறது, ஓர் ஆய்வு.

    பெண்கள் புகைப்பது சில நாடுகளில் வேகமாக அதிகரித்துவருகிறது. பல்வேறு காரணங்களுக்காக வளர் இளம்பெண்களும் புகைப்பழக்கத்துக்கு ஆளாவதாகவும் அந்த ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
    மெனோபாஸ் காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்களும், மெனோபாஸ் காலத்தை சந்திக்கும் பெண்களும் வெயில் உஷ்ணத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
    உஷ்ணத்தால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட வயதில் அவர்களுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அவர்கள் உடலை அதிக சூடாக்கி கூடுதல் தொந்தரவுகளை தரக் கூடும்.

    தைராய்டு பாதிப்பு கொண்ட பெண்கள் அதிக வெயிலாக இருந்தாலும், அதிக குளிராக இருந்தாலும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கர்ப்பகாலத்தில் மட்டும் தைராய்டால் பாதிக்கப்பட்டவர்களும், பாரம்பரிய தைராய்டு பாதிப்பு கொண்டவர்களும், தைராய்டு இருக்குமோ என்று சந்தேகப்படுகிறவர்களும் கோடை காலத்தில் ரத்த பரிசோதனை செய்து, தைராய்டு அளவை உறுதிசெய்துகொள்ளவேண்டும். தேவைப்பட்டால், டாக்டரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.

    தைராய்டு நோய்க்கு ஏற்கனவே மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள், கோடைகாலத்தில் ஒருமுறை ரத்த பரிசோதனை மேற்கொண்டு மாத்திரையின் அளவில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.

    மாதவிலக்கு நாட்களில் பெண்கள் சுகாதாரத்தில் அதிக அக்கறைகொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் நாப்கினை மாற்றவேண்டும். மாதவிடாயை எதிர்பார்த்து நாப்கின் அணிந்துகொண்டு வெளியே செல்கிறவர்களாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் அதனை மாற்றிவிடுவது அவசியம். அதிக நேரம் ஒரே நாப்கினுடன் இருந்தால் அதில் ஏற்படும் ஈரப்பதம், வியர்வை போன்றவைகளால் தொற்று ஏற்படும். அதனால் தொடை இடுக்குப் பகுதியில் சொறி, தடிப்பு போன்றவை தோன்றும்.

    நாப்கின் மாற்றுவதற்கு போதுமான சவுகரியம் இல்லாதவர்களும், நாப்கினால் அசவுகரியத்தை எதிர்கொள்கிறவர்களும் மென்ஸ்ட்டுரல் கப் பயன்படுத்தலாம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தேவையற்ற ரோமங்களை நீக்கவேண்டும். நீக்காவிட்டால் அந்த பகுதியில் வியர்வையும், அழுக்கும் சேர்ந்து வாடை வீசுவதோடு கிருமித்தொற்றும் உருவாகிவிடும். தினமும் குளித்து முடிந்ததும், வியர்வை தங்க வாய்ப்புள்ள உறுப்பு பகுதிகளை நன்றாக துடைத்துவிட்டு, ஈரம் அகன்றதும் மாய்ஸ்சரைசர் பூசிக்கொள்வது நல்லது.

    வியர்வை தங்கும் பகுதிகளை நன்றாக சுத்தம் செய்தும் சொறியோ வேறு விதமான அவஸ்தைகளோ ஏற்பட்டால் சரும நோய் நிபுணரின் ஆலோசனைபடி அதற்குரிய மருந்துகளை பயன்படுத்தவேண்டும்.

    மெனோபாஸ் காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்களும், மெனோபாஸ் காலத்தை சந்திக்கும் பெண்களும் வெயில் உஷ்ணத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் தங்கள் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்தியே ஆகவேண்டும். அவர்கள் போதுமான அளவு தண்ணீர் பருகவேண்டும். அதிகம் வியர்க்காத அளவுக்கு பருத்தி ஆடைகளை அணியவேண்டும். தினமும் இரண்டு முறை குளிப்பது நல்லது. அதிக அளவு மசாலாக்கள் சேர்க்காத, எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை உண்ணவேண்டும். வெண்ணெய் நீக்கிய மோரையும் தொடர்ந்து பருகிவர வேண்டும். உற்சாகத்தோடு அவர்கள் மனநலனையும் பாதுகாக்கவேண்டும்.

    மகப்பேறுக்கு பின்பு பாரம்பரிய மருந்துகள் உட்கொள்வதை பெண்கள் தவிர்க்கக் கூடாது; அத்தகைய மருந்துகளை உட்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
    தென்மாவட்டங்களில் மகப்பேறுக்கு பின்பு தாயின் உடல்நலம் பேண சில பாரம்பரிய சித்த மருந்துகளை வழங்கி வந்தனர். இப்போது பிரசவம் நவீன மருத்துவமனைகளில் நிகழ்வதால் பாரம்பரிய மருந்துகளைக் கொடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். அது தவறானதாகும். மகப்பேறுக்கு பின்பு பாரம்பரிய மருந்துகளை உட்கொள்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

    இதை நமது வருங்காலச் சந்ததிக்கு எடுத்துரைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். மகப்பேறுக்கு பின்பு முதல்நாளில் சிறிதளவு கஸ்தூரியை வெற்றிலையில் வைத்து மடக்கி சாப்பிட வேண்டும். இது கருப்பையில் தடைபட்ட அழுக்கை நீக்கவும், உடல் தளர்ச்சியைப் போக்கவும் உதவும்.

    பின்பு 2 விரலி மஞ்சளை அரைத்து கற்கமாக்கி கொடுக்கும்போது கருப்பையின் புண்கள் விரைவாக ஆறிவிடும். 2ஆம் நாளில் மஞ்சள், மிளகு, நறுக்குமூலம், சுக்கு, அக்கரகாரம், ஓமம் ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து இள வறுப்பாக வறுத்து பிரசவ சூரணம் செய்து சாப்பிட வேண்டும்.

    3ஆம் நாளில் 2 விரலி மஞ்சளை அரைத்து கற்கமாக்கி கொடுக்க வேண்டும். 5ஆம் நாளில் சிறிய துண்டுப் பெருங்காயத்தை எடுத்து நன்றாகப் பொரித்து பொடி செய்து பனைவெல்லத்தில் பொதிந்து கொடுக்க வேண்டும்.

    இம் மருந்து சூதக வாயுவை நீக்கும். 9ஆம் நாளில் 5 கிராம் கடுகை நன்கு பொரித்து பொடி செய்து பனைவெல்லத்தில் பொதிந்து சாப்பிட வேண்டும். 11ஆம் நாளில் 25 கிராம் சுக்கு, சிறிய துண்டு சாரணைவேர் ஆகியவற்றை நன்கு சூரணம் செய்து 50 கிராம் பனைவெல்லத்தை பாகாக்கி அதில் சூரணத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி நன்கு களி பதம் வரும் வரை கிண்டிக் கொடுக்க வேண்டும்.

    13-ம் நாளில் 50 கிராம் உரித்த வெள்ளைப்பூண்டை பாலில் நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு 100 கிராம் பனை வெல்லத்தைப் பாகாக்கி அரைத்த பூண்டு விழுதை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி களி பதத்தில் கிண்டி கொடுக்கவேண்டும். இந்த மருந்து தாய்ப்பாலை அதிகரிக்கும்.

    15-ம் நாளில் 50 கிராம் ஓமத்தை நன்கு காயவைத்து மேல்தோல் நீக்கி சூரணம் செய்து 100 கிராம் பனைவெல்லத்தை பாகாக்கி, அதில் ஓமத்தைக் கலந்து நல்லெண்ணெய் ஊற்றி களி பதத்தில் கிண்டிக் கொடுக்க வேண்டும்.

    பெண்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது உடலில் ஏற்படும் அதிர்வுகள் முதுகெலும்பை பாதிக்கும். சரியில்லாத சாலையில், முறையாக அமராமல், வெகுதூரம் வாகனம் ஓட்டினால் முதுகெலும்பு பாதிப்பு அதிகமாகும்.
    குண்டும் குழியுமான சாலையில் வெகுதூரம் பயணம்செய்வது, பின்பு அலுவலகம் சென்று மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலைபார்ப்பது இதுதான் பலரது வழக்கமாக இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இடுப்பு, முதுகு, கழுத்து வலியோடு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த அவதியை நினைத்து இருசக்கர வாகன பயணத்தை தவிர்க்க முடியாது. அனைத்து சாலைகளையும் நம்மால் சரிசெய்திட இயலாது. ஆனால் சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் வலியின்றி நிம்மதியாக பயணிக்க முடியும்.

    பெண்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது உடலில் ஏற்படும் அதிர்வுகள் முதுகெலும்பை பாதிக்கும். சரியில்லாத சாலையில், முறையாக அமராமல், வெகுதூரம் வாகனம் ஓட்டினால் முதுகெலும்பு பாதிப்பு அதிகமாகும். முதுகெலும்புகளுக்கு இடையே அதிர்வுகளைத் தாங்கும் விதமாக ‘ஷாக் அப்சர்வர்கள்’ போன்று மென்மையான டிஸ்குகள் உள்ளன. தொடர்ந்து இருசக்கரவாகனத்தில் வெகுதூரம் பயணப்படும்போது அந்த டிஸ்குகளுக்கு அழுத்தம் அதிகரிக்கும். அப்போது முதுகெலும்பின் பலவீனமான பகுதிகளில் இருக்கும் டிஸ்குகள் பலூன் போன்று வெளியே தள்ளும் நிலை உருவாகும். அதை ‘டிஸ்க் ப்ரலாப்ஸ்’ என்று கூறுகிறோம். வெளியே தள்ளும் டிஸ்க் பகுதி அருகில் உள்ள மெல்லிய நரம்புகளை அழுத்தும்போது முதுகிலும், கால்களிலும் தாங்கமுடியாத வலி தோன்றும்.

    இருசக்கர வாகனம் ஓட்டும்போது தொடர்ந்து இரு கை களாலும் ஹேன்டிலை பிடித்துக்கொண்டிருக்க வேண்டும். நேராக பார்த்தபடியும் வாகனத்தை இயக்கவேண்டும். இல்லாவிட்டால் கழுத்துப்பகுதி தசைகள் அழுத்தத்துடன் இறுகி, கழுத்து வலி உருவாகும். வாகனத்தில் இருந்து இறங்கிய பின்பும் சிறிது நேரம் கழுத்தை அசைக்கமுடியாமல் தவிக்கநேரும். இதை கண்டுகொள்ளாமலேவிட்டால் கழுத்து எலும்புகள் தேய்மானமடைவதோடு, கழுத்து வலியும் தீவிரமாகிக்கொண்டிருக்கும்.

    கழுத்து வலி இருப்பவர்கள் போதுமான அளவு ஓய்வெடுக்கவேண்டும். ஓய்வு எடுத்த பின்பும் கழுத்து வலி தீராமல் இருந்தாலோ, கழுத்து வலி தீவிரமாகி தோள் களுக்கும் கைகளுக்கும் பரவினாலோ, கை விரல்கள் வலித்து மரத்துப்போவது போல் உணர்ந்தாலோ, முதுகு வலி காலின் பின்பகுதிக்கு பரவி குதிகால் வரை தாக்கத்தை ஏற்படுத்தினாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும். இருமும்போதும், திரும்பும்போதும் முதுகுவலி அதிகரித்தால் நரம்பு களுக்கு அழுத்தம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்துகொள்ளலாம்.

    இந்த தொந்தரவுகளை எல்லாம் தவிர்க்க இருசக்கர வாகனத்தில் நேராக அமர்ந்து இயக்குங்கள். கால்களை புட்ரெஸ்ட்டில் அழுத்தமாக வைத்து ஹேன்டிலை சரியாக பிடித்தபடி நேராக இருப்பது சரியான முறையாகும். குனிந்தபடி அமர்ந்தோ, கழுத்தை முன்னோக்கி நீட்டிக்கொண்டோ வாகனத்தை இயக்குவதை தவிர்க்கவேண்டும்.

    வாகனத்தை ஓட்டும்போது காதுகளுக்கு சமமாக தோள்கள் உயரவேண்டும். அதிக வேகத்தில் செல்வது, திடீரென்று பிரேக் பிடிப்பது போன்றவைகளை செய்யக்கூடாது. வேகத்தடைகள் வரும்போது வேகத்தை குறைத்து, நிதானமாக அதனை கடந்துசெல்லவேண்டும்.

    வெகுதூரம் வாகனத்தை ஓட்டிச்செல்லும் நிலை ஏற்படும்போது, இடைஇடையே ஓய்வு எடுத்த பின்பு தொடருவது நல்லது. இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்யவேண்டும். அந்த பயிற்சிகள் கழுத்து, தோள், கைகள், முதுகெலும்பு போன்றவைகளுக்கு பலம் தரும் விதத்தில் அமையவேண்டும். அதனால் உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையை பெற்று, உடற்பயிற்சி செய்வது அவசியம்.
    தம்பதிகள் தாம்பத்யத்தில் அதிக ஆர்வத்துடன் சங்கமிக்க அவர்களுக்கு கூடுதல் சக்தி தேவைப்படுகிறது. அதையும் சிறிய வெங்காயம் தருகிறது.
    சிறிய வெங்காயத்தை நாம் சமைக்கும் பெரும்பாலான உணவுகளில் சேர்க்கிறோம். மாமிசம், மீன், காய்கறி, பலகார வகைகளில் சேர்க்கப்படும் முக்கியமான பொருளாக சிறிய வெங்காயம் இருக்கிறது. உணவுகளுக்கு இது அதிக சுவையை தந்தாலும், பாலூட்டும் தாய்மார்களுக்கு வரப்பிரசாதமாக இருந்துவருகிறது.

    தாய்ப்பாலை பெருகவைக்கும் சக்தி இதற்கு இருக்கிறது. பிரசவித்த பின்பு பெண்களின் கருப்பை மீண்டும் சுருங்கி இயல்புநிலைக்குத் திரும்பவேண்டும். அதற்கு தேவையான மருத்துவகுணங்களும் சிறிய வெங்காயத்தில் இருக்கிறது. அதனால் பிரசவித்த பெண்கள் இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

    சுகபிரசவத்தின்போது பெண்களின் பிறப்பு உறுப்பின் சுவர்ப்பகுதி பலவீனமாகும். அதனை பலப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வரும் சக்தியும் சிறிய வெங்காயத்தில் இருக்கிறது. கர்ப்பிணிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

    தம்பதிகள் தாம்பத்யத்தில் அதிக ஆர்வத்துடன் சங்கமிக்க அவர்களுக்கு கூடுதல் சக்தி தேவைப்படுகிறது. அதையும் சிறிய வெங்காயம் தருகிறது. தாய்மையடைய விரும்பும் பெண்களும், கர்ப்பமடைந்த பெண்களும், பிரசவித்த பெண்களும் இதனை அதிகம் பயன்படுத்தலாம். ஆண்மை சக்தியை பெருக்கிக்கொள்ள விரும்பும் ஆண்களும் இதனை அதிகம் சாப்பிட்டு வரலாம். செல்களை புதுப்பித்து இளமையை தக்கவைத்துக்கொள்ளவும் இது துணைபுரிகிறது.

    வயிற்றை சுத்தப்படுத்தும் ஆற்றலையும் சிறிய வெங்காயம் பெற்றிருக்கிறது. வயிற்றில் ஏற்படும் அவஸ்தைகளை தீர்த்து, பசியை தூண்டி ஜீரணத்தன்மையை ஊக்குவிக்கவும் இதனால் முடியும். குடல்களில் ஏற்படும் பருக்கள், வீக்கம், காயம் போன்றவைகளை குணப்படுத்தும் மருத்துவகுணமும் இதில் அடங்கியிருக்கிறது.

    சிறிய வெங்காயத்தில் கரையும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. உடல் நலனுக்கு தேவையான அலிசின் என்ற சல்பைட்டும் இதில் உள்ளது. இது கொழுப்பை கரைக்கும் தன்மையை பெற்றிருக்கிறது. வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். சிறிய வெங்காயம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதற்கு சிவப்பு நிறம் தருவது, லூட்டின் என்ற வர்ண கலவையாகும். இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட் ரத்த புற்றுநோய், சரும புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவைகளை தடுக்கும் தன்மைகொண்டது.

    சிறிய வெங்காயத்தை பயன்படுத்தி லேகியம் தயாரித்து சுவைக்கலாம். இது பலவிதங்களில் உடலுக்கு பலம் சேர்க்கும். இந்த லேகியத்தை தயாரிக்கும் முறை:

    சுத்தம் செய்த சிறிய வெங்காயத்தை 300 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். ஒரு பூண்டுவை இடிக்கவும். இவை இரண்டையும் 500 கிராம் தேங்காய் பாலில் நன்றாக வேகவைத்து குழைக்கவும். 180 கிராம் வெல்லத்தை கரைத்து அதில் சேர்த்து ஐந்து நிமிடம் கிளறிவிட்டு, வேகவையுங்கள்.

    அத்துடன் வறுத்து தூளாக்கிய வெந்தயம், சீரகம் போன்றவைகளை சிறிதளவு சேர்க்கவும். ஒரு சிட்டிகை சுக்குத் தூள் மற்றும் 4 ஏலக்காய்களையும் தூளாக்கி சேருங்கள். அனைத்து பொருட்களையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவைத்து, ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி இறக்கிவிடுங்கள். இதுதான் வெங்காய லேகியம். இதனை ஒரு பாட்டிலில் அடைத்துவைத்து மூன்று நாட்கள் வரை சாப்பிடலாம். இதனுடன் சேர்த்து தண்ணீரோ, தேனீரோ பருகக்கூடாது. இந்த லேகியம் தம்பதிகளின் உடலுக்கு பலவிதத்தில் ஊட்டம் தரும்.
    ×